திருடன், பதுக்கி வைத்துக்கொண்ட பொருட்களை எடுத்துக்கொண்டேன் இதில் என்ன குற்றம் இருக்கிறது? என்று நியாயப்படுத்தும்போதும். ஒரு ஏமாளி தன் உழைப்பால் விளைந்த அனைத்து பொருட்களையும் தனது எஜமானனுக்கு கொடுத்துவிட்டு தன் குடும்ப உறவுகளை பட்டினியில் வாடவிட்டு இறைவன் எனக்கு இட்ட கட்டளை என்று இருமாத்துக் கொள்ளும்போதும். அவர்களுக்கு அவர்கள் உண்மையுடனும், ஒழுக்கத்துடனும் இருக்கிறார்கள் ஆயினும் இது சரி என்று நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
தன்னை தான் யார்? என்று அறியாமல் ஒழுக்கத்துடனும், உண்மையுடனும் வாழமுடியாது. தனக்குள் இருப்பது *கடவுள்*, தன்னையறிய உதவும் ஒருவர் *தெய்வம்*, அவர் தரும் போதனைகள் *ஆன்மீக பயிற்சிகள்* என்று உணர்ந்துவிட்டால் அல்லது இப்படியான ஒருவராக நீங்கள் இருந்தால் கடவுள், தெய்வம், வழிபாடு, ஆன்மீக பயிற்சிகள் இவைகள் எதுவும் தேவையில்லை.