• +91 97102 30097
  • reach@yogakudil.org


திருக்கோவை | பகைதணிவினைப்பிரிவு | பாடல் எண் : 2

 à®¨à¯†à®°à¯à®ªà¯à®ªà¯à®±à¯ வெண்ணெயும் நீருறும்

உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல்
பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின்
மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை
போலுந் திருநுதலே.
 
நெருப்பில் உருகும் வெண்ணையும் நீரில் கரையும் உப்பும் என இங்கே மலையாய் விரியும் தோகை என்பதை புறத்தே இருந்து பொய் என்பார்கள் கடந்து போகும் என்பதை விருப்பமுடன் உணர்வோரை விண்ணோரைவிட சிறந்தவர் என நாடமாட்டார் அழித்திட திருப்புறு சூலத்தினோன் தில்லை போன்ற திருநுதலே. (வெளிப்படாமல் இருக்கும் உண்மை உணர உணர்ந்த மனிதர் துணை தேவை)#திருவாசகம்

திருக்கோவை | பகைதணிவினைப்பிரிவு | பாடல் எண் : 1

 à®®à®¿à®•à¯ˆà®¤à®£à®¿à®¤à¯ தற்கரி தாமிரு

வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற்
றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண்
டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்கரி தாம்புரி
தாழ்தரு மொய்குழலே.
 
மிகைப்படுவதை தணிப்பதற்கு அரிதாம் இரு வேந்தர் வேல் போர் இடைப்பட்டு பகையை தணிப்பதற்கு உட்பட்ட மனிதர் பலபிறவியில் செய்த அனைத்தையும் தணிப்பதற்கு என என்னை ஆட்கொண்டவன் தில்லை சூழ் பொழில்வாய் அரும்பை தணிப்பதற்கு அரிதாம் தாழ்தரு மொய்குழலே. (ஆணவம் அழித்து வாழ்வு தரும் திருவடியின் பெருமை)#திருவாசகம்

திருக்கோவையார் | காவற்பிரிவு | பாடல் எண் : 2

 à®šà®¿à®±à¯à®•à®Ÿà¯ பெருங்கைத்திண் கோட்டுக்

குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை
யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது
வோவின்று சூழ்கின்றதே. 
 
சிறிய கண் பெரிய கை திடமான கோடு கொண்ட காது சிவந்த முகம் என தெளிவு பெற்ற முன்னோர் செய்த கருப்பு சிலை உறு காட்ட உடன்உறை அம்பலம் எண்ணமிடுபவரின் உறு காட்டு புரியச் செய்யும் குழலாம் இது என்று சூழ்கின்றதே. (வணங்காமுடி வழி காட்டி நிற்கின்றது)#திருவாசகம்

திருக்கோவையார் | காவற்பிரிவு | பாடல் எண் : 1

 à®®à¯‚ப்பான் இளையவன் முன்னவன்

பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யானரு
ளால்விரி நீருலகங்
காப்பான் பிரியக் கருதுகின்
றார்நமர் கார்க்கயற்கட்
பூப்பால் நலமொளி ரும்புரி
தாழ்குழற் பூங்கொடியே. 
 
முடிவானவன் இளமையானவன் முதல்வானானவன் பின்பும் அவனே மூன்று பக்கங்களையும் காத்திருப்பவன் வியப்புக்குரிய தில்லையன் அருளால் வளரும் நீர் நிறை உலகத்தை காப்பவன் விலக நினைப்பவர் தமக்கு கார்கயல் காட்டி பூவால் நலமான ஒளி தந்து புரியச்செய்யும் தாழ்குழற் பூங்கொடியே. (இறைமை விட்டு விலகாத பண்பை திருவடி அருளும்)#திருவாசகம்

திருக்கோவையார் | ஓதற்பிரிவு | பாடல் எண் : 4

 à®ªà®¿à®°à®¿à®¯à®¾ மையுமுயி ரொன்றா

வதும்பிரி யிற்பெரிதுந்
தரியா மையுமொருங் கேநின்று
சாற்றினர் தையல்மெய்யிற்
பிரியாமை செய்துநின் றோன்தில்லைப்
பேரிய லூரரன்ன
புரியா மையுமிது வேயினி
யென்னாம் புகல்வதுவே.
 
பிரியாமல் இருப்பதும் உயிர் என்று ஆவதும் பிரிந்தால் ஒட்டு மொத்தமாய் பெரிய மாற்றம் தரும் என அறிந்து நின்று போற்றினர் பெண் என்ற உடலின் பிரியாமை செய்து நின்றோன் தில்லை என்ற புகழ்பெற்ற ஊர் என அறியாமல் இருப்பது குற்றம் என்று புகல்வதுவே. (உடல் இருக்கும் பொழுதே உண்மை அறிய வேண்டும்)#திருவாசகம்

திருக்கோவையார் | ஓதற்பிரிவு | பாடல் எண் : 3

 à®•à®±à¯à®ªà®¾ மதிற்றில்லைச் சிற்றம்

பலமது காதல்செய்த
விற்பா விலங்கலெங் கோனை
விரும்பலர் போலஅன்பர்
சொற்பா விரும்பின ரென்னமெல்
லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித்
தாங்குக் குறுகியதே.
 
திடமான மதில் கொண்ட தில்லை சிற்றம்பலத்தை காதல் செய்த விலைமதிப்பற்ற வணக்கத்திற்குரிய மன்னனை விரும்பாதவர் போல் அன்பரின் சொற்களை விரும்பினால் என்ன மென்மையாய் ஓதி காதுகளுக்கு எட்டாத வெளியே இருக்க இலக்கு அறியாமல் வேல் குத்திய இலையாய் குறுகியதே. (மென்மையான சொற்களுடன் போலிகள் நம்மை ஆட்கொள்கிறது)#திருவாசகம்

திருக்கோவையார் | ஓதற்பிரிவு | பாடல் எண் : 2

 à®µà¯€à®¤à®²à¯à®±à¯ றார்தலை மாலையன்

தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல்
வீதரு மென்பதுகொண்
டோதலுற் றாருற் றுணர்தலுற்
றார்செல்லல் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை
யுற்ற புரவலரே.
 
வீழ்தல் அடைந்தவரின் தலையை மாலையாக அடைந்தவன் தில்லையில் மிகவும் சிறந்த அரசன் அவன் கழல்கே காதல் உற்றவர் நன்மையுடைய கல்வி தரும் என்றே ஓதல் செய்பவரும் உற்று உணர்ந்தார் விலகல் இல்லா கழல் இடத்தில் போதல் அடைந்தார் நின் புணர்முலை உற்ற பொருள் தந்து காக்கும் புரவலரே. (திருவடி அடைந்தவர் அடுத்தவருக்கு பொருள் தந்து உதவும் புரவலர்)#திருவாசகம்

திருக்கோவையார் | ஓதற்பிரிவு | பாடல் எண் : 1

 à®šà¯€à®°à®³ வில்லாத் திகழ்தரு

கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென்
றாரம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஒருவன்
இருங்கழ லுன்னினர்போல்
ஏரள வில்லா அளவின
ராகுவ ரேந்திழையே.
 
அளவற்ற சீர் திளைக்கத் தரும் கல்வி உடைய செம்பொன் அரையின் யாரும் அளக்க முடியாத அளவு சென்றவர் அம்பலத்துள் நின்ற ஓர் அளவில்ல ஒருவன் இரு கழல் எண்ணியவர் போல் ஏற்றம் பெறுவர் ஏந்திழையே. (திருவடியே சிறப்புகளை அருளும்) #திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 9

 à®†à®©à®¨à¯à®¤ வெள்ளத் தழுந்துமொர்

ஆருயிர் ஈருருக்கொண்
டானந்த வெள்ளத் திடைத்திளைத்
தாலொக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத் தறைகழ
லோனருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்
றாதிவ் வணிநலமே. 
 
இன்பக் கடலில் மூழ்கும் ஆருயிர் இரு உருவம் கொண்டு இன்பத்தில் திளைக்கும் போல் அம்பலம் சேர் ஆனந்த வெள்ளத்து அறை கழலான் அருள் பெற்றவரின் இன்பக் கடல் வற்றாது முடியாது அணிநலமே. (இறை அடைந்தவர் இன்பத்தை அணியாக கொண்டு இன்பத்தில் திளைப்பார்)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 8

 à®®à®©à¯à®©à®µà®©à¯ தெம்முனை மேற்செல்லு

மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்
லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலத்
தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவலன் னாளுமற்
றோர்தெய்வ முன்னலளே.
 
மன்னவன் அறியும் இடத்தை அடைய முற்பட்டாலும் மால் அரி போல் புறத்தே சென்றால் முடியாது. வரகுணன் தென்னவன் போற்றும் சிற்றம்பலத்தான் மற்ற தேவர்களுக்கு எல்லாம் முன்னவன் முழுவதையும் ஆளும் மற்றோர் தெய்வம் முன் இருப்பவளே. (அவளும் அவனுமாய் திருவடியே இருக்கிறது)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 7

 à®šà®¿à®±à¯à®ªà®¨à¯ திகழ்தரு திண்மதில்

தில்லைச்சிற் றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன்
பூவணம் அன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனுங்
கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல்செல்
லாதவ னீர்ங்களிறே.
 
சிலையின் அழகு தரும் திடமான தில்லை சிற்றம்பலத்து பொன் பதித்தது போன்ற சடையன் பூ நிறைந்த வணம் போன்ற பொன்னின் கல் பதித்த வாய் இளம் மீன் கடக்கும்படி கடந்தும் இங்கே பதித்து வாசல் என்று விடியல் இது என செல்லாதவர் மதம் கொண்ட ஆண் யானையே. (வாசல் அறிந்து செல்லாதவர் வீணானவர்களே)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 6

 à®¤à¯†à®¯à¯à®µà®®à¯ பணிகழ லோன்தில்லைச்

சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று
நின்று திறைவழங்காத்
தெவ்வம் பணியச்சென் றாலுமன்
வந்தன்றிச் சேர்ந்தறியான்
பௌவம் பணிமணி யன்னார்
பரிசின்ன பான்மைகளே.
 
தெய்வீகமானவர்கள் பணியும் கழலோன் தில்லை சிற்றம்பலம் இணைப்பவள் தெய்வீகமானவர்களை பணிவதை அறியாதவள் என நின்று கடமை செய்யாமல் கடந்து சென்றாலும் வரும் இடத்தை சேர்ந்திட அறியான் என்றாலும் முழுமை பணி மணி என்றால் பரிசுகள் பலபலவே. (சமூக ஒழக்கம் அற்றவரும் இறை உணர்வு பெறலாம்)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 5

 à®ªà¯Šà®Ÿà¯à®Ÿà®£à®¿ யான்நுதல் போயிறும்

பொய்போ லிடையெனப்பூண்
இட்டணி யான்தவி சின்மல
ரன்றி மிதிப்பக்கொடான்
மட்டணி வார்குழல் வையான்
மலர்வண் டுறுதலஞ்சிக்
கட்டணி வார்சடையோன்தில்லை
போலிதன் காதலனே.
 
திலகம் அணியும் நெற்றி போய் சேரும் பொய் போல் இடை என புகுந்திடும் அதை இட்டு அணியாதவன் தவத்தின் மலர் இன்றி பிறவற்றிற்கு மதிப்பு கொடுக்காதவன் சூடும் ஒன்றையும் குழலுக்கு வைக்காதவன் வண்டுகள் மொய்க்க மலர் கட்டி அணிபவர் சடையோன் தில்லை போல் இதன் காதலனே. (மூன்றாம் கண் விழிப்பும் சூண்ணிய தரிசனமும்)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 4

 à®¤à¯Šà®£à¯à®Ÿà®¿à®© மேவுஞ் சுடர்க்கழ

லோன்தில்லைத் தொல்நகரிற்
கண்டின மேவுமில் நீயவள்
நின்கொழு நன்செழுமென்
தண்டின மேவுதிண் தோளவன்
யானவள் தற்பணிவோள்
வண்டின மேவுங் குழலா
ளயல்மன்னும் இவ்வயலே.
 
உதவி செய்வோர் கூடும் சுடர் கழலோன் தில்லையின் பழமையான நகரின் காண அரிதானவளான நீ உன் கொழுநன் செழிக்க ஏவள் வேலை செய்யும் திடமான தோள் உடையவன் என அவனுக்கு பணிவோள் வண்டுகள் மொய்க்கும் குழல் உடையவள் இருக்கும் இவ்வயலே. (ஒன்றுடன் ஒன்று கூடி இயலும் திருவடி பெருமை)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 3

 à®šà¯€à®°à®¿à®¯à®²à¯ ஆவியும் யாக்கையும்

என்னச் சிறந்தமையாற்
காரியல் வாட்கண்ணி எண்ணக
லார்கம லங்கலந்த
வேரியுஞ் சந்தும் வியல்தந்
தெனக்கற்பின் நிற்பரன்னே
காரியல் கண்டர்வண் தில்லை
வணங்குமெங் காவலரே.
 
சீரான இயல்பு கொண்ட உயிரும் உடலும் எல்லாவகையிலும் சிறந்தமையால் கரிய மேகமான வலிமையான கண்ணியை எண்ணப்பட்டு கமலம் கலந்த வேரியும் சாந்தும் தந்து என்னை முழுமையான காமம் அனுபவிக்க என்றே காரியல் கண்டவர் தில்லை வணங்கும் என் காவலரே. (சரியான மனிதர் இறை அடைந்து முழுமையை அனுபவிப்பார்)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 2

 à®‡à®°à¯à®¨à¯à®¤à¯à®¤à®¿ யென்வயிற் கொண்டவன்

யான்எப் பொழுதுமுன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி
யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வாலெரி
முன்வலஞ் செய்திடப்பால்
அருந்துதி காணு மளவுஞ்
சிலம்பன் அருந்தழையே
 
இருந்து துதிக்க என்னை எப்பொழுதும் வாசலில் முன்னே பொருத்தியவன் உன்னும் மருந்தானவன் பிரம்மன் மால் இருவர்க்கு அரியவன் தில்லை வாழ்த்திடும் சிறப்பானவர் போல் இருந்து திரண்ட வானத்து நட்சத்திரங்களாய் முன்னே வலம் செய்து அருந்ததி காணும் அளவு சிலம்பன் அருந்தழையே. (மனம் தெளிவடையச் செய்து என்னை மணம்புரியச் செய்தான்)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 1

 à®ªà®¿à®°à®šà®¨à¯ திகழும் வரைபுரை

யானையின் பீடழித்தார்
முரசந் திகழு முருகியம்
நீங்கும் எவர்க்குமுன்னாம்
அரசம் பலத்துநின் றாடும்
பிரானருள் பெற்றவரிற்
புரைசந்த மேகலை யாய்துயர்
தீரப் புகுந்துநின்றே. 
 
அமையான அழகுபடுத்திய மனம் என்ற யானையின் பீடு அழித்தவர் நாதம் அடைந்து உருகினர் நீக்கமற பாகுபாடு இல்லாமல் யாவர்க்கும் முன்னே அரசனாய் அம்பலத்தில் நின்று ஆடும் தலைவன் அருள் பெற்றவரின் அழகு செய்த அணியாய் துயர் தீரப் புகுந்து நின்றே. (பலம் கொண்ட யானை போன்ற மனதை அழகு செய்தவர் இறைவனுடன் இணைகிறார்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 33

 à®Žà®©à¯à®•à®Ÿà¯ˆà®•à¯ கண்ணினும் யான்பிற

வேத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச்
சங்கரன் தாழ்கயிலைக்
கொன்கடைக் கண்தரும் யானை
கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்ணிது காண்வந்து
தோன்றும் முழுநிதியே.
 
என் ஓரவிழிப் பார்வையிலும் பிறவற்றில் ஒத்தபடி இல்லாமல் இருப்பினும் இரக்கம் கொண்டு தன் ஒரப்பார்வையால் குளிர் தில்லை சங்கரன் தாழ்கயிலை கொண்டு பார்த்தும் கடிந்தாரும் கண்ணை பெற்றிருந்தார் முன் கடை கண் இது என காணுப்படி வந்து தோன்றும் முழுநிதியே. (இறை அருளால் முழுமை உணர்த்தும் கண்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 32

 à®…டற்களி யாவர்க்கு மன்பர்க்

களிப்பவன் துன்பவின்பம்
படக்களி யாவண் டறைபொழிற்
றில்லைப் பரமன்வெற்பிற்
கடக்களி யானை கடிந்தவர்க்
கோவன்றி நின்றவர்க்கோ
விடக்களி யாம்நம் விழுநக
ரார்க்கும் வியன்முரசே.
 
தன்னை மறத்து களிப்பவர்க்கும் அன்பர்க்கும் அளிப்பவன் துன்ப இன்பம் ஒட்டாத வண்ண அறை என்ற தில்லை பரமன் வெறுப்புடன் கடக்க முடியாத களிப்புடையவனை கடிந்தவர்க்கோ அல்லாமல் பற்றி நின்றவர்க்கோ விட முடியா களிப்பை நம் விருப்பமுடன் ஏற்கும் நகரத்தார்க்கும் என கொட்டு முரசே. (யார்க்கும் இன்ப களிப்பை அளிப்பது இறைமையே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 31

 à®ªà¯‚ரண பொற்குடம் வைக்க

மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம்
ஆர்க்கதொன் மாலயற்குங்
காரணன் ஏரணி கண்ணுத
லோன்கடல் தில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென்
றேங்கும் மணமுரசே.
 
முழுமையான பொற்குடம் அமைந்திட மணி முத்து பொன் பதித்த தோரணம் நிறைய அளவற்று ஆர்பரிக்க பழமையானவர்க்கும் காரணமானவன் சிறந்த அணியான கண்ணுதலோன் கடல்தில்லை என வாரணமாய் முலைவடிவில் எங்கும் உறுதியானாய் என மணமுரசே. (கண்ணுதலால் அடைந்தாய் என கொட்டு முரசே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 30

 à®•à®³à¯à®³à®¿à®©à®®à¯ ஆர்த்துண்ணும் வண்கொன்றை

யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
புள்ளின மார்ப்பப் பொருதிரை
யார்ப்பப் புலவர்கடம்
வள்ளின மார்ப்ப மதுகர
மார்ப்ப வலம்புரியின்
வெள்ளின மார்ப்ப வரும்பெருந்
தேரின்று மெல்லியலே. 
 
போதை விரும்புபவர் தேடி அடையும் திடமான கொன்றை நின்றவன் தில்லை கார்கடலின் இடத்தே பறவையாய் ஆர்பரிக்க அலைகள் ஆர்பரிக்க புலவர்கள் கூடி திடமாய் ஆர்பரிக்க மதுகரம் ஆர்பரிக்க வலதில் புரியும் வெள்ளினம் ஆர்பரிக்க வருகிறாள் தேரில் மெல்லியலாலே. (திருவடிப் பெருமை)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 29

 à®‡à®³à¯ˆà®¯à®¾ ளிவளையென் சொல்லிப்

பரவுது மீரெயிறு
முளையா அளவின் முதுக்குறைந்
தாள்முடி சாய்த்திமையோர்
வளையா வழுத்தா வருதிருச்
சிற்றம் பலத்துமன்னன்
திளையா வருமரு விக்கயி
லைப்பயில் செல்வியையே.
 
இளமை குறைய இவளை என்ன என்று சொல்லி உணர்த்துவேன் எத்தனை முறை ஆயினும் அளவில் முதிரா அவளின் தாள்முடி சார்ந்து இமையாமல் இருப்பவர் வளையாமல் இருக்கச் செய்யும் சிற்றம்பலத்து மன்னன் திளைப்பதில் மாற்றம் இல்லாமல் பயில் செல்வியே. (நேற்றும் இன்றும் என்றும் இளமை குன்றாது இருப்பது இறைமையே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 28

 à®®à®©à®•à¯à®•à®³à®¿ யாய்இன் றியான்மகிழ்

தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத்
தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தா
ரொருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச்
சாரற் பொருப்பிடத்தே.
 
மனம் களிப்புடன் இல்லாத நான் மகிழ்ந்து தூங்க வார்கழல்கள் அளித்து நிற்கும் அம்பலத்தே இருப்பவன் குளிர் கயிலை வெறிக்கொண்ட யானையை அடக்கிய ஒருவர் செவ்வாய் என சிவந்து நீர் வடியும் வரை வெறுப்பை பற்றாது இருப்பார் பொருப்பிடத்தே. ( புலால் மறுத்தவர் மகிழ்ச்சியை அடைவார்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 27

 à®µà®¿à®¤à®¿à®¯à¯à®Ÿà¯ˆ யாருண்க வேரி

விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினிற்
பாய்புனல் யாமொழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க
வேறு கருதுநின்னின்
மதியுடை யார்தெய்வ மேயில்லை
கொல்இனி வையகத்தே. 
 
விதி உடையவர் பெறுவார்கள் தேன் கொண்ட பெரிய கலத்தை அம்பலத்தின் தலைமை பெற்றவன் பரங்குன்றின் வரும் நீர் ஒழுக கதி உடையான் வெளிப்பட்டு நிற்க மாறி எண்ணாதபடி இருக்கும் அறிவுடையார் தெய்வமே இவருக்கு இணை இல்லை வையகத்தே. (மாற்றமில்லாத இறை சிந்தை உடையவருக்கு இணை இல்லை)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 26

 à®•à¯à®Ÿà®¿à®•à¯à®•à®²à®°à¯ கூறினுங் கூறா

வியன்தில்லைக் கூத்தனதாள்
முடிக்கல ராக்குமொய் பூந்துறை
வற்கு முரிபுருவ
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன
சென்றுநம் யாயறியும்
படிக்கல ராமிவை யென்நாம்
மறைக்கும் பரிசுகளே.
 
குடி இருக்க இயலாதவர் கூறினும் கூறா வியப்பு உடைய தில்லை கூத்தன் தாள் அடைய இயலாதவரானாலும் மொய் பூந்துறை முன் நிறுத்த உரிமையான புருவ வடிக்கலர் அடைவோர் கண்ணி வந்தன சென்று நாம் எது என அறியாதபடி படிக்க இயலாதவராக நாம் இருப்பினும் மறைக்கும் பரிசுகளே. (அறியாமலேயே திருவடி கவனம் பரிசுகளை வழங்கும்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 25

 à®µà®£à¯à®Ÿà®²à¯à®±à¯ றேமெங்கண் வந்தொரு

தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்றதொர்
போழ்துடை யான்புலியூர்க்
கொண்டலுற் றேறுங் கடல்வர
எம்முயிர் கொண்டுதந்து
கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென்
றானொர் கழலவனே.
 
தெளிவற்று எங்கள் கண்ணில் ஒரு தோற்றம் வந்தது என்று அனுபவம் என்றே நின்ற ஓர் சமயத்தை உடையவன் புலியூர் என்றே அடைந்தவர் கடல் பெற்று எமது உயிர் மீட்டு தந்து கண்டதை அறிந்து சேர்ந்து சென்றவர் கழலவனே. (தெளிந்தவர் தெளிவை எளிமையாக தருவார்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 24

 à®¯à®¾à®¯à¯à®¨à¯ தெறுக அயலவ

ரேசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது
கூறுவ லென்னுடைய
வாயும் மனமும் பிரியா
இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள்
தருவன் சுடர்க்குழையே. 
 
நான் தெளிய அயலானவர் சுகப்பட ஊர் மகிழ நீயும் முயல நிகழ்ந்தது கூற என்னுடைய வாயும் மனமும் பிரியா இறை தில்லை வாழ்த்துவது போல் தூயவன் உனக்கு திடமான கூள் தருவான் சுடர்க்குழையே. (இறை யாருக்கும் அருள தில்லையில் நின்று ஆடுகின்றான்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 23

 à®šà¯†à®©à¯à®±à®¾à®°à¯ திருத்திய செல்லல்நின்

றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா வழகிதன் றேயிறை
தில்லை தொழாரின்நைந்தும்
ஒன்றா மிவட்கு மொழிதல்கில்
லேன்மொழி யாதுமுய்யேன்
குன்றார் துறைவர்க் குறுவேன்
உரைப்பனிக் கூர்மறையே.
 
அடைந்தவர்கள் திருத்தியதை மறுத்து நின்றவர்கள் சிதைந்துவிட நன்றே வழங்கிய இறை தில்லை தொழாதவர்கள் வளம் இழந்தும் அவர்களுக்கு சொல்ல ஒன்றும் இல்லை என சொல்லாமல் இருக்கமாட்டேன் குன்றாமல் நடப்பவர்க்கு உற்ற துணையாவேன் உரைப்பனிக் கூர்மறையே. (இறை உணர்ந்தவர் வேதம் கடந்து உதவ முற்படுவார்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 22

 à®…யர்ந்தும் வெறிமறி ஆவி

செகுத்தும் விளர்ப்பயலார்
பெயர்ந்தும் ஒழியா விடினென்னை
பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான
தம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதி னொழியினென்
ஆதுந் துறைவனுக்கே.
 
சோர்வும் வெறி கொண்டு மறுத்தும் தன் ஆவிபோக போராடி அறிய முடியாதவர் பெயர் உரைத்தும் ஆணவம் ஒழியாவிடின் என்ன சொல்வதோ இணைந்து இருவர் உயர்ந்தும் பணிந்தும் உணர்வான தன் பலம் அறிந்தார் எனின் உயர்ந்தே எதிலும் எழிலாக ஆகும் துறைவனுக்கே. (அறிந்தவருடன் உறவாட நாமும் அறியலாம்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 21

 à®µà¯‡à®²à®©à¯ புகுந்து வெறியா

டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்தவி யக்கழல்
வைத்தெழில் தில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றா
னிருந்தவெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின்
நிற்பித்த பண்பினுக்கே.
 
வேல் கொண்டவன் வந்து புகுந்து வெறிகொண்டு அறியாமை அழிக்க காலன் புகுந்து அழிக்காதபடி கழல் வைத்த எழில் தில்லை நின்ற மேலானவன் என் கண் நின்று வெறுமையான காடு போல் பாலன் புகுத்தி பரிசாக அளித்து நிறுபித்த பண்பினுக்கே. (திருவடி நாட்டம் இறை தரிசனம் பெறும்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 20

 à®•à¯à®¯à®¿à®²à®¿à®¤à®©à¯ றேயென்ன லாஞ்சொல்லி

கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா
இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணங்
காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லிற்
றோன்று மவன்வடிவே.
 
குயில் இது இல்லை என சொல்லமுடியாதபடி சொல்லும் சிற்றம்பலத்தான் இயல் இது என்ன என அறியவியலாது இறை என்ற சேய் கடந்தபடி மயில் என்றே கொடி வாரணங் காட்டி கூர்மையால் இன்றே நெல் என ஆனதும் அவன் வடிவே. (எல்லா வடிவும் இறை வடிவே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 19

 à®®à®¾à®Ÿà¯à®Ÿà®¿à®¯à®©à¯ றேயெம் வயிற்பெரு

நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப தோடிய
வாறிவ ளுள்ளமெல்லாங்
காட்டியன் றேநின்ற தில்லைத்தொல்
லோனைக்கல் லாதவர்போல்
வாட்டியன் றேர்குழ லார்மொழி
யாதன வாய்திறந்தே.
 
சிக்கிய அன்றே என் வாசலில் நாணத்துடன் இருக்க இனிமையாக்க மா சூட்டி நிற்க துவண்ட என் உள்ளம் எல்லாம் கொள்ளை கொண்டவன் தில்லையன் தொல்லோனைக் கல்லாதவர் போல் வாடமல் குழலாரே மொழி எதுவானலும் வாய் திறந்திடுங்கள். (இறையை எந்த மொழியிலும் போற்றலாம்)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 18

 à®šà¯à®£à®™à¯à®•à¯à®±à¯à®± கொங்கைகள் சூதுற்

றிலசொல் தெளிவுற்றில
குணங்குற்றங் கொள்ளும் பருவமு
றாள்குறு காவசுரர்
நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம்
பலநெஞ் சுறாதவர்போல்
அணங்குற்ற நோயறி வுற்றுரை
யாடுமின் அன்னையரே. 
 
அடங்க மறுக்கும் மார்பகம் சூழ்ச்சி இல்லாத சொல் தெளிவு பெறவேண்டியது இல்லாத குணம் குற்றம் சேரும் பருத்தை அடைந்தாள் குறுகிய மனம் கொண்ட அசுரர் அழித்த சிவன் சிற்றம்பலத்தானை நினைய நெஞ்சம் உடையவர் போல் துன்பம் அடைந்து நோய் உற்றவரை சாடுங்கள் அன்னையரே. (வேதனை அடைந்தால் அதற்கு காரணமான தவறாக வழிகாட்டிய அசுரரை ஏசவும் அன்னையரே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 17

 à®µà¯‡à®¯à®¿à®© மென்தோள் மெலிந்தொளி

வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள்
அல்லள் பவளச்செவ்வி
ஆயின ஈசன் அமரர்க்
கமரன்சிற் றம்பலத்தான்
சேயின தாட்சியிற் பட்டன
ளாம்இத் திருந்திழையே.
 
மூங்கில் இன மென்மையான தோள் மெலிந்து ஒளி குறைந்து வாடி பார்வை மாறாக தெரிந்து மேகலை நழுவிட துன்பத்தால் பவளம் போல் ஆயின ஈசன் தேவர்களின் தேவன் சிற்றம்பலத்தான் சேய் என ஆயினளாம் இந்த திருத்திழையே. (தவத்தால் இளைத்து ஏகனின் அருள் பெறலாம்) #திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 16

 à®µà®°à¯à®µà®© செல்வன தூதுகள்

ஏதில வான்புலியூர்
ஒருவன தன்பரின் இன்பக்
கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தென தாவிகொண்
டேகியென் நெஞ்சிற்றம்மை
இருவின காதல ரேதுசெய்
வானின் றிருக்கின்றதே.
 
வருவதும் போவதும் தூதர்கள் என்று எதுவும் இல்லாத வான் புலியூர் ஒன்றிய அன்பரின் இன்பக் கலவிகள் உள்ளம் உருக தருவன செய்யவேண்டயதை கொண்டே ஏகியவன் நெஞ்சம் நம்மை இரவகை காதலுடன் விரிந்து இருக்கின்றதே. (தூதர்கள் தேவையின்றி இருக்கும் ஏகன் காதலாய் விரிந்துள்ளான்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 15

 à®µà¯†à®©à¯à®±à®µà®°à¯ முப்புரஞ் சிற்றம்

பலத்துள்நின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருள்தரக்
கூடினர் நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோஇருந்
தேமையுஞ் செல்லல்செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து
தோன்றும் நிரைவளையே.
 
மூன்று பக்கத்தையும் வென்றவர் சிற்றம்பலத்தில் நின்று ஆடும் வெள்ளிக் குன்றாக இருப்பவர் குறையா அருள்தரக் கூடினர் நம்மை விலகி சென்றவருக்கு தூதாக இருந்து திறமையாய் உரைத்திடாது நின்றவருக்கு தூதாக வந்து தோன்றும் நிரைவான வளையே. (தூது சொல்ல முடியாதவருக்கும் தூதாக இருப்பது திருவடியே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 14

 à®•à®°à¯à®¨à¯à®¤à®¿à®©à¯ˆ யோம்பக் கடவுட்

பராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன்
பேரரு ளால்தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத்
தான்பரங் குன்றிற்றுன்றி
விரிந்தன காந்தள் வெருவரல்
காரென வெள்வளையே.
 
கருத்து உருவாக்கும் விதத்தில் கடவுள் இருப்பதாக மனிதர் இன்புற மிகுந்த வழிந்திடும் அளவற்று சுரந்ததன் பேரருளால் வணங்கிடவே பரிந்தது என்ன ஆண்ட சிற்றம்பலத்தான் பரங்குன்றில் நின்று விரியும் ஈர்ப்புடையாள் விரைந்து வருவது வெள்வளையே. (உள்ளத்து ஏக்கமே ஏகனை உணர்த்தும்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 13

 à®®à®©à¯à®šà¯†à®¯à¯à®¤ முன்னாள் மொழிவழியே 

அன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையும்நில்
லாவென தின்னுயிரும்
பொன்செய்த மேனியன் றில்லை
யுறாரிற் பொறையரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து
நீர்மைகொல் மொய்குழலே.
 
இருப்பின் ஒழுக்கம் உருவாக்கும் முன்னாள் தோன்றிய மொழியால் வாய்மை கண்டறிந்து என்ன செயல் செய்த உள்ளமும் நிறையும் நிலைக்காது மாறும் உயிரும் பொன் செய்த மேனியால் தில்லை ஊரில் பொறை உரிதாக கொண்டு முன் செய்த தீவினை கொல் காலத்தில் நீர்த்திட செய்யும் மோய்குழலே. #திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 12

 à®®à¯Šà®¯à¯à®¯à¯†à®©à¯ பதேஇழை கொண்டவ

னென்னைத்தன் மொய்கழற்காட்
செய்யென் பதேசெய் தவன்தில்லைச்
சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
பொய்யென்ப தேகருத் தாயிற்
புரிகுழற் பொற்றொடியாய்
மெய்யென்ப தேதுமற் றில்லைகொ
லாமிவ் வியலிடத்தே. 
 
கூட்டத்தையே இழையாக கொண்டவன் என்னை தன் கூட்டத்து கழல் காட்டி செய்யவேண்டியதை செய்தவன் தில்லை சூழ்ந்த கடல் சேர்ந்தவர் சொல்லும் பொய் என்று கருதினால் நீள்கூந்தல் உள்ள பொற்கொடியே மெய் என்பது ஏது மற்று இல்லை இந்த எழில் இடத்திற்கு. (என்றும் மாறாதது இறை இதை உணர்ந்தோர் வாக்கே வழி)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 11

 à®µà®¨à¯à®¤à®¾à®¯à¯ பவரையில் லாமயில்

முட்டை இளையமந்தி
பந்தா டிரும்பொழிற் பல்வரை
நாடன்பண் போஇனிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென்
தில்லை தொழார்குழுப்போற்
சிந்தா குலமுற்றுப் பற்றின்றி
நையுந் திருவினர்க்கே.
 
வந்து ஆராய்பவர் இல்லா மயில் முட்டை குட்டிக்குரங்கு பந்தாய் ஆடும் வனம் பலவற்றை நாடன் இசை இனிமையானதை அடைந்தவர் நறுங்கொன்றை அணிந்த தென்தில்லை கூத்தன் தொழாதவர்களின் கூட்டம் போல் சிதறாமல் குலம் முழுவதும் பற்று இல்லாமல் இருக்கச் செய்யும் உயர்வுடையவர்க்கே. (திருவடி தவத்தால் பற்று இல்லாமல் போகலாம்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 10

 à®®à®¤à¯à®®à®²à®°à¯à®šà¯ சோலையும் வாய்மையும்

அன்பும் மருவிவெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின்
அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை 
யோன்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த
வாறென்ப ரேந்திழையே.
 
போதை தரும் மலர் நிறை சோலையும் வாய்மையும் அன்பும் மாற்றம் ஒன்று இல்லாத போக்கும் செல்வத்தின் செருக்கும் முன் நின்று இளகும் மலர் நோக்க மூன்று உடையவன் தில்லை நோக்காமல் இருந்தவர் போல் இது மலர் பாவை என்று வந்தபடி வந்த ஏந்திழையே. (திருவடி பெருமை) #திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 9

 à®•à®¾à®©à®®à®°à¯ குன்றர் செவியுற

வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென
மான்நல் தொடைமடக்கும்
வானமர் வெற்பர்வண் தில்லையின்
மன்னை வணங்கலர்போல்
தேனமர் சொல்லிசெல் லார்செல்லல்
செல்லல் திருநுதலே.
 
கானம் தங்கும் குன்றை அடைந்தவர் செவியில் உணர்ந்து வாங்க துணையாக இருப்பவர் நோக்கினால் நோக்கம் உணர்த்தும் உயிர்கள் இணங்கும் வானவர் வெற்றி பெற்றவர் வண்தில்லை ஆற்றலை வணங்காதவர் போல் தேன் போன்று சொல்லி சொல்லாமல் சொல்லவல்லார் சொல்வது உயர் நெற்றியினாலே. (குரு முன் நெற்றிக்கண் விழிப்படையும்) #திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 8

 à®à®°à¯à®ªà¯à®ªà®¿à®©à¯à®©à¯ˆ தோள்முன் மணந்தவன்

ஏத்த எழில்திகழுஞ்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த
மணலிற் கலந்தகன்றார்
தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென்
கொலாமின்று செய்கின்றதே. 
 
ஏற்கத் தகுந்த தோள் முன்னமே அறிந்து மணந்தவன் உயர் அழகு கொண்ட சீர்ப்பொன்னை வென்ற செழுமையான தில்லை சூழ் பொழில் வாய்க்காலில் வளர் புன்னை தரும் பொன் அவிழ்தது போல் மணலிற் கலந்து அகன்றார் தேர்ப்பின்னை சென்ற வெள்ளை மனம் இன்று தடம் மாற செய்கின்றதே. (நீக்கமற இருப்பதை அறியாமல் தடுமாறும் மனம்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 7

 à®…ருந்தும் விடமணி யாம்மணி

கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்
மருந்து மமிர்தமு மாகுமுன்
னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்துங் கடன்நெறி செல்லுமிவ்
வாறு சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன
யாமினி வாழ்வகையே. 
 
அருந்திய விடம் மணியாக நின்ற மணிகண்டன் மற்ற அண்டர்க்கு எல்லாம் மருந்தும் அமுதமாகவும் இருக்கும் முன்னோன் தில்லை வாழ்த்தும் வள்ளல் செய்ய வேண்டியதை திருத்தமாக செய்ய வகைதந்தும் அதை சிதைக்கும் என்றால் வருந்தும் மடமை கொண்ட நெஞ்சமே இனு அறி வாழும் வகையே. (பொருளை மதித்து வாழ பழகு)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 6

 à®¨à®²à¯à®²à®¾à®¯à¯ நமக்குற்ற தென்னென்

றுரைக்கேன் நமர்தொடுத்த
வெல்லா நிதியு முடன்விடுப்
பான்இமை யோரிறைஞ்சும்
மல்லார் கழலழல் வண்ணர்வண்
தில்லை தொழார்களல்லாற்
செல்லா அழற்கட மின்றுசென்
றார்நம் சிறந்தவரே.
 
நன்றாய் நமக்கென கொடுத்ததை என்ன என்று உரைப்பேன் எதிரி செய்த எல்லாவற்றையும் விலக்கியவன் இமைக்காதவர் இறைஞ்சும் வல்லவர் திருவடி நிழல் வண்ணமுடையவர் வண்தில்லை தொழாதவர்களுக்கு விலகாத துன்பம் இருக்க அதை கடந்த நாம் சிறந்தவரே. (திருவடி தொழுபவர் சிறப்புடன் இருப்பார்கள்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 5

 à®µà®°à¯à®Ÿà¯à®Ÿà®¿à®©à¯ திகைக்கும் வசிக்கின்

துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும்
வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
னேசொல்லி யேகுவனே. 
 
வருத்தினால் திகைப்படையும் விருப்பினால் வெளிப்படும் மனம் மகிழ்வுடன் நெருங்கினால் தெளியலாம் இதை சொல்லும் வகை முழுமையாக இல்லை சீர் பெற்ற குரு புகழ் கொண்ட புலியூர் கண்டு உறுகாத மனம் உள்ள வளைந்த கூந்தல் உள்ளவளுக்கு எங்ஙணம் சொல்லி ஏகுவேன். (மந்த மதியார்க்கு திருவடி பெருமை புரியாது) #திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 4

 à®•à¯‡à®´à¯‡ வரையுமில் லோன்புலி

யூர்ப்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியா ளிரவரி
னும்பகற் சேறியென்று
வாழே னெனவிருக் கும்வரிக்
கண்ணியை நீ வருட்டித்
தாழே னெனவிடைக் கட்சொல்லி
யேகு தனிவள்ளலே. 
 
நிகர் வைத்து வரையறுக்க இயலாதவன் புலியூர் பயிலும் கிளி மொழி போன்ற யாழ் கொண்டோர் மொழியால் அரவினும் பகலில் அறியமுடியாது என இருக்கும் வரி கண்ணியை நீ வருட்டி தாழ்மையடையாதே என எனக்கு விடை சொல் தனி வள்ளலே. (உன்னை அறியும் திறத்தை தா தனித்தன்மை கொண்ட வள்ளலே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 3

 à®•à¯à®©à¯à®±à®™à¯ கிடையுங் கடந்துமர்

கூறும் நிதிகொணர்ந்து
மின்றங் கிடைநும் மையும்வந்து
மேவுவன் அம்பலஞ்சேர்
மன்றங் கிடைமரு தேகம்பம்
வாஞ்சியம் அன்னபொன்னைச்
சென்றங் கிடைகொண்டு வாடா
வகைசெப்பு தேமொழியே. 
 
மேடு பள்ளம் கடந்து உயர்ந்தோர் கூறும் நீதி உணர்ந்து இன்றும் இருக்கும் உம்மையும் வந்து மேவுவன் அம்பலத்தை சேரும் மன்றம் இருக்கும் ஏக தலைவனை வாஞ்சையாய் பொன் போன்ற இடத்தை தடை இன்றி அடைய வாடா வகை சொல் தேன் மொழியே. (தமிழே திருவடி அடைய வழி சொல்வயாக)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 2

 à®µà®Ÿà¯à®¤à¯à®¤à®© நீள்வகிர்க் கண்ணிவெண்

ணித்தில வாள்நகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத்
துணியென்னைத் தன்தொழும்பிற்
படுத்தநன் நீள்கழ லீசர்சிற்
றம்பலந் தாம்பணியார்க்
கடுத்தன தாம்வரிற் பொல்லா
திரவின்நின் னாரருளே. 
 
நீண்டு வடிந்து வடிவம் தரும் கண் வெண் நிலத்தில் நகைப்பாலும் தொடுக்கப்படும் நீர் வந்திட துணை நீ எனக்கு என தொழுதிட செய்த ஈசர் சிற்றம்பலத்தான் பணிக்கே அடிமைப் படுத்த பொல்லா இரவின் துணை நின் அருளே. (திருவடியின் துணையே போதும்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 1

குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும்
நின்குலத் திற்கும்வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும்
ஏற்பின்அல் லால்நினையின்
இறைவிற் குலாவரை யேந்திவண்
தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை
யோமெய்ம்மை யோதுநர்க்கே.
 
குறையாக இருப்பதின் பொருட்டும் கல்வியின் பொருட்டும் செல்வத்தின் பொருட்டும் நின் குலத்தில் வந்தோர் நிறைவிற்கும் மேன்மையான நீதிக்கும் ஏற்பான இல்லாததை நினைக்காமல் இறைவன் எண்ணத்தில் ஏந்தி வண்ண தில்லை ஏழ் பொழிலும் உறையும் நுதலாள் விலை உண்டோ மெய்மை ஓதும் ஒருவர்க்கு. (திருவடி ஏழிலை ஓதுவது காட்டிலும் விலை உயர்ந்த ஒன்று இல்லை)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 16

 à®µà®¾à®°à®¿à®•à¯ களிற்றின் மருப்புகு

முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை
நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச்
சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
நீர்மையென் னெய்துவதே.
 
ஏற்கும் யானை என ஆன குன்றில் புகுந்திட முத்தம் தரும் வரைமகளிர் நிறைந்து களிக்கும் வீழம் மலை நாடாமல் விரி திரையை நாடி களிக்க அமரும் சடைமுடி நமது தில்லை ஏரி களிக்கும் மஞ்சம் நீர்மை என ஏய்துவதே. (திருவடி பெருமை)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 15

 à®µà®²à¯à®šà®¿à®¯à®¿ னெண்கு வளர்புற்

றகழமல் கும்மிருள்வாய்ச்
செல்வரி தன்றுமன் சிற்றம்
பலவரைச் சேரலர்போற்
கொல்கரி சீயங் குறுகா
வகைபிடி தானிடைச்செல்
கல்லத ரென்வந்த வாறென்
பவர்ப்பெறிற் கார்மயிலே. 
 
உணவால் நன்றாக வளர்ந்த புற்றில் அகலாமல் அடர்ந்த இருள் என நின்ற சிற்றம்பலத்தை சேராதவர் போல் ஆய்ந்து அறிய வகை அறியாம குறுகிய கல்லாதவர் வந்து வழி தேட பெறி என நின்ற கார்மயிலே. (திருவடி விடியலை தரும்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 14

 à®¤à¯‡à®®à®¾à®®à¯ பொழிற்றில்லைச் சிற்றம்

பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில்
வோனைநண் ணாதவரின்
வாமாண் கலைசெல்ல நின்றார்
கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயினென்
னாஞ்சொல்லுந் தன்மைகளே.
 
மாம்பழம் எழிலாக இருக்கும் தில்லை சிற்றம்பலத்தே மேலோர் வணங்க பெயர் தரித்து நடம்பயில்பவனை நாடாதவரின் அழகற்ற கலை காண சென்றார் துன்பம் அடைந்து நிற்க கண்டால் தானாகவே அறிகிலேன் என சொல்லும்படி தன்மையே ஏற்படும். (திருவடி அறியாதவர் துன்பம் ஏற்புடையதே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 13

 à®®à¯ˆà®¯à®¾à®°à¯ கதலி வனத்து

வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா தயின்றிள மந்திகள்
சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதெ னம்பலத் 
தான்மதி யூர்கொள்வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன்
மாலையின் முன்னினவே.
 
மை இட ஆர்வப்படும் வனத்து வரும் பலன் என்ற பழத்திற்கு அடிமையானேன் அதை அறியாமல் நின்றன பெண் குரங்குகள். சோர்வும் இருமாப்பும் இல்லா மெய் அரிது என அம்பலத்தான் மதியூர் அடைந்து உணராதவரே வெறுப்பார். கொடுக்க வளர்ந்த வேங்கை பொன் மலையின் முன் நின்றதுவே. (திருவடி கவனம் சோர்வும் இருமாப்பும் இல்லா நிலை அருளும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 12

 à®šà¯à®´à®¿à®¯à®¾ வருபெரு நீர்சென்னி

வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம்
பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ
லாள்திறத் தையமெய்யே
பழியாம் பகல்வரின் நீயிர
வேதும் பயனில்லையே.
 
சுழலாமல் வரும் தடையற்ற நீர் சென்னியில் வைத்து என்னை தன் விருப்பத்தில் விலகா அருள் வைத்த சிற்றம்பலவன் கரம் கொண்ட மான் விழியாய் வந்து ஆடும் மென்குழலாள் திறமே மெய். பழியாம் பகல் என்ற வாய்ப்புகள் வந்தால் நீர் வழியவில்லை என்றால் பயனில்லையே. (நன்றியில் நனையட்டும் சென்னி)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 11

 à®‡à®±à®µà®°à¯ˆ உம்பர்க் கடவுட்

பராய்நின் றெழிலியுன்னிக்
குறவரை ஆர்க்குங் குளிர்வரை
நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம்
பலம்நெஞ் சுறாதவர்போல்
உறவரை மேகலை யாட்கல
ராம்பக லுன்னருளே. 
 
இறப்பு என்ற வரையை இழந்த உம்பர் கடவுள் காட்ட எழிலுடன் நின்று மலைமேல் வாழும் குறவரை ஈர்த்து குளிர் வரை நாடிட கொழும் பவள நிறம் கொண்ட மேனியன் சிற்றம்பலம்  நினையாதவர் போல் உறவுக்கு வரையற்ற மேகலை அகன்றது உன் அருளே. (திருவடி கவனக் கொண்ட குறவரை தேவையற்றதிலிருந்து விலக்கி காக்கும் இறை)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 10

 à®•à®²à®°à®¾ யினர்நினை யாத்தில்லை

அம்பலத் தான்கழற்கன்
பிலரா யினர்வினை போலிருள்
தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா
மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்மில்லை
யோநும் வரையிடத்தே. 
 
கல்லாதவராக இருப்பவர் நினைக்காத தில்லை அம்பலத்தான் கழல்கண் கூடாதவர் செயல் இருள் போல் மூழ்கி மறையும் மின்னி விடியா இரவும் பொழியாத மழையும் புண்ணில் நுழைந்த வேல் மலாராமல் மருந்தும்  இல்லாமல் போகும் உமது வரைபட்ட காலம் வரை. (திருவடி நினையாதவர் வாழ்வு நிறைவடையாது) 
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 9

 à®¨à®±à¯ˆà®•à¯à®•à®£à¯ மலிகொன்றை யோன்நின்று

நாடக மாடுதில்லைச்
சிறைக்கண் மலிபுனற் சீர்நகர்
காக்குஞ்செவ் வேலிளைஞர்
பறைக்கண் படும்படுந் தோறும்
படாமுலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண்
படாது கலங்கினவே. 
 
முழுமை அடைந்த கண் குறைந்த மலர்கள் கொண்டவன் நின்று நாடகம் ஆடும் தில்லை. சிறை அடைந்த கண் குறைந்து கூடும் சீர் நகர் காக்கும் சிவந்த வேல் கொண்ட இளைஞர். வெளிப்படுத்தும் கண் படும் இடம் எல்லாம் பட்டு விலகமுடிய மார்பகம் கொண்ட பைந்தொடியாள். எல்லை கொண்ட கண் வெப்பம் குறைந்த கண் அறியாமல் கலங்கிடுமே. (பொருளின் பெருமை)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 8

 à®µà®¾à®©à¯à®±à¯‹à®¯à¯ பொழிலெழின் மாங்கனி

மந்தியின் வாய்க்கடுவன்
தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண்
டாள்திரு நீள்முடிமேல்
மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை
யாளையும் மேனிவைத்தான்
வான்றோய் மதில்தில்லை மாநகர்
போலும் வரிவளையே.
 
வானலாவிய பொழில் எழில் மாங்கனி மந்தியின் வாய் பட்டதை கண்டு மகிழ்ந்த தேன் போன்ற ஒருத்தி நீள் முடி மேல் கூடும் பெண்ணை வைத்து உடையாளையும் மேனியில் வைத்தான் வானலாவிய மதில் தில்லை மாநகர் போல் வரிவளையே. (ஒத்திசையும் திருவடி பெருமை)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 7

 à®µà®¿à®£à¯à®£à¯à®žà¯ செலவறி யாவெறி

யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழிற்
கானல் அரையிரவின்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த
துண்டா மெனச்சிறிது
கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும்
நோக்கினள் கார்மயிலே. 
 
மேலும் கடக்க அறியாதவர் கழல் வணங்காமுடி தீ வண்ணன் சிவன் தில்லை மலிவு இல்லாத எழில் கானல் நல்லிரவில் நாட்டம் பயில அண்ணல் மணி நெடுந்தேர் வந்தது உண்டோ எனச் சிறிது கண்ணும் சிவந்தபடி அன்னை என்னையும் நோக்கினள் கார் மயிலே எனும்படி விரிந்து. (சென்னியின் பயன் அடைதல்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 6

 à®•à®´à®¿à®•à®Ÿà¯ டலைமலை வோன்புலி

யூர்கரு தாதவர்போல்
குழிகட் களிறு வெரீஇஅரி
யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின் வரல்கழல்
கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலின்
துவளு மிவள்பொருட்டே.
 
அச்சம் தவிர்க்கும் மலை உடையவன் புலியூர் எண்ணாதவர் போல் குழியில் விழ்ந்த ஆண்யாணை அலற அச்சம் தரும் இரவில் கைகூப்பி தொழுதபடி இருந்தேன் பொழியும் கடும் புயலில் மயில் துவளும் இவள் பொருட்டே. (திருவடி மயில் துவளும் அருள் மழையால்)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 5

 à®•à®³à®¿à®±à¯à®±à¯à®± செல்லல் களைவயிற்

பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை
நாட பெடைநடையோ
டொளிறுற்ற மேனியன் சிற்றம்
பலம்நெஞ் சுறாதவர்போல்
வெளிறுற்ற வான்பழி யாம்பகன்
நீசெய்யும் மெய்யருளே.
 
ஆண்யானையின் பிடியில் இருந்து தன் களைப்பை போக்க மரத்தை பிடிக்கும் பெண்யானை போல் வானத்து பெருவரை நாட துணையாக நடக்கும் ஒளி பெற்ற மேனியன் சிற்றம்பலத்தை நினையாதவர் போல் வெளியேறினர் வான் பழி கொள்வர் அகத்தவன் நீ செய்யும் மெய்யருளே. (இறை அருளால் திருவடி கவனம் கூடும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 4

 à®•à®Ÿà®¨à¯à®¤à¯Šà®±à¯à®®à¯ வாரண வல்சியின்

நாடிப்பல் சீயங்கங்குல்
இடந்தொறும் பார்க்கும் இயவொரு
நீயெழில் வேலின்வந்தால்
படந்தொறுந் தீஅர வன்னம்
பலம்பணி யாரினெம்மைத்
தொடர்ந்தொறுந் துன்பென் பதேஅன்ப
நின்னருள் தோன்றுவதே.
 
வெற்றி பெற முயன்றிடும் வர்ணம் நிறை வன்மையை நாடி பலருக்கு வெளிப்பட்ட இடம் அறிந்து பார்க்கும் இயல்புடையவனாய் நீ எழில் பெற்றால் பார்த்து அறியும் இடமெல்லாம் தீமை ஒழியம்படி எம்மை தொடரும் துன்பம் எல்லாம் அழிந்து அப்பனே நின்னருள் தோன்றுவதே. (திருவடி அருளால் இன்பம் அடையலாம்)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 3

 à®šà®¿à®±à®¾à®°à¯à®•à®µà®£à¯ வாய்த்த மணியிற்

சிதைபெருந் தேனிழுமென்
றிறால்கழி வுற்றெஞ் சிறுகுடில்
உந்து மிடமிதெந்தை
உறாவரை யுற்றார் குறவர்பெற்
றாளுங் கொடிச்சிஉம்பர்
பெறாவரு ளம்பல வன்மலைக்
காத்தும் பெரும்புனமே.
 
மனமற்ற சின்னவர்கள் கையில் கொண்ட கவணில் (உண்டிகோல்) உள்ள மணி சிதைக்கும் பெருந்தேன். இழுக்கும் மென்மை ஏறால் கழியும் சிறுகுடில், தொடரும் உறவு தரும் எந்தை, உறவை வரைமுறை கடக்க செய்த குறவர், பெற்று ஆளும் கொடிச்சி, உம்பர் பெறாஅம்பலவன், மலை காக்கும் பெரும் புனமே. (திருவடி பெருமை)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 2

 à®ªà®°à®®à¯à®ªà®¯à®©à¯ தன்னடி யேனுக்குப்

பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை
வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி
வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடந்
தோன்றுமிக் குன்றிடத்தே.
 
பரத்தை தனக்கு பயனாக தந்தவனின் அடிமையானவனுக்கு உலகம் வழங்கும் யாவற்றையும் ஊடுருவி வரம்பு அறிய மால் அயன் தில்லை வானவன் வானகம் சேர் அரம்பையர் இடத்தில் மட்டுமே இல்லாமல் யானைக்கு நட்ட குரம்பையருக்கும் இடம் தோன்றும் இக் குன்றிடத்தே. (இறை யாரும் அறியும் வாய்ப்புடன் இருக்கிறது)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 1

 à®Žà®´à¯à®™à¯à®•à¯à®²à¯ˆ வாழையின் இன்கனி 

தின்றிள மந்தியந்தண்
செழுங்குலை வாழை நிழலில்
துயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேல்திருச் சிற்றம்
பலவரை உன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென்
னோநின் னருள்வகையே.
 
வளரும் வாழையின் குலையில் உள்ள இனிமையான பழத்தை உண்ட இளம் குரங்கு குளிர்ந்த செழுமையான குலை நிழலில் விழாமல் முனை மேல் உறங்க கொலை செய்யும் வேல் திருச்சிற்றம்பலத்தை எண்ணாதவரை கூட்டமாய் அழிக்க வேல் போன்ற கண்ணிக்கு என்ன சொல்வேன் உன் அருள் வகையே. (அச்சம் தவிர் இறையருள் காக்கும்)  
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 56

 à®†à®£à¯à®Ÿà®¿ லெடுத்தவ ராமிவர்

தாமவ ரல்குவர்போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை
தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ
டெற்றப் பழம்விழுந்து
பாண்டி லெடுத்தபஃ றாமரை
கீழும் பழனங்களே. 
 
ஆயுள் முழுமையடை வந்தவராம் இவர் வேறு மாற்றம் அடையமாட்டார் தீமை அடைந்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின் கண் சென்று தூண்டி எடுத்தவரால் கொடிகள் தழைத்து பழங்கள் விழுந்து பாண்டி போல் பசுமை கொழிக்கும் வயல்களே. (இறை உணர்ந்தவன் இருப்பிடத்தில் தீவினை ஒழிந்து வளமை பெருகும்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 55

 à®šà¯à®°à¯à®®à¯à®ªà®¿à®µà®°à¯ சந்துந் தொடுகடல்

முத்தும்வெண் சங்குமெங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி
யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன்
சிற்றம் பலமனைய
கரும்பன மென்மொழி யாருமந்
நீர்மையர் காணுநர்க்கே. 
 
வண்டு சத்தமிடும் சந்தும் தொடப்படும் கடலாகவும் முத்தும் வெண் சங்கும் என எங்கும் விரும்பினர் இடம் சென்று உடலின் அணியாம் வியப்பான கங்கை என்னும் பெருகும் நீர் சூடும் தலைவன் சிவன் சிற்றம்பலம் அனைய கரும்பு போன்ற மென் மொழி கொண்டு காண்பவர்க்கே துன்பம் இல்லை. (திருவடி அறிந்து இறை கண்டோர் துன்பப்படுவதில்லை)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 54

 à®®à¯€à®³à¯à®µà®¤à¯ செல்வதன் றன்னையிவ்

வெங்கடத் தக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ
னொடுங்கிளர் கெண்டையன்ன
நீள்வது செய்தகண் ணாளிந்
நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
ஆள்வது செய்தவன் தில்லையி
னெல்லை யணுகுவரே.
 
தேவையற்றதிலிருந்து மீள்வது செய்யும் அன்னை இந்த வெங்கடத்தை தகுந்த இடமாக அடையச் செய்த கிழமைக்கு உரியவனுடன் கிளர்ந்து எழும் கெண்டை மீன் என நீள்வது செய்த கண் கொண்டு பெருந்துன்பத்தை கடக்கச் செய்து எம்மை ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே. (குருவுடன் நானும் துன்பத்தை கடத்தோம் சென்னியின் அருளால்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 53

 à®®à®¿à®©à¯à®±à¯Šà®¤à¯ திடுகழல் நூபுரம்

வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்றொத் திடவுடை யாளொடொன்
றாம்புலி யூரனென்றே
நன்றொத் தெழிலைத் தொழவுற்
றனமென்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனமன்னை
நீசொன்ன கொள்கையரே.
 
மின்னல் ஒத்த இடுகழல் நுட்பமான புரம் வெள்ளை மற்றும் சிவந்த பட்டு மின்னிட ஒன்றுடன் ஒத்து நடந்திடும் ஓருத்தியோடு புலியூரன் என்றே நன்றாய் அந்த எழிலை தொழுதேன் என உரைக்கமாட்ர்டாதார் நன்மைகள் குன்ற கண்டிக்க தகுந்த நீ சொன்ன கொள்கையரே. (திருவடி எழிலை புகழாதவர் வாழ்வின் நன்மை அடையாது கொள்கை பற்றாளர்களாக இருப்பர்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 51

மீண்டா ரெனஉவந் தேன்கண்டு

நும்மையிம் மேதகவே

பூண்டா ரிருவர்முன் போயின

ரேபுலி யூரெனைநின்

றாண்டான் அருவரை ஆளியன்

னானைக்கண் டேனயலே

தூண்டா விளக்கனை யாயென்னை

யோஅன்னை சொல்லியதே.

 

வென்றார் என வியந்து கண்டேன் நியும் மேன்மையுற முன்னம் இருவர் இணைந்தார் புலியூர் நின்று ஆண்டவன் அருமையானவர் தலைவன் உண்மை கண்டேன் ஆகையாலே தூண்டாது எரியும் விளக்கானவன் என்னை அன்னை என அழைக்கச் செய்ததே. (திருவடியே தூண்டா மணி விளக்கு)

#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 52

 à®ªà¯‚ங்கயி லாயப் பொருப்பன்

திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற
திவ்விடஞ் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்கைம்
மடுத்துக் கிடந்தலற
ஆங்கயி லாற்பணி கொண்டது
திண்டிற லாண்டகையே.
 
பூ நிறை கயிலை மலையன் திருப்புலியூரன் தென்னகத்து தீங்கு இல்லா சிறியவள் நின்ற இடம் சென்று எதிர்த்த வேங்கையின் வாயை கை மறித்து சோம்பி கிடப்பதை தடுத்து பணி கொண்டது திண்ணிய ஆண்டகையே. (சென்னி சென்று உலக இன்பத்தை தூய்ப்பது)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 50

 à®µà¯†à®¤à®¿à®°à¯‡à®¯à¯ கரத்துமென் தோலேய்

சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையினிவ் வாறுசெல்
வீர்தில்லை அம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமான்
எனவொரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே
வெறுப்பவொ ரேந்தலொடே. 
 
மூடும் திரை கரமாய் கொண்ட மென்மையான தொலுடையவனே மாறும் வெண்மை கொண்டு அதிரும் மறை பொருளாய் சொல்லப்படும் தில்லை அம்பலத்து கதிரவனே சடை உடையவனே கரமான் என ஒரு மான் மயில் போல் எதிர் வந்து சுரத்தையும் வெறுப்பையும் வேரோடு அழித்ததுவே. (திருவடி பெருமை)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 49

 à®šà¯à®¤à¯à®¤à®¿à®¯ பொக்கணத் தென்பணி

கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி
யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு
மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு
மோவொர் பெருந்தகையே.
 
வளைந்து பொருந்திய கணம் தெரியப்படுத்தும் பணி கட்டமைப்பு கொண்ட சடை வெண்மை கோலமாய் புலியூர் என பலபேர்களுக்கு உற்ற உறவாய் பணித்தபடி செயல்பட இருமாப்புடன் பணியதவர் பின்னடையும் படி செய்து முன்னேறி செல்பவர் பெருந்தகையே. (திருவடி பெருமை)

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 48

 à®ªà®¾à®¯à¯à®®à¯ விடையோன் புலியூ

ரனையவென் பாவைமுன்னே
காயுங் கடத்திடை யாடிக்
கடப்பவுங் கண்டுநின்று
வாயுந் திறவாய் குழையெழில்
வீசவண் டோலுறுத்த
நீயும்நின் பாவையும் நின்று
நிலாவிடும் நீள்குரவே.
 
வேகமாக செல்லும் விடையானவன் புவியூர் ஒத்த பாவை முன்னே அழியும் உடலில் ஆடி கடக்க வழி கண்டு நின்று வாயும் திறவாமல் குழை எழில் வீசும் வண்டாய் உறுத்த நீயும் நின் பாவையும் நின்று நிலாவிடும் நினைவில் நீண்டு இருக்கலாமே.(யோக அனுபவத்தில் நிலைத்திரு)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 47

 à®ªà¯à®¯à®²à®©à¯ றலர்சடை ஏற்றவன்

தில்லைப் பொருப்பரசி
பயலன் றனைப்பணி யாதவர்
போல்மிகு பாவஞ்செய்தேற்
கயலன் தமியன்அஞ் சொற்றுணை
வெஞ்சுரம் மாதர்சென்றால்
இயலன் றெனக்கிற் றிலைமற்று
வாழி எழிற்புறவே.
 
நீரில் இருந்து அகன்ற சடை ஏற்றவன் தில்லை மலையரசி கூடியவன் இவனை பணியாதவர் போன்ற அதிக பாவம் செய்தவருக்கு அன்னியன் தனித்தவன் அச்சம் தரும் துணையாக இசையும் மாதர் சென்றால் இயலதவன் என்னை இந்நிலை மாற்றி வாழ்த்திய எழிலான உறவே. (இயலாமை போக்கும் இறை பக்தி)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 46

 à®ªà¯‡à®¤à¯ˆà®ªà¯ பருவம் பின்சென்

றதுமுன்றி லெனைப்பிரிந்தால்
ஊதைக் கலமரும் வல்லியொப்
பாள்முத்தன் தில்லையன்னாள்
ஏதிற் சுரத்தய லானொடின்
றேகினள் கண்டனையே
போதிற் பொலியுந் தொழிற்புலிப்
பற்குரற் பொற்றொடியே.
 
குழைந்தை பருவம் கழிந்து பின் சென்றது முன் இருந்தே இருந்தது என்னை பிரிந்தால் ஊத்தை என மாறும் கலத்தில் அமரும் வல்லி ஒப்பாள் முத்தன் தில்லை அன்னாள் எங்கும் கலந்து நிற்கும் நெடியோன் முயன்று அடைந்தாள் அத்தருணம் பொலிவுடன் தொழிற்படும் புலி போன்ற பாங்குடைய பொற்கொடியே. (சென்னியில் ஏற்படும் மாற்றம்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 45

 à®ªà®¾à®²à¯Šà®¤à¯à®¤ நீற்றம் பலவன்

கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கிற்
பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரற் கானத்தின்
இன்றொர் விடலைபின்போங்
காலொத் தனவினை யேன்பெற்ற
மாணிழை கால்மலரே. 
 
பால் போல் இளகிய அம்பலவன் கழல் போற்றாதவர் நோய் பட்டு தராசு போல் ஆடி பதைக்க கொடிய புண் ஆகும் வேல் ஒத்த வெறுமை நிறை காட்டில் அடுத்த விடலை பின் போக கால் ஒத்த வினை உடையவன் பெற்ற மாறும் இழை கால் மலரே .(திருவடி சுவாசம் தெளிவை தரும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 44

 à®¤à¯†à®³à¯à®µà®©à¯ புனற்சென்னி யோன்அம்

பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன்
செய்வினை யேனெடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி
யிங்கிவை யுங்குவையக்
கள்வன் பகட்டுர வோனடி
யென்று கருதுவனே.
 
தெளிந்தவன் கூடும் சென்னி உடையவன் அம்பலம் எண்ணாதவர் இனம் சேர்க்கும் முதல்வன் தொடரும் முன் வினை ஒழிப்பவன் படைகண்ணி சீறடி இங்கே அங்கே மறைந்த கள்வன் எளியவர் அடி கருதுவனே. (நன்மை வளர்த்து தீமை அழிக்கும் எளிமையாவன் அடி பணிவோம்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 43

 à®®à¯à®©à¯à®©à¯à®™à¯ கடுவிட முண்டதென்

தில்லைமுன் னோனருளால்
இன்னுங் கடியிக் கடிமனைக்
கேமற் றியாமயர
மன்னுங் கடிமலர்க் கூந்தலைத்
தான்பெறு மாறுமுண்டேல்
உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள்
நான்மறை யுத்தமரே. 
 
முன்னர் கொடிய விடம் உண்ட தென்னகத்தின் தில்லை முதல்வன் அருளால் இன்னும் கடுமையான கடுமை உடைய இடத்தில் மாற்றியும் செய்த வாசமலர் கூந்தலை தான் நேர்ந்தால் தீமை என எண்ணாமல் ஓதுங்கள் நான்மறை உத்தமரே. (எது செய்தாலும் முழுமையாய் செய்யவும்)

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 42

 à®ªà®£à®™à¯à®•à®³à®žà¯ சாலும் பருவர

வார்த்தவன் தில்லையன்ன
மணங்கொளஞ் சாயலும் மன்னனும்
இன்னே வரக்கரைந்தால்
உணங்கலஞ் சாதுண்ண லாமொள்
நிணப்பலி யோக்குவல்மாக்
குணங்களஞ் சாற்பொலி யுந்நல
சேட்டைக் குலக்கொடியே.
 
ஆசைகள் அடங்கும் பருவத்தை அருளியவன் தில்லை நின்று வாசம் தந்து மயக்கலும் மன்னனும் இங்கே அழைக்கப்பட்டால் உணர்வு கலந்து ஏற்க நினைப்பு ஒழித்து குணம் மிளிரும் நன்நல விளையாட்டு குலக் கொடியே. (அருகே அழைத்து இன்பம் தரும் இறை)

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 41

 à®µà¯‡à®¯à®¿à®© தோளி மெலியல்விண்

ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
பாயின சீர்த்தியன் அம்பலத்
தானைப் பழித்துமும்மைத்
தீயின தாற்றல் சிரங்கண்
ணிழந்து திசைதிசைதாம்
போயின எல்லையெல் லாம்புக்கு
நாடுவன் பொன்னினையே. 
 
அழகிய தோள் மெலிய விண்ணவர் தக்கன் வேள்வியால் பழித்த சீர்த்த அம்பலத்தானை பழித்து மூலத்தி நெருப்பை ஆற்றி சிரத்தின் கண் இழந்து திசை திசையாய் போயின எல்லை பல கடந்து நாடுபவர் பொன்னினையே. (உள்ளதை மறந்து தேடி ஓடாதே)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 40

 à®µà¯ˆà®®à¯à®®à®²à®°à¯ வாட்படை யூரற்குச்

செய்யுங்குற் றேவல்மற்றென்
மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல்
லாந்தில்லை யான்மலைவாய்
மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்
றெண்ணித்துண் ணென்றொளித்துக்
கைம்மல ராற்கண் புதைத்துப்
பதைக்குமெங் கார்மயிலே.
 
வைத்த மலர் வாள் என படை கொள்ளும் ஊரார்க்கு செய்யும் சிறு வேலை மாறாக என் மெய் மலர் வாள் கண்ணி வல்லள் அடையும் தில்லையான் மலையில் மொய்க்கும் மலர் காந்தளை பாந்தள் என எண்ணி அனுபவிக்காமல் விலகி கைம்மலர் கண் புதைத்து பதைக்கும் என கார் மயிலே. (திருவடி தரும் அருள் பெறாமல் பொருள் மேல் நாட்டம் போதுமானது இல்லை)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 39

 à®ªà¯†à®±à¯à®±à¯‡ னொடுங்கிள்ளை வாட

முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேன் மொழியழற் கான்நடந்
தாள்முகம் நானணுகப்
பெற்றேன் பிறவி பெறாமற்செய்
தோன்தில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்த்திரந்
தேன்சுடர் வானவனே.
 
அடைந்தவனுடன் அடைந்ததும் வாட அதிகபட்ச குறை பெற்று இருக்கையில் நல்லபடி மொழியால் வளம் தருபவள் நடந்தாள் அவளை நேரடியாக நான் அணுக பெற்றேன் பிறவி பெறமால் செய்தோன் தில்லை தேன் பருக மறுக்கமாட்டேன் மலரின் மலர் திரம் தேன் சுடர் வானவனே. (பிறவி தடுக்கும் மலர் அறிய என் மொழி உதவியது)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 38

 à®•à¯Šà®©à¯à®©à¯à®©à¯ˆ வேல்அம் பலவற்

றொழாரிற்குன் றங்கொடியோள்
என்னணஞ் சென்றன ளென்னணஞ்
சேரு மெனஅயரா
என்னனை போயினள் யாண்டைய
ளென்னைப் பருந்தடுமென்
றென்னனை போக்கன்றிக் கிள்ளையென்
னுள்ளத்தை யீர்கின்றதே.
 
கொல்லும் முனை உடைய வேல் அம்பலவர் தொழாதவரின் குன்றங் கொடியோள் எப்படி விலகி சென்றோமோ அப்படி சேரும் என சோர்வின்றி என்னைப் போல் போயினள். உரிமை கொண்டு என்னை ஆளபவள் மிகைப்படுத்தி கிள்ளை என் உள்ளத்தை ஈர்க்கின்றதே. (இறையிடம் இருந்து விலகிய நாமே இணையும் அற்புதத்தை மெய்பொருள் அருளும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 37

 à®¯à®¾à®´à®¿à®¯à®©à¯ மென்மொழி வன்மனப்

பேதையொ ரேதிலன்பின்
தோழியை நீத்தென்னை முன்னே
துறந்துதுன் னார்கண்முன்னே
வாழியிம் மூதூர் மறுகச்சென்
றாளன்று மால்வணங்க
ஆழிதந் தானம் பலம்பணி
யாரின் அருஞ்சுரமே.
 
யாழின் மென்மையான இசை போன்ற பேசும் கடின மனப் பேதை ஓர் ஏதுமற்றவனாக பார்த்து பின் தோழியிடம் விலகி என்னை முன்னே துறந்து எண்ணாதவர் கண் முன்னே வாழச்செய்த இம் மூதூர் மறுகச் சென்றாள் என்று அளவற்று முறையிட ஆழி தந்தானம் பலம் பணியாரின் அருஞ்சுரமே. (இளம் வயது அனுபவமே மீண்டும் அடைகிறோம் என உணர்ந்த யோகியின் புலம்பல்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 36

 à®¤à®´à¯à®µà®¿à®© கையிறை சோரின்

தமியமென் றேதளர்வுற்
றழுவினை செய்யுநை யாவஞ்சொற்
பேதை யறிவுவிண்ணோர்
குழுவினை உய்யநஞ் சுண்டம்
பலத்துக் குனிக்கும்பிரான்
செழுவின தாள்பணி யார்பிணி
யாலுற்றுத் தேய்வித்ததே.
 
தழுவின கைகள் சற்றே சோர்வு பெற்றால் தளரும் என்றே செயல்பட நொந்து செற்கள் பேதம் தரும் அறிவுடை விண்ணோர் வினை தீர நஞ்சு உண்ட அம்பலத்து பணிக்கும் தலைவன் செழுமையான தாள் பணியாதவர் பிணிவாய் பட்டு தேய்வித்ததே. (இறை உணர்வுடன் செயல்பட்டால் சோர்வு வருவது இல்லை) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 35

 à®¤à®¾à®®à¯‡ தமக்கொப்பு மற்றில்

லவர்தில்லைத் தண்ணனிச்சப்
பூமேல் மிதிக்கிற் பதைத்தடி
பொங்கும்நங் காய்எரியுந்
தீமேல் அயில்போற் செறிபரற்
கானிற் சிலம்படிபாய்
ஆமே நடக்க அருவினை
யேன்பெற்ற அம்மனைக்கே. 
 
தனக்கு தானே நிகர் மற்றபடி தில்லை குளிர்ந்த பூ மேல் மிதக்கும் பதைத்து பொங்கும் நங்காய் எரியும் தீமேல் வெப்பமாய் செறிவுடன் பரந்து இருக்கும் சிலம்படியாய் உள்ளபடியே நடக்க அருமைய செயல்புரிந்தேன் அம்மனைக்கே. (நற்செயல்கள் செய்து எனக்கு நானே நிகர் என உணர்ந்தேன்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 34

 à®®à¯à®±à¯à®µà®²à¯à®…க் கால்தந்து வந்தென்

முலைமுழு வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தவெல்
லாம்முழு துஞ்சிதையத்
தெறுவலக் காலனைச் செற்றவன்
சிற்றம் பலஞ்சிந்தியார்
உறுவலக் கானகந் தான்படர்
வானா மொளியிழையே. 
 
இணையும் காலத்தில் முறுவல் தந்து மார்பகம் முழுவதும் கைகொண்டு தடவித் தழுவி செய்தவை எல்லாம் முழுமையாய் சிதைய ஏறு வலக்காலனைத் சென்றவன் சிற்றம்பலம் சிந்திப்பவர் உறு வலக்கானகம் தான் படர்வான் ஒளி இழையே. (போகம் மட்டும் செய்தவர் காலனையும் போகத்துடன் யோகம் செய்தவர் ஒளி இழையும் அடைவார்கள்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 33

 à®µà®Ÿà¯à®¤à¯à®¤à®¾à®©à¯ வகிர்மலர் கண்ணிக்குத்

தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப்
பன்மலர் கேழ்கிளர
மடுத்தான் குடைந்தன் றழுங்க
அழுங்கித் தழீஇமகிழ்வுற்
றெடுத்தாற் கினியன வேயினி
யாவன எம்மனைக்கே.
 
வழி கொடுத்தான் வழிதேடி வரும் கண்ணிக்கு தகுதி தந்து தகுதிக்காக முன்னை தீமை கெடுத்தான் கெடுப்பதில் தொல்லோன் தில்லை பன்மலர் ஆழமாய் கிளர மடக்கி குடைந்து அழங்க அழுங்கி தழைத்து மகிழ்வுற்று அடுத்தும் இனிமையானதே இனி எனது மனைக்கே. (இறை தேட முற்பட்டால் இனிமையுடன் நல்வழி கிடைக்கும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 32

 à®†à®³à®°à®¿à®•à¯ கும்மரி தாய்த்தில்லை

யாவருக் கும்மெளிதாந்
தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு
மேவித் தழல்திகழ்வேற்
கோளரிக் குந்நிக ரன்னா
ரொருவர் குரூஉமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட
லாயத்தெம் வாணுதலே. 
 
ஆள அரிக்கும் அரிதான தில்லை யாவருக்கும் எளிதாய் தந்து அருளும் இக்குன்றில் தன் பாவைக்கு மேவி தழல் திகழ்பவருக்கு அளக்கும் நிகரான ஒருவர் குரு அவர் மலர்ந்தார் என அறிந்து கொண்டார் கண்ணிகொண்டாள் ஆண்ட லயம் எம் வாணுதலே. (குரு மலர்ந்ததை அறிந்தவர் தானும் மலர்வார்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 31

 à®®à®¯à®¿à®²à¯†à®©à®ªà¯ பேர்ந்திள வல்லியி

னொல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசுமெங் குட்டன்எங்
குற்றதென் னெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன்
தில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாயென்
கொலாமின் றயர்கின்றதே.
 
மயில் என விரியும் இளம் வல்லி இணையுடன் மென்மையாய் மான்விழி விழித்து குயில் என பேசும் குட்டன் என் குன்றாய் எனது நெஞ்சகத்தே பயிலும் பிரிய அறியாதவன் தில்லை பல பூங்குழலாய் நிறையும் அரும் கண்ணா என் கோலம் இன்று அயர்கின்றதே. (இறை தேடும் எழில் கண்கள் அயர்கின்றதே)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 30

 à®šà¯†à®¯à¯à®•à¯à®©à¯ றுவைஇவை சீர்மலர்

வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப் பாறும்
பொழிலவை ஞாங்கரெங்கும்
பொய்குன்ற வேதிய ரோதிடம்
உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை யம்பல
வற்கிடம் ஏந்திழையே.
 
செயல்பட தகுந்த குன்றுகள் இவை சீர் மலர் இருக்கும் வாவி குறைந்து வளர்ந்து திங்களாய் பாயும் பொழில் இவை ஞானியர் எங்கும் பொய் குறையவும் வேதியர் ஓதிடும் திடமானதும் ஏமாற்றுத்தனம் குறைக்கும் சிலை அம்பலவற் இடம் ஏந்திழையே. (உண்மை அடையும் வழி)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 29

 à®®à®¿à®©à¯à®ªà¯‹à®²à¯ கொடிநெடு வானக்

கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை
காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை
சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடையன்னந் துன்னிமுன்
தோன்றுநன் னீணகரே.
 
மின்னல் போல் கொடி நெடிய வானமாகிய கடலுள் திரை விரித்திட பொன்போல் புரிப்புடன் வடவரை காட்டி பொலியும் புலியூர் மன்னரைப் போல் பிறை அணியும் மாளிகை சூல் ஒத்த வாய் தடையற்ற வாய் நின்போல் நடை அன்னத்தை முன் காட்ட நாடிடும் நகரே. (ஒப்பில்லா அளவை காட்டும் மெய்பொருள்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 28

 à®®à®¿à®©à¯à®±à®™à¯ கிடையொடு நீவியன்

தில்லைச்சிற் றம்பலவர்
குன்றங் கடந்துசென் றால்நின்று
தோன்றுங் குரூஉக்கமலந்
துன்றங் கிடங்குந் துறைதுறை
வள்ளைவெள் ளைநகையார்
சென்றங் கடைதட மும்புடை
சூழ்தரு சேண்நகரே.
 
மின்னல் என இடையுடன் நீண்டு இயங்கும் தில்லை சிற்றம்பலவர் குன்றம் கடந்து சென்றால் நின்று தோன்றும் குருகும் கமலம் கிடக்கும் துறை துறை வளைந்த வெள்ளை நகையார் சென்றிட கடையான தடமும் புடைசூழ தரணம் சேர்க்கும் நகரே. (மெய்பொருள் பெருமைகள்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 27

 à®•à®£à¯à®•à®Ÿà®®à¯ மாற்பயன் கொண்டனங்

கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப்
பருக வருகஇன்னே
விண்கட நாயகன் தில்லையின்
மெல்லியல் பங்கனெங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங்
கானகந் தண்ணெனவே.
 
கண் அடைந்த கடத்தின் பயனாக கண்ட இனிய காரிகை நின் பண் கடந்த மென் மொழி முழுமையாக பருக வருக இப்பொழுதே. விண் கடந்த நாயகன் தில்லையின் மெல்லியல் பாகமான மன்னவன் தணிந்த கடம் பசுமையான தடம் போல் கடுமையான கானகத்தில் குளுமையாய் நின்றதுவே. (புலன்கள் இறை அனுபவத்திற்கே அருளப்பட்டது).
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 26

 à®…ன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும்

ஆடவன் நீடவன்றன்
பின்பணைத் தோளி வருமிப்
பெருஞ்சுரஞ் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை
தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற வுண்அளி
போன்றொளிர் நாடகமே.
 
அன்புடன் அணைத்து அஞ்சாத என சொல்லி பின் விலகி செல்லும் ஆடவன், பின் என்றும் விலகாது நீண்டு வரும் ஒருவன், வந்த பெரிய சுரம் விலகாது பொன் பணை என இறையுறை தில்லை, பொலிவான மலர் மேல் நட்பாக குளிர்ச்சி அளிக்கும் ஒளி என இவை நாடகமே. (இறை தவிர அனைத்தும் நாடகமே)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 25

 à®µà®¿à®Ÿà®²à¯ˆà®¯à¯à®±à¯ றாரில்லை வெம்முனை

வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினள்
மன்னுசிற் றம்பலவர்க்
கடலையுற் றாரின் எறிப்பொழிந்
தாங்கருக் கன்சுருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை
இன்றிக் கடுஞ்சுரமே.
 
இளமையாகவே இருப்பவர் இல்லை, கூர் மங்காத வேல் கொண்ட வேடர் குளிர்ந்த மென்மையான பூ கண்டு துன்பம் அடைந்தார், குழல் வாடியவள் இருக்கும் சிற்றம்பலவர் கடலை அடைந்தவரின் வெப்பம் தணிந்து சுருக்கி கடலை அடைந்தான், இப்படி கடக்க திறன் அற்றவர் கடுஞ்சுரமே அடைவார். (நிலையற்ற உலகில் வாழ்ந்து கடந்து கடவுளை அடைந்துவிடு)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 24

 à®®à¯à®©à¯à®©à¯‹ னருள்முன்னும் உன்னா

வினையின் முனகர் துன்னும்
இன்னாக் கடறிதிப் போழ்தே
கடந்தின்று காண்டுஞ்சென்று
பொன்னா ரணிமணி மாளிகைத்
தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா வெனஉடை யான்நட
மாடுசிற் றம்பலமே.
 
யாதொன்றுக்கும் முன்னோன் அருள் முற்பிறப்பிலும் எண்ணாத வினையின் சிக்கியவர் அனுபவிக்கும் துன்பத்தை துடைத்துக் கொள் இப்பொழுதே. துன்பம் கடந்து இன்று கண்டு பொன் ஆர மணி மாளிகை தென்புலியூர் புகழ்பவர் தென்னவன் என உடையான் உடன் நடமாடு சிற்றம்பலமே. (இறை கண்டு இன்பம் அடைந்துவிடு)

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 23

 à®•à¯Šà®Ÿà®¿à®¤à¯à®¤à¯‡à®°à¯ மறவர் குழாம்வெங்

கரிநிரை கூடினென்கை
வடித்தே ரிலங்கெஃகின் வாய்க்குத
வாமன்னு மம்பலத்தோன்
அடித்தே ரலரென்ன அஞ்சுவன்
நின்ஐய ரென்னின்மன்னுங்
கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ்
விண்தோய் கனவரையே.
 
கொடியுடைய தேர் கொண்ட மறவர் கூட்டம் வெள்ளை யானை வரிசைபட்டு கூடி தன் கை வடித்து தேரி விளங்கச் செய்தால் வாய்ப்பு அருளும் அம்பலத்தோன் அடியால் தேர்ந்திட அஞ்சுபவன் உங்கள் தலைமை என உணர்வோர் வண்டு தேடும் குழல் உடைய மங்கை கண்டு இந்த விண் நிறை கனவரை தேறமாட்டார். (தனக்குள் உள்ள நுட்பம் அறியாதவர் இறை உணரமாட்டார்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 22

 à®ªà¯‡à®£à®¤à¯ திருத்திய சீறடி

மெல்லச்செல் பேரரவம்
பூணத் திருத்திய பொங்கொளி
யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி
சேரும் இருமருங்குங்
காணத் திருத்திய போலும்முன்
னாமன்னு கானங்களே.
 
பராமரித்து திருத்திய சீரான அடி மெல்ல முன்னேறிச் சென்று பேரரவம் அணிய திருத்திய பொங்கும் ஒளியோன் புலியூர் உரைபவன் கூடிட திருத்திய வான்பதி சேரும் இருமருங்கும் காண்பதற்கு திருத்தியது போல் முன்னே அறிந்த கானங்களே. (இறை உணர்ந்தால் இசை உணர்வாய்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 21

 à®ˆà®£à¯à®Ÿà¯Šà®²à¯à®²à¯ˆ ஆயமும் ஔவையும்

நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக் கூடுக
நும்மைஎம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன்
சிற்றம் பலம்நிலவு
சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
சேர்க திருத்தகவே.
 
இங்கே என்னை எல்லைபடுத்தி ஆயும் அறிவும் தீர்க்கமான முடிவும் நீங்காத இந்த ஊர் துன்பம் தீர்த்தும் ஈடு இல்லா எல்லை கண்டிட அழைத்து உன்னையும் என்னையும் பிடித்தபடி ஆண்டு எல்லை தீர இன்பம் தந்தவன் சிற்றம்பலம் நிலவு சேர் தில்லை மாநகர் வழி சென்று சேர் என திருத்தினானே. (தீய வழி தடுத்து நல் வழி காட்டும் இறைமை).
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 20

 à®ªà®±à®¨à¯à®¤à®¿à®°à¯à®¨à¯ தும்பர் பதைப்பப்

படரும் புரங்கரப்பச்
சிறந்தெரி யாடிதென் தில்லையன்
னாள்திறத் துச்சிலம்பா
அறந்திருந் துன்னரு ளும்பிறி
தாயின் அருமறையின்
திறந்திரிந் தார்கலி யும்முற்றும்
வற்றுமிச் சேணிலத்தே.
 
சுற்றித் திரிந்த தெய்வீகமானவர்கள் பதைக்க எதிலும் படரும் வெளியானது சிறப்புடன் தெரிவிக்கும் அடியான தென்தில்லை அன்னாள் திறத்துடன் சிலம்பாததால் அறத்துடன் உள்ளம் உருக அருளாக இருக்கும் அருமறையின் திறத்தை தெரிந்தார் கலி முற்று பெறும் சேணிலத்தே. (அருமறை விளக்கம் அறிந்தால் வீடுபெறு அடையலாம்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 19

 à®µà¯ˆà®µà®¨à¯à®¤ வேலவர் சூழ்வரத்

தேர்வரும் வள்ளலுள்ளந்
தெய்வந் தருமிருள் தூங்கு
முழுதுஞ் செழுமிடற்றின்
மைவந்த கோன்தில்லை வாழ்த்தார்
மனத்தின் வழுத்துநர்போல்
மொய்வந்த வாவி தெளியுந்
துயிலுமிம் மூதெயிலே.
 
வழி விழியாய் இருக்க வந்த வேலவர் சூழ்ந்திட வரும் தேர், வள்ளல் உள்ளம் தெய்வம் தரும் அருள், உறக்கம் முழுவதும் செழுமையான மிடற்றில் மையம் கொள்ளும் கோன், தில்லை வாழ்ந்தார் மனத்தின் வாழ்த்துதல் போல் ஊற்றேடுக்கும் வாவி, தெளிவுத் தர துயிலும் இந்த முழுமையான எழிலே. (மெய் பொருள் பெருமைகள்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 18

 à®ªà®©à®¿à®šà¯à®šà®¨à¯ திரனொடு பாய்புனல்

சூடும் பரன்புலியூர்
அனிச்சந் திகழுமஞ் சீறடி
யாவ அழல்பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம்
போந்து கடக்குமென்றால்
இனிச்சந்த மேகலை யாட்கென்கொ
லாம்புகுந் தெய்துவதே.
 
குளிர் தரும் நிலாவுடன் பாயும் நீர் சூடிய பரன் புலியூர் அனிச்சம் என திகழும் சீறடி வெப்பத்தில் வெந்த கனி சிவந்திட கடுமையான கடம் புகுந்து கடக்க முடியும் என்றால் இனி சந்தமேகலை என மேலாடை புகுந்து ஏய்துவேன். (மெய் பொருள் புகுந்து ஏகனை அடைவேன்)  
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 17

 à®®à¯à®©à¯à®©à¯‹à®©à¯ மணிகண்ட மொத்தவன்

அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந்
தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன்
னாய்அரு ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ
யாம்விழை பொங்கிருளே.
 
முன் நின்றவன் மணிகண்டனாக மொத்தமானவன் அம்பலத்தே முடிவாகி நின்றவன் தலை சாய்த்து போற்றதவர் வினை வளர்க்கும் என் உயிரானவன் அன்னாள் அரும் பெறுதலை உண்டாக்கும் இயல்பானவன் அவன்மேல் அருள் பெறும் ஆசையால் பொன்னானவர் மணி மகிழ்ந்து பூ மலர விரும்பும் பொங்கிடும் அருளே. (வன்னி சென்னிக்கு அருளும் மனம் மகிழ்ந்து)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 16

 à®•à®®à¯à®ªà®žà¯ சிவந்த சலந்தரன்

ஆகங் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர்
கற்சுர மாகுநம்பா
அம்பஞ்சி ஆவம் புகமிக
நீண்டரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக்
கும்மலர்ச் சீறடிக்கே. 
 
கொடி மரத்தில் சிவந்த ஈரமானவன் போன்று கறுத்த தில்லையில் இருக்கும் நம் அன்பன் சிவநகர் நன்மை அருளும் துளிர்த்தவன் கடும் சுரத்திற்கு அஞ்சி பாதுகாப்புடன் அடைக்கலம் புக மிகநீண்டு சிந்தும் கண்ணாள் சிவந்து ஒன்றாக இருந்து நமக்காய் பதைக்கும் மலர் சீறடிக்கே. (துன்பம் துடைத்திடுவாள் சென்னி என நின்றவள்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 15

 à®®à®±à¯à®ªà®¾à®¯à¯ விடையோன் மகிழ்புலி

யூரென் னொடும்வளர்ந்த
பொற்பார் திருநாண் பொருப்பர்
விருப்புப் புகுந்துநுந்தக்
கற்பார் கடுங்கால் கலக்கிப்
பறித்தெறி யக்கழிக
இற்பாற் பிறவற்க ஏழையர்
வாழி எழுமையுமே.
 
மறைப்பற்ற விடையானவன் மகிழ்ச்சி தரும் புலியூர் கொண்டு வளர்ந்த பொறுமையானவர் திருநாண் பொருப்பர் விருப்பமுடன் புகுந்து உந்தப்பட்டு கற்பார் பெரிய சுவாசத்தால் பறித்தெறிந்து ஒழிக்க இயலாதவர் பிறவாமல் இருக்க ஏழையர் வாழி எழும் பிறப்பு எல்லாம். (பிறவி கடக்க தெரியாவர் பிறந்து வாழட்டும் சிறப்புடனே)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 14

 à®•à®¾à®¯à®®à¯à®®à¯ ஆவியும் நீங்கள்சிற்

றம்பல வன்கயிலைச்
சீயமும் மாவும் வெரீஇவர
லென்பல் செறிதிரைநீர்த்
தேயமும் யாவும் பெறினுங்
கொடார்நமர் இன்னசெப்பில்
தோயமும் நாடுமில் லாச்சுரம்
போக்குத் துணிவித்தவே.
 
நீங்கள் உடலும் உயிரும் சிற்றம்பல வன் கயிலைச் சீலமும் யாவும் பெற்று செழுமையான திரையும் நீர் கொண்ட தேகத்தில் எல்லாம் பெற்றாலும் நமனுக்கு ஈடு கொடுக்கவில்லை என உணர்ந்து தோய்வையும் நாட்டமில்லா சுரத்தையும் போக்க துணிவித்ததுவே. (அவனே ஆர்வத்தையும் ஆற்றலையும் அருள்கிறான்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 13

 à®¨à®¿à®´à®±à¯à®±à®²à¯ˆ தீநெறி நீரில்லை

கானகம் ஓரிகத்தும்
அழற்றலை வெம்பரற் றென்பரென்
னோதில்லை யம்பலத்தான்
கழற்றலை வைத்துக்கைப் போதுகள்
கூப்பக்கல் லாதவர்போற்
குழற்றலைச் சொல்லிசெல் லக்குறிப்
பாகும்நங் கொற்றவர்க்கே. 
 
நிழல் இல்லாமல் தீயால் நீர் வற்றிய காட்டில் நரி கத்தும். துன்பம் இல்லாமல் இருப்பதே பரன் என்ற தில்லை அம்பலத்தான் கழல் இடத்தே கவனம் வைத்து வணங்க கிடைக்கும் என்பதை கல்லாதவர் போல் குறை கழல் சொல்லி செல்லக் குறிப்பாகும் நம் கொற்றவர்க்கே. ( மன்னனைப் போல் வாழ மதித்து தொழு உண்மையை) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 12

 à®•à¯à®±à®ªà¯à®ªà®¾à®µà¯ˆ நின்குழல் வேங்கையம்

போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை
வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை
வந்திடிற் சென்று சென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன்
னத்தகும் பெற்றியரே.
 
குறுகிய பாவை உன் குழல் அணியும் வேங்கை போது உடன் கோங்கம் விராய் நறப்பாடலம் சூடும் உன்னை புனைய நினைப்பவர் தலைவன் புலியூர்தனை மறக்க வரும் தீவினை ஏற்பட்டால் மீண்டும் மீண்டும் பிறப்பார் ஏது ஏற்படினும் பின்தள்ளிடும் பெறு பெற்றிட அறியாதரே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 11

 à®¤à®¾à®¯à®¿à®±à¯ சிறந்தன்று நாண்தைய

லாருக்கந் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் றோளிதிண்
கற்பின் விழுமிதன்றீங்
கோயிற் சிறந்துசிற் றம்பலத்
தாடும்எங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற்
சிறந்த மதிநுதலே.
 
தாய் சிறந்தவள் அதைப்போல் நாணமும் பெண்மைக்கு ஆகையால் நாணம் உள்ளவள் மென்மையும் திடமான கற்பு நெறியும் விருப்பமாக ஏற்று கோயிலில் சிறந்த சிற்றம்பலத்தே ஆடும் நடனநாயகன் வாயில் சிறந்து அறிவில் சிறந்த நுட்ப அறிவாக ஆனளே. (சென்னியின் கவனம் சிறந்த அறிவை நல்கும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 10

 à®‡à®™à¯à®•à®¯ லென்னீ பணிக்கின்ற

தேந்தல் இணைப்பதில்லாக்
கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத
லண்ணல் கடிகொள்தில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம்
நீயப் படர்தடத்துச்
செங்கய லன்றே கருங்கயற்
கண்ணித் திருநுதலே. 
 
இங்கே சார்ந்திருப்பதற்கே நீ என பணிக்கின்ற ஏந்தல் இணையான பதி இல்லாத கங்கை செழுமையான சடை கண்ணூதல் அண்ணல் கடினமான தில்லை பங்கய பாசடை படர்ந்த பாய் வழி நீ என படர்தடத்து செழுமையான கயல் என்ற கருமையான மீன் கண்ணித் திருநுதலே. ( மெய்பொருள் பெருமைகள்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 9

 à®ªà®¿à®£à¯ˆà®¯à¯à®™à¯ கலையும்வன் பேய்த்தே

ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாஇறை
யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
டேகினெம் பைந்தொடிக்கே.
 
பிணையாகவும் கலையாகவும் உள்ள கடினமான தேரினை பெருகி வரும் நீரால் அணையும் முரண்பாடு நிறைந்த முடிவும் ஐயமில்லாமல் உண்மையே. இணையும் அளவு இல்லா இறையோன் உறை தில்லை குளிர்ந்த பூம் பணை உள்ள தடமும் அன்றோ உன்னோடு ஏகினேன் பைந்தொடிக்கே. (ஐயும் மெய்யும் காட்டும் இடத்தே இறைவனும் உணர்த்த காத்திருக்கிறான்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 8

 à®®à¯†à®²à¯à®²à®¿à®¯à®²à¯ கொங்கை பெரியமின்

நேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடுந்
தீக்கற்று வானமெல்லாஞ்
சொல்லிய சீர்ச்சுடர்த் திங்களங்
கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லியங் கோதைநல் லாயெல்லை
சேய்த்தெம் அகல்நகரே.
 
மென்மையானவள் மார்பகம் பெரியதாகவும் மின்னலை ஒத்த இடையும் மெல்லிய அடி பூவாகவும் அவள் இயல்பு வெம்மையும் கடலை சுடும் தீக்காற்றாகவும் வானம் எங்கும் நிறைய குளிர் நிலவாகவும் கண்ணித்தொல்லோன் புலியூர் அல்லி கோதையே நல்லாள் என எல்லை கொண்டு குழைந்தை போல் இருப்பவர் எம்மைப் போல் அகலாத நகர் அடைந்தவரே. (சென்னியில் கவனம் சிறப்புகள் நல்கும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 7

 à®®à®¾à®µà¯ˆà®µà®¨à¯ தாண்டமென் னோக்கிதன்

பங்கர்வண் தில்லைமல்லற்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங்
கண்ணி குறிப்பறியேன்
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்
தாளென்னைப் புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங் கிளியளித்
தாளின்றென் பைந்தொடியே. 
 
சிறந்ததை வைத்து அதில் ஆண்டபடி மென்மையாய் தன் தோழரை நோக்கும் வண்தில்லை வீரர் அரசி வந்தாண்ட சிவந்தவாய் கருமையான கண்ணியின் குறிப்பறியேன் பூவை அவள் பொன்பந்து தந்து என்னை பற்றிக் கொண்டு பாவை அவள் பைங்கிளி அளித்தாற் என் பைந்தொடியே. (பெண் என்று நின்ற மெய்பொருளின் பெருமைகள் இது)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 6

 à®®à¯ˆà®¤à®¯à®™à¯ குந்திரை வாரியை

நோக்கி மடலவிழ்பூங்
கைதையங் கானலை நோக்கிக்கண்
ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
பொய்தயங் குந்நுண் மருங்குல்நல்
லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்மர வம்புரை
யும்மல்குற் பைந்தொடியே.
 
மை கரைய தயங்கும் திரை கொண்டு வாரிடும் ஒன்றை நோக்கி இதழ் விரியும் பூவான பெண் போன்ற மாயையை நோக்கி கண்ணீர் கொண்டு அங்கே கண்டார்கள். தில்லையில் பொய் தயங்கும் நுட்ப அல்குல் கொண்டு நல்லாரை எல்லாம் புல்லினாள். புற்றில் நிலைக்க தயங்கும் அரவம் புரையும் அல்குல் கொண்ட பைந்தொடியே. (மெய்பொருள் உண்மையையும் பொய்யையும் காட்டும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 5

 à®µà®¿à®šà¯à®®à¯à®ªà¯à®±à¯à®± திங்கட் கழும்மழப்

போன்றினி விம்மிவிம்மி
அசும்புற்ற கண்ணோ டலறாய்
கிடந்தரன் தில்லையன்னாள்
குயம்புற் றரவிடை கூரெயிற்
றூறல் குழல்மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித்
தளர்கின்ற நன்னெஞ்சமே.
 
குறைபட்ட நிலவாய் கழிதலுடன் மழுவியது போல் விம்மிவிம்மி அல்லல் அற்ற கண்ணோடு கிடந்தவன் தில்லை அன்னாள் சிறிய புற்றில் நின்ற பாம்பு என கூரான எழில் கொண்ட குழல்மொழியின் நயத்தை பற்றி நின்று நடுக்கமுடன் தளர்வாகிடும் நல்ல நெஞ்சமே. (நீர் நிறைந்து இறைபற்றி நிற்கும் நல்ல உள்ளம்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 4

 à®Žà®²à¯à®®à¯à®ªà®¾ லணியிறை யம்பலத்

தோனெல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினுங்
கல்வரை நாடரம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக்
கேவிலை செப்பலொட்டார்
கலம்பா வியமுலை யின்விலை
யென்நீ கருதுவதே.
 
எலும்பால் அணிகலன் கொண்ட இறை அம்பலத்தோன் தில்லை செல்ல ஆர்வமுள்ளவர் நலத்தை முழுமையாக நல்கிட்டாலும் கல்லான இடத்தை நாடுபவர் இல்லை. சிலம்புடன் வடிவுடைகண்ணி சிற்றிடைக்கு நிகர் அறியமாட்டார் கலமான வியப்புக்குரிய முலையின் நிகர் என்ன என நீ கருதுவதே. (உண்மை உணர அறியாமல் பொய் மேல் கருத்து வைக்கதே) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 3

 à®ªà®¾à®ªà¯à®ªà®£à®¿ யோன்தில்லைப் பல்பூ

மருவுசில் லோதியைநற்
காப்பணிந் தார்பொன் னணிவா
ரினிக்கமழ் பூந்துறைவ
கோப்பணி வான்றோய் கொடிமுன்றில்
நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத்
தழங்கும் மணமுரசே.
 
பாம்பை அணிபவன் தில்லையில் பலவகை பூவாக மருவும் சிலையாகும் சோதியை நன்றாக காத்து பணிபவர் பொன் போன்றவர். இனி கமழும் பூ துறையின் கோப்பை பணிபவன் கொடி மூன்றில் நின்றதை சிறப்புற கூடி மாப்பிள்ளை அணிகலங்கள் இவை என முழங்க தழைத்திடும் இணைந்திட ஒலிக்கும் முரசு. (மெய்பொருளும் மறைபொருளும் இறை கூட உதவும் அலாங்கார பொருட்கள்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 2

 à®®à®£à®¿à®¯à®•à¯ கணியும் அரன்நஞ்ச

மஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன்
தில்லையன் னாள்திறத்துத்
துணியக் கருதுவ தின்றே
துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுகின் றார்பலர்
மேன்மே லயலவரே. 
 
மணி என கணக்காய் இருக்கும் அரன் நஞ்சிக்கு அஞ்சி மாற்றாகி விண்ணவர் பணியக் கருணை தரும் பரன் தில்லையன் ஒத்தவள் திறமையுடன் துணிந்து கருத்துடன் உலர்த்தும் துறையில் நிறைவான பொன் அணி போல் கருதுகின்றவர் பலர் அவர்கள் மேன்மேலும் மாறுகின்றனர். (நஞ்சி நின்ற இடத்தை நாடுபவர் வளர்கின்றனர்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 1

 à®’ராக மிரண்டெழி லாயொளிர்

வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந்
தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர
மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை
யேயெம ரெண்ணுவதே.
 
ஓர் அகத்தில் இரண்டு எழிலாக ஒளிர்பவன் தில்லையில் ஒண்றும் தலமாக பயிலும் காரணமாக தாம் பொதிந்து தீர்த்தம் சுரக்கும் காடகத்தின் பார்க்க கச்சிதமாய் பயன் தரும் பரிசாக அணைத்த இராகத்தை கண்டு உணரும் வள்ளவர் இல்லை என ஏமாற எண்ணுவதே. (செவிச் செல்வம் அடையும் சூழல் யாவருக்கும் உண்டு) 
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 13

 à®µà®³à®°à¯à®™à¯ கறியறி யாமந்தி

தின்றுமம் மர்க்கிடமாய்த்
தளருந் தடவரைத் தண்சிலம்
பாதன தங்கமெங்கும்
விளரும் விழுமெழும் விம்மும்
மெலியும்வெண் மாமதிநின்
றொளிருஞ் சடைமுடி யோன்புலி
யூரன்ன வொண்ணுதலே.
 
வளரும் இளம் மிளகை அறியாம குரங்கு தின்று அல்லல்படுவது போல் தளரும் தடம் வரையும் சிலம்பு தங்கும் எங்கும் விளங்கும் அதை விரும்பி விம்மி மெலியும் வெண் மாமதி நின்று ஒளிரும் சடைமுடியோன் புலியூரன்ன ஒண்ணுதலே. (பொருள் பற்றுவதை பற்றாமல் பொருளையே பற்றி இரு)
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 12

 à®¨à®¿à®²à¯à®²à®¾ வளைநெஞ்சம் நெக்குரு

கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று
மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
யான்இன் றிரக்கின்றதே.
 
நில்லாமல் சுற்றி திரியும் உள்ளம் நினைந்து உருகும் ஆழ்ந்த உறங்க அறியாத பொழுது கதிர் என வெளிச்சம் முற்றி காற்று எனக் காட்டும் தில்லை பழையவன் அருள் இல்லாதவர் அழிந்தார் அதை கண்டு எல்லார் மதியே இது உன்னை யான் இல்லாமல் இருக்க இரக்கின்றதே. (நான் அழியாதவரைக் கண்டு நானை அழிக்க வேண்டினேன்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 11

 à®®à¯‚வல் தழீஇய அருண்முத

லோன் தில்லைச் செல்வன்முந்நீர்
நாவல் தழீஇயவிந் நானிலந்
துஞ்சும் நயந்தவின்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும்
யான்துயி லாச்செயிரெங்
காவல் தழீஇயவர்க் கோதா
தளிய களியன்னமே. 
 
மூன்றால் தழுவும் அருள் தரும் முதல்வன் தில்லை செல்வன் முந்தி வரும் நீரில் நாவல் படகுபோல் அசைந்து நானிலத்தில் உறங்கும் விரும்ப இன்பம் தந்து சேவல் என மாறி உறங்குவதை தவிர்த்து காவலாய் நின்று இயங்குபவரை குளிரவைக்கும் களியன்னமே. (மெய்பொருள் தவத்தால் களிப்பூட்டும் அன்னமாகும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 10

 à®•à®°à¯à®™à¯à®•à®´à®¿ காதற்பைங் கானலில்

தில்லையெங் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில்
செற்றவொற் றைச்சிலைசூழ்ந்
தருங்கழி காதம் அகலுமென்
றூழென் றலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள்
கூப்பும் மலர்க்கைகளே.
 
கருமை கழிக்கும் காதலால் உண்டாகும் கானலில் தில்லையில் கண்டவர் விண்டார். ஒன்றிட கழிப்பதற்கு ஆதாரமும் மூன்று எழில் ஒன்றாக சிலையாய் சூழ்ந்த அருமையானது தீதை கழிக்க தம்முள் உழன்று கண்ணீர் வரச்செய்து காதல் வசப்பட்டு கூப்பும் மலர்கைகளே. (மெய்பொருள் எழில் அடைவது தன்னுள் இருக்கும் தீமை அழிவதால்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 9

 à®ªà¯Šà®©à¯à®©à¯à®®à¯ மணியும் பவளமும்

போன்று பொலிந்திலங்கி
மின்னுஞ் சடையோன் புலியூர்
விரவா தவரினுள்நோய்
இன்னு மறிகில வாலென்னை
பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை
தேரும்வண் டானங்களே.
 
பொன் போன்றும் மணி போன்றும் பவளம் போன்றும் பொலிவுடன் மின்னும் சடை உடையவன் புலியூர் விலகாதவர் உள்ளத்து நோய் இன்னும் அறியா என்னை பாவம் இல்லாதபடிச் செய்யும் பகலானவன் மகிழ்ந்திடும் மறைப்பை நீக்கும் வண்டென அனங்குகளே. ( உண்மை அறியும் மெய்பொருள் உணவை அறியும் வண்டு போன்றது)
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 8

 à®ªà®•à®²à¯‹à®©à¯ கரந்தனன் காப்பவர்

சேயர்பற் றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி
யோனெவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற்
சேக்கைகள் நோக்கினவால்
அகலோங் கிருங்கழி வாய்க்கொழு
மீனுண்ட அன்னங்களே.
 
கதிரவன் மறைந்தான் பாதுகாப்பவர், குழைந்தை போன்றவர், பற்று இல்லாதவர்களுக்கு புகலிடம் தருவோன், அரிய போக்குடையவன், கலந்தால் அகலாதவன், தில்லையில் பயில்பவன், சிறப்புடை இடத்தில் நோக்கிட அகலாதவன், குத்தும் கொழுத்த மீனை உண்ட அன்னங்களே. ( மெய்பொருளை அடைந்தவர் மீன் உண்ட அன்னம் போன்றவர்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 7

 à®•à®¾à®°à¯à®¤à¯à®¤à®°à®™à¯ கந்திரை தோணி

சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்தரங் கந்துறை மானுந்
துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தரங் கன்தில்லைப் பல்பூம்
பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு
மாறென்கொ லாழ்சுடரே.
 
காத்தபடி அரங்கமாக இருக்கும் அலைகடல் தோணி கொண்டு சுறாமீன் பிடிக்க முயல்வோர் போர்த்தபடி காக்கும் அரங்கத்து துறை நிற்கும் துறைவர் தனது போக்கிற்கு இணங்க நீர் வடியும் தில்லை பலவகை கட்டமைப்பை  சொல்லும் வஞ்சினமும் விரும்பியபடி செய்யும் உய்யும் வழி உண்டோ ஆழ் சுடரே.( பின்குறிப்பு – மெய்பொருளே என்னை முழுமையடையச் செய்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 6

 à®†à®´à®¿ திருத்தும் புலியூ

ருடையான் அருளினளித்
தாழி திருத்தும் மணற்குன்றின்
நீத்தகன் றார்வருகென்
றாழி திருத்திச் சுழிக்கணக்
கோதிநை யாமலைய
வாழி திருத்தித் தரக்கிற்றி
யோவுள்ளம் வள்ளலையே
 
பெருங்கடலை திருத்தும் புலியூர் உடையவன் அருளினால் பெரும்பானை திருத்தும் மணல் குன்றில் நின்று அகன்டார் வருக என்று வட்டமடித்து சுற்ற பாராட்டி பிறப்பு கொடுக்க வாழ்க என திருத்தி தரமாகிய உள்ளம் வாழ்த்தும் வள்ளலையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 5

 à®‰à®³à¯à®³à¯ முருகி யுரோமஞ்

சிலிர்ப்ப வுடையவனாட்
கொள்ளு மவரிலொர் கூட்டந்தந்
தான்குனிக் கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன்
தேர்வழி தூரற்கண்டாய்
புள்ளுந் திரையும் பொரச்சங்கம்
ஆர்க்கும் பொருகடலே.
 
உள்ளம் உருகி மயிர் சிலிர்க்க உடையவன் ஆட்கொள்ளும் அரியவர் கூட்டத்தில் தன்னையும் இணைக்கும் புலியூர் வென்று பரிசு பெற்றவர் வியப்படையும் ஓர் வழி தெளிவாய் அறிந்தால் உள்ளத்து எண்ணமும் மறைப்பும் அழிந்து தேறச்செய்யும் பொருகடலே.
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 4

 à®ªà®•à®©à¯à®¤à®¾ மரைக்கண் கெடக்கடந்

தோன்புலி யூர்ப்பழனத்
தகன்தா மரையன்ன மேவண்டு
நீல மணியணிந்து
முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி
புன்னையின் னும்முரையா
தகன்றா ரகன்றே யொழிவர்கொல்
லோநம் மகன்றுறையே. 
 
பகிர மாறுபடுவது கண்ணால் கெடும்படி கடந்தவன் புலியூர் பழுக தகுந்தவன் மாறத்தகுந்த மலர் மேல் வண்டு போல் நீல மணி அணிந்து முகம் தாழ்துவது குறை என உணர்ந்து செம்பொன் முத்து அணிந்தபடி புன்னை என்பதை உரைக்காமல் அகன்றார் அன்றே.பிறவி ஓழிப்பவர் கொல்லோ நம் மகன் என்ற முறையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 3

 à®ªà®¾à®£à®¿à®•à®°à¯ வண்டினம் பாடப்பைம்

பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன்
னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன்
றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி
யூர்சுற்றும் போர்க்கடலே. 
 
பண் இசைந்து பாடும் பாணருக்கு நிகரான வண்டினம் பாடிட பழுமையாய் பொன் உரு வெண்மையால் மறைய அஞ்சும் குழைந்தைக்கு நிகரானவரை அழகிய தோட்டத்தின் புன்னை நிறைந்த இடத்தில் சேர்ப்பர் திங்கள் வார்த்தைகளுக்கு நிகரான வெள்ளை வளை அகத்தே கொண்டவர் அகன்றார் திறம் படைத்தவர் திறக்கமுடியாமல் அணிந்தவர் வாள் என வன்புலி ஊர் சுற்றும் போர்க்கடலே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 2

 à®†à®°à®®à¯ பரந்து திரைபொரு

நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி
தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன
ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச்
சிறந்தார்க்குஞ் செறிகடலே. 
 
வட்டம் விரிந்து திரை பொருந்தும் நீர் உண்ட மேகம் மீன் பரப்பி சீரான அம்பரத்தில் திகழும் ஒளி தோன்றும் துறை அடைந்தவர் சென்றார் போரும் பரிசு அறியப்படுத்த புலியூர் புனிதனை சீரான தேவர் சுற்றி இருந்து போற்றி சிறந்தவர்களுக்கு செறிகடலே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 1

 à®ªà¯à®•à®´à¯à®®à¯ பழியும் பெருக்கிற்

பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தினல்
லாலிது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை
யோனடிப் போதுசென்னித்
திகழு மவர்செல்லல் போலில்லை
யாம்பழி சின்மொழிக்கே.
 
புகழும் பழியும் கூடிட கூட்டிக்கொண்டே போகும் அப்படி கூடுவது நிழாமல் இருப்பது நினைப்பால் அகத்தே மதிலாக அணிய தில்லையோன் அடி சென்னியில் வைத்து அழித்தவர் போல் இல்லை. எனது பழியும் சின் மொழிக்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 33

 à®…லரா யிரந்தந்து வந்தித்து

மாலா யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய்
தாற்கள வில்லொளிகள்
அலரா விருக்கும் படைகொடுத்
தோன்தில்லை யானருள்போன்
றலராய் விளைகின்ற தம்பல்கைம்
மிக்கைய மெய்யருளே.
 
இதழ் ஆயிரம் தந்து வஞ்சித்து மலர் ஆயிரம் கரத்தால் இதழார் கழல் வழிபாடு செய்து ஒளியான வில்லால் பலவகை படைகொடுத்தோன் தில்லை நின்று அருள்பவன் தவறுதலாய் விளைகின்ற பலவற்றை அழிக்க மிகுந்திடும் மெய்யருளே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 32

 à®ªà¯‚ங்கணை வேளைப் பொடியாய்

விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு
விழுந்தெழுந் தோலமிட்டுத்
தீங்கணைந் தோரல்லுந் தேறாய்
கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்முள
ரோசென் றகன்றவரே.
 
பூவால் கணை வரும் தருணம் பொடியாய் விழ்ந்திட விழித்தோன் புலியூர் நின்று ஓம் என்ற கணை மேவி புரண்டு விழித்து எழுந்து ஓலமிட்டு தீதான கணை தோரலும் தேறாது கலங்கிடும் செறிகடலே அக்கணைக்கு ஆட்பட்டார் நின்னை அடைந்தவர் உளரோ சென்றாலும் அகன்றிடுவாரே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 31

 à®ªà®±à¯à®±à¯Šà®©à¯à®±à®¿ லார்பற்றுந் தில்லைப்

பரன்பரங் குன்றினின்ற
புற்றொன் றரவன் புதல்வ
னெனநீ புகுந்துநின்றால்
மற்றுன்று மாமல ரிட்டுன்னை
வாழ்த்திவந் தித்தலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல
ளோமங்கை வாழ்வகையே.
 
பற்றுவதற்கு ஒன்றும் இல்லை என ஆனவர் பற்றும் தில்லைப்பரன் பரங்குன்றில் நின்ற புற்றில் வாழ் நாகமாய் புதல்வன் என நீ புகுந்து நின்றால் மருவு இல்லா மாமலர் இட்டு உன்னை வாழ்த்திட வாழ்த்தாமல் வேறு ஒன்றை சிந்திக்க வல்ல மங்கை வாழ வகையுளதோ. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 30

 à®µà®¿à®£à¯à®Ÿà®²à¯ˆ யாவர்க்கும் வேந்தர்வண்

தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப்
புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல்
லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி
யேற்கொரு வாசகமே.
 
அடைந்த அனைவருக்கும் தலைவன் திடமான நடனம் மெல்ல அங்கே அழிய காண அரிதான கன்னிதனை கலந்த கள்வர் கண்டிலை அறிய காண்பது எல்லாம் மங்கி மறைவதாய் விளங்கும் மண்டலமே பணியாய் தரமானவற்கு ஒரு வாசகமே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 29

 à®¤à®¾à®°à¯à®±à¯ கொன்றையன் தில்லைச்

சடைமுடி யோன்கயிலை
நீருறு கான்யா றளவில
நீந்திவந் தால்நினது
போருறு வேல்வயப் பொங்குரும்
அஞ்சுக மஞ்சிவருஞ்
சூருறு சோலையின் வாய்வரற்
பாற்றன்று தூங்கிருளே.
 
தார் போன்ற உறு கொண்ட நடனம் ஆடும் சடைமுடியோன் நீர் போன்ற உறு கொண்டதை நீந்தி கடந்தால் நினது போர் உறு வேல் வசப்பட்டு பொங்கும் அஞ்சுகம் அஞ்சி வரும் சூல் பற்றும் சோலையின் இடத்தில் பற்று இன்றி தூங்குவதும் உன் அருளே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 28

 à®‡à®©à¯à®©à®± வார்பொழிற் றில்லை

நகரிறை சீர்விழவிற்
பன்னிற மாலைத் தொகைபக
லாம்பல் விளக்கிருளின்
துன்னற வுய்க்குமில் லோருந்
துயிலில் துறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின்
ஞாளி குரைதருமே.
 
இன்பத்தை துறக்காத பொழில் நிறை தில்லை நகரில் சீர் விரும்பி பல நிற மாலையுடன் பகலாக்கும் விளக்கும் இருளின் அச்சம் இல்லாமல் துயில்கையில் எடுப்பவர் கொன்றிடும் வேலோடு வந்திடின் நாய் குரைப்பதை தருமே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 27

 à®®à®¾à®¤à¯à®±à¯à®± மேனி வரையுற்ற

வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி
காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் னீர்மன்னு
மீர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது
வோநன்மை செப்புமினே. 
 
பெண்மைக்கு இடம் தந்த உடல் வரைவற்ற தில்லை நகர் சூழ் மொட்டு விரியும் மலர் நிறைந்த பொழில்கள் மறுக்கமுடிய பறவைகள் ஏதும் அழகற்றதாக்கும் எடுப்பவர்களுக்கு தீது தருவது அரிது எனவே எனக்கு நன்மை செப்புவீர்களாக.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 26

 à®šà¯‹à®¤à¯à®¤à¯à®©à¯ னடியமென் றோரைக்

குழுமித்தொல் வானவர்சூழ்ந்
தேத்தும் படிநிற்ப வன்தில்லை
யன்னா ளிவள்துவள
ஆர்த்துன் னமிழ்துந் திருவும்
மதியும் இழந்தவம்நீ
பேர்த்து மிரைப்பொழி யாய்பழி
நோக்காய் பெருங்கடலே.
 
சோர்ந்த உன் அடியார் என்பவரை கூட்டி சிறந்த வானவர் சூழ்ந்து வாழ்த்தும்படி நிற்பவன் தில்லை அன்னாள் இவள் துவள ஆர்வமுட்ன அமிழ்து வரவும் மதியும் இழந்து நீ உன்னை முடியபடி இருந்து பழி நோக்காதே பெருங்கடலே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 25

 à®®à®¿à®©à¯à®©à®™à¯ கலருஞ் சடைமுடி

யோன்வியன் தில்லையன்னாய்
என்னங் கலமர லெய்திய
தோவெழின் முத்தந்தொத்திப்
பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்
வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரு மளவுந்
துயிலா தழுங்கினவே. 
 
மின்னல் கண்டு அலரும் சடைமுடியோன் வியப்புக்குரிய தில்லை நின்றோன் என்னை அங்கே அமரச் செய்த எழிலை முத்தம் தொடுத்து பொன் நிற புன்னைச் சேர்க்கையில் வாய்ப்பு நிறைந்து முழைமையுறும் அன்னம் புலரும் அளவும் உறங்காது இணங்கினவே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 24

 à®¨à®¾à®•à®¨à¯ தொழவெழில் அம்பலம்

நண்ணி நடம்நவில்வோன்
நாக மிதுமதி யேமதி
யேநவில் வேற்கையெங்கள்
நாகம் வரவெதிர் நாங்கொள்ளும்
நள்ளிருள் வாய்நறவார்
நாகம் மலிபொழில் வாயெழில்
வாய்த்தநின் நாயகமே.
 
நாகமும் தொழும் எழில் அம்பலம் நண்ணி நடனம் தருபவன் நாகம் என்பது அறிவே அறிவே என அழைத்து எங்கள் நாகம் எதிர்வர நாங்கள் அடைந்த நல்ல இருள் கூற முடியாது நாகம் நிறைந்த பொழில் வாய்த்த நின் நாயகமே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 23

 à®ªà¯ˆà®µà®¾ யரவும் மறியும் 

மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன்
தில்லையின் முன்னினக்காற்
செவ்வாய் கருவயிர்ச் சேர்த்திச்
சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன
நீண்முத்த மாலைகளே.
 
புற்றில் இருக்கும் பாம்பு அறியும் வழுவாது பயிலும் மலர்கையுடன் நாடுபவர் சடைமுடி முன் கொண்டபடி இருப்பவன் தில்லையின் முன் எனக்காய் செவ்வாய் கருவாயில் சேர்த்து சிறியவளின் பெருமலர்கண் மை திட்டி குவளை மலர் கொண்டு நீளமாய் கோர்த்த மாலைகளே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 22

 à®ªà¯ˆà®µà®¾ யரவரை அம்பலத்

தெம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத்
தோட்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை
யின்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா றிருக்குமென் றேநிற்ப
தென்றுமென் இன்னுயிரே. 
 
பாம்பை அரையில் வைத்த அம்பலத்து என் தலைவன் பழமையான கயிலை சிவந்தபடி கருமையில் பெரியதாய் பருத்து சின்ன இடைக் கொடியை மொய்த்திடும் கமலத்து முற்றிழையின் என முன் செய்த தவத்தால் இப்படி இருக்கும் என்று என்றும் நிற்பது என் இனிமையான உயிரே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 21

 à®¨à®±à¯à®ªà®•à®±à¯ சோமன் எரிதரு

நாட்டத்தன் தில்லையன்ன
விற்பகைத் தோங்கும் புருவத்
திவளின் மெய்யேயெளிதே
வெற்பகச் சோலையின் வேய்வளர்
தீச்சென்று விண்ணினின்ற
கற்பகச் சோலை கதுவுங்கல்
நாடஇக் கல்லதரே.
 
நற்பகலில் நிலவுடன் வெப்பம் தரும்படி நாட்டம் கொள்ளும் தில்லை என்ற வில் என பகை வெல்லும் புருவம் கொண்டவளின் மெய்யே ஒளிதே. வெறுமையான சோலையின் நிறைந்தபடி வளரும் தீச் சென்று விண்ணில் இருக்கும் கற்பகச் சோலை எது என்று நாட இவர்கள் கல்லாதவரே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 20

 à®šà¯à®°à¯à®®à¯à®ªà¯à®±à¯ நீலங் கொய்யல்

தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறற் றோழியொ டாயத்து
நாப்ப ணமரரொன்னார்
இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி
வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்தெம்
பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே.
 
விரைந்து வளரும் நீல பூக்களை கொய்யாமல் தனித்து உறங்கி, பயிலும் அருமை அறியாது ஒழிவேனோ, அருமை பெறமால் அழிந்து உலகில் நல்ல பண் அறியாது இரும்பால் ஆன மாமதில் பொன் அஞ்சனம் வெள்ளி புரிசை அடைந்தோர் துரும்பாய் புறம் சென்றார். என திறத்தை உணர்த்தும் என் தலைவன் தில்லை சூழ் பொழிற்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 19

 à®…ழுந்தேன் நரகத் தியானென்

றிருப்பவந் தாண்டுகொண்ட
செழுந்தேன் திகழ்பொழிற் றில்லைப்
புறவிற் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுத
மிவள்யான் குரூஉச்சுடர்கொண்
டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர்
வானத் திளமதியே.
 
நரகத்தில் மூழ்க முடியாமல் இருந்தவனை வந்து ஆண்டு கொண்ட செழுத்தேன் திகழும் தில்லை வெளிப்புறத்தில் கொழுத்த தேன் கொண்ட மலர்வாய் குமுதம் இவள் என குரு உச்சுடர் கொண்டு எழுந்து மலர்த்தும் உயர் வானத்து இளம் மதியே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 18

 à®…கிலின் புகைவிம்மி ஆய்மலர்

வேய்ந்தஞ் சனமெழுதத்
தகிலுந் தனிவடம் பூட்டத்
தகாள்சங் கரன்புலியூர்
இகலு மவரிற் றளருமித்
தேம்ப லிடைஞெமியப்
புகிலு மிகஇங்ங னேயிறு
மாக்கும் புணர்முலையே. 
 
அகிலின் தூபத்தில் உடலை நனைத்து சிறந்த மலர்களை சூட்டி அஞ்சனத்தை பூசி மென்மையான ஆடை அணியத் தகாதவளாக சங்கரன் புலியூர் இகலும் அவர் அளரத் தேம்ப இடையும் மெலிந்திட புகுந்தால் இக்கணமே இறுமாக்கும் புணர்முலையே.   
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 17

 à®•à®¾à®®à®°à¯ˆ வென்றகண் ணோன்தில்லைப்

பல்கதி ரோனடைத்த
தாமரை யில்லின் இதழ்க்கத
வந்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச்
சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத் தென் னோவந்து
வைகி நயந்ததுவே.
 
ஆசைபடுவதை அழித்த கண்ணோன் தில்லை பல்கதிரோன் அடைத்த மாறும் இடத்தின் இதழ் கதவு திறந்தோன் முடிய மேகலை பாங்குடைய அரை பற்றும் சிலம்பு ஓதி விரைந்தே நான் என அரையில் நாம் என வந்து நிறைந்து நயந்ததுவே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 16

 à®¨à®¨à¯à®¤à¯€ வரமென்னும் நாரணன்

நாண்மலர்க் கண்ணிற்கெஃகந்
தந்தீ வரன்புலி யூரனை
யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின்
இருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி
வீயுந் தருகுவனே. 
 
நல்ல தீ வரம் என்றுரைக்கும் மனிதன் நாணமுடைய கண்ணிற்கு ஏங்க தனது தீ மிக புலி ஊர் என கண் காட்டிய தடம் கடந்த தீவிரம் காட்டி காண்டால் இருள் சேரும் குழலுக்கு எழில் சேர்க்கும் சந்திக்க வரம் முடிவுறும் வெறியும் தருகுவனே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 15

 à®µà®¿à®£à¯à®£à¯à®•à¯à®•à¯ மேல்வியன் பாதலக்

கீழ்விரி நீருடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்துதென்
தில்லைநின் றோன்மிடற்றின்
வண்ணக் குவளை மலர்கின்
றனசின வாண்மிளிர்நின்
கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு
வாழுங் கருங்குழலே. 
 
விண்ணுக்கும் மேல் வியப்புக்குரிய கீழ் விரிந்த நீர் அடுத்த மண்ணுக்கும் நடுவாக நயமுடன் தென் தில்லை நின்றவன் குரல்வளை வண்ணக் குவளை மலர் மலர்கின்றது மின்னலாய் வளர்ந்து மிளிரும் கண் நோக்க காணும் வண்டு வாழும் கருங்குழலே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 14

 à®•à¯‚டார் அரண்எரி கூடக்

கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
சேடார் மதின்மல்லற் றில்லையன்
னாய்சிறு கட்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி
யூசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை
நூக்கும்நஞ் சூழ்பொழிற்கே. 
 
தேவையற்றவரின் அரனை எரித்து அழிக்க வெட்டும் வட்டம் கொண்ட உலகோன் அழகுடைவரின் மதில்களை காக்கும் தில்லையன் சிறிய கண் பெரிய வெண்கோடு கொண்ட யானை என குரு மாமணி பூசலை முழுமையாக அழித்து தோடு அணிந்தவர் மது நிரம்பிய மலர் நாடும் நாகத்தை தூதாக அனுப்பும் நஞ்சு சூழ் பொழிற்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 13

 à®®à¯à®©à¯à®©à¯ மொருவ ரிரும்பொழில்

மூன்றற்கு முற்றுமிற்றாற்
பின்னு மொருவர்சிற் றம்பலத்
தார்தரும் பேரருள்போல்
துன்னுமொ ரின்பமென் றோகைதந்
தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னு மரவத்த வாய்த்துயில்
பேரும் மயிலினமே.
 
முன்பு இருவர் இறை பொழில் முயன்று அறியமுடியாமல் பின்பும் ஒருவர் சிற்றம்பலத்தார் பெற்ற பேரருள் போல் எண்ணி அவர்கள் அடைந்த இன்பத்தை அடைந்தோம் என்று தோகை விரித்த மயில் பார்த்து தனது தோகை விரிந்தது போல் எண்ணும் மயில் இனமாய் உரமற்று வீணாய் போனர்கள். 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 12

 à®à®©à®±à¯ பசுங்கதி ரென்றூழ்க்

கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை
செய்யும்வம் பார்சிலம்பா
யானிற்றை யாமத்து நின்னருள்
மேல்நிற்க லுற்றுச்சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை
யுறார்செல்லுஞ் செல்லல்களே.
 
வளர்ந்த பயிர்கள் பசுமை அழியாதபடி ஏழிலி காக்க எண்ணி காட்டு மனிதர்கள் வணங்கி தொழும் சிலம்பை அணிந்த எந்நேரமும் அருளும் ஒருவனை ஏற்றுச் சென்றேன். தேன் ஒத்த கொற்றை மலர் கொண்ட தில்லை ஊரார் நடக்கும் வழியே நடப்பதுவே.

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 11

 à®“ங்கு மொருவிட முண்டம்

பலத்தும்ப ருய்யவன்று
தாங்குமொருவன் தடவரை
வாய்த்தழங் கும்மருவி
வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன்
றழுங்கப் பிடித்தெடுத்து
வாங்கு மவர்க்கறி யேன்சிறி
யேன்சொல்லும் வாசகமே. 
 
பெரும் விடம் உண்டு அம்பலத்து தேவனாய் தங்கும் ஒருவன் வழிகண்டு வீழும் அருவி வீங்கி நிலைக்கும் சுனையாய் நின்று மலர் வாங்க அறியவனானவனை சிறியவன் சொல்லும் வாசகமே

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 10

 à®šà¯†à®´à¯à®™à¯à®•à®¾à®°à¯ முழவதிர் சிற்றம்

பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர்
வோன்கழ லேத்தலர்போல்
முழங்கா ரரிமுரண் வாரண
வேட்டைசெய் மொய்யிருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று
மோவின்றெம் வள்ளலையே.
 
செழுமையான கார் மேக முழக்கம் அதிரும் சிற்றம்பலத்துப் பெரும் திருமால் கொழுத்த மலர்கள் இடத்தே கூத்தாடுபவன் கழலை மதியாதவர் போல் முழங்க மாட்டார் முரண்பட்டவரை வேட்டை செய் மூடும் இருள் வாயானது, வழங்காதவரை வழங்கு என்று மோவி நின்றோம் எம் வள்ளலையை.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 9

 à®®à¯‹à®Ÿà¯à®Ÿà®™à¯ கதிர்முலைப் பங்குடைத்

தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தருநங் குருமுடி
வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள்
நாகம் நடுங்கச்சிங்கம்
வேட்டந் திரிசரி வாய்வரு
வான்சொல்லு மெல்லியலே. 
 
குவிந்த ஒளிவிசும் பெண் மார்பகம் போன்ற தில்லையில் முந்தவன் கழற்கே அடைக்கலம் தரும் நற்குரு முடி வளைய மழையில் நனைய நாட்டத்தை மறைத்தபடி நள்ளிருளில் நாகம் நடுங்க சிங்கம் வேட்டையாட திரிய வரும் வான் சொல் மெல்லிய இயல்பே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 8

 à®®à®²à®µà®©à¯ குரம்பையை மாற்றியம்

மால்முதல் வானர்க்கப்பாற்
செலவன்பர்க் கோக்குஞ் சிவன்தில்லைக்
கானலிற் சீர்ப்பெடைய
ோ டலவன் பயில்வது கண்டஞர்
கூர்ந்தயில் வேலுரவோன்
செலவந்தி வாய்க்கண் டனனென்ன
தாங்கொன்மன் சேர்துயிலே
 
மலம் நிறைந்தவன் உடலை மாற்றிய மால் முதல் வானவர்களுக்கு அப்பாற் செல்வேன் என்பவர்க்கும் சிவன் தில்லை கனல் கொள்ள சீர் பொருந்தி கொண்டவருடன் பயில்வது. கண்ட அறிஞர் கூர்ந்த வேல் கொண்ட அரவோன் மறையும் அந்தியில் கண்டான் என்ன தானும் அடைய சேர் துயிலே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 7

 à®ªà®©à¯ˆà®µà®³à®°à¯ கைம்மாப் படாத்தம்

பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரற்பொதியின்
மலைப்பொலி சந்தணிந்து
சுனைவளர் காவிகள் சூடிப்பைந்
தோகை துயில்பயிலுஞ்
சினைவளர் வேங்கைகள் யாங்கணின்
றாடுஞ் செழும்பொழிலே.
 
வளர்ந்த பனை என கைகொண்டு படரும் அம்பலத்து அரன் பாதம் விண்டவர் புனைந்து வளர்க்கும் சாரல் பொதியின் மலையில் பொலியும் சந்தனம் அணிந்து சுனை வளர் காவிகள் சூடி பசுமையான தோகை மயில் துயில் பயிலும் சினை வளர் வேங்கைகள் யாவும் கண் நின்று ஆடும் செழும்பொழிலே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 6

 à®šà¯†à®®à¯à®®à®² ராயிரந் தூய்க்கரு

மால்திருக் கண்ணணியும்
மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத்
தோன்மன்னு தென்மலயத்
தெம்மலர் சூடிநின் றெச்சாந்
தணிந்தென்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி
வாய்நும ராடுவதே.
 
செம்மலராய் ஆனவை தூய்க்கும் திரு கண் அணியும் மெய்மலர் இங்கே அம்பலத்தோன் இருக்க தென் மலையின் எம் மலர் சூடி நின்று சாந்தணிந்து என்ன நல்ல அழல் வாய் அம்மலர் வாட்ட நன்கு ஒல்லி வாய்ப்பு உமக்கு என்று ஆடுவதே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 5

 à®µà®°à¯ˆà®¯à®©à¯ றொருகா லிருகால்

வளைய நிமிர்த்துவட்கார்
நிரையன் றழலெழ வெய்துநின்
றோன்தில்லை யன்னநின்னூர்
விரையென்ன மென்னிழ லென்ன
வெறியுறு தாதிவர்போ
துரையென்ன வோசிலம் பாநலம்
பாவி யொளிர்வனவே. 
 
ஒருகால் வரையறுக்க வேண்டும் என்றால் இருகால் வளைய நிமிர்ந்து வன்மையானவரை கவர்ந்தவன் என அழல் எழும்படி நின்றோன் தில்லை எனப்படும் உன் ஊர் அடைய மென் அழல் என வெறி அடையும் தாதி போன்ற துரையும் சிலம்ப நலம் தந்து ஒளிர்வனவே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 4

 à®•à¯‚ளி நிரைக்கநின் றம்பலத்

தாடி குரைகழற்கீழ்த்
தூளி நிரைத்த சுடர்முடி
யோயிவள் தோள்நசையால்
ஆளி நிரைத்தட லானைகள்
தேரு மிரவில்வந்து
மீளியுரைத்தி வினையே
னுரைப்பதென் மெல்லியற்கே.
 
பிசாசுகள் நிரம்பி நிற்கும் அம்பலத்தில் ஆடி ஒசை எழும்பும் திருவடி கீழ் தூசு நிரப்பும் சுடர் முடி மேல் கொண்டவளோ இவள் தோள் மேல் கொண்ட ஆசையால் அவள் ஆளுப்படி ஆனைகள் ஏற்று நடத்திட திறமையில் நிரம்பி இதுவே வினை என்று உரைப்பது என் மென்னையான இயல்பே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 3

 à®®à®¾à®±à¯à®±à¯‡ னெனவந்த காலனை

யோல மிடஅடர்த்த
கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்
கொடுங்குன்றின் நீள்குடுமி
மேற்றேன் விரும்பு முடவனைப்
போல மெலியுநெஞ்சே
ஆற்றே னரிய அரிவைக்கு
நீவைத்த அன்பினுக்கே. 
 
எண்ணத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என வந்த காலனை ஓலமிட்டு விலகச் செய்த திடமான தலைவன் குளிர்ந்த தில்லையில் கூத்தாடுபவன். ஏற முடியாத கொடுமையான குன்றில் வளர்ந்த உச்சியில் இருக்கும் தேன் விரும்பும் முடவனைப் போல் ஏங்கும் நெஞ்சே ஆற்றுப்படுத்த இயலாத அரிய பருவத்தாள் இடத்தில் நீ வைத்த அன்பினுக்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 2

 à®µà®¿à®šà¯à®®à¯à®ªà®¿à®©à¯à®•à¯ கேணி நெறியன்ன

சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி அளைநுழைந்
தாலொக்கும் ஐயமெய்யே
இசும்பினிற் சிந்தைக்கு மேறற்
கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
மலயத்தெம் வாழ்பதியே.
 
ஆகாயத்தை அடைய முற்பட்டவனுக்கு கிணறு கிடைத்தது போல் சிறுமைபட்டு மேலும் மழை தூவி நூரையில் மூழ்கியது போல் ஆனது மெய்யே. தடைபடாத சிந்தைக்கு ஆட்பட பெரிய காரியம் நடக்கும் அம்பலத்தில் பசும்பனிக் கோடு காட்டி அருளினான் மலையில் ஒத்து வாழும் பதியே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 1

 à®®à®°à¯à®¨à¯à®¤à¯à®¨à®®à¯ மல்லற் பிறவிப்

பிணிக்கம் பலத்தமிர்தாய்
இருந்தனர் குன்றினின் றேங்கும்
அருவிசென் றேர்திகழப்
பொருந்தின மேகம் புதைந்திருள்
தூங்கும் புனையிறும்பின்
விருந்தினன் யானுங்கள் சீறூ
ரதனுக்கு வெள்வளையே. 
 
மருந்தாய் நமது துன்பப் பிறவிப் பிணிக்கு ஆக்கமான அமிழ்தாய் இருந்தனர் அருவி வரும் குன்றில் இருந்தவர் சிறப்பான நன்மைகள் பொருந்திய மேகமாய் யாவற்றையும் மறைத்துக் கொள்ளும் இருளில் அடைந்து ஏற்கும் காட்டின் விருந்தினன் நானும் உங்கள் சீர் பொருந்தியவனுக்கு வெள்வளையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 32

 à®†à®©à®¨à¯à®¤ மாக்கட லாடுசிற்

றம்பல மன்னபொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூ
ரிதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி
அழுமழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயுந்
தளர்ந்தனை நன்னெஞ்சமே. 
 
ஆனந்தமான பெரிய கடலுடன் சிறிய அம்பலமான பொன் போலவும் தேன் ஊறும் மாமலை சீர் இது அரியது என உணர வழியில்லை. வானில் வலம்வரும் மாமதி வேண்டி அழவது போல் நானும் தளர்ந்தேன் நீயும் தளர்ந்து நெருங்கு நல்ல நெஞ்சமே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 31

 à®ªà¯Šà®¤à¯à®µà®¿à®©à®¿à®±à¯ றீர்த்தென்னை யாண்டோன்

புலியூ ரரன்பொருப்பே
இதுவெனி லென்னின் றிருக்கின்ற
வாறெம் மிரும்பொழிலே
எதுநுமக் கெய்திய தென்னுற்
றனிரறை யீண்டருவி
மதுவினிற் கைப்புவைத் தாலொத்த
வாமற்றிவ் வான்புனமே.
 
கூட்டத்தில் இருந்து பிரிந்து என்னை ஆண்டவன் புலியூர் அரன் பொருப்பே. இது என்னில் இருக்கின்ற படியே பெரும் பொழிலே எது உமக்கு அமைந்தது என்று இரண்டு அறை அருவி மதுவை காட்டிலும் சிறந்தது தரும் பூவை ஒத்ததாக மாற்றிட வரும் வான்புனமே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 30

 à®•à®£à®¿à®¯à®¾à®°à¯ கருத்தின்று முற்றிற்

றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
மணியார் பொழில்காண் மறத்திர்கண்
டீர்மன்னு மம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்காள்
அயில்வே லொருவர்வந்தால்
துணியா தனதுணிந் தாரென்னு
நீர்மைகள் சொல்லுமினே.
 
நாடக மாதரின் எண்ணம் இன்று முறிந்து நான் சென்று மழையாய் நீர்வடிந்தது. மணி போன்றவர் பொழில் காண மறந்தவர்களே நிலைக்கும் அம்பலத்தான் அணி போன்றவர் கயிலை மயில்களாய் வேல் உருவில் ஒருவர் வந்தால் துணிவற்றவர் துணிந்தார் என்று நீர் உண்மைகள் சொல்லுங்கள்.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 29

 à®ªà®°à®¿à®µà¯à®šà¯†à®¯à¯ தாண்டம் பலத்துப்

பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத் தைவனங்
கொய்யவு மிவ்வனத்தே
பிரிவுசெய் தாலரி தேகொள்க
பேயொடு மென்னும்பெற்றி
இருவிசெய் தாளி னிருந்தின்று
காட்டு மிளங்கிளியே.
 
பரிவு செய்து ஆளும் அம்பலத்தை நடத்துபவன் பரங்குன்றில் அருவி செய்து வழியும் நீர் வனத்தை அடையவும் அந்த வனத்தில் இருந்து பிரிவது அரிதாக்கி பேயொடு இணைத்து இரண்டற செய்தான் என்று காட்டும் இளங்கிளியே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 28

 à®ªà¯Šà®°à¯à®ªà¯à®ªà®°à¯à®•à¯ கியாமொன்று மாட்டேம்

புகலப் புகலெமக்காம்
விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு
மேல்வரு மூரெரித்த
நெருப்பர்க்கு நீடம் பலவருக்
கன்பர் குலநிலத்துக்
கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற
தின்றிக் கடிப்புனமே.
 
விலகியவர் என்று விலக்க மாட்டோம் அடைகலம் அடைய அடைக்கலமாம் எமக்கு விரும்பியவர் அவருக்கு மேலானவர் மேல் வரும் நெருப்பை போன்றவர்க்கு நீளும் அம்பலவருக்கு அன்பர் குல நிலத்து கருப்பற்று விட்டேன் என்று செயலாற்ற மற்றபடி கடினப்புனமே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 27

 à®µà®´à¯à®µà®¾ இயலெம் மலையர்

விதைப்பமற் றியாம்வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்களெல்
லாமெங் குழாம்வணங்குஞ்
செழுவார் கழற்றில்லைச் சிற்றம்
பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப
தாவதித் தொல்புனத்தே.
 
மாறாது இயல்பில் நிற்கும் மலை போன்றவர் விதைப்பார்கள் மாற்றவர்கள் வளர்த்தபடி ஒழுகுவார்கள். தினையின் குழாம் ஆகிய கூட்டங்கள் எல்லாம் என் கூட்டங்கள் வணங்கும் செழுமை தரும் கழல் தில்லை சிற்றம்பலவரை சென்று நின்று தொழுவார் வினை நிற்பது இல்லை நின்றால் தாவாமல் தொல் புனத்தே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 26

 à®•à®©à¯ˆà®•à®Ÿà®±à¯ செய்தநஞ் சுண்டு

கண் டார்க்கம் பலத்தமிழ்தாய் 
வினைகெடச் செய்தவன் 
விண்தோய் கயிலை மயிலனையாய் 
நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் 
செய்திடுவான் தினைகெடச் 
செய்திடு மாறுமுண் டோஇத் திருக்கணியே.
 
பார்வை அம்புகள் செய்த விடத்தை உண்டு கண்டவர்கள் ஆக்கமுடன் அறியும் தமிழ் கொண்டு தாய் வழி வரும் வினை அழிக்கச் செய்தவன் விண் முட்டும் கயிலையில் மயில் போன்றவன் நனைதல் கெடச் செய்தால் நம்மை கெடச்செய்வான் தினை கெட செய்ய மாற்று வழி உண்டோ இத்திருக்கணியே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 25

 à®¨à®¿à®©à¯ˆà®µà®¿à®¤à¯à®¤à¯à®¤à¯ தன்னையென் நெஞ்சத்

திருந்தம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின்
மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின்
றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட
தாகி விளைந்ததுவே. 
 
நினைவு கொடுத்து தன்னை நெஞ்சில் இருக்க அம்பலத்தே நின்று கூட்டிவைத்த ஈசன் குவித்த மலை காப்பவன் விருப்பத்தில் விளைவித்து காத்து சிறந்து நின்ற நமக்கு சென்று சென்று வினை தந்து காத்து விளைச்சல் உண்டதாக மாற்றி விளைந்திதது அதுவே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 24

 à®µà®Ÿà®¿à®µà®¾à®°à¯ வயற்றில்லை யோன்மல

யத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர்
தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக
யானுமக் கென்னுரைக்கேன்
தடிவார் தினையெமர் காவேம்
பெருமஇத் தண்புனமே.
 
வடிவான வயல் நிறைந்த தில்லையோன் மலையில் நின்று வடியும் தேனை அதிகம் உண்டு களித்த வண்டாய் நின்று அலர் தூற்ற நிறைய நடனமகளீர் வருந்துவார்கள் நமக்கு இனி இது இயலாது என உரைத்து கொழுத்த தினை காப்போம் இனி இதுவே நமக்கு குளிர்ந்த நீர் ஆகும். 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 23

 à®®à®¾à®¤à®¿à®Ÿà®™à¯ கொண்டம் பலத்துநின்

றோன்வட வான்கயிலைப்
போதிடங் கொண்டபொன் வேங்கை
தினைப்புனங் கொய்கவென்று
தாதிடங் கொண்டுபொன் வீசித்தன்
கள்வாய் சொரியநின்று
சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு
வித்தது தூமொழியே. 
 
மாது இடத்தில் இடம் கொண்டு அம்பலத்தில் நின்றவன் வளர்ந்த வான்கயிலையில் இடம்கொண்ட பொன் வேங்கையாய் தினம் புனங் கொய்க என்று வளர்ப்பு பெண் இடம் பொன் கொண்டு வீசி தன் கள் வாய் சொரிய நின்று சோதியாய் இடம் கொண்டு எம்மை மாற்றிவிட்டது தூய மொழியே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 22

 à®‰à®°à¯à®ªà¯à®ªà®©à¯ˆ அன்னகைக் குன்றொன்

றுரித்துர வூரெரித்த
நெருப்பனை யம்பலத் தாதியை
யும்பர்சென் றேத்திநிற்குந்
திருப்பனை யூரனை யாளைப்பொன்
னாளைப் புனைதல்செப்பிப்
பொருப்பனை முன்னின்றென் னோவினை
யேன்யான் புகல்வதுவே.
 
உருவில் பனை போன்ற கைக் கொண்டு குன்றை உரித்து வலிதரும் ஊர் எரித்த நெருப்பு போன்ற அம்பலத்து ஆதியை தேவர்கள் போற்றி நிற்கும் திருப்பனை ஊரனை தனக்குள் முழ்கடிக்கும் பொன் போன்றவளை புனைய செய்த பொருப்பனை முன்வந்து என்ன வினை செய்தவனோ நான் புகல்வதுவே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 21

 à®ªà®Ÿà¯ˆà®¯à®¾à®°à¯ கருங்கண்ணி வண்ணப்

பயோதரப் பாரமும்நுண்
இடையார் மெலிவுங்கண் டண்டர்க
ளீர்முல்லை வேலியெம்மூர்
விடையார் மருப்புத் திருத்திவிட்
டார்வியன் தென்புலியூர்
உடையார் கடவி வருவது
போலு முருவினதே.
 
போர் குணம் கொண்டவர் போன்ற கருத்த கண்ணில் வண்ணம் மிகுந்தபடி மார்பக பாரமும் இடையின் மெலிவும் கண்டு அகலாதவர்களாக முல்லை வேலி கொண்டு எனது ஊர் விடையாக நின்று மருவி திருத்திவிட்டார்கள். வியப்புக்குரிய புலியூர் உடையவர்கள் கடந்து வருவது போல் வளைந்து உள்ளதே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 20

 à®µà®´à®¿à®¯à¯à®®à¯ அதுவன்னை யென்னின்

மகிழும்வந் தெந்தையும்நின்
மொழியின் வழிநிற்குஞ் சுற்றமுன்
னேவய மம்பலத்துக்
குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற்
றாலமுற் றும்மறியக்
கெழியும்ம வேபணைத் தோள்பல
வென்னோ கிளக்கின்றதே.
 
அன்னை அவள் வழியாகவும் என்னை மகிழு செய்த தந்தையும் நின் மொழியின் வழி நிற்கும் உறவுகளும் வசப்படும் அம்பலது குழியும் பரம் எங்கும் ஆடும் கூத்தும் குற்றாலம் முற்றும் அறிய எழும்பவே பணைத் தோள் பல என்று கிளக்கின்றதே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 19

 à®šà¯à®±à¯à®±à¯à®žà¯ சடைக்கற்றைச் சிற்றம்

பலவற் றொழாதுதொல்சீர்
கற்று மறியல ரிற்சிலம்
பாவிடை நைவதுகண்
டெற்றுந் திரையின் னமிர்தை
யினித்தம ரிற்செறிப்பார்
மற்றுஞ் சிலபல சீறூர்
பகர்பெரு வார்த்தைகளே. 
 
சுற்றி வணங்கா முடி கொண்ட சிற்றம்பலவனை தொழாமல் பழைமை பல கற்றும் அறியாதவர்கள் அரிய சிலம்பின் விடை வெளிப்படும் கண் ஒற்றும் திரையின் அமிர்தத்தை இனி நிங்காமல் செறிப்பார் மற்றும் சிலபல சீறூர் வெளிப்படுத்தும் பெரு வார்த்தைகளே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 18

 à®ˆà®µà®¿à®³à¯ˆ யாட நறவிளை

வோர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று
நோக்கியெம் மெல்லியலைப்
போய்விளை யாடலென் றாளன்னை
அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாடநின் றேவிளை
யாடி திருமலைக்கே. 
 
ஈ விளையாடும்படி வாசனை மலர் அணிந்து மார்பில் விளையாடி இசையும்படி விளையாட வெண்பா கொண்ட மெல்லியலாள் உற்று நோக்கி போய் விளையாடு என்றாள் என்னை. அம்பலத்தான் பக்கத்தில் தீ விளையாட நின்றே விளையாடினேன் திருமலைக்கே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 17

 à®ªà®©à®¿à®¤à¯à®¤à¯à®£à¯à®Ÿà®žà¯ சூடும் படர்சடை

அம்பல வன்னுலகந்
தனித்துண் டவன்தொழுந் தாளோன்
கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப்
பாரிப்புக் கண்டழிவுற்
றினிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்
கென்றஞ்சு மெம்மனையே. 
 
பனித் துளியை அணியும் விரிந்த சடை அம்பலவன் உலகத்தில் தனித் துண்டாக இருப்பதை உணர்த்தும் அதை அடைந்தவனாக ஆகவேண்டும். கயிலையில் பயிலும் சிலம்பாக இருப்பவனே கனி சுவை அருளும் தொண்டைக்கு வாய்ப்பு கிடைக்க முலை கண்டு ஆர்பரித்து அழியும்படி சிற்றிடைக்கு பற்று வைக்க அஞ்சும் என் மனையே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 16

 à®®à®©à¯à®©à¯à®¨à¯ திருவருந் தும்வரை

யாவிடின் நீர்வரைவென்
றுன்னு மதற்குத் தளர்ந்தொளி
வாடு திரும்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ்
சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புல
னென்னப் புலம்புவனே. 
 
தன்னை தானே வரையறுக்காவிட்டால் காக்கும் திரு வருந்தும், இடத்திற்கு ஏற்ப வடிவம் பெறும் நீர் அதற்கு தளர்ந்து ஒளியாய் ஆடும் அதை அடைந்தவர் எல்லாம் புகழும் பரமன் பரஞ்சோதி சிற்றம்பலத்தான் பொன்னான கழல் வழுத்தார் பலனை ஏன்ன என்று புலம்புவனே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 15

 à®µà¯‡à®¯à¯à®¤à®¨à¯à®¤ வெண்முத்தஞ் சிந்துபைங்

கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானக மானுஞ்
சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட 
அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவ ரேனலெங்
காவலித் தாழ்வரையே.
நிலத்தை மூடிய கடலாகிய வேய் தந்த வெள்ளை முத்தும் அது சிந்திக் கிடக்கும் கரையில் பரப்பிய மீனும் குழந்தை தந்த காட்டு மானும் ஆயன் தந்த அன்பு கொண்டு ஆட்கொண்ட அம்பலவன் மலையில் தாய் தந்தை காப்போர் என எல்லாம் காவலாக நிற்பது இந்த தாழ்வரையே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 14

மாடஞ்செய் பொன்னக ரும்நிக
ரில்லையிம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற
பிள்ளையை யுள்ளலரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத்
தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரற் கொடிச்சியென்
றோநின்று கூறுவதே.
 
பொன்னால் செய்த மாடமும் நிகரில்லை, மாதர்க்கு என்ற பீடம் செய்யும் தாமரையோன் பெற்ற பிள்ளையை எண்ணத்தால் இடம் செய்து என் பிறப்பை அறுத்த தில்லை நின்றோன் கயிலையில் கூடிடச் செய்ய கொடி உச்சியை சார்ந்து நின்று கூறுவதே  
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 13

 à®¤à®³à¯à®³à®¿ மணிசந்த முந்தித்

தறுகட் கரிமருப்புத்
தெள்ளி நறவந் திசைதிசை
பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால்விடை
யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ
போன்ற வனமுலையே.
 
மணியை உள்ளே தள்ளி சந்தாமுடன் நினைக்க அருட் புரியும் ஆண்யானை யின் இருமாப்பை அகற்றி திசை மாற்றி சரியான திசை பாயச்செய்யும் மலை கொண்ட சிலம்பா வெள்ளி மலை போன்ற மால் விடையோன் புலியூர் விளங்கும் வள்ளி மயங்கி வருந்துவது போன்ற வனமுலையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 12

 à®¤à®´à®™à¯à®•à¯ மருவியெஞ் சீறூர்

பெரும இதுமதுவுங்
கிழங்கு மருந்தி இருந்தெம்மொ
டின்று கிளர்ந்துகுன்றர்
முழங்குங் குரவை இரவிற்கண்
டேகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரானெரி யாடிதென்
தில்லை மணிநகர்க்கே.
 
தயக்கமுடன் வரும் அருவி உள்ள சிறந்த ஊர் பெருகிட மதுவும் கிழங்கும் அருந்தி என்னோடு இருந்தபடி இன்று கிளர்ந்து மலைவாழ்பவர் முழங்குங் குரவை இருண்ட காலத்தில் அடைந்திட முத்தன் முக்தி வழங்கும் தலைவன் அரி ஆடும் தென் தில்லை மணி நகர்க்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 11

 à®…றுகால் நிறைமல ரைம்பால்

நிறையணிந் தேன் அணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல்
லாயமெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா
வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்கரி யோன்புலி
யூரன்ன வொண்ணுதலே.
 
சுவாசத்தை பங்கிட நிறைய மலர்களால் நிறைவை அணிந்தேன். அணியாதவர்கள் உணராத மலர் எது என தொடர்ந்து விரிந்து தேடி மெல்லப் புகுக. சிறுமையால் நோய்பட்டு வருந்தா வகையில் மிகவும் என் தலையில் உறுகின்ற அரியவன் புலியூரன் அவளை கூடி இணைவதே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 10

 à®ªà¯Šà®©à¯à®©à®©à¯ˆ யான்தில்லைப் பொங்கர

வம்புன் சடைமிடைந்த
மின்னனை யானருள் மேவலர்
போன்மெல் விரல்வருந்த
மென்னனை யாய்மறி யேபறி
யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந்
தாழ்குழற் கேய்வனவே.
 
பொன் போன்றவன் தில்லையில் பொங்கி எழும் பாம்பை சடையில் அணிந்த மின்னல் போன்றவன் அருள் இல்லாதவர் மெலிந்த விரல் போல் மென்மையை மறித்து பறிக்காதே. வெறிகொண்டவர் மலர்கள் இன்னல் என தருபவன் கொணர்ந்தேன் மணம் தாழ் குழல்களுக்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 9

 à®•à¯Šà®´à¯à®¨à¯à®¤à®¾ ரகைமுகை கொண்டலம்

பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லம்மெழில்
தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன்
சிற்றம் பலமனையாய்
செழுந்தா தவிழ்பொழி லாயத்துச்
சேர்க திருத்தகவே.
 
பளிச்சிடும் நட்சத்திரம் கருத்த மேகமும் கொண்ட மண்டலமான விரிந்த விண் என்ற மடுவில் எழுந்தார் நிலவென எழில் நிறை மலரை தந்தான் என இப்பிறப்பில் மூழ்காதபடி வகை கொண்டு ஆண்டவன் சிற்றம்பலம் உடையவன் செழுமையாய் அழியும் எழிலான ஆயத்துள் சேர்க்காது இருக்கவே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 8

 à®šà¯†à®´à¯à®¨à¯€à®°à¯ மதிக்கண்ணிச் சிற்றம்

பலவன் திருக்கழலே
கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி
வாய்க்கொள்ளுங் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன்
கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு
நீர்மை யளிகுலமே.
 
செழுமைநீர் வடியும் மதியாகிய கண் சிற்றம்பலவன் திருக்கழலே எழும்நீர் மையமாக சென்று கிண்கிணி என்ற மறைவான இடத்தை அடையும் கழிவான நீர் மலராகிய அவள்தன் கண் மருவி பிரியாத கொழுத்த நீர் பருக அருளும் பெரு நீர்மை அளிக்கும் குலமே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 7

 à®…ளிநீ டளகத்தின் அட்டிய

தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற்
றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு
கோலந் திருநுதலே.
 
எல்லாவற்றையும் அளிக்கும் உடலில் பூசிய வாசணை பொடியும் ஒளிரும் அணிகலன்களும் சுருண்ட முடியும் சூழ்ந்த வெண் மாலையும் நிறைவாய் உண்ட உணவும் கொண்டு களித்திடு நீ என செய்தவன் கடல் கொண்ட தில்லையன் கலங்கினால் தெளிந்திடு நீ என்று பொன் போல் கோலம் கொண்ட திருநுதலாலே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 6

 à®¤à¯Šà®¤à¯à®¤à¯€à®©à¯ மலர்ப்பொழில் தில்லைத்தொல்

லோனரு ளென்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின் 
மூடித்தன் ஏரளப்பாள்
ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின்
றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலை காளென்னுக்
கின்னும் பெருக்கின்றதே. 
 
ஒன்றுடன் ஒன்று பற்றியபடி இருக்கும் மலர்கள் நிறைந்த எழிலான தில்லையின் பழையவன் இருக்கிறான் என உணர்ந்து முத்திடும் குவளை மலர் மென்மையான காந்தள் என முடிந்திடும்.
ஏற்றபடி அருள் அளிப்பவள் ஒத்திசைந்து கொடி என ஒதுங்குகின்றாள். மருங்குல் நெருங்கிட பித்தம் தரும் பணைமுலைகள் எனக்கு இன்னும் பெரியதாக தெரிகின்றதே.   
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 5

 à®ªà®Ÿà®®à®¾ சுணப்பள்ளி யிக்குவ

டாக்கியப் பங்கயக்கண்
நெடுமா லெனவென்னை நீநினைந்
தோநெஞ்சத் தாமரையே
இடமா விருக்கலுற் றோதில்லை
நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து
வைகிற்றிவ் வார்பொழிற்கே. 
 
படம் எடுக்கும் பாம்பை பள்ளிகொள் இடமாக்கிய பங்கயன் கண் நெடுமால் என்று நீ நினைத்தாயே நெஞ்சத் தாமரையே இடமாக இருத்தலை உடைய தில்லை நின்றவன் ஈரமாக இருக்கும் கயிலை, வளர்ந்த மார்புடைய இளம்பெண் எழிற்கு யார் இணைவைப்பார்.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 4

 à®¨à®°à®²à¯à®µà¯‡ யினநின தோட்குடைந்

துக்கநன் முத்தஞ்சிந்திப்
பரல்வே யறையுறைக் கும்பஞ்
சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவனிங் கேநிலுங்
கேசென்றுன் வார்குழற்கீர்ங்
குரல்வே யளிமுரல் கொங்கர்
தடமலர் கொண்டுவந்தே. 
 
நசுக்கும் தோள்களால் அணிந்த நல்முத்துக்கள் சிந்திப் பரல்கள் தேய்ந்து குவியச் செய்யும் பரன் தில்லை ஒப்பவன் இணைமலர் தருவான் இங்கே நீண்டு நிற்கும் குழல் மற்றும் கீர் என்று குரல் அளித்து முரன்பட அழகிய மார்பு கொண்ட தடமலர் கொண்டு வந்தே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 3

 à®¤à®¿à®©à¯ˆà®µà®³à®™à¯ காத்துச் சிலம்பெதிர்

கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
சுனைவளம் பாய்ந்து துணைமலர்
கொய்து தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணி
யம்பல வன்றன்வெற்பிற்
புனைவளர் கொம்பரன் னாயன்ன
காண்டும் புனமயிலே.
 
தினை வளரும் மலை வளத்தை காத்து சிலம்பு என்ற நாத அனுபவத்தில் நிறைந்து சுனையாகும் நீர்வீழ்ச்சி பாய்ந்து துணையான இணையடி நினைத்து வணங்க வணங்குவார் தன் வினை வளம் நீர் என அழிய நீற் அணியும் அம்பலவன் வெறிமையால் புனைந்து வளரும் என்பரன் என அறியும் புனமயிலே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 2

 à®ªà¯à®¯à®²à¯à®µà®³ ரூசல்முன் ஆடிப்பொன்

னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும்
அருவி திருவுருவிற்
கயல்வளர் வாட்கண்ணி போதரு
காதரந் தீர்த்தருளுந்
தயல்வளர் மேனிய னம்பலத்
தான்வரைத் தண்புனத்தே. 
 
புயல் வளரும் ஊசல் முன் ஆடிடும் பொன்னே அடுத்து போய் பொலியும் அயல் வளரும் குன்றில் நின்று உயர்ந்தும் அருவி திரு உறுவில் மீன் வளரும் வாள் போன்ற கண்ணில் தீர்த்தம் தந்து அருளும் அயல் வளர் மேனியன் அம்பலத்தான் வரைந்த குளிர்ந்த நீரே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 1

 à®µà®¾à®©à¯à®´à¯ˆ வாளம்ப லத்தரன்

குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கால்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
காட்டுமொர் கார்ப்பொழிலே. 
 
வெற்றிடம் நுழையும் விரிந்த அம்பலத்து அரன் குன்று ஒன்றில் வெய்யில் போல் நின்றவன் தான் நுழைய இருளாக புறத்தே சென்று தாரகையாக தேன் நுழைந்து இருக்கும் நாகம் போல் மலராக மலர்ந்து பளிங்கு போல் நிலவாக இருப்பவன் கானகம் நுழைந்து வாழ்வு பெற்று எழிலை காட்டிட கார்மேகமாக பொழிகிறதே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 26

 à®ªà®¾à®šà®¤à¯ தளையறுத் தாண்டுகொண்

டோன்தில்லை யம்பலஞ்சூழ்
தேசத் தனசெம்மல் நீதந்
தனசென் றியான்கொடுத்தேன்
பேசிற் பெருகுஞ் சுருங்கு
மருங்குல் பெயர்ந்தரைத்துப் 
பூசிற் றிலளன்றிச் செய்யா
தனவில்லை பூந்தழையே.
 
பாசம் என்ற தடையை அறுத்து ஆண்டு கொண்டவன் தில்லை அம்பலம் சூழ்ந்த தேசத்தின் செம்மல் நீ தந்ததையே நான் சென்று கொடுத்தேன். நிறைய பேசி சுருங்கு மருங்குல் பெயர்த்து அரைத்து பூசியதை தவிர பிற செய்யவில்லை பூந்தழையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 25

 à®¤à¯†à®µà¯à®µà®°à¯ˆ மெய்யெரி காய்சிலை

யாண்டென்னை யாண்டுகொண்ட 
செவ்வரை மேனியன் சிற்றம்
பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைகண்
டாயுள்ள வாறருளான்
இவ்வரை மேற்சிலம் பன்னெளி
திற்றந்த ஈர்ந்தழையே. 
 
யாருக்கும் மெய்யில் ஏறி காயாய் சிலையாய் ஆண்டு என்னையும் ஆண்டுகொண்ட சிவந்த அரை மேனியன் சிற்றம்பலவன் செழுமையான கயிலை கண்ட ஆயுள் உள்ளவரை அருள்பவன் இந்த அரைமேல் சிலப்பொளி சிறந்து ஆற்ற கவர்ந்த ஏந்திழையே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 24

 à®à®±à¯à®®à¯ பழிதழை யேற்பின்மற்

றேலா விடின்மடன்மா
ஏறு மவனிட பங்கொடி
யேற்றிவந் தம்பலத்துள்
ஏறு மரன்மன்னும் ஈங்கோய்
மலைநம் மிரும்புனம் காய்ந்
தேறு மலைதொலைத் தாற்கென்னை
யாஞ்செய்வ தேந்திழையே. 
 
பழிக்கப்படும் மடல் ஏறுதலை ஏற்பின் அதை மாற்ற வேண்டின் இடபத்தில் ஏறி கொடி ஏற்றி வந்த அம்பலத்துள் ஏறும் அரன் தங்கும் இங்கே இருக்கும் மலையில் ஈரம் காய்ந்து ஏறும் மலை தொலைந்தால் யார் தான் என்ன செய்வது ஏந்திழையே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 23

 à®¤à®µà®³à®¤à¯à®¤ நீறணி யுந்தடந்

தோளண்ணல் தன்னொருபால்
அவளத்த னாம்மக னாந்தில்லை
யானன் றுரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார்
கரத்தகண் ணார்தழையுந்
துவளத் தகுவன வோசுரும்
பார்குழல் தூமொழியே.
 
மாறிவிட்ட நீறு அணியும் விரிந்த தோள் உடைய அண்ணல் தன் ஒரு பாலகனாய் அவதானித்தான் தில்லையன் என உரிமை கொண்டு கட்டுபடாத யானையை அடக்கினார். நீர் சுரக்கும் கண்களை உடையவர் நிறைந்து வாழ்வதற்கு தகுந்ததுவோ சுருண்ட முடி உடையவர் அழகிய மொழி. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 22

 à®•à®´à¯ˆà®•à®¾à®£à¯ டலுஞ்சுளி யுங்களி

யானையன் னான்கரத்தில்
தழைகாண் டலும்பொய் தழைப்பமுன்
காண்பனின் றம்பலத்தான்
உழைகாண் டலும்நினைப் பாகுமென்
நோக்கிமன் நோக்கங்கண்டால்
இழைகாண் பணைமுலை யாயறி
யேன் சொல்லும் ஈடவற்கே.
 
குத்துக் கோல் கண்டவுடன் சுளிக்கும் யானை ஒத்தவன் கைகளில் தாழம்பு கண்டவுடன் பொய் அதிகம் உரைக்க, அடுத்ததை முன்னே காணும் அம்பலத்தவன் தந்த ஊழ்வினை கண்டு நினைக்க என்ன ஆகும் என நோக்கி நோக்கம் கண்டு இசைந்து காணும் பணைமுலையை நான் அறியேன் என சொல்பவற்கு ஈடானவர் அவரே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 21

 à®¤à¯‹à®²à®¾à®•à¯ கரிவென்ற தற்குந்

துவள்விற்கு மில்லின்தொன்மைக்
கேலாப் பரிசுள வேயன்றி
யேலேம் இருஞ்சிலம்ப
மாலார்க் கரிய மலர்க்கழ
லம்பல வன்மலையிற்
கோலாப் பிரசமன் னாட்கைய
நீதந்த கொய்தழையே. 
 
அடங்காத யானை வென்றதற்கும் சோர்வுறாத தன்மைக்கும் ஈடு இல்லா பரிசு உள்ளது அன்றி எலம் இருஞ்சி இலம்பு என மாமலர்களுக்கும் அரிய மலர்கழல் அம்பலவன் மலையில் கோலம் பூண்ட ஆளுமை நீதந்த கொய்தழையே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 20

 à®ˆà®šà®±à¯ கியான்வைத்த வன்பி

னகன்றவன் வாங்கியவென்
பாசத்திற் காரென் றவன்தில்லை
யின்னொளி போன்றவன்தோள்
பூசத் திருநீ றெனவெளுத்
தாங்கவன் பூங்கழல்யாம்
பேசத் திருவார்த்தை யிற்பெரு
நீளம் பெருங்கண்களே. 
 
ஈசன் நான் வைத்த அன்பால் அகன்றவன் கொடுத்த பாசத்தால் கார் ஒன்றியவன் தில்லை ஒளி போன்றவன் தோள் பூசத் திருநீறு என வெளுத்த அவன் பூங்கழல் யாம் பேசும் திருவார்த்தையால் பெரு நீளம் பெருங்கண்களே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 19

 à®•à¯à®µà®µà®¿à®© கொங்கை குரும்பை

குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின வாணகை வெண்முத்தங்
கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற்
சிற்றம் பலமனையாட்
குவவின நாண்மதி போன்றொளிர்
கின்ற தொளிமுகமே.
 
குவிந்த மார்பகமும் அதில் படர்ந்த வளர்ந்த முடியும் கோவைப்பழம் போன்ற சிவந்த வாயும் கவரும் நகைப்பும் அதில் வெண்மையான முத்தும் கண் மலர் காண செழுமையாக நீர் கழியும் தவத்தால் வினை தீர்ப்பவன் தாழ்ந்த குளத்தில் சிற்றம்பல மனையாள் நாணத்தால் குவிந்த நிலவாய் ஒளிரும் ஒளி முகமே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 18

 à®µà®¿à®£à¯à®£à®¿à®±à®¨à¯ தார்நிலம் விண்டவ

ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத்
தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச்
சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண
தோமன்ன நின்னருளே.
 
விண்ணை கடந்தவர் நிலத்தை விண்டவர் என மிகுதியான இருவர் கண்ணை கடந்தார் தில்லை அம்பலத்தார். கழுக்குன்றில் இருந்து குளிர்ச்சியுடன் இருந்து சந்தனச் சோலை பந்தாடுகின்றார். எண்ணம் கடந்தவர் யார் கண்ணோ எல்லாம் உன் அருளே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 17

 à®®à®¤à¯à®¤à®•à®žà¯ சேர்தனி நோக்கினன்

வாக்கிறந் தூறமுதே
ஒத்தகஞ் சேர்ந்தென்னை யுய்யநின்
றோன்தில்லை யொத்திலங்கும்
முத்தகஞ் சேர்மென் னகைப்பெருந்
தோளி முகமதியின்
வித்தகஞ் சேர்மெல்லென் நோக்கமன்
றோஎன் விழுத்துணையே. 
 
கடையப்படுவதால் கிடைத்த தனி பார்வை கொண்டு அமுது ஊறும் வாக்கு அளிப்பவனே. ஒத்தபடி அகம் சேர்ந்து என்னை வீடுபெறு அடைய நின்றான். தில்லை ஒத்து இலங்கும் முத்து அகத்தை சேர்ந்ததைப் போல் என் பெருந்தோளி சேர்ந்தவன் முகத்து மதியின் வித்தகமாய் சேர முயல்வதே என் நோக்கம் அன்றோ என் விழுத்துணையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 16

 à®ªà®£à¯à®Ÿà®¾ லியலு மிலைவளர்

பாலகன் பார்கிழித்துத்
தொண்டா லியலுஞ் சுடர்க்கழ
லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டா லியலும் வளர்பூந்
துறைவ மறைக்கினென்னைக்
கண்டா லியலுங் கடனில்லை
கொல்லோ கருதியதே.
 
முன்பு ஆல் இலையில் வளந்த பாலகன் உலகை கிழித்து தொண்டு செய்து இயல்பாய் அடையும் சுடர் கழலை அடையவில்லை. தொல்லை நீக்கும் தில்லையின் வாய் வண்டாகும் ஒலியால் இயலும் வளர் பூந்துறையை மறைக்க இயலாத என்னை கன்டு இயலும் கடன் இல்லை முடிவோ எண்ணியதோ.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 15

 à®‰à®°à¯à®•à¯ தலைச்சென்ற வுள்ளத்தும்

அம்பலத் தும்மொளியே
பெருகு தலைச்சென்று நின்றோன்
பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை
முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக்கென்
னோவைய வோதுவதே. 
 
உள்ளத்தால் உருகுவதை செய்து அம்பலத்து ஒளி பெருகுதலைச் செய்து நின்றோன். பெருந்துறை மேல் போதை கொண்டவர் வட்டத்தை சென்று ஊழ் முடியாது முலை கண்டு தலைப்படும் மழலை என ஓதுவதோ.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 14

 à®…க்கும் அரவும் அணிமணிக்

கூத்தன்சிற் றம்பலமே
ஒக்கு மிவள தொளிருரு
வஞ்சிமஞ் சார்சிலம்பா
கொக்குஞ் சுனையுங் குளிர்தளி
ருங்கொழும் போதுகளும்
இக்குன்றி லென்றும் மலர்ந்தறி
யாத வியல்பினவே.
 
அஃகாகிய அயுத எழுத்தையும் அரவமாகிய ஒளியுடலையும் அணியும் மணி கூத்தன் சிற்றம்பலமே நிகரான ஒளி வளர் வஞ்சி மஞ்சம் சார அழைக்க கொக்கும் சுனையும் குளிரந்த இருக்கும் இடத்தில் கொழுத்த இளம் மலர்களும் இந்த குன்றில் ஒன்றும். மலர்ந்து அறியாத இயல்பில் இருந்தனவே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 13

 à®®à¯ˆà®¤à¯à®¤à®´à¯ˆ யாநின்ற மாமிடற்

றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற வன்பினர்
போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா
வினாய்க்கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ராலென்ன
பாவம் பெரியவரே.
 
கருமை நிறைந்து நின்ற மா இடை அம்பலவன் திருவடிக்கே உடல் நிறைந்து நின்றவன் வம்பு நிறைந்தவர் போல அதிரதிர கை நிறைய ஏந்தி முடிவற்ற கேள்வியுடன் வில் இல்லாமல் பித்து நிறைய நிற்பவரானால் பாவம் பெரியவர்களே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 12

சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்
றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத் தெம்மையர்
எய்கணை மண்குளிக்குங்
கலையொன்று வெங்கணை யோடு
கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையொன்று திண்ணிய வாறையர்
கையிற் கொடுஞ்சிலையே. 
 
திடமான கல்லால் ஆன சிலை ஒன்று வாள் போன்ற நெற்றியில் பாகமாக கொண்டவன் சிற்றம்பலவன் கயிலை மலை ஒன்று மாமுகத்தில் விசப்படும் அம்பாய் மண் கூட உணர்ச்சியுடன் குளிக்கும் கலை ஒன்று வெறும் கனையுடன் காட்ட என்னில் கெட்டேன். கொலை செய்ய ஒன்றும் திடமானவர் கையில் கொடும் சிலை உள்ளதே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 11

தெங்கம் பழங்கமு கின்குலை
சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத் தொளிர்குளிர்
நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றிற்
குன்றன்ன மாபதைப்பச்
சிங்கந் திரிதரு சீறூர்ச்
சிறுமியெந் தேமொழியே.
 
தென்னைமரக் கனிகள் பாக்கு குலைபோல் நிறைந்து வாழை வளர்ந்து கொழுத்த பழங்கள் உடன் குளிர்ந்த நாட்டினை நீ உடமையாக கொண்டாய். பாகமாக கொண்ட அம்பலவன் பரங்குன்றில் குன்று என நின்று மனம் பதைக்க சிங்கம் திரிவது போல் திரியும் சீர் நிறை ஊரின் சிறுமியே என் தேன் மொழியே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 10

 à®…ந்தியின் வாயெழி லம்பலத்

தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
மொழிசென்றம் மொய்குழற்கே.
 
இளம் சிவப்பு கொண்ட அந்தியின் எழிலுடன் இருக்கும் அம்பலத்து என் தலைவன் பொன்னின் நிறம் மாறி பலவகை சுவை நிறைத்து கொடுப்பான். பெண்குரங்கின் வாய் நிரப்பும் தோப்பும் சிலம்ப மனம் கனிய முன்னும் வாய் மொழியாகியது நீயே என பேசி மகிழ்ந்தோம் உன் திருவடிக்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 9

 à®®à¯à®©à®¿à®¤à®°à¯ மன்னையும் மென்னையர்

சாலவும் மூர்க்கரின்னே
தனிதரு மிந்நிலத் தன்றைய
குன்றமுந் தாழ்சடைமேற்
பனிதரு திங்க ளணியம்
பலவர் பகைசெகுக்குங்
குனிதரு திண்சிலைக் கோடுசென்
றான்சுடர்க் கொற்றவனே.
 
முழமை அருளும் அன்னையும் மென்மையானவர்கள் போற்றவும் திடமுடன் தனிமை தரும் நிலத்திடை குன்றம் உள்ள தாழ்ந்த சடை மேல் பனி தரும் திங்கள் அணியும் பலரின் பகை அழிக்கும் பணிவு தரும் திட சிலைக் கோடு சென்றான் சுடர் உடைய கொற்றவனே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 8

 à®•à®±à¯à®±à®¿à®² கண்டன்னம் மென்னடை

கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப்
பெறாகிள்ளை பிள்ளையின்றொன்
றுற்றில ளுற்ற தறிந்தில
ளாகத் தொளிமிளிரும்
புற்றில வாளர வன்புலி
யூரன்ன பூங்கொடியே.
 
பார்த்து கற்காத மென்மையாக நடக்கும் அன்னம் கண் மலர்கள் அருளுடன் நோக்க மென்மையை பெறவில்லை, அன்பினை பெறாத கிள்ளை பேச்சு, பிள்ளை என்றால் ஊற்று இல்லா ஊற்று தரித்து இளக ஒளி மிளிரும் புற்றில் வாழ் அரவம் புலி ஊர் என்ற பூங்கொடியே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 7

 à®¨à®±à®®à®©à¯ˆ வேங்கையின் பூப்பயில்

பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை யெனநனி
யஞ்சுமஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொ
டணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை யதளம்
பலவன் நெடுவரையே.
 
இனியவை இருப்பிடத்து புலியின் மென்மையான அசைவுடன் பாறையை அடைந்த மலரை நாகம் என நாடிய வீரம் குடி கொண்ட வேங்கை என அஞ்சம். தருபவர் அச்சம் அடைய குகை கொண்ட வேங்கை அடங்கியது போல் அடையவோ நிறைவான இடத்தில் வேங்கை பலமுடன் இருக்க நேடிய வழி இதுவே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 6

 à®‰à®±à¯à®™à¯à®•à®£à¯à®£à®¿ வந்த கணையுர

வோன்பொடி யாயொடுங்கத்
தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல
வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென்
வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள்
நாணுமிக் குன்றிடத்தே. 
 
ஆசை ஊறச் செய்யும் கண்ணி வந்த கணை கொடுப்பவன் பொடியாய் ஒடுங்கத் தகுந்த கண்ணி வந்த சிற்றம்பலவன் மலையின் சிறு வாய் நறுங்க வந்த கண்ணி அணிந்தாலும் நாகம் ஒடுக்கும் பூ ஆகும் குறுகிய கண்ணி ஏய்ந்த மந்திகள் வெட்கப்படும் இந்த குன்றிடத்தே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 5

 à®Žà®´à®¿à®²à¯à®µà®¾ யிளவஞ்சி யும்விரும்

பும்மற் றிறைகுறையுண்
டழல்வா யவிரொளி யம்பலத்
தாடுமஞ் சோதியந்தீங்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்
றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல
தில்லையிப் பூந்தழையே.
 
எழிலான வஞ்சியும் விரும்பும் மற்றபடி குறையுடன் இருக்கும் குழல் வாய் ஒளியுடன் அம்பலத்து ஆடும் சோதியான தீ கொண்ட குழல்வாய் மொழி மங்கை பாகன் குறுகிய அருவியின் கோலம் காட்டும் பொழில்வாய்  தடம் தரும் வாயில்லாமல் தில்லையின் பூந்தழையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 4

 à®¯à®¾à®´à®¾à®°à¯ மொழிமங்கை பங்கத்

திறைவன் எறிதிரைநீர்
ஏழா யெழுபொழி லாயிருந்
தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழலெழிற் றொண்டைச்செவ்
வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா தெதிர்வந்து கோடுஞ்
சிலம்ப தருந்தழையே. 
 
யாழ் போன்ற மொழியை உரிமையாக கொண்ட மங்கைக்கு பாகமான இறைவன் திரையில் வழியும் நீர் வராதபடி வந்து எழிலாக நிறைந்தவன் நின்ற தில்லை என சுருண்ட எழிலான கூந்தல் தொண்டை செவ்வாய் நாடி சொல்லை அறிந்தால் தாழ்ச்சியடைய செய்யாதது எதிர் வந்து கோடும் சிலம்ப தரும் தழையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 3

 à®®à¯à®©à¯à®±à®•à®°à¯à®¤à¯ தெல்லா விமையோரை

யும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்றகத் தில்லா வகைசிதைத்
தோன்றிருந் தம்பலவன்
குன்றகத் தில்லாத் தழையண்
ணறந்தாற் கொடிச்சியருக்
கின்றகத் தில்லாப் பழிவந்து
மூடுமென் றெள்குதுமே.
 
முன் வெற்றிபெற்ற எல்லா இமையாதவரையும் கடந்தபடி தக்கன் மூட்டிய தீ சென்று அகத்தே இல்லா வகை சிதைத்த அம்பலவன் குன்றகத்தே இல்லா தழையன் நாணமுடன் கொடியானவர் அகத்தே இல்லா பழி வந்து மூடுமோ என்றே எண்ணுகிறேன்.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 2

 à®†à®°à®¤à¯ தழையராப் பூண்டம்

பலத்தன லாடியன்பர்க்
காரத் தழையன் பருளிநின்
றோன்சென்ற மாமலயத்
தாரத் தழையண்ணல் தந்தா
லிவையவ ளல்குற்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தா
ரெனவரும் ஐயுறவே.
 
மனம் நிறைய தழை நிறைய பூண்ட அம்பலத்தான் அன்பர்களுக்கு தழையன் அருளி நின்றான்  மாமலயத்து தழை அண்ணல் தந்தான் இவை அவள் அல்குல் கண்டால் நிறைந்த தழை கொடுத்தான என வரும் ஐயுறவே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 1

 à®¤à¯‡à®®à¯†à®©à¯ கிளவிதன் பங்கத்

திறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையுமம் போதுங்கொள்
ளீர்தமி யேன்புலம்ப
ஆமென் றருங்கொடும் பாடுகள்
செய்துநுங் கண்மலராங்
காமன் கணைகொண் டலைகொள்ள
வோமுற்றக் கற்றதுவே.
 
தேன் என மென்னையான வர்த்தையுடன் நட்பு கொண்ட தில்லை போன்றவர்களே, பூ என மெல்லிய தழை என்றாலும் போதும் என கொள்ளவில்லை என தனியே புலம்ப ஆம் என்று அரும் கொடும் பாடுகள் செய்து உங்கள் கண் மலரால் காமன்கணை கொண்ட் வலை கொள்ளவோ முற்றும் கற்றதுவே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 8

 à®ªà¯Šà®©à¯à®©à®¾à®°à¯ சடையோன் புலியூர்

புகழா ரெனப்புரிநோய்
என்னா லறிவில்லை யானொன்
றுரைக்கிலன் வந்தயலார்
சொன்னா ரெனுமித் துரிசுதுன்
னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
நீர்மை இனியவர்க்கே. 
 
பொன் அணிந்த சடையோன் புலியூரை புகழாதவர் புரிவதில் நோய் என நான் அறியவில்லை இதை நான் ஏன் உரைக்கவில்லை. அடுத்தவர் வந்து சொன்னாலும் உடனே உணராமல் துணை நின்ற மனமே என் ஆழ்ந்த துயர் இல்லாமல் போக வழி சொல்லு, நீர்மை இனிமையானவர்க்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 7

 à®®à¯‡à®µà®¿à®¯à®¨à¯ தோலுடுக் குந்தில்லை

யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியந் தோன்றுங் கிழிநின்
னெழிலென் றுரையுளதால்
தூவியந் தோகையன் னாயென்ன
பாவஞ்சொல் லாடல்செய்யான்
பாவியந் தோபனை மாமட
லேறக்கொல் பாவித்ததே
 
முடிடும் தோல் உடுக்கும் தில்லையனின் பொடி மெய்யில் இடுகையில் ஓவியம் தேன்றும் கிழிசலும் எழிலாக இருக்கும் என்ற உரை உளதால் விரிந்த தோகை என பாவமான சொல்லாடல் செய்யமாட்டார். பாவி நான் அந்தோ பனை மடலேறக் பாவித்தேனே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 6

 à®‰à®³à¯à®³à®ªà¯ படுவன வுள்ளி

யுரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி
யேலிது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க் கருளா
அரன்தில்லை காணலர்போற்
கொள்ளப் படாது மறப்ப
தறிவிலென் கூற்றுக்களே. 
 
நினைக்க வேண்டியதை நினைத்து சொல்ல வேண்டியவர்க்கு சொல்லி மெல்ல முன்னேற துணிபவர்கு துணிய வேண்டுவேன் நான். திருட்டதனமாக முன்னேற முயல்பவர்க்கு அருளாத அரன் தில்லை காணமாட்டார் போல் மறக்க அறியவில்லை கூற்றுக்களே.
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 5

 à®ªà¯à®°à®™à¯à®•à®Ÿà®¨à¯ தானடி காண்பான்

புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன்
னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற்
றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல
முன்றிலம் மாயவனே.
 
எல்லை கடந்தவன் அடி காண்பவர் புவியை கடந்து புகுவது அறியாமல் இரங்கி தாய் நீ என இரக்கும் பக்தன் இரண்டு அடிக்கு என் இரண்டு கரத்தை கடந்தான் என்று காட்டமல் அங்கே அதை காட்டி வரம் தந்தான் தில்லை அம்பலம் முற்றிலும் அவனே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 4

 à®šà®™à¯à®•à®¨à¯ தருமுத்தி யாம்பெற

வான்கழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப்
பொலிகலிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலி
னேந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை
வானவன் நேர்வருமே. 
 
கூடுவதால் தரும் முழுமையை பெற வான் வழியே நோக்கி அங்கு பொங்கும் நீர் கொண்ட கங்கை தாங்கி பொலிவுடன் கலித்து உலவி அமைதியாக ஏந்திழை தொல்லை பல வாங்கி அமையாக்கும் நீர் தில்லை வானவனுக்கு ஒப்பாகுமே.
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 3

 à®¨à¯€à®•à®£à¯ டனையெனின் வாழலை

நேரிழை யம்பலத்தான்
சேய்கண் டனையன்சென் றாங்கோ
ரலவன்றன் சீர்ப்பெடையின்
வாய்வண் டனையதொர் நாவற்
கனிநனி நல்கக்கண்டு
பேய்கண் டனையதொன் றாகிநின்
றானப் பெருந்தகையே. 
 
நீ அதைக் கண்டால் வாழ மாட்டாய், நேரிழை அம்பலத்தான் பிள்ளையை பார்த்ததைப் போன்ற ஒருவன். என் அரசன், அழகிய பெண்மையின் வாய் வண்டு அனைய ஓரு நாவய் கனி நல்லது எனக் கண்டு பேய் கண்டதைப் போல் ஒன்றாகி நின்றவன் என பெருந்தகையே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 2

 à®µà®°à®¿à®šà¯‡à®°à¯ தடங்கண்ணி மம்மர்கைம்

மிக்கென்ன மாயங்கொலோ
எரிசேர் தளிரன்ன மேனியன்
ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல்
பூங்கணை வேள்கொலென்னத்
தெரியே முரையான் பிரியா
னொருவனித் தேம்புனமே. 
 
கோடுகள் நிறைந்த கண்ணை உடையவள் கைகளுக்கு மயக்கம் அடைந்தது ஏனோ? நெருப்புடன் இணையும் தளிர் போன்ற மேனியன், ஈரமுள்ளவன் புலியூரில் புரி சடையோன் புதல்வன் அடைந்த பூ போன்ற வேல் என தெரியாத உரையவன் பிரியாத ஒருவன் கூடும் உறுப்பு தேன் புலமே.
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 1

 à®¤à¯‡à®¯à¯ மலர்க்குஞ்சி யஞ்சிறை

வண்டுதண் டேன்பருகித்
தேதே யெனுந்தில்லை யோன்சே
யெனச்சின வேலொருவர்
மாதே புனத்திடை வாளா
வருவர்வந் தியாதுஞ்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது
வார்குழ லேந்திழையே.
 
தேயும் மலருக்கு அஞ்சி அறைகளில் தங்கும் வண்டு தண்டு தேன் பருகியதோ என்னும் தில்லை வாழ்பவன் சேய் என சினம் கொண்ட வேல் என ஒருவர் மாதரால் வாழ வருவார் வந்து ஏதும் சொல்லார் எது செய்யத்தக்கது அது வார்குழல் ஏந்திய இடையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 9

 à®ªà¯ˆà®¨à¯à®¨à®¾ ணரவன் படுகடல்

வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும்
புலியூர் மணந்தபொன்னிம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான்
அழுந்தினு மென்னின்முன்னும்
இந்நா ளிதுமது வார்குழ
லாட்கென்க ணின்னருளே. 
 
அடங்கி இருக்கும் பாம்பை கொண்டு கடலை கடைய நஞ்சும் அமுதாகும். மைவளை கொண்ட மணிகண்டன் இருக்கும் புலியூர் வாசமும் பொன்னும் நிறைத்து வலைத்த அமுது அலை வாய் உடையவன் என்னுள் மறைந்தபடி முன்னும் இன்றும் மது ததும்பும் வார் குழல் ஆட்கொள்ள காண் என அருளியதே.
#திருவாசகம்

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 8

 à®Šà®°à¯à®µà®¾ யொழிவா யுயர்பெண்ணைத்

திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த
இருந்தில மீசர்தில்லைக்
கார்வாய் குழலிக்குன் னாதர
வோதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரினறி வார்பின்னைச்
செய்க அறிந்தனவே. 
 
ஊரார் பழிக்கும் வாயை முடி அடைக்கும் உயர் பெண்ணை திண்ணமாய் மடல் குறித்து சீராக பேசி திருத்த இருந்திலர் ஈசர் தில்லை கருத்த வாய் குழலிக்கு ஆதாரத்தை ஓதி கற்பித்து கண்டால் தேறும் வாய் அரிது என அறிவார் பின்னர் செய்க அறிந்தபடியே.
#திருவாசகம்

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 7

 à®¯à®¾à®´à¯ மெழுதி யெழின்முத்

தெழுதி யிருளின்மென்பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந்
தீட்டியென் தொல்பிறவி
ஏழு மெழுதா வகைசிதைத்
தோன்புலி யூரிளமாம்
போழு மெழுதிற்றொர் கொம்பருண்
டேற்கொண்டு போதுகவே. 
 
ஏழும் எழுதி ஏழின் முடிவையும் எழுதி இருளாக பூசும் சூழ்ச்சியும் எழுதி ஓரு தொண்டையும் தீட்டி என் பழம் பிறவி ஏழும் எழாதபடி வகையாக சிதைத்தவன் புலியூர் இளமாகும் பொழுதில் கொம்பை அரணாக கொண்டு போதும் என ஆக்கியதே.
#திருவாசகம்

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 6

 à®…டிச்சந்த மால்கண் டிலாதன

காட்டிவந் தாண்டுகொண்டென்
முடிச்சந்த மாமல ராக்குமுன்
னோன்புலி யூர்புரையுங்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக்
கன்னி யனநடைக்குப்
படிச்சந்த மாக்கும் படமுள
வோநும் பரிசகத்தே.
 
சந்ததமாய் அளவற்றும் கண்டிடாத திருவடி காட்டி வந்து ஆண்டுகொண்டு என் சந்தத முடிச்சி அவிழ்த்து மாமலர் ஆக்கும் முன்னவன் புலியூர் புரையும் ஆழ்ந்த அமைதி தரும் யாழ் பயின்ற மென்மையான மொழி பேசும் கன்னியன் நடைக்கு முன்னேற்றமாக்கும் படம் உள்ளதோ பரிசுகளில். 
#திருவாசகம்

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 5

 à®¨à®Ÿà®©à®¾à®®à¯ வணங்குந்தொல் லோனெல்லை

நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத் தரன்தில்லை
மல்லற்கண் ணார்ந்தபெண்ணை
உடனாம் பெடையொடொண் சேவலும்
முட்டையுங் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண
தோமன்ன இன்னருளே.
 
ஆட்டக்காரன், வணங்கக்கூடிய பழையவன், எல்லையை நான்முகனும் மாலும் அறியாதபடி கடந்தவன், உருவமற்றவன், தில்லை அல்லல் கண்ணார்ந்த பெண்ணை உடன்கொண்டவன், பெட்டையுட்ன சேவலை இணைத்து முட்டையும் தந்து அழித்து மடல் நாம் ஏறின் யார் காரணமோ, இன்னருளை தருவாயாக. 
#திருவாசகம்

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 4

 à®•à®´à®¿à®•à®¿à®©à¯à®± வென்னையும் நின்றநின்

கார்மயில் தன்னையும்யான்
கிழியொன்ற நாடி யெழுதிக்கைக்
கொண்டென் பிறவிகெட்டின்
றழிகின்ற தாக்கிய தாளம்
பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த்
தெருவிடைப் போதுவனே. 
 
இல்லாமல் போகும் என்னையும், நிலைக்கும் உன் கார்மயில் தன்னையும் நான் கடந்து கிழியும் ஒன்றை நாடி ஏழு திசைகளை கொண்டேன் ஆகையால் பிறவி கெட்டு அழிகின்றபடி ஆக்கியது. தாளம் பலவாகும் கயிலை உடைய தேன் பொழிகின்ற சாரல் நுகர சீறார் தெருவே போதும் என்பேனே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 3

 à®µà®¿à®£à¯à®£à¯ˆ மடங்க விரிநீர்

பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வருமொரு
காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்க லதளம்
பலவ னருளிலர்போற்
பெண்ணை மடன்மிசை யான்வரப்
பண்ணிற்றொர் பெண்கொடியே. 
 
விண்ணையும் மறைக்கும்படி விரிந்தநீர் பரந்து வெற்றிடம் நிரப்ப மண்ணை மறைக்க வரும் ஒரு காலத்தில் பொறுத்து நிற்கும் அண்ணல் அடங்கா தளம் பலவற்றை அருள் இல்லாதவர் போல், பெண்ணை மடல் மேல் வரச் செய்தாது ஓர் பெண் கொடியே.
#திருவாசகம்

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 2

காய்சின வேலன்ன மின்னியல்
கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு
மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென ஏறுவர்
சீறூர்ப் பனைமடலே.
 
வீரியம்கொண்ட வேல் போன்ற மின்னல் என கண்ணின் வலை கலந்து வீசியபொழுது வலையில் இருந்த மீனை இழந்தனர். வியப்புமிகு தென்புலியூர் ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தவர் பிளவுபடாமல் பிடித்து சினமுடன் பாய்ந்து பனைமடம் ஏறுவர்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 1

 à®ªà¯Šà®°à¯à®³à®¾ வெனைப்புகுந் தாண்டு

புரந்தரன் மாலயன்பால்
இருளா யிருக்கு மொளிநின்ற
சிற்றம் பலமெனலாஞ்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் துடியிடையீர்
அருளா தொழியி னொழியா
தழியுமென் னாருயிரே. 
 
பொருளாய் என்னுள் புகுந்து ஆண்டு புரந்தரன் மால் அயன் இவர்களுக்கு இருளாக இருந்து ஒளியாய் நின்ற சிற்றம்பலம் என ஆனாய். வளைந்த கூந்தலும் வெண்ணை போல் கையும் சிவந்த வாயும் துள்ளும் இடையும் உள்ளவர் இடத்தில் அருள் அற்று ஒழித்தால் ஒழியும் என் ஆருயிரே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 1

 à®ªà¯Šà®°à¯à®³à®¾ வெனைப்புகுந் தாண்டு

புரந்தரன் மாலயன்பால்
இருளா யிருக்கு மொளிநின்ற
சிற்றம் பலமெனலாஞ்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் துடியிடையீர்
அருளா தொழியி னொழியா
தழியுமென் னாருயிரே. 
 
பொருளாய் என்னுள் புகுந்து ஆண்டு புரந்தரன் மால் அயன் இவர்களுக்கு இருளாக இருந்து ஒளியாய் நின்ற சிற்றம்பலம் என ஆனாய். வளைந்த கூந்தலும் வெண்ணை போல் கையும் சிவந்த வாயும் துள்ளும் இடையும் உள்ளவர் இடத்தில் அருள் அற்று ஒழித்தால் ஒழியும் என் ஆருயிரே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | நடுங்கநாட்டம் | பாடல் எண் : 1

 à®†à®µà®¾ விருவ ரறியா

அடிதில்லை யம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின்
றோனையுன் னாரின்முன்னித்
தீவா யுழுவை கிழித்ததந்
தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட
வாறின்றொ ராண்டகையே.
 
ஆர்வம் கொண்ட இருவர் அறியா அடியை தில்லை அம்பலத்தில் மூவாயிரம் பேர் வணங்க நின்றோனை நினையாதவரைவிட முதலாக தீ வாய் உழுவை கிழித்து எப்படியோ பிழைப்பித்தவா மணிவேல் பணிகொண்டு ஆட்கொண்டனையே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | நாணநாட்டம் | பாடல் எண் : 5

 à®•à®¾à®•à®¤à¯ திருகண்ணிற் கொன்றே

மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டனம்
யாமின்றி யாவையுமாம்
ஏகத் தொருவ னிரும்பொழி
லம்பல வன்மலையில்
தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய்
வருமின்பத் துன்பங்களே. 
 
காகத்திற்கு இரு கண்ணிற்கும் ஒன்றே மணி போல் கலந்த இருவர் அகத்துள்ளே ஒன்றே உயிர். இதை கண்டவர் யாம் மட்டும் அல்லாமல் யாவையுமாய் ஏகமாய் ஒருவனே இருக்கும் பொழில். அம்பலவன் மலையில் தோகை விரிந்து ஆடி மகிழ்பவருக்கும் மகிழாதவர்க்கும் ஒன்றாய் வரும் இன்ப துன்பங்களே.
#திருவாசகம்

திருக்கோவையார் | நாணநாட்டம் | பாடல் எண் : 4

 à®ªà®°à¯à®™à¯à®•à®£à¯ கவர்கொலை வேழப்

படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதற்றில்லை யம்பலத்
தோன்தட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய்
விளர்ப்பக்கண் ணாரளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற்
றோமற்றவ் வான்சுனையே.
 
பருத்த கண்கள் யானைப் படை கொண்ட கொலை வெறியுடன் கவர்ந்திட படராமல் ஆற்ற கண்ணுக்கு இல்லை. தில்லை அம்பலத்தோன் அளவு தரும் கருங்கண் சிவந்து கனிவாய் வெளுக்க கண்ணார அளித்தபின் வருங் கண் மலைமலர் சூட்ட வற்றாமல் வரும் வான் சுனையே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | நாணநாட்டம் | பாடல் எண் : 3

செந்நிற மேனிவெண் ணீறணி
வோன்தில்லை யம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையி
லங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையுந்
தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானுங்
குடைவ னிருஞ்சுனையே.
 
சிவந்த நிற மேனியும் வெப்பமான நீரும் அணிபவன் தில்லையில் வெளிப்பட்டதைப் போல் அந்நிற மேனி கொங்கையின் குங்குமமும் மை போன்ற கருங்குழல் மாலையும் சூடியவளாய் மதம் சேர் இந்நிறமும் பெறினுங் குடைவேன் இரண்டு சுனையே
#திருவாசகம்
 

திருக்கோவையார் | நாணநாட்டம் | பாடல் எண் : 2

 à®…க்கின்ற வாமணி சேர்கண்டன்

அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச்
செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
றாளங்க மவ்வவையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங்
காகுமுனக்கவளே. 
 
அஃ என்றவுடன் மணி சேர்கின்றவன். வெளிப்படையானவன். திசை அறிந்தவர் கொழிந்து விட்டு செம்மை நிறமடையும் இடம் உடையவள். அஃ என்றபடியே அமர்ந்து சென்று அங்கே à®” வை ஒத்தபடி ஒசை கேட்க இணங்கமுடன் இருப்பவளே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | நாணநாட்டம் | பாடல் எண் : 1

மைவார் கருங்கண்ணி செங்கரங்
கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன்
பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின்
றோன்சடை மேலதொத்துச்
செவ்வா னடைந்த பசுங்கதிர்
வெள்ளைச் சிறுபிறைக்கே.
 
மையிடும் கருங்கண் உடையவர் செழுமையான கரம் கூப்ப மறந்தும் மற்றப் பொய் வானவரின் உள்ளே புகாமல் தனது பொன் கழற்கே அடியேன் உய்வேன். வெளிச்சம் புக ஒளிரும் தில்லை நின்றவன் சடை மேல் படரும் செவ்வண்ணம் அடைந்த பசுமையான கதிர் வெள்ளை சிறுபிறைக்கே ஆனது.  
#திருவாசகம்
 

திருக்கோவையார் | குறையுறவுணர்தல் | பாடல் எண் : 3

 à®ªà®¿à®´à¯ˆà®•à¯Šà®£à¯ டொருவிக் கெடாதன்பு

செய்யிற் பிறவியென்னும்
முழைகொண் டொருவன்செல் லாமைநின்
றம்பலத் தாடுமுன்னோன்
உழைகொண் டொருங்கிரு நோக்கம்
பயின்றஎம் மொண்ணுதல்மாந்
தழைகொண் டொருவனென் னாமுன்ன
முள்ளந் தழைத்திடுமே. 
 
தவறு அறிந்து அதன்பொருட்டு குறையா அன்பு செய்து இருப்பிடம் கொண்டு அதை விலகாமல் நின்று அம்பலத்து ஆடும் முன்னோன். ஊழ்வினை கொண்டு விரும்பும் நோக்கம் பயின்ற என் எண்ணுதல் மாந்தழைக் கொண்டு ஒருவன் என்ன என வினவ முள்ளும் தழைத்திருமே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | குறையுறவுணர்தல் | பாடல் எண் : 2

 à®…ளியமன் னும்மொன் றுடைத்தண்ண

லெண்ணரன் தில்லையன்னாள்
கிளியைமன் னுங்கடி யச்செல்ல
நிற்பிற் கிளரளகத்
தளியமர்ந் தேறின் வறிதே
யிருப்பிற் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றொன்று
தோன்று மொளிமுகத்தே. 
 
கொடுக்க விரும்பும் ஒன்றை உடைமையாக கொண்ட என் அரன் தில்லை அன்னாள் கிளியை விரும்பி வலிந்து செல்ல நின்று கிளிர்ச்சியை விட்டு அமர்ந்து இருக்க பளிங்கை அடுத்த ஒளி அமர்ந்து அங்கே ஒன்று போன்று ஒன்று தோன்றும் ஒளி முகத்தே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | குறையுறவுணர்தல் | பாடல் எண் : 1

 à®®à®Ÿà¯à®•à¯à®•à¯‹ கடலின் விடுதிமி

லன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக்
கோபரன் தில்லைமுன்றிற்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க்
காயகுற் றேவல்செய்கோ
தொடுக்கோ பணியீ ரணியீர்
மலர்நும் சுரிகுழற்கே.
 
ஆழ்கடல் விட்டு திமிங்கலமோ திரைகடல்விட்டு மீனோ இடம் மாறாது. படுக்க பல நிலமோ, கோபரன் தில்லை முன்றை விட்டுக் கொடுப்பேனோ, நுட்பமானவர்களுக்கு குற்றேவல் செய்வேனோ, தொடுக்க மலர் வளைந்த குழலுக்கே குளிர்ந்த இரு அணி உடையோரே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | முன்னுறவுணர்தல் | பாடல் எண் : 1

 à®¨à®¿à®°à¯à®¤à¯à®¤à®®à¯ பயின்றவன் சிற்றம்

பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலுங் கயிலை
மலையி னுயர்குடுமித்
திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந்
தாடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி
மெல்லியல் வாடியதே. 
 
சிற்றம்பலத்தில் நெற்றித் தனிந்து கண் நிருத்த பயின்றவன். கயிலை மலையில் உயர பயிலும் ஒருவன் குடுமித் திருத்தி சுனை குடைந்து ஆடி சிலம்பு எதிர்கொள்ள வருத்தம் பயின்று கொல்லவோ வல்லி மெல்லியல் வாடியதே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | இருவருமுள்வழி அவன்வரவுணர்தல் | பாடல் எண் : 2

 à®†à®´à®®à®©à¯ னோவுடைத் திவ்வையர்

வார்த்தை யனங்கன்நைந்து
வீழமுன் னோக்கிய வம்பலத்
தான்வெற்பி னிப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற
வாய்ப்பின்னும் மென்றழையாய்
மாழைமென் னோக்கி யிடையாய்க்
கழிந்தது வந்துவந்தே.
 
ஆழமான மனநிலையுடைய தீர்க்கமானவர் வார்த்தையால் அனங்கன் நைந்து வீழ முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பில் புனத்தே யானைமுன்னே கலையாய் மற்றும் பிறவாய் பின்னும் மெல்லிய இழையாய் அணிகலன் மென்னோக்கி இடையாய் கழிந்தது வந்தே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | இருவருமுள்வழி அவன்வரவுணர்தல் | பாடல் எண் : 1

 à®ªà®²à¯à®²à®¿à®² னாகப் பகலைவென்

றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம்
வினாவிவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில்
வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட
வானிச் சுனைப்புனமே.
 
பல என இல்லை என்பதை பகல் போல் உணர்ந்து வென்றவன். தில்லை பாடுபவர் போல் எப்படியும் இல்லாதவன். நாகத்துடன் கேள்வியாக இருப்பவன் யாரோ அவனுக்கு துன்பம் தராதவன். நாகத்தை அறிந்து வேட்டையாடி கொண்டாடும் மெய்யோர் சொல் அற்று கற்றதை கடந்த வானின் ஊற்றாமே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 10

 à®•à®²à¯ˆà®•à¯à®•à¯€ ழகலல்குற் பாரம

தாரங்கண் ணார்ந்திலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற்
றாதன் றிலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம்
பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர்
எதுநுங்கள் சிற்றிடையே. 
 
கலை நயம் மிகுந்தவற்றுள் கீழ் இருக்கும் அல்குல் பாரம் கண்ணால் காண இலங்கும் முலைக்கீழ்  மெலிந்து நின்று தன் முற்றாத இலங்கையர் கோன் மலைக்கீழ் விழ. அடைந்த சிற்றப்பலவர் வலிமையான பூங்கயிலை சிலைக்கீழ் கணை நிகர்த்த கண்ணீர் என்பதே நுகர்த்த சிற்றிடையே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 9

 à®µà®¿à®©à¯à®©à®¿à®± வாணுதல் வேனிறக்

கண்மெல் லியலைமல்லல்
தன்னிற மொன்றி லிருத்திநின்
றோன்றன தம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில்
வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற வல்குலுக் காமோ
மணிநிறப் பூந்தழையே.
 
வில் நிற வாள் நுதல் வேல் என கண் மென்மையான இயல்பை அல்லாமல் தன் நிறமாக ஒன்றி இருத்தி நின்றன. அம்பலம் போல் மின்னிற நுட்ப இடை பேரெழில் வெள்ள சிரிப்புடன் வளையல் அணிந்த பொன் நிற அல்குலுக்கு ஆகுமோ மணி நிற பூந்தழையே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 8

 à®‡à®°à®¤ முடைய நடமாட்

டுடையவ ரெம்முடையர் 
வரத முடைய வணிதில்லை
யன்னவ ரிப்புனத்தார்
விரத முடையர் விருந்தொடு
பேச்சின்மை மீட்டதன்றேற்
சரத முடையர் மணிவாய்
திறக்கிற் சலக்கென்பவே.
 
இரதத்தை உரிமையாக கொண்டு நடனமாடுபவர் எம் உரிமையானவர். நித்தயத் தன்மை உள்ள அணி தில்லை அடைந்தவர். விரதம் இருப்பவர் விருந்துடன் பேசா தன்மையை மீட்டு அன்றே சாதகமான சூழலை உடையவர் மணிவாய் திறக்கிற் சலக் என்பவே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 7

 à®¤à®¾à®°à¯†à®©à¯à®© வோங்குஞ் சடைமுடி

மேற்றனித் திங்கள்வைத்த
காரென்ன வாருங் கறைமிடற்
றம்பல வன்கயிலை
யூரென்ன வென்னவும் வாய்திற
வீரொழி வீர்பழியேற்
பேரென்ன வோவுரை யீர்விரை
யீர்ங்குழற் பேதையரே.
 
தார் போன்ற அழகிய சிறு முடி மேல் இனிய திங்களை வைத்து வழிந்து வரும் கறை இடம் அம்பலம் ஆனவன். கயிலை ஊர் என்ற எண்ணவும் வாய் திறவாதீர் ஒழிவீர் பழி ஏற்பீர் என்றிட என்னவோ உரைப்பீர் குழற் பேதையரே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 6

 à®’ருங்கட மூவெயி லொற்றைக்

கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க்
கரியுரித் தோன்கயிலை
இருங்கடம் மூடும் பொழிலெழிற்
கொம்பரன் னீர்களின்னே
வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி
யோவிங்கு வாழ்பவர்க்கே. 
 
மூன்று எழிலானவற்றை ஒருங்கே கொண்ட ஒற்றை அம்பை கொண்ட சிற்றம்பலவன். கருமையான கடம் மூன்று கொண்ட நான்கு வாசல் கதவுகளை திறந்தவன் கயிலையில் இரு கடம் மூடும் பொழில்எழில் அம்பரன் என்று புகழ்பவர்களே வரும் கடத்திற்காக மூன்றையும் பகிர்ந்தால் பழியோ இங்கு வாழ்பவர்க்கே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 5

 à®šà®¿à®²à®®à¯à®ªà®£à®¿ கொண்டசெஞ் சீறடி

பங்கன்றன் சீரடியார்
குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்
தோன்கொண்டு தானணியுங்
கலம்பணி கொண்டிடம் அம்பலங்
கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும் சீறூர்க்
குரைமின்கள் சென்னெறியே. 
 
சிலம்பை அணியாக கொண்ட சிவந்த சீரான அடி தோழமையாளன் இணையடியார் கூட்டம் பணிந்திட என்னை கொடுத்தேன். என்னைக் கொண்டு தாள் அணியும் கலம்பணி கொண்டிடும் அம்பலங் கொண்டவன் கார்க்கயிலை சிலம்பணி கொண்டே உங்களின் சிறப்படைய தடுக்கும் குரைகளை சென்னி அறியவே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 4

 à®•à®°à¯à®™à¯à®•à®£à¯ ணனையறி யாமைநின்

றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கண் ணனையவண் டாடும்
வளரிள வல்லியன்னீர்
இருங்கண் ணனைய கணைபொரு
புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் ணனையதுண் டோவந்த
தீங்கொரு வான்கலையே.
 
கருமையான கண்ணை அறியாமல் நின்ற அவன் தில்லை கார்பொழில் இடத்தில் வரும் கண்ணை வண்டு நாடும் வளர்ச்சியின் திடத்தை அடைந்தவர் இருக்கண்ணை அனைய வெப்பம் கூடும் புண் புணரிப்புனத்தின் மாற்றம் தரும் கண்ணை அனைய தூண்ட வந்த தீங்கு ஒழிக்கும் வான்கலையே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 3

 à®‡à®°à¯à®™à¯à®•à®³à®¿ யாயின் றியானிறு

மாப்பஇன் பம்பணிவோர்
மருங்களி யாஅன லாடவல்
லோன்றில்லை யான்மலையீங்
கொருங்களி யார்ப்ப வுமிழ்மும்
மதத்திரு கோட்டொருநீள்
கருங்களி யார்மத யானையுண்
டோவரக் கண்டதுவே.
 
களித்திருக்க மாட்டாமல் இறுமாப்பாய் இருக்க பணிவோர்க்கு இன்பம் அருகாமையாக களிய அனலாட வல்லவருக்கு இன்றி மற்றவருக்கு இல்லை. நான் மலைக்கும் வண்ணம் களிக்கவும் அதிலிருந்து மீளவும் மதத்தின் இரு கோட்டை நீள் கருங்களியார் மதயானை உண்டோ வரக் கண்டதுவே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 2

 à®•à¯à®µà®³à¯ˆà®•à¯ கருங்கட் கொடியே

ரிடையிக் கொடிகடைக்கண்
உவளைத் தனதுயி ரென்றது
தன்னோ டுவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம்
பலத்தா னருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின்
னேயினிச் சொல்லுவனே.
 
குவளை மலர் போன்ற கருங்கண் கொடியே ஏர் இடை கொடி கண்ணை தாங்கும் எனது உயிர் என்றது தனக்கு உவமை இல்லா மாற்றத்தின் பொருட்டு சிற்றம்பலத்தான் அருள் இல்லாதவர் போல் துவளத் முதன்மையாக வந்த துன்பத்தை இனி சொல்லுவேனே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 1

 à®Žà®³à®¿à®¤à®©à¯ றினிக்கனி வாய்வல்லி

புல்ல லெழின்மதிக்கீற்
றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப்
பிரானையுன் னாரினென்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த
செல்லலெல் லாந்தெளிவித்
தளிசென்ற பூங்குழற் றோழிக்கு
வாழி யறிவிப்பனே.
 
எளிமையானது இது இல்லை என்ற கனி வாய் வலிமையுடன் சொல்ல எழிலான மதியின் கீற்று சென்ற செழுமையான சடைக் கொண்ட கூத்தபிரானை உள்ளே எரிச்சலுடன் கண் தெளிவாக வேல் போல் வெற்றியை வருவித்த வார்த்தைக்கு அப்பாற்பட்டு தெளிவித்த குளிரச் செய்த பூங்குழல் தோழிக்கு வாழி அறிவிப்பேனே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | இடந்தலைப்பாடு | பாடல் எண் : 1

 à®Žà®©à¯à®©à®±à®¿ வால்வந்த தன்றிது

முன்னும்இன் னும்முயன்றால்
மன்னெறி தந்த திருந்தன்று
தெய்வம் வருந்தல்நெஞ்சே
மின்னெறி செஞ்சடைக் கூத்தப்
பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று
மின்றோய் பொழிலிடத்தே. 
 
என் அறிவால் வந்தது இல்லை இது. முன்னாலோ இல்லை இனிமேலோ முயன்றால் இப்படி நிகழாது. தெய்வத்திற்கு வருந்ததே நெஞ்சே, மின்னலை கூந்தலாய் கொண்ட ஆட்ட நாயகன் வியப்பிற்கு உரிய தில்லையில் முந்நீர் பொன்னெறிவார் துறை இடத்தே சென்று நின்றாய் பொழிலிடத்தே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 30

 à®ªà¯Šà®¯à¯à®¯à¯à®Ÿà¯ˆ யார்க்கரன் போலக

லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம்
போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப்
பூண்முலை வாணுதல்வான்
பையுடை வாளர வத்தல்குல்
காக்கும்பைம் பூம்புனமே.
 
பொய்யை உடைமையாக கொண்டவர் கரம் போல் இணையாமல் அகலும். அகற்றவரும் புணரின் மெய்யுடையார்க்கு அவன் அம்பலம். அது போல் மிக அணுகும் மை கொண்ட வாள் போன்ற கண்மணி உடன் அணியப்பட்ட முலை பெருத்து படம் எடுக்கும் பாம்பை ஒத்த அல்குல் காக்கும் பழகும் மலர் வனமே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 29

 à®šà¯‚ளா மணியும்பர்க் காயவன்

சூழ்பொழிற் றில்லையன்னாய்க்
காளா யொழிந்ததென் னாருயிர்
ஆரமிழ் தேயணங்கே
தோளா மணியே பிணையே
பலசொல்லி யென்னை துன்னும்
நாளார் மலர்ப்பொழில் வாயெழி
லாயம் நணுகுகவே. 
 
நிலையற்ற மணியும் தேவர்களின் ஆயவன் சூழும் பொழில் தில்லை ஒப்பான அறியமுடியாது ஒழிந்த என் ஆருயிர் ஆர அமிழ்தே அணங்கே தோய்வற்ற மணியே எனக்கு நிகரே என பல சொல்லி என்னை அடக்கும் நன்மை பயக்கும் மலர் பொழில் பிதற்றலை ஒழித்த இலாயம் அண்டுவேனே
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 28

 à®¨à¯€à®™à¯à®•à®°à¯à®®à¯ பொற்கழற் சிற்றம்

பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமு
மெய்தினும் யான்மறவேன்
தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந்
தேனும் பொதிந்துசெப்புங்
கோங்கரும் புந்தொலைத் தென்னையு
மாட்கொண்ட கொங்கைகளே.
 
பற்றில் இருந்து நீங்கயவரும் பொற்கழல் சிற்றம்பலத்தை அடைந்தவரும் நெகிழ்ந்து அழும் நீரை வாங்கும் தெண்கடல் வையமும் அடைந்தாலும் நான் மறவேன் இனிப்புடன் இருக்கும் அமிழ்தும் செழுமையான தேனும் உள்ளடக்கிய சொல்லத்தகுந்த கோங்கரும் புதைந்த தொலைந்த என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 27

 à®•à¯‹à®²à®¤à¯ தனிக்கொம்ப ரும்பர்புக்

கஃதே குறைப்பவர்தஞ்
சீலத் தனகொங்கை தேற்றகி
லேஞ்சிவன் தில்லையன்னாள்
நுலொத்த நேரிடை நொய்ம்மையெண்
ணாதுநுண் தேன்நசையாற்
சாலத் தகாதுகண் டீர்வண்டு
காள்கொண்டை சார்வதுவே.
 
அளக்கும் தனிக் கொம்பர் தேவர்களுக்கும் குறையாக இருப்பவர் தனது பெருமைக்கு உரிய தனங்களை தேற்ற முடியாமல் சிவன் தில்லையில் இருப்பவள் நுலொத்த நெரிடையாள் சிறப்பை எண்ணாமல் தேனை நுட்பமாக எடுக்க தகாமல் வண்டுகள் கூந்தல்கொண்டையை சார்கின்றதுவே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 26

 à®•à¯à®°à¯à®¨à®¾à®£à¯ மலர்ப்பொழில் சூழ்தில்லைக்

கூத்தனை யேத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ
மற்றென் கண்மணிபோன்
றொருநாள் பிரியா துயிரிற்
பழகி யுடன்வளர்ந்த
அருநா ணளிய வழல்சேர்
மெழுகொத் தழிகின்றதே.
 
குரு என்ற கடிவாளம் மலர் நிறைந்த பொய்கை சூழ்ந்த தில்லைக் கூத்தனை வாழ்த்தி வணங்குபவர் போல் தொடரும் நாட்களை பிறக்காமல் இருக்க செய்பவரோ. மற்றும் என் கண்மணிபோல் ஒருநாள் பிரிவதற்கு பழகி வளர்த்த அருள் நாண் அனல் இணையும் மெழுகைப்போல் அழிகின்றதே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 25

 à®¤à®¾à®´à®šà¯à®šà¯†à®¯à¯ தார்முடி தன்னடிக்

கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தானம் பலங்கை
தொழாரினுள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண்
புதைத்துப்பொன் னேயென்னைநீ
வாழச்செய் தாய்சுற்று முற்றும்
புதைநின்னை வாணுதலே.
 
தனது அடியின் கீழ் பணிந்து தாழச்செய்தவரை வனோர்கள் சூழச்செய்தானம். பலவற்றை தொழாதவர் உள்ளம் தெளிவு பெறாதபடி வேல்கண்ணை மறைத்து பொன்னே நீ என்னை வாழவைத்தாய் உறவுகள் முழுவதும் மறைய நின்னை வானம் அளவு உயர்த்தி உணர்த்தினாய்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 24

 à®…கலிடந் தாவிய வானோ

னறிந்திறைஞ் சம்பலத்தின்
இகலிடந் தாவிடை யீசற்றொ
ழாரினின் னற்கிடமாய்
உகலிடந் தான்சென் றெனதுயிர்
நையா வகையொ துங்கப்
புகலிடந் தாபொழில் வாயெழில்
வாய்தரு பூங்கொடியே. 
 
விலகிட ஏற்ற வானமோ என அறிந்து இறைஞ்சும் அம்பலத்தின் துன்பத்தின் இடையே விடையாக நிற்கும் ஈசா உன்னை தொழாதார் இன்னலுக்கு இடமாய் சென்றே எனது உயிர் நொந்திடாதபடி வகை ஒதுக்கிட புகலிடம்தான் ஈரம் நிறைந்த எழிலான வாசலாகும் பூங்கொடியே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 23

 à®•à®¾à®µà®¿à®¨à®¿à®©à¯ றேர்தரு கண்டர்வண்

தில்லைக்கண் ணார்கமலத்
தேவியென் றேயையஞ் சென்றதன்
றேயறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின்
வாய்திற வாவிடினென்
ஆவியன் றேயமிழ் தேயணங்
கேயின் றழிகின்றதே. 
 
காவியுடன் நின்று சிறப்புற கண்டவர் திடமான தில்லை கண் உடையவர். தாமரையில் தேவி என்றே இறையை அறிந்து தன்னையறியாது சிறியதாக வியந்தவன் மேல் நோக்கி நின் வாய் திறவாவிடின் என் ஆவி என்றே தமிழ் அணங்கே இன்று அழிகின்றதே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 22

 à®¤à®¾à®¤à®¿à®µà®°à¯ போதுகொய் யார்தைய

லாரங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந் தடியார்
சுனைப்புன லாடல்செய்யார்
போதிவர் கற்பக நாடுபுல்
லென்னத்தம் பொன்னடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத்
தான்மலை யெய்துதற்கே. 
 
பாதுகாப்பவர், மலராததை கொய்யாதவர், நடனமங்கை வணங்க நின்று சோதி வரிசைப்படுத்தி பணிபவர், ஊற்றுநிரில் குளிக்காதவர், உரைப்பவர், கற்பகநாடு முதல் என நித்தம் பொன்னடிப் போய் வாழ்பவர், அம்பலத்தான் மலை ஏய்துதற்கே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 21

 à®¨à¯‡à®¯à®¤à¯à®¤ தாய்நென்ன லென்னைப்

புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
ஆயத்த தாயமிழ் தாயணங்
காயர னம்பலம்போல்
தேயத்த தாயென்றன் சிந்தைய
தாய்த்தெரி யிற்பெரிது
மாயத்த தாகி யிதோவந்து
நின்றதென் மன்னுயிரே.
 
நேசமுடன் நினைத்த என்னை புணர்ந்து நெஞ்சம் நெகழச்செய்து செயல்பட துணிவுடையதாய் அமிழ்தாய் அணங்காய் அரன் அம்பலமானது போல் மறையக்கூடியதாய் எந்தன் சிந்தையில் தெரிவித்த பெரியதுமாய் வந்து நின்ற என் மன்னுயிரே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 20

 à®•à®¾à®®à¯à®ªà®¿à®£à¯ˆ யாற்களி மாமயி

லாற்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி யொல்குத
லால்மன்னு மம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன்
கயிலைப் பயில்புனமுந்
தேம்பிணை வார்குழ லாளெனத்
தோன்றுமென் சிந்தனைக்கே.
 
காக்கும் காம்பிற்கு இணையானவன் மகிழ்வுடன் களிக்கும் மயில் போன்றவன் ஒளிவீசும் மணியால்  அளவுக்கு இணையால் படர்ந்து வளருவதால் நிலைக்கும் பலவாக இருப்பவன் பாம்பை தனக்கு அணியாக கொண்டவன் கயிலையில் பயிலும் ஈரமும் வார்குழலாள் என தோன்றும் என் சிந்தனைக்கே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 19

 à®†à®µà®¿à®¯à®©à¯ னாய்கவ லேல்அக

லேமென் றளித்தொளித்த
ஆவியன் னார்மிக்க வாவின
ராய்க்கெழு மற்கழிவுற்
றாவியன் னார்மன்னி யாடிடஞ்
சேர்வர்கொ லம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி
லாயத் தருவரையே. 
 
உயிரானவனே கவராமலும் விலகாமலும் அளித்து ஒளித்த, உயிரானவன் மிகுதியாக கழிவு இல்லாமல் ஆகிட, விரும்பி சேர்வார் உயிரானவன் பயிலும் கயிலாயத்து கருவரையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 18

 à®Žà®¯à®¿à®±à¯à®•à¯à®² மூன்றிருந் தீயெய்த

வெய்தவன் தில்லையொத்துக்
குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி
வாய்க்குளிர் முத்தநிரைத்
தயிற்குல வேல்கம லத்திற்
கிடத்தி அனநடக்கும்
மயிற்குலங் கண்டதுண் டேலது
வென்னுடை மன்னுயிரே.
 
அழகிய குலம் மூன்றில் தீ எய்த அதை எய்தவன் தில்லையை நாடி குயிற்குலம் கொண்டு தொண்டைக்கு கனிவாய் குளிர்வித்து நிரப்ப அயல் குல வேல் கமலத்தில் கிடத்தி அனலாய் நடக்கும் மயில் குலம் கண்டல் அதுவே என்னுடைய மன்னுயிர்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 17

 à®•à®¯à®²à¯à®³ வேகம லத்தலர்

மீது கனிபவளத்
தயலுள வேமுத்த மொத்த
நிரையரன் அம்பலத்தின்
இயலுள வேயிணைச் செப்புவெற்
பாநின தீர்ங்கொடிமேற்
புயலுள வேமலர் சூழ்ந்திருள்
தூங்கிப் புரள்வனவே.
 
மீன் அமர்ந்த தாமரை போன்றவர் மீது பவளக்கனி போல் மொத்தம் முத்த நிரப்பும் அரன் அம்பலத்தின் இயன்ற அளவே இணையாக சொல்லும் போதமற்ற தீர்க்கமான கொடிமேல் பூக்கும் அளவே மலர் சூழ்ந்து இருள் தூங்கி ஈடுபடுமே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 16

 à®ªà®£à®¨à¯à®¤à®¾ ழரவரைச் சிற்றம்

பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங் ககன்ற பொருகரி
யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண்
பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேலகண்
டேனொன்று நின்றதுவே.
 
மேலான இடத்தில் தங்கும் பாம்பை சிற்றம்பலத்தில் இருப்பவர் பொன் போன்ற கயிலையில் கூடி பிரிந்த விளக்கமாய் நின்ற நீரான நெருப்பே வாசம் விசம் எழிலான குளமான கண் வடித்தல் பரப்பி இறுக்கமாய் பிடித்து குளிர்ந்த சுடராய் வேல் போல் கண் இன்று நின்றதுவே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 15

 à®µà®³à¯ˆà®•à¯ களத்தம் பலவன்

குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்
றாண்ட அவயவத்தின்
இவளைக்கண் டிங்குநின் றங்குவந்
தத்துணை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி
யானிக் கடலிடத்தே.
 
குவிந்த களமாய் இருக்கும் அம்பலத்தவன் சிறு மலர் போல் கமலமான அவளை முழுமையாய் நின்று ஆண்ட அவயத்தில் இவளைக் கண்டு இங்கு நின்று அங்கும் வந்து அத்தனையும் பகர்ந்த யானை பசி தீர்ந்தது போன்ற அண்ணலே கடலாகிய உம்மிடத்தே உண்று களித்தேன்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 14

 à®µà®Ÿà®¿à®•à¯à®• ணிவைவஞ்சி யஞ்சும்

இடையிது வாய்பவளந்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி
சேயான் றொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமல ரண்ணல்விண்
ணோர்வணங் கம்பலம்போற்
படிச்சந் தமுமிது வேயிவ
ளேஅப் பணிமொழியே.
 
வடிவு உடைய அணியை வஞ்சி அஞ்சும் இடையிது வாய் பவளம் துடிக்கின்ற வாய் வெப்பத்தில் சொற்கள் பரிசு என பிள்ளையாய் தொடர, தொடரவிடாத அடியாய் மாமலராய் நின்ற அண்ணல் விண்ணோர் வணங்கும் அம்பலம் போகவேண்டிய படியான சந்தம் இதுவே. இவளே அப்பணிமொழியே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 13

 à®•à¯Šà®Ÿà¯à®™à¯à®•à®¾à®²à¯ குலவரை யேழேழ்

பொழிலெழில் குன்றுமன்று
நடுங்கா தவனை நடுங்க
நுடங்கு நடுவுடைய
விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ
லாந்தில்லை யீசன்வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில்
நீழலந் தண்புனத்தே.
 
அருள் கொடுக்க காலை குலத்தின் இறுதிவரை கொடுத்ததுவே எழும் ஏழு ஆதார ஊற்றை கடந்து எழிலான குன்றில் அமர்ந்து நடுங்காதவனை நடுங்க மடக்கிய நடுவுடைய விடம் கண்ட அயற்கண்ணி மேவும் தில்லை ஈசன் வெப்பத்தை தங்காதவர் அமைதி பெற வான்பொழில் மற்றும் நிழல் குளிர்ச்சியுடன் அருளினானே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 12

 à®•à¯à®¯à®¿à®²à¯ˆà®šà¯ சிலம்படிக் கொம்பினைத்

தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங்
காக்குங் கருங்கட்செவ்வாய்
மயிலைச் சிலம்பகண்டி யான்போய்
வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை
நண்ணும் பளிக்கறையே.
 
குயிலை சிலம்பு ஒலி தாங்கும் கொம்பை தில்லையை எங்கள் நடனநாயகன் கயிலை சிலம்பில் வடியும் ஈரம் காக்கும் கருத்த கண்ணும் சிவந்த வாயும் கொண்ட மயிலை சிலம்பை கண்டு நான் போய் வருவேன். திடமான பூங்கொடிகள் பயிலும் சிலம்பு எதிராக வளர்த்த பண்ணை உறங்க வைக்கும் அழுக்கே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 11

 à®µà®¿à®´à®¿à®¯à®¾à®±à¯ பிணையாம் விளங்கிய

லான்மயி லாம்மிழற்று
மொழியாற் கிளியாம் முதுவா
னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழற்றில்லைக் கூத்தன்
கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்கெழி
லாமெங் குலதெய்வமே. 
 
கண்ணழகியற்கு அடிமையாம் உண்மையான இயல்புடையவனாம் மயில் போல் கழுத்து கிளி போன்ற பேச்சாம் முதிர்ந்த வானவர் முடித்தொகை விலகாமல் இருக்கும் கழல் தில்லை கூத்தன் கயிலை நின்று முத்தம் மலைத்தேனாய் பொழியாத் திகழும் எழில் சிறந்த எங்கள் குல தெய்வமே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 10

 à®¨à®¿à®©à¯à®©à¯à®Ÿà¯ˆ நீர்மையும் நீயு

மிவ்வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி தென்னென்ப
தேதில்லை யேர்கொண்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல
ரோவிசும் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின்
னேசெய்த ஈர்ங்கொடிக்கே.
 
உன்னுடைய நெகிழுவும் நியும் எவ்வாறு நினைத்தீரோ அதன் பொருட்டு என்னுடைய நெகிழ்வில் எனது என்பதே இல்லை, தில்லை வாழ் முக்கண்ணார் அளவையோ, மலரோ, விசும்போ சிலம்பா என்னிடம் ஆதியால் உன்னை இப்படி செய்த ஈரம் நிறை கொடிக்கு உருகுவாயாக.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 9

 à®†à®²à®¤à¯à®¤à®¿ னாலமிர் தாக்கிய

கோன்தில்லை யம்பலம்போற்
கோலத்தி னாள் பொருட் டாக
வமிர்தங் குணங்கெடினுங்
காலத்தி னான்மழை மாறினும்
மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா
தொழிவதென் தீவினையே. 
 
சுற்றுவதால் அமிர்தம் ஆக்கிய அரச தில்லை அம்பலம் போல் கோலம் உடையவள் முன்னிறுத்தி அமிர்தம் தன் குணத்தை இழந்தாலும், மழை தன் இயல்பை மாற்றினாலும் மாறாத சீராக்கும் உன் கை என்ற பொற்சீலத்தை நீயும் நினைக்காமல் இருப்பது என் தீவினையே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 8

 à®¨à®²à¯à®µà®¿à®©à¯ˆ யும்நயந் தந்தின்று

வந்து நடுங்குமின்மேற்
கொல்வினை வல்லன கோங்கரும்
பாமென்று பாங்கன்சொல்ல வில்வினை மேருவில் வைத்தவன்
தில்லை தொழாரின்வெள்கித்
தொல்வினை யாற்றுய ரும்மென
தாருயிர் துப்புறவே. 
 
நல்ல செயல்களும் தானாகவே வந்து நடுங்குப்படி கொல்வினை வலுத்தன, காப்பவரும் பாராம் என்று பாங்கன் சொல்ல அழிக்கும் செயல்களை மேருவில் வைத்தவன் தில்லை தொழுபவர் கூட்டத்தில் இணைந்து பழைய வினைகள் அழிந்து உயரும் என் ஆருயீர் அழுக்கு அழியவே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 7

 à®¤à®²à¯ˆà®ªà¯à®ªà®Ÿà¯ சால்பினுக் குந்தள

ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வாரில்லை யாரையுந்
தேற்றுவ னெத்துணையுங்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற்
றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யாலழி
வுற்று மயங்கினனே.
 
ஈடுபடும் ஒருவருக்கு இணங்கும் என் சித்தம் பித்தம் என்று அதிசயக்க யாரும் இல்லை. யாரையும் தேற்றுபவன் அனைத்தையும் துணையாக்கும் வளரும் திங்கள் இளைத்த சிற்றம்பலத்தான் வலுத்த கயிலை மலை சிறியமான்விழி அழிவுற்று மயங்கினேன்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 6

 à®µà®¿à®²à®™à¯à®•à®²à¯ˆà®•à¯ கால்விண்டு மேன்மே

லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுங்கலங்
காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத்
தானரு ளில்லவர்போல்
துலங்கலைச் சென்றிதென் னோவள்ள
லுள்ளந் துயர்கின்றதே.
 
சிற்றின்பத்தை நாடி கால்கள் மேன்மேல் தொடர, விண்ணும் மண்ணும் நீரால் கலங்குவதை கண்டும் கலங்காது, வாசம் வீசும் கொன்றை நிறைந்து அசையும் இடம் சூழ்ந்த சிற்றம்பலத்தில் அருள் இல்லாதவர் போல் புரியும் திறன் அற்று உள்ளம் துயர் அடைகின்றதே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 5

 à®šà¯‡à®£à®¿à®±à¯ பொலிசெம்பொன் மாளிகைத்

தில்லைச்சிற் றம்பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான்
கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை
யோவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை
மென்றோட் கரும்பினையே.
 
உயர்த்தும் பொலியக்கூடிய செம்பொன் மாளிகை சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன் வடப்பக்க மலையன் மயில் வாழும் கயிலையில் இருப்பவன் கூடினான் பொலியும் கொங்கையுடன் ஓவியப் பொற்கொழுந்தை கண்டால் நெகிழ்ந்து காட்சி மறந்து கரும்பேன ஆகுமே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 4

 à®‰à®³à®®à®¾à®®à¯ வகைநம்மை யுய்யவந்

தாண்டுசென் றும்பருய்யக்
களமாம் விடமமிர் தாக்கிய
தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து
நின்றொர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம்
மண்ண லிரங்கியதே. 
 
உள்ளத்தின் வகைக்கு ஏற்றபடி நம்மை உயர்த்திட வந்து ஆண்டு, தவறினாலும் மீண்டும் உயர களம் அமைத்த தில்லை தொல்லோன் கயிலை வளமாம். இதை பொது என வஞ்சித்து நின்றவர் வஞ்சிக்கப்படும் அல்குல் இளம் மான் விழித்தது போல் இன்றே எம்மால் இரங்கியதே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 3

 à®•à¯‹à®®à¯à®ªà®¿à®•à¯ கொதுங்கிமே யாமஞ்ஞை

குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
தாங்கப் பணைமுலைக்கே
தேம்பற் றுடியிடை மான்மட
நோக்கிதில் லைச்சிவன்றாள்
ஆம்பொற் றடமலர் சூடுமென்
னாற்ற லகற்றியதே.
 
மேல் எடுத்து நிமிர்த்தி சதை பருக்கும் பாம்பைப் பிடித்து அதன் படம் கிழித்து தன்னை தாங்க பணைமுலையுடன் பற்று கொள்ளும் இடை கொண்ட மருளும் பார்வை கொண்ட மான் போன்றவளை நோக்கி தில்லை சிவந்தவளாம் பொன் தாமரை சூடும் அவளை ஆற்ற அகற்றியதே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 2

 à®šà®¿à®±à¯ˆà®µà®¾à®©à¯ புனற்றில்லைச் சிற்றம்

பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலின்
ஆய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி
யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ
லாம்புகுந் தெய்தியதே.
 
சிறைபட்டும் வான் என விரிந்தும் ஈரமுடன் ஆடும் சிறிய அம்பலத்தில் என் உள்ளத்தில் இருப்பவன். உயர் ஞானக் கூடலில் ஆய்ந்திட்ட தமிழின் துறையின் வாசலாக நூழைந்தவனை அல்லாமல் ஏழு இசைக்கு மயங்கிடாமல் இறைவா விளம்பரத்திற்கு இருப்பவரை தேறச் செய்து எனக்குள் புகுந்து ஆட்கொண்டதே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 1

 à®ªà¯‚ங்கனை யார்புனற் றென்புலி

யூர்புரிந் தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டு கொண் டாடும்
பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக்
கண்டிப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
பாவையை யெய்துதற்கே.
 
பூப்போன்ற கனை வைத்திருப்பவர் ஈரம் நிறைந்த புலியூர் அம்பலத்தில் ஆண்டு கொண்டாடும் தலைவன் அடி தாமரைக்கே நண்பன் போல் உறவாடும் பண்புடையவன் என்னை கண்டு பரிசு தந்தால் இங்கே யார் தடுப்பார் இளம்பெண்ணின் இன்பம் அடைவதற்கே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 18

 à®‰à®¯à®¿à®°à¯Šà®©à¯ றுளமுமொன் றொன்றே

சிறப்பிவட் கென்னொடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற
நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிரொன்று முப்புரஞ் செற்றவன்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்த னருளென
லாகும் பணிமொழிக்கே. 
 
உயிர் ஒன்று உள்ளம் ஒன்று என்றே சிற்ப்பித்து ஆட்கொள்ள என்னை கற்கின்ற செவி சென்று நீண்ட கண்கள் விண்டிடுவாய் என்று முப்புரம் சென்றவன் தில்லை சிற்றம்பலத்து நிலைக்கின்ற கூத்தன் அருள் என ஆகும் தொழில்படும் வார்த்தைக்கே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 17

 à®ªà¯à®£à®°à¯à®ªà¯à®ªà¯‹à®©à¯ நிலனும் விசும்பும்

பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல்
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ தணிகுழ லேழைதன்
னீர்மையிந் நீர்மையென்றாற்
புணர்ப்போ கனவோ பிறிதோ
அறியேன் புகுந்ததுவே. 
 
கூட்டிடுவான் நிலத்தையும் நீரையும் மலையையும் தன் பூங்கழலின் உணர்ந்திட பழைமையுடன் முன்னே கணித்தான், நீர்நிலை நிறைந்த தில்லை யில் நீர் நிலையுடன் இணைந்த குழலை இணைத்தான் இது கனவோ வேறு ஒன்றோ அறியமுடியவில்லை புகுந்ததுவே.  
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 16

 à®¤à¯†à®³à®¿à®µà®³à®°à¯ வான்சிலை செங்கனி

வெண்முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன் னாய்முன்னி
யாடுபின் யானளவா
ஒளிவளர் தில்லை யொருவன்
கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரற் கரந்துங்ங
னேவந்து தோன்றுவனே.
 
தெளிவு வளர்க்கும் வான், சிலையான செங்கனி, வெண்மையான திங்களின் குளிர்ச்சி போலும் வாய்ப்பேசும் வல்லவன், முன்னே ஆடி பின்னும் ஆள்பவன், ஒளிவளர் தில்லை ஒருவன், கயிலை உகுந்த பெருந்தேன் என துளிர் வளர்வதை சார்ந்தவரிடத்தில் வந்து தோன்றுவனே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 15

 à®µà®°à¯à®™à¯à®•à¯à®©à¯à®± மொன்றுரித் தோன்றில்லை

யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி
யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள
பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக
மேய்க்குங் கனங்குழையே.
 
வரும் குன்றத்தை உரிமை ஆக்கிய தில்லை அம்பலத்தான் மலைக்கும்படி திருக்குன்றவாண இளங்கொடி இடர் ஏய்த எம் முன் பரங்குன்ற மாளிகையில் நுட்பமாய் பத்தொளி பாய நம்மூர் கருக்குன்றம் வெண்மை இழக்க சுகம் அளிக்கும் கனங்குழையே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 14

 à®¤à¯‡à®µà®°à®¿à®±à¯ பெற்றநஞ் செல்வக்

கடிவடி வார்திருவே
யாவரிற் பெற்றினி யார்சிதைப்
பாரிமை யாதமுக்கண்
மூவரிற் பெற்றவர் சிற்றம்
பலமணி மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென்
வாடிப் புலம்புவதே.
 
தெய்வமே நான் பெற்ற நல்ல செல்வமே அசையா வடிவத் திருவே யார் இப்படி நற்பேறு பெற்று இதை சிதைப்பார் இமையாத முக்கண் முவரில் பெற்றவர் சிற்றம்பல மணி மொய்க்கும் பொழில் நிறை வாசல் பூவில் பெற்ற குழலி என வாடிப் புலம்புவதே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 13

 à®•à¯‹à®™à¯à®•à®¿à®±à¯ பொலியரும் பேய்கொங்கை

பங்கன் குறுகலரூர்
தீங்கிற் புகச்செற்ற கொற்றவன்
சிற்றம் பலமனையாள்
நீங்கிற் புணர்வரி தென்றோ
நெடிதிங்ங னேயிருந்தால்
ஆங்கிற் பழியா மெனவோ
அறியே னயர்கின்றதே. 
 
கோங்கு மரத்தில் பொலியச் செய்தது போன்ற கொங்கை கொண்டவள் பாகமாக கொண்டவன் குறுகிய மனம் படைத்தவரை தீங்கற்கு புகுச்செய்ய தலைவன், சிற்றம்பல மனையாள் தன்னிடம் இருந்து நீரை வெளியிட நிலவைப் போல் குளிராக இருந்தால் பழியாகுமோ அறியேன் அல்லல் அடைகின்றேனே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 12

 à®šà®¿à®¨à¯à®¤à®¾ மணிதெண் கடலமிர்

தந்தில்லை யானருளால்
வந்தா லிகழப் படுமே
மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை
யானகன் றாற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோவென்னை
வாட்டந் திருத்துவதே. 
 
சிந்தாமணி தெளிந்த கடல்நீர் அமிர்தம் தரும் தில்லை என அருளால் வந்தால் இகழப்படுமே. மயங்கும் மான் விழியே மயிலே தாமரையே அன்னமே நின்னை நான் விலகி வாழ்வேனோ. சிறிதும் குறையாமல் முற்றுமாய் என்குலம் என்னை வாடவிடமால் திருத்தட்டும்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 11

 à®•à¯‚ம்பலங் கைத்தலத் தன்பரென்

பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை
யம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி
காள்நும் அகன்பணையே.
 
கூப்பிய கையுடன் பணிவுடன் குனியும் அன்பர்களுக்கு பாம்பை அலங்காரமாக அணியும் பரன் என்று இல்லாமல் அம்பலப் பாடலரின் தேன் போன்று பலந்தரும் சிற்றிடையுடன் இங்கே சுவை ஏறிய கனியாய் வாய் மனக்க ஆம்பலம் போல் விரியும் மலர் கள் தரும் போதையை நுகர்ந்த அகமாய் இருக்கும்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 10

 à®…ளவியை யார்க்கு மறிவரி

யோன்றில்லை யம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாட்டடங்
கண்ணுதல் மாமதியின்
பிளவியல் மின்னிடை பேரமை
தோளிது பெற்றியென்றாற்
கிளவியை யென்னோ வினிக்கிள்ளை
யார்வாயிற் கேட்கின்றதே. 
 
அளந்தவனை அறியும் யாருக்கும் அருமையானது ஒன்று இல்லை, அம்பலம் போல் அளவில் வான் என கொங்கை காட்ட கண்ணுதல் மாமதியின் மின்னலால் பிளந்திட பேரமை தோளிது. பெற்றேன் என்பர் கிளவியை என்னவோ, இனிமையான கிளவி யாரிடத்தில் கேட்கின்றதோ.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 9

 à®‰à®£à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯à®•à¯ குணர்வரி யோன்றில்லைச்

சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ்
வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும்
போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல்
போல வளர்கின்றதே.
 
உணர்ந்தவர்களுக்கு உணர்வில் அருமையானது என தனியாக ஒன்று இல்லை, சிறிய அம்பலத்தே வெளிப்பட்ட ஒருத்தன் குணம்தான் வெளிப்பட்டதால், கவ்வும் செவ்வாயின் கொடி பொன்ற இடையே தோன்றும் தோள் புணர்ந்தவர் புணரும் பொழுதெல்லாம் பெரும் போகமும் மேலும் புதிதாய் மணந்து ஆளும் வளைந்த முடி கொண்ட அல்குல் போல வளர்கின்றதே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 8

 à®šà¯Šà®±à¯à®ªà®¾ லமுதிவள் யான்சுவை

யென்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று
நானிவ ளாம்பகுதிப்
பொற்பா ரறிவார் புலியூர்ப்
புனிதன் பொதியில்வெற்பிற்
கற்பா வியவரை வாய்க்கடி
தோட்ட களவகத்தே. 
 
அமுது போன்ற சொற்கள் உடையவள், நான் அதை சுவைக்க துணிந்தேன் நன்மை தரும் பொருட்டே தெய்வம் தந்தது என்று, நானே இவள் என பகுதியானதை யார் அறிவார். புலியூர் புனிதன் பொதியில் வெற்பி கற்புடன் இயங்கியதை வாய்கடி கொண்டே களவகத்தே நடந்ததே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 7

 à®à®´à¯à®Ÿà¯ˆ யான்பொழி லெட்டுடை

யான்புய மென்னைமுன்னாள்
ஊழுடை யான்புலி யூரன்ன
பொன்னிவ் வுயர்பொழில்வாய்ச்
சூழுடை யாயத்தை நீக்கும்
விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணங் காணணங்
காய்வந் தகப்பட்டதே.
 
ஏழு ஆதாரங்களை உடையவன் அழகுடன் சேர்த்து எட்டு உடையவன் என்னை முன்னாள் வினையால் உடைமையாக்கி கொண்டவன் புலியூர் என்பது போல் பொன் நிறைந்த பொழில் வாசல் சூழ்ந்த துன்பத்தை நீக்கும் விதி துணை ஆனவன் யாழ் என்ற இசைக்கருவி கொண்ட மணம் முடிக்காத அணங்காய் வந்து அகப்பட்டதே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 6

 à®µà®³à¯ˆà®ªà®¯à®¿à®²à¯ கீழ்கட னின்றிட

மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கியிக் கெண்டையங்
கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேன்நய
வேன்தெய்வ மிக்கனவே. 
 
மீன்பிடி வலையில் கிழே கடலில் நின்றிட மேல் கடலில் வான்பார்த்த நூனியில் துளையின் வழி கிழ் உடன் கோர்த்த தில்லை பழையவன் பக்கவாட்டில் விலகிடாதபடி கெண்டையை கண்ணி வழியாக கொண்டுவந்த விளைவை அல்லாமல் வேறு ஒன்றை நாடமாட்டேன் தெய்வம் என்றும் ஏற்கமாட்டேன்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 5

 à®…ணியு மமிழ்துமென் னாவியு

மாயவன் றில்லைச்சிந்தா
மணியும்ப ராரறி யாமறை
யோனடி வாழ்த்தலரிற்
பிணியு மதற்கு மருந்தும்
பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குற்பெருந்
தோளி படைக்கண்களே. 
 
அணியாய் அமிழ்தாய் என் ஆவியாய் ஆனவன் சிந்தாமணியும் உலகம் அறியா மறையோன் அடி வாழ்த்தல் அரிது. பிணியும் அதற்கு மருந்தும் தவறியும் தவறாதும் மின்னும் பணியும் பக்கு கட்டிய உறுப்பும் பெருந்தோளி படைக்கண்களே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 4

 à®…கல்கின்ற வல்குற் றடமது

கொங்கை யவையவநீ
புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே
யிடையடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லிற்செற் றோன்றில்லை
யீசனெம் மானெதிர்ந்த
பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ
னம்மன்ன பல்வளைக்கே. 
 
விரியும் உறுப்பு தடமாக கொங்கை கொண்டதை நீ புகழ்கின்ற தென்னை போன்ற நெஞ்சமே இடை இடையே இருப்பதை தொடுக்க மறையும் வில் போல் அன்றி வேறில்லை. ஈசன் எம் மனம் எதிர்த்து பகல் குன்றாதபடி பல்லில் பழமாய் கசங்கி நின்றானே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 3

 à®ªà®¾à®¯à¯à®®à¯ விடையரன் றில்லையன்

னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர்
வாடுந் துயரமெய்தி
ஆயு மனனே யணங்கல்ல
ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத்
தோளிச் சிறுநுதலே.
 
பாயும் விடைக் கொண்ட அரன், தில்லையன் வாள் படை கண்ணிமைக்குள் வெல்லும். நீர் ஊறும் நிலத்தடியில் வாடி உதிரும் மலர் கண்டு துயரம் அடையும் மனமே, அணங்கு என்ற ஒன்று இல்லை அது முலை சுமந்து தேயு மருங்கு என்றாலும் பெரிய பணை போன்ற தோளில் சிறிய நெற்றியே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 2

 à®ªà¯‹à®¤à¯‹ விசும்போ புனலோ

பணிக ளதுபதியோ
யாதோ வறிகுவ தேது
மரிதி யமன்விடுத்த
தூதோ வனங்கன் றுணையோ
விணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோவென
நின்றவர் வாழ்பதியே. 
 
கூர்மையான ஈட்டியோ, கூர் கொண்ட முனையோ, மூழ்கடிக்கும் வெள்ளமோ, செயல்கள் செய்யத் தூண்டும் தலைமையோ, எது என்று அறிவது எப்படி ?. தூதாக நிற்பதோ, காடுகளுக்கு துணையோ, செயல்பட தொல்லையற்ற தில்லை மாதோ, இளம் மயிலோ, என ( இயற்கையை பார்த்து) நின்றவர் வாழும் தலைமையானவரே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 1

 à®¤à®¿à®°à¯à®µà®³à®°à¯ தாமரை சீர்வளர்

காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி
னொல்கி யனநடைவாய்ந்
துருவளர் காமன்றன் வென்றிக்
கொடிபோன் றொளிர்கின்றதே.
 
புகழ் வளர்க்கும் மாற்றமும் சீர் வளர்க்கும் காவிகளீசர் தில்லையில் குரு வளர்க்கும் பூங்குழல் கோங்கு பைங்காந்தன் கொண்டு தெய்வமாய் வளர மலர் கொண்டு மாலையாக்கி அணிந்து நன்நடை வாய்க்க வளரும் காமனை வென்று கொடி போல் ஒளிர்கின்றதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 9

 à®šà¯†à®®à¯à®®à¯ˆà®¨à®²à®®à¯ அறியாத

சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து
முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி
நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 
 
செழுமையும் நலத்தையும் அறியாத சிதவடைபவர்களுடன் கூடித் திரிபவனை மூன்று மலத்தை அறுத்த முதலான முதல்வன் நம்மையும் ஒரு பொருளாக்கி மேடையில் ஏற்றுவித்த அம்மா போல் அருள் செய்ததை யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 8

 à®šà®¾à®¤à®²à¯à®ªà®¿à®±à®ªà¯ பென்னுந்

தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார்
கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான்
தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 
 
இறத்தல் பிறத்தல் என்ற இழுக்கும் சுழியில் தடுமாறி காதல் இன்பம் தரும் கணிவானவர் கலவியிலே வீழ்பவனை பெண்ணை ஒரு பாகமாக உடைய தலைவன் அவனது கழலே சேரும்படி முதன்மையை எனக்கருளியதை யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 7

 à®¤à¯ˆà®¯à®²à®¾à®°à¯ மையலிலே

தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து
பாசமெனுந் தாழுருவி
உய்யுநெறி காட்டுவித்திட்
டோங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.
 
நளினமானவர் மேல் கொள்ளும் மோகத்தால் தரம் குறைந்து போக வேண்டியவனை நேர்த்தியாய் கொண்டுவந்து பாசம் என்ற நூல் அறுத்து வெற்றி பெறும் வழி காட்டிய ஓங்கார உட்பொருளை ஐயன் எனக்கருளியதை யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 6

 à®µà¯†à®¨à¯à®¤à¯à®µà®¿à®´à¯à®®à¯ உடற்பிறவி

மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார்
குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு
பரிசறஎன் துரிசுமறுத்
தந்தமெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.
 
முடிந்துவிடும் உடல்கொண்ட பிறவியை மெய் என்று செயல்களைப் பெருக்கி அடர்ந்த கூந்தலுடன் அழகிய வளையலும் குவிந்த முலைகொண்ட மார்மேல் வீழ்வேனைப் பந்தம் அறித்து என்னை ஆண்டுக்கொண்டு பரிசு அளித்து துன்பம் துடைத்து அருளியதை யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 5

 à®ªà®žà¯à®šà®¾à®¯ அடிமடவார்

கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர
நிற்பேன் உன்அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே
அடியேனை வருகஎன்
றஞ்சேல்என் றருளியவா
றார்பெறுவார் அச்சோவே.
 
இடுப்புக்கு ஆடை அணிபவர் கடைக்கண்ணுக்கு அடிமைப்பட்டு நெஞ்சில் துன்பத்தை ஏற்று நின்ற நான் உன் அருள் பெற்றேன் உய்வுற்றேன் என்னை அடிமையாக்கிக் கொண்டவனே அடிமை என்னை அருகில் வருக என்று அருளியதை யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 4

 à®®à®£à¯à®£à®¤à®©à®¿à®±à¯ பிறந்தெய்த்து

மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி
எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத்
தூய்நெறியே சேரும் வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 
 
மண்ணில் பிறந்து வளர்ந்து மாண்டு விழக் கிடந்தவனை எண்ணமற்ற அன்பை அருளி என்னை ஆண்டு என்னையும் உன்தன் தூய வெண்ணீறு அணிவித்து தூய வழியே சேரும்படி அண்ணல் எனக்கு அருளியபடி யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 3

 à®ªà¯Šà®¯à¯à®¯à¯†à®²à¯à®²à®¾à®®à¯ மெய்யென்று

புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை
மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான்
தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.
 
எல்லாப் பொய்யையும் மெய் என்று கூடும் மார்பகம் கொண்டவருடன் போகம் செய்து அதில் மையம் கொண்டு இருப்பவனை அதில் அழுந்தாமல் காத்து அருளி பெண்மையை இடமாக கொண்ட தலைவன் தன் கழலே சேரும்படி ஐயன் எனக்கு அருளியபடி யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 2

 à®¨à¯†à®±à®¿à®¯à®²à¯à®²à®¾ நெறிதன்னை

நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே
திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத
கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும் வண்ணம் அருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 
 
வழி இல்லாத வழியை வழியாக நினைப்பவனை அற்ப வழியில் சேராமல் திரு அருள் சேரும்படி குறிப்பாக சொல்லமுடியாத ஆடலரசன் ஆடலை நான் அறியும்படி அருளியதை யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 1

 à®®à¯à®¤à¯à®¤à®¿à®¨à¯†à®±à®¿ அறியாத

மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப்
பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச்
சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.
 
முக்தி அடையும் வழியை அறியாத மூர்க்கரொடு இணைந்திருப்பவனை பக்திப் பாதைக் காட்டி பழைய வினைகள் அழியம்படி சித்தமுடன் மலம் அறுத்து சிவமாக்கி என்னை ஆண்ட அத்தன் அருளியபடி யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆனந்த மாலை | பாடல் எண் : 7

 à®¨à®°à®¿à®¯à¯ˆà®•à¯ குதிரைப் பரியாக்கி

ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம்
பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவினாசி
அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதீ
செய்வ தொன்றும் அறியேனே.
 
நரி போன்ற மனதை குதிரை போல் செய்து பயணிக்கச் செய்பவனே, உலகம் எங்கும் இதை நிகழச்செய்த அளவற்ற தென்னவன் மதுரை எல்லாம் இந்த மயக்கத்தில் ஆழ்த்திய பெருந்துறையாய் அரிய பொருளே, அவினாசி அப்பா, பாண்டி வெள்ளமே தெரிந்துக் கொள்ள அரிய பரஞ்சோதீ நான் என்ன செய்வது என்று அறியமாட்டாமல் தவிக்கிறேன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆனந்த மாலை | பாடல் எண் : 6

 à®•à¯‹à®µà¯‡ யருள வேண்டாவோ

கொடியேன் கெடவே அமையுமே
ஆவா என்னா விடில்என்னை
அஞ்சேல் என்பார் ஆரோதான்
சாவா ரெல்லாம் என்னளவோ
தக்க வாறன் றென்னாரோ
தேவே தில்லை நடமாடீ
திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.
 
அரசனே அருள மாட்டாய் என்றால் கொடியவன் நான் கெட்டிட வாய்ப்பு அமைந்துவிடுமே, அறந்திட முடியா என்னை யார் கேள்வி கேட்டு அச்சமுறாதே என்பார்கள். மரணத்தை ஏற்பவர்கள் எல்லாம் என்னைப் போல் பாதுகாக்க அழைத்தாரோ, தேவனே தில்லையில் நடனம் ஆடுபவனே திகைப்புற்றேன் இனியாவது என்னை தேற்று.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆனந்த மாலை | பாடல் எண் : 5

 à®¤à®¾à®¯à®¾à®¯à¯ முலையைத் தருவானே

தாரா தொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ
நம்பி யினித்தான் நல்குதியே
தாயே யென்றுன் தாளடைந்தேன்
தயாநீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடனாக
ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.
 
தாயாக முலையை தந்து பசி தீர்ப்பவனே, தாராமல் இருந்தால் தாயற்ற பிள்ளைப் போல் சவலையாய் நாய் போன்ற நான் இருக்க மாட்டாமல் கழிவேன், நம்பி இனிமையாக அருளினான் நற்கதியே, தாயே என்று உன் அடி பணிந்தேன். தாயாக நீ எனக்கு இல்லை என்றால் எப்படி? . நாய் போன்ற என்னை உன் அடிமையாக செய்துகொண்டாய், நான் தனித்து உன்னை வேண்டவேண்டுமா?
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆனந்த மாலை | பாடல் எண் : 4

 à®•à¯†à®Ÿà¯à®µà¯‡à®©à¯ கெடுமா கெடுகின்றேன்

கேடி லாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவ தெல்லாம்நான்
பட்டாற் பின்னைப் பயனென்னே
கொடுமா நரகத் தழுந்தாமே
காத்தாட் கொள்ளுங் குருமணியே
நடுவாய் நில்லா தொழிந்தக்கால்
நன்றோ எங்கள் நாயகமே. 
 
அழிந்துவிடுபவன் எப்படி அழிவானோ அப்படி அழிந்துவிடுகிறேன். கேடு இல்லாதவனே என்னால் பழி அடைந்தாய், துன்பத்தை ஏற்பேன் நான் துன்பப்படுவதான் பயன் என்ன, கொடிய நரகத்தில் வீழாமல் காத்து அருள் குரு மணியே, நடுநிலையில் நில்லாமல் போனால் நன்றோ எங்கள் நாயகமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆனந்த மாலை | பாடல் எண் : 3

 à®šà¯€à®² மின்றி நோன்பின்றிச்

செறிவே யின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச்
சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலுங் காட்டி வழிகாட்டி
வாரா உலக நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக்
கொடியேன் என்றோ கூடுவதே. 
 
நேர்மை இல்லாமல், நல்ல பழக்கம் இல்லாமல், சிறப்புடன் இல்லாமல், அறிவும் இல்லாமல், தோல் கொண்டு செய்த பொம்மைப்போல் சுற்றி வீழ்ந்து கிடப்பவனை அளவு காட்டி வழிகாட்டி அடையமுடிய உலக நெறி அடைய கோலம்காட்டி ஆள்பவனை கொடுமையான நான் கூடுவது என்றோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆனந்த மாலை | பாடல் எண் : 2

 à®Žà®©à¯à®©à®¾à®²à¯ அறியாப் பதம்தந்தாய்

யான தறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றுங் குறைவில்லை
உடையாய் அடிமைக் காரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
பழைய அடிய ரொடுங்கூடா
தென்னா யகமே பிற்பட்டிங்
கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே. 
 
என்னால் அறிய முடியும் படியான வாய்ப்பு தாந்தாய், நானோ அறியாமல் கெட்டேன் உன்னால் ஒரு குறையும் இல்லை, என்னை அடிமையாக்கிக் கொள் என்பேன், பலநாளாக உன்னை பணிந்து வணங்கும் பழைய அடியாருடன் கூடமாட்டாமல் கீழ்மைப்பட்டு இருந்தேன் நோய்க்கு விருந்தாக.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆனந்த மாலை | பாடல் எண் : 1

 à®®à®¿à®©à¯à®©à¯‡ ரனைய பூங்கழல்க

ளடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னே ரனைய மலர்கொண்டு
போற்றா நின்றார் அமரரெல்லாம்
கன்னே ரனைய மனக்கடையாய்க்
கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த
என்னே ரனையேன் இனியுன்னைக்
கூடும் வண்ணம் இயம்பாயே. 
 
மின்னல் போன்ற மலர் கழல்கள் அடைந்தவர்கள் வியப்புக்கு உரிய உலகை கடந்துவிட்டார்கள். பொன் போன்ற மலர் கொண்டு போற்றாது நின்ற அமரர் எல்லாம் கண் போன்ற மனதின் வழியாக கழிக்கப்பட்ட வலக்கடல் வீழ்த்த என்னை போன்றவர்கள் இனி உன்னை கூடும் வண்ணம் எடுத்து சொல்வயாக.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையாட்சி | பாடல் எண் : 7

 à®šà¯Šà®²à¯à®²à®¿à®¯ லாதெழு தூமணி யோசை

சுவைதரு மாகாதே
துண்ணென என்னுளம் மன்னிய சோதி
தொடர்ந்தெழு மாகாதே
பல்லியல் பாய பரப்பற வந்த
பராபர மாகாதே
பண்டறி யாதப ராநுப வங்கள்
பரந்தெழு மாகாதே
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று
விளைந்திடு மாகாதே
விண்ணவ ரும்அறி யாத விழுப்பொருள்
இப்பொரு ளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை
எய்திடு மாகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள
எழுந்தரு ளப்பெறிலே. 
 
வார்த்தைகளால் முடியாதபடி உன்னை தொழுது தூய மணி ஓசையின் சுவை தருதல் ஆகாதோ, திடமாக என் உள்ளம் நிறைந்த சோதி தொடர்ந்து ஒளிவீசல் செய்யாதோ, பலவித இயல்புடன் வந்து பரந்து கிடப்பது பாரபரமாய் ஆகாதோ, வில் ஒத்தபடி கூர்மையானவர்களின் ஆர்வம் போல் எனக்குள் ஆர்வம் வளராதோ, வானவரும் அறியாத விரும்ப தகுந்த பொருள் இந்த பொருள் ஆகாதோ, எல்லை இல்லாதவன் எட்டு குணம் ஆனவை அடைதல் ஆகாதோ, சூரியனாய் தலையில் நின்ற மணி எங்களை ஆள்வதற்கு எழுந்து அருளினால்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையாட்சி | பாடல் எண் : 6

 à®ªà¯Šà®©à¯à®©à®¿à®¯ லுந்திரு மேனிவெண் ணீறு

பொலிந்திடு மாகாதே
பூமழை மாதவர் கைகள் குவிந்து
பொழிந்திடு மாகாதே
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து
வெளிப்படு மாகாதே
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம்
மிகுத்திடு மாகாதே
தன்னடி யார்அடி என்தலை மீது
தழைப்பன ஆகாதே
தானடி யோம்உட னேஉய வந்து
தலைப்படு மாகாதே
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக
இயம்பிடு மாகாதே
என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன்
எழுந்தரு ளப்பெறிலே. 
 
பொன் போல் இயல்புடைய உடலில் வெண்ணீறு பொலிவுடன் இருத்தல் ஆகாதோ, பூக்கள் மழைபோல் மாதவத்தவர் கைகள் குவிந்து பொழிந்திடுதல் ஆகாதோ, மின்னல் போன்ற நுட்பமான இடை உள்ளவர்களின் கருத்து வெளிப்படையாக புரிதல் ஆகாதோ, தன்னை தானே ஆளும் அடியார் என் தலை காணுதல் ஆகாதோ, தானும் அப்படியே என அடியார் என தலைப்படுதல் ஆகாதோ, இனிமையே எங்கும் நிறைந்து இனிதாக இருக்க இயம்புதல் ஆகாதோ, என்னை முன் ஆண்ட ஈசன் என் அத்தன் எழுந்து அருளப் பெற்றாலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையாட்சி | பாடல் எண் : 4

 à®Žà®©à¯à®©à®£à®¿ யார்முலை ஆகம் அளைந்துடன்

இன்புறு மாகாதே
எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி
தாடுது மாகாதே
நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற
நண்ணுவ தாகாதே
நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும்
நண்ணுவ தாகாதே
மன்னிய அன்பரில் என்பணி முந்துற
வைகுவ தாகாதே
மாமறை யும்அறி யாமலர்ப் பாதம்
வணங்குது மாகாதே
இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை
எய்துவ தாகாதே
என்னை யுடைப்பெரு மான்அருள் ஈசன்
எழுந்தரு ளப்பெறிலே. 
 
எனக்கு அணியாக உள்ள மார்பகம் இன்பத்தை அடைந்து விடாதோ, அளவற்ற கருணைக் கடல் இனி என்னுள் அசைந்தாடுதோ, நல்ல மணியின் ஓசை முழுங்கி என் உள்ளே நாடுவது ஆகாதோ, ஓசையானவன் அணியான திருநீற்றினை என்றும் நாடுவது ஆகாதோ, கிடைத்த அன்பரில் என் பணி பெரிதாக மாறாதோ, வேதங்களும் உணரா மலர்பாதம் வணங்குவது ஆகாதோ, இனிமையான நீர் நீறைந்த செந்தாமரை மலர் என் தலையில் இருத்தல் ஆகாதோ, என்னை உடைமையாக பெற்ற பெருமான் அருள்தரும் ஈசன் எழுந்தருளினால்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையாட்சி | பாடல் எண் : 3

 à®ªà®¨à¯à®¤ விகார குணங்கள் பறிந்து

மறிந்திடு மாகாதே
பாவனை யாய கருத்தினில் வந்த
பராவமு தாகாதே
அந்த மிலாத அகண்டமும் நம்முள்
அகப்படு மாகாதே
ஆதி முதற்பர மாய பரஞ்சுடர்
அண்ணுவ தாகாதே
செந்துவர் வாய்மட வாரிட ரானவை
சிந்திடு மாகாதே
சேலன கண்கள் அவன்திரு மேனி
திளைப்பன ஆகாதே
இந்திர ஞால இடர்ப்பிற வித்துயர்
ஏகுவ தாகாதே
என்னுடை நாயக னாகிய ஈசன்
எதிர்ப்படு மாயிடிலே.
 
உறவுகளால் உண்டான குணங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு அழிந்திடாது போகுமோ, பாவனையால் வந்த கருத்து எல்லாம் அமுதாக மாறாதோ, முடிவற்ற அண்டம் நம்முள் அகப்பட்டு போகதோ, ஆதியின் முதல் பரஞ்சுடர் நெருங்கி இருப்பது நடக்காதோ, மீன் போன்று கண்கள் அவனது திருமேனி கண்டு களிப்பது செய்யாதோ, இந்திர ஞாலம் அருளும் இடம் விந்து உயர்வது ஆகாதோ, என்னுடைய நாயகனே ஈசனே நீ எதிர்பட்டு நின்றால்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையாட்சி | பாடல் எண் : 2

 à®’ன்றினொ டொன் றுமோரைந்தி னொடைந்தும்

உயிர்ப்பறு மாகாதே
உன்னடி யார்அடி யார்அடி யோமென
உய்ந்தன வாகாதே
கன்றை நினைந்தெழு தாயென வந்த
கணக்கது வாகாதே
காரண மாகு மனாதி குணங்கள்
கருத்துறு மாகாதே
நன்றிது தீதென வந்த நடுக்கம்
நடந்தன ஆகாதே
நாமுமெ லாம்அடி யாருட னேசெல
நண்ணுது மாகாதே
என்றுமென் அன்பு நிறைந்த பராவமு
தெய்துவ தாகாதே
ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன்
என்னுள் புகுந்திடிலே.
 
ஒன்றுடன் ஒன்றும், ஓர் ஐந்துடன் ஐந்தும் உயிர்பது நிகழ முடியாது. உன் அடியார் அடியார் நங்கள் என உயர்வாக எண்ணுவதும் முடியாது. தாய் பசுவைக் கன்று அழைக்க பசுவது பாசமுடன் வருவதும் முடியாது, காரணம் என்று ஆகும் அனாதி குணங்கள் கருத்துடையானவாக முடியாது, இது நல்லத் இது தீயது என வரும் நடுக்கமும் வர முடியாது, நாம் எல்லாரும் அடியார்களுடன் விரும்பி செல்லவதும் முடியாது, என்றும் அன்பால் மிகுந்து அமுத கிடைக்க முடியாது, விடை உள்ள என்னை ஆளும் நாயகன் என்னுள் புகுந்திடாது இருந்தால்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையாட்சி | பாடல் எண் : 1

 à®•à®£à¯à®• ளிரண்டும் அவன்கழல் கண்டு

களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்வில்என் வாழ்வு
கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு
மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும்
வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல்
பயின்றிடு மாகாதே
பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள்
பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து
வெளிப்படு மாகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து
வெளிப்படு மாயிடிலே.
 
கண்கள் இரண்டும் இறையின் திருவடியைக் கண்டு மகிழாதோ, கார்மேக கூந்தல் உடைவர்கள் வாழ்வில் என் வாழ்வு முடிவாக அமையாதோ, பூமியில் பிறப்பது முடிவாக மாறாதோ, திருமால் அறியாத மலர் பாதம் இரண்டும் வணங்கத் தகுந்ததாக மாறாதோ, பாண்டி என்ற நல்ல நாட்டை உரிமை கொண்டவன் படையையும் ஆட்சியையும் பாடுதால் நிகழாதோ, விண் மகிழும் வேதகம் வந்து வெளிப்படுதல் ஆகாதோ, மீனுக்கு வலை விசும் கானவன் போல் இறைவன் வந்து செயல்பட்டால்.
#திருவாசகம்
 

திருவாசகம் | பண்டாய நான்மறை | பாடல் எண் : 7

 à®ªà¯‡à®šà¯à®®à¯ பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த

மாசின் மணியின் மணிவார்த்தை பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து. 
 
பேசும் பொருளுக்கு இலக்கை கடந்த இதமுடன் பேச்சில் சிறந்த மாசு இல்லாத மணியை மணி போல் பேசிப் பெருந்துறையே என்று பிறப்பை அறுத்தேன் நல்ல மருந்தானவன் அடியை என் மனதில் வைத்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | பண்டாய நான்மறை | பாடல் எண் : 6

 à®•à®¾à®£à¯à®™à¯ கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்

பேணும் அடியார் பிறப்பகலக் - காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு. 
 
பார்க்கும் கருவிகள் எல்லாம் பேரின்பம் தரும் என்று பாதுகாக்கும் அடியார்கள் தன் பிறப்பு அகல காணும் பெரியவனை நெஞ்சே பெருந்துறையில் என்றும் பிரியாமல் இருப்பவனை வாயாரப் பேசு.
#திருவாசகம்
 

திருவாசகம் | பண்டாய நான்மறை | பாடல் எண் : 5

 à®¨à®£à¯à®£à®¿à®ªà¯ பெருந்துறையை நம்மிடர்கள் போயகல

எண்ணி எழுகோ கழிக்கரசைப் பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். 
 
பெருந்துறையை விருப்பமுடன் நாடியதால் நமது இடர்கள் அகன்றிட அதை நினைத்து எழுந்து கோகழி அரசனை இசை பொருந்தும் வார்த்தையுடன் உத்திரகேச மங்கையை விலகாத இருந்தவனைக் காண்போம். 
#திருவாசகம்
 

திருவாசகம் | பண்டாய நான்மறை | பாடல் எண் : 4

 à®µà®¾à®´à¯à®¨à¯à®¤à®¾à®°à¯à®•à®³à¯ ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்

தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 
 
சிறப்பாக வாழ்பவர்களும், முன் வினைகளை அழித்தவர்களும், உலகம் தாழ்ந்து வணங்கும்படி வாழ்பவர்களும் சூழ்ந்தபடி சென்று இறைஞ்சி வணங்கும் உயர்ந்தோர் பெருந்துறையை நன்றியுடன் வாழ்த்துபவர் நம்மவர்கள். 
#திருவாசகம்
 

திருவாசகம் | பண்டாய நான்மறை | பாடல் எண் : 3

 à®•à®¾à®Ÿà¯à®Ÿà®•à®¤à¯à®¤à¯ வேடன் கடலில் வலைவாணன்

நாட்டிற் பரிபாகன் நம்வினையை வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 
 
திசை அறியாத காட்டில் வேடனாகவும், கடலில் வலை வீசும் மீனவனாகவும், நாட்டில் குதிரை வீரனாகவும்  வந்து நமது வினையை அழித்து அருளும் பெருந்துறையான் அங்கத்தில் அழுக்கு படரும் பாதம் மருள் அகன்று ஒழிய நெஞ்சே வாழ்த்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | பண்டாய நான்மறை | பாடல் எண் : 2

 à®‰à®³à¯à®³ மலமூன்றும் மாய உகுபெருந்தேன்

வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு.
 
அழியாது இருக்கும் அழுக்கு மூன்றும் காணது போகும்படி உருப்படியான பெரிய அளவில் தேன்வெள்ளம் தந்து எண்ணக்குதிரையின் மேல் வந்த வள்ளல் மாறும் பெருந்துறையை வாழ்த்துங்கள். வாழ்த்தினால் மீண்டும் பிறப்பு தருத் கரு கெட்டு ஒழியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | பண்டாய நான்மறை | பாடல் எண் : 1

 à®ªà®£à¯à®Ÿà®¾à®¯ நான்மறையும் பாலணுகா மாலயனுங்

கண்டாரு மில்லைக் கடையேனைத் தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை. 
 
பழைமை வாய்ந்த நான்கு மறை நூல்களும் பால் பற்றாத மாலும் கண்டு உணரவில்லை என்றாலும் இந்த கடைசி உயிரினமான தொண்டனை தனக்கு உரிமையாக்கி அருளும் சிறப்புகளை அழிக்கும் எங்கள் தலைவனுக்கு என் நெஞ்சமே கைமாறு செய்ய இயலுமா?
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 11

 à®‡à®©à¯à®ªà®®à¯ பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றுந்

துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து.
 
இன்பத்தை பல மடங்கு பெருக்கி இருளை அழித்து எந்த வழியிலும் துன்பம் தொடர்வதை அறுத்து வெளிச்சமாய் அன்பை எனக்குள் அமையச்செய்த வளமானவர்களின் பெருந்துறை ஆள்பவன், என்னுடைய சிந்தனையை வாழும் இருப்பிடமாக கொண்டான் விரும்பி.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 10

 à®‡à®°à¯à®¨à¯à®¤à¯†à®©à¯à®©à¯ˆ ஆண்டான் இணையடியே சிந்தித்

திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாந் தருங்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து. 
 
எனக்குள் இருந்தபடியே என்னை ஆள்பவன் இணையடியை சிந்திந்து இருந்தபடியே இரு என் நெஞ்சே. எல்லாம் தரும் பெருந்துறையில் உலவ பெருங்கருணையாளன் மருந்தாக என் மனதில் வந்து அருளினான்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 9

 à®®à¯‚வரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த

தேவருங் காணாச் சிவபெருமான் மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்.
 
மூன்று மூர்த்திகளும் முப்பத்துமூன்று மற்றும் பிற தேவர்களும் காணாத சிவபெருமான் சிறப்பு பெற்ற வையகத்தே வந்து தங்கும் எல்லைகள் காட்டும் திருவடியை கவனிக்க மெய்யகத்தே இன்பம் வளரும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 8

 à®¯à®¾à®µà®°à¯à®•à¯à®•à¯à®®à¯ மேலாம் அளவிலாச் சீருடையான்

யாவர்க்குங் கீழாம் அடியேனை யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை. 
 
யாவருக்கும் மேலான அளவற்ற சீர் பொருந்தியவர் போற்றும் ஏகன் யாவருக்கும் கீழான என்னை யாவரும் பெற்று அறியாத இன்பத்தை எனக்கு வைத்தான் என் தலைவன் இதற்கு கைமாறு செய்யும் வகை அறியேன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 7

 à®µà®¾à®°à®¾ வழியருளி வந்தெனக்கு மாறின்றி

ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி. 
 
மீண்டும் வாராமல் இருக்க வழி அருளி, எனக்காக வந்து மாறுபாடு இல்லாமல் ஆரா அமுதமாக அமைந்ததே சிறப்பானவர்கள் திருத்தமாய் வாழும் பெருந்துறையான் என் சிந்தை நிரம்ப ஒன்றுகூட பெருக்கும் ஒளி.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 6

 à®ªà®¿à®¤à¯à®¤à¯†à®©à¯à®©à¯ˆ ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்

மத்தமே யாக்கும்வந் தென்மனத்தை அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திறவாப் பேரின்பம் வந்து. 
 
போதை ஏற்றி பிறப்பை அறுத்து பேசுவதற்கு அரிதான நிம்மதியே நிலைக்கச் செய்யும் அத்தன் என் மனதில் பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருள் தந்து மருத்தை தேவையற்றதாக செய்து பேரின்பம் வரச்செய்தான்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 5

 à®…றையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற

மறையோனும் மாலும்மால் கொள்ளும் இறையோன்
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியா
திருந்துறையும் என்நெஞ்சத் தின்று.
 
அறியச் செய்கிறேன் அறிவார்க்கு அனைத்து உலகமும் ஈன்ற மறை உணர்த்துபவனும் திருமாலும் அளவு கொள்ளும் இறையோன் பெருந்துறையில் வாழச்செய்த பெருமான் பிரியாத் திருந்துறையால் என் நெஞ்சத்தில் நிலைத்தான் இன்று.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 4

 à®®à¯à®©à¯à®©à¯ˆ வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்

பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து. 
 
முன்னம் செய்த இரு வினைகளை தீர்க்கமாய் அழித்து மீண்டும் பிறப்பு இல்லா நிலை தரும் அருளாளன் தென்னன் பெருந்துறையில் வாழ பெருங்கருணை அருளியவன் வருத் துயரத்தை தீர்க்கும் மருந்தானான்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 3

 à®šà¯†à®¯à¯à®¤ பிழையறியேன் சேவடியே கைதொழுதே

உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான். 
 
என்ன தவறு செய்தேன் என்பதை அறியவில்லை, சேவை செய்யும் திருவடியை வணங்கி வெற்றிபெறும் வகையில் உயிர்ப்பறியேன், உலகின் திருந்துறையில் வேல் கொண்டு தடுத்து என் சிந்தனைக்கு இணங்கினான் பெருந்துறையில் ஆளும் தலைவன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 2

 à®†à®°à¯à®•à¯à®•à¯‹ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ

பார்க்கோ பரம்பரனே என்செய்கேன் தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து.
 
யாரை அழைப்பேன் எப்படி கதறுவேன் என்னவென்று ஆடுவேன் எப்படி பாடுவேன் எதைப் பார்ப்பேன் பரம்பரனே என்ன செய்வேன், எடை போட முடியாத ஆனந்த அளவேற்றும் அத்தன் பெருந்துறையான் திருவடி இது என்பார் யாரோ அவரை பணிந்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 1

 à®µà¯†à®¯à¯à®¯ வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்

பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து. 
 
வெய்யில் போல் காயும் வினைகள் இரண்டும் வெந்திடச் செய்ய உடலும் உருகி பொய்யும் பொடியாக மறுக்கிறதே என்ன செய்வேன். செய்வேன் திரு உடையவர் வாழும் பெருந்துறை ஆள்பவன் தேன் போன்ற செம்மையான தீ மாறாமல் மனதில் இருக்க.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையெழுச்சி | பாடல் எண் : 2

 à®¤à¯Šà®£à¯à®Ÿà®°à¯à®•à®¾à®³à¯ தூசிசெல்லீர்

பத்தர்காள் சூழப்போகீர்
ஒண்டிறல் யோகிகளே
பேரணி உந்தீர்கள்
திண்டிறல் சித்தர்களே
கடைக்கூழை சென்மின்கள்
அண்டர்நா டாள்வோம்நாம்
அல்லற்படை வாராமே. 
 
தொண்டர்களே தூரமாக போகதீர்கள், பக்தர்களே கூட்டமாக சூழ்ந்திடாமல் இருங்கள், இறையுடன் ஒண்றிய யோகிகளே பேரணியை உடன்படுங்கள், திடமான சித்தர்களே இறுதிவரை கூட்டத்தை செல்லவிடுங்கள் வேற்று உலகத்தை ஆள்வோம் நமக்கு துன்பம் தரும் படை வராதபடி.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையெழுச்சி | பாடல் எண் : 1

 à®žà®¾à®©à®µà®¾à®³à¯ ஏந்தும்ஐயர்

நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர்
மதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம்
அடையப் புகுமின்கள்
வானஊர் கொள்வோம்நாம்
மாயப்படை வாராமே. 
 
ஞானம் என்ற மடமையை அறுக்கும் வாளை கைக்கொள்ளும் தலைவன் அடைந்த நாதப் பறையை அடையுங்கள், உயர்ந்ததில் உயர்ந்ததை அடையும் தலைவன் மதியாகிய வெண்குடையை புகழ்ந்து பாடுங்கள், உண்டாகும் நீற்றுக் கவசத்தை அடைய முற்படுங்கள், இதனால் வான ஊர் அடைவோம் மாயப் படை எம்மை தாக்காது.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 10

 à®ªà¯à®°à®³à¯à®µà®¾à®°à¯ தொழுவார் புகழ்வாராய்

இன்றே வந்தாள் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார்
மதிஉட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீ ராகில் இதுசெய்மின்
சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
அருள்ஆர் பெறுவார் அகலிடத்தே
அந்தோ அந்தோ அந்தோவே. 
 
பொய்யில் புரள்பவராகவும், தொழுபவராகவும், புகழ்பவராகவும் இன்றே உங்களை மாற்றவேண்டாம். மேலும், உங்களை மதிப்பவர்களால் மயக்கம் கொண்டு கலங்கம் அடையவேண்டாம். தெளிய வேண்டும் என்றால் இதை செய்யுங்கள் சிவலோக நாதன் பாம்பை அணிந்தவன் அருளை யார் பெறுகிறார்களோ அவரிடத்தே சேருங்கள் அதுவே அதுவே அதுவாகும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 9

 à®šà¯‡à®°à®•à¯ கருதிச் சிந்தனையைத்

திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள்
பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத
ஆர்வங் கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே
பொய்யிற் கிடந்து புரளாதே. 
 
இணைவதற்கே எண்ணமிட்டு சிந்தனையை திருத்திக் கொள்ளுங்கள். போரில் பளபளக்கும் வேல் போன்ற கண்ணை கொண்ட பெண்ணை பகுதியாக கொண்டவன் பாம்பை அணிந்தவன் அருளும் அமுதத்தை முழுமையாக பருகி திராத ஆர்வம் கொள்ளுங்கள். சிவனது திருவடியை விலகாது இருங்கள், பொய்யில் கிடந்து புரளுவதை தவிருங்கள். 
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 8

 à®ªà¯†à®°à¯à®®à®¾à®©à¯ பேரா னந்தத்துப்

பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றுப் பின்னைநீர்
அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவந்
திறந்த போதே சிவபுரத்துத்
திருமா லறியாத் திருப்புயங்கன்
திருத்தாள் சென்று சேர்வோமே.
 
எம்பெருமானின் அருளால் பேரானந்தம் பெற்று அதில் நிலைக்கப் பெற்றவர்களே, பின்பும் நீங்கள் மயக்கம் அடைந்து அம்மா என்று அலர வேண்டாம். திரு உடைய மணியை சேர்ந்து சிவபுரத்து திருக்கதவு திறந்த போதே திருமால் அறியா பாம்பணிந்தவன் திருத்தாள் சென்று சேர்வோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 7

 à®¨à®¿à®±à¯à®ªà®¾à®°à¯ நிற்கநில் லாவுலகில்

நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே
நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற்
பெறுதற் கரியன் பெருமானே. 
 
இருக்க வேண்டியவர்கள் இருக்கட்டும். நிலையில்லா உலகில் இனியும் நாம் நிற்க வேண்டாம். பொன்னால் ஆன பால் போன்ற திருமேனியுடன் புலன்களை ஆள்பவன் பொன்னடிக்கே தன்னை ஒப்புகொடுத்து நீற்பீர், எந்தக் குறையும் இல்லாமல் இருக்கும் பரிசிற்கு உரிமையாக இருங்கள், பிறகு எப்பொழுதும் அடையமுடியாத அரியவன் நம் பெருமானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 5

 à®µà®¿à®Ÿà¯à®®à®¿à®©à¯ வெகுளி வேட்கைநோய்

மிகஓர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ
டுடன்போ வதற்கே ஒருப்படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள்
அணியார் கதவ தடையாமே
புடைபட் டுருகிப் போற்றுவோம்
புயங்கன் ஆள்வான் புகழ்களையே. 
 
விட்டொழியுங்கள் சினத்தையும் வேட்கை வியாதியையும், இப்படி ஓர் காலம் இனி இல்லை, நம்மை உடைமையாக்கியவன் திருவடிக்கு பெரிய கூட்டமாய் செல்ல ஒன்றுபடுங்கள். சிவபுரத்தை நாம் அடைவோம், அவனை அணிந்தவர்கள் கதவு அடைபடாதபடி பொங்கி எழுந்து போற்றுவோம். புலன்கள் ஆள்பவன் புகழ்களையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 4

 à®…டியார் ஆனீர் எல்லீரும்

அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து
கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடலைச் செலநீக்கிச்
சிவலோ கத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்தன்
பூவார் கழற்கே புகவிடுமே.
 
இறைக்கு அடிமையாக இருக்கும் அனைவரும் அளவற்று போக விடுங்கள் விளையாட்டை , சேர கடுமையாக இருக்கும் திருவடியை வந்தடைந்து இதுவே இறுதி என்ற குறிப்பை அறிந்திருங்கள், சிதையும் உடலினை சரியாக்கி சிவலோகத்தில் நம்மை வைப்பான், தூசுபடும் உடலில் பாம்மை அணிந்தவன் மலர் அடிக்கே அடைக்கலம் செய்வோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 3

 à®¤à®¾à®®à¯‡ தமக்குச் சுற்றமும்

தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 
 
நாமே நமக்கு சொந்தமும், நாமே நமக்கு விதியையும் அமைத்துக் கொள்கிறோம். நாம் யார், நமது எது, பாசம் என்றால் என்ன, மறைவது எது என்ற இதுபோன்றவை களைந்து, மன்னன் ஆகிய இறையின் பழைய தொண்டர்களையும் அவர்களது குறிப்புகளையும் குறியாக கொண்டு பயணத்தை தொடருங்கள், பொய் நீக்கி நம் புலன்கள் ஆளும் ஏகனின் பொன் அடிக்கே பொருந்துங்கள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 2

 à®ªà¯à®•à®µà¯‡ வேண்டா புலன்களில்நீர்

புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம்
வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து
நாயே அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத்
தளரா திருப்பார் தாந்தாமே. 
 
புலன்களில் மேல் அக்கரையுடன் இருக்க வேண்டாம், பாம்பணிந்த பெருமானின் நீர் வடியும் மலர் அடிகள் மிகவே நினையுங்கள், மற்றவை எல்லாம் மிகுந்தால் போக விடுங்கள், உலகார் நகைத்தாலும் நாய் போன்ற நம்மை ஆண்ட தகுதி உடையவன் தனைச் சார்ந்து தளாரமல் இருப்பவர்கள் தகுதி உடையவர்கள் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 1

 à®ªà¯‚வார் சென்னி மன்னனெம்

புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய்
ஆட்பட்டீர்வந் தொருப் படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் கழல்புகவே.
 
மலரான சென்னி அணிந்த நம் மன்னன் பாம்பை உடைய பெருமான் சிறியவர்களாகிய நம் உணராத உள்ளத்திலும் கலந்து உணர்வாய் உருக்கும் வெள்ளம் போன்ற கருணையினால் அவனுக்கு ஆட்பட்டோம் என்பவர்கள் வந்து ஒன்றுபடுவோம். போகும் காலத்தில் பொய் விட்டு விலகி வீடுபெறு தரும் திருவடி புகுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | எண்ணப்பதிகம் | பாடல் எண் : 6

 à®ªà®¾à®±à¯à®±à®¿à®°à¯ நீற்றெம் பரமனைப்

பரங்கரு ணையோடும் எதிர்ந்து
தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்குஞ்
சோதியை நீதியிலேன்
போற்றியென் அமுதே எனநினைந் தேத்திப்
புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே
ஆற்றுவனாக உடையவ னேஎனை
ஆவஎன் றருளாயே.
 
பாலில் நிறைந்த நீராக இருக்கும் என் பரமனை, மேலான கருனையுடன் எதிர்கொண்டு கண்ட மெய் அடியார்களுக்கு கருத்துடன் உறை அளிக்கும் சோதியை, நெறி தவறும் நான் போற்றி அமுதே என நினைத்து ஏந்தி உயர்த்தி புகழ்ந்திட அறியேன். என் உள்ளத்திலும் இருந்து எனக்கு வழுகாட்டுபவனே என்னை தேறு என்று அருள் செய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | எண்ணப்பதிகம் | பாடல் எண் : 5

 à®•à®¾à®£à¯à®® தொழிந்தேன் நின்திருப் பாதங்

கண்டுகண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன்
பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந்
தன்மைஎன் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினி வரினுங்
காணவும் நாணுவனே. 
 
காணமல் விலகினேன், உன் திருப்பாதம் கண்டும் மகிழ்ந்து போற்றாமல் விலகினேன், உன்னைப் பற்றி பேசுவதிலும் விலகினேன், மேலும் என் பெருமானே தாணாகவே அழித்துக்கொண்டேன், உன்னை நினைந்து உருகும் தன்மையை அற்பத்தனமாக எண்ணி விலகினேன், நீ இனி வந்து காட்சி தந்தாலும் காண வெட்கப்படுவேனோ. 
#திருவாசகம்
 

திருவாசகம் | எண்ணப்பதிகம் | பாடல் எண் : 4

 à®ªà®¤à¯à®¤à®¿à®² னேனும் பணிந்தில னேனும்உன்

உயர்ந்தபைங் கழல்காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும்
பிறப்பறுப் பாய்எம் பெருமானே
முத்தனை யானே மணியனை யானே
முதல்வனே முறையோஎன்
றெத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை
இனிப்பிரிந் தாற்றேனே. 
 
பக்தி இல்லாதவனாக இருந்தாலும் பணிவு இல்லாதவனாக இருந்தாலும் உன் உயர்ந்த பழைய கழல் காணும் ஆர்வம் இல்லாதவனாக இருந்தாலும் உன்னைப் பற்றியே பேசாதவனாக இருந்தாலும் என் பிறப்பை அறுத்துவிடு பெருமானே. முத்து போன்றவனே மணி போன்றவனே முதல்வனே முறையாகுமோ, என் அத்தனைக்கும் ஆதரமான உன்னை நான் இனி பிரிந்து இருக்க இயலாதவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | எண்ணப்பதிகம் | பாடல் எண் : 3

 à®Žà®©à¯à®ªà¯‡à®‰à®°à¯à®• நின்அருள் அளித்துன்

இணைமலர் அடிகாட்டி
முன்பே என்னை ஆண்டு கொண்ட
முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி
உயிருண் கின்ற எம்மானே
நண்பே யருளாய் என்னுயிர்
நாதா நின்னருள் நாணாமே. 
 
திடமனமும் கனிந்து நின் அருள் பெற்றிட இணைமலர் திருவடி காட்டி முன்பே என்னை ஆட்கொண்ட முனிவனே. முனிவரின் முழு முதலே இன்பமே அருளி என்னை உருகிடச்செய்து உயிராகி நிலைக்கும் என் தலைவனே, நட்பை அருள் என்னுயிர் நாதனே நின் அருள் கூச்சமின்று கிடைக்கட்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | எண்ணப்பதிகம் | பாடல் எண் : 2

 à®‰à®°à®¿à®¯à¯‡à®©à¯ அல்லேன் உனக்கடிமை

உன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேன் நாயேன் இன்னதென்
றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள்
என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
பொய்யோ எங்கள் பெருமானே. 
 
உனக்கு அடிமையாக இருக்க தகுதியுடையவன் இல்லை, உன்னை பிரிந்து ஒரு பொழுதும் இருந்து அறியேன், இனம் சேர்க்க நாய் போன்ற நான் எது எப்படி என்று அறியேன், சங்கரனே கருணையினால் பெரியவர் ஒருவர் கண்டுக்கொள் என்று பெய்கழல் திருவடி காட்டி பிரியாதே என அருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | எண்ணப்பதிகம் | பாடல் எண் : 1

 à®ªà®¾à®°à¯à®°à¯ வாய பிறப்பற வேண்டும்

பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே
செங்கம லம்மலர்போல்
ஆருரு வாயஎன் ஆரமு தேஉன்
அடியவர் தொகைநடுவே
ஓருரு வாயநின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக்கொண் டருளே.
 
உலகில் உருவம் தாங்காதபடி பிறப்பை அறுக்க வேண்டும், பக்தியும் பெறவேண்டும், சீரான உருவம் கொண்ட சிவ பெருமானே சிவந்த கமல மலர் போல் சிறந்த உருவம் பெற்ற ஆர அமுதே உன் அடியார்களின் கூட்டத்தின் நடுவே ஒரு உருவமாக வந்து நின் திருவருள் காட்டி என்னையும் வெற்றிபெற இணைத்து அருள வேண்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 10

 à®…ங்கணன் எங்கள் அமரர் பெம்மான்

அடியார்க் கமுதன் அவனி வந்த
எங்கள் பிரான்இரும் பாசந் தீர
இகபர மாயதோர் இன்ப மெய்தச்
சங்கங் கவர்ந்துவண் சாத்தி னோடுஞ்
சதுரன் பெருந்துறை ஆளி அன்று
மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த
வகையறி வார்எம் பிரானா வாரே. 
 
உள்முக கண்கள் உடையவன் தேவர்களின் தலைவன், தொண்டர்களுக்கு அமுதானவன் உலகில் வந்த எங்கள் அரசன், இரண்டு விதமான பாசத்தை தீர்த்திடச் செய்து இங்கே மேல் உலகம் போல் இன்பத்தரும் கூட்டத்தை கவர்ந்தவன், வண்ணத்தை பூசிய நான்கானவன், பெருந்துறை ஆள்பவன், அன்று பெண்கள் நிறைந்த மதுரை சேர்ந்த வகை அறிந்துகொள்பவர் தலைவர் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 9

 à®¤à¯‚வெள்ளை நீறணி எம்பெருமான்

சோதிமகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்த ஈசன்
தென்னன் பெருந்துறை ஆளி அன்று
காதல் பெருகக் கருணை காட்டித்
தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளுங்
கிடப்பறி வார்எம் பிரானா வாரே.
 
தூய வெள்ளை நிறத்தை அணிந்த என் பெருமானே, சோதி மகா இந்திர நாதன் வந்து தேவர்கள் வணங்கும் வார்த்தையான ஈசனே, தென்னவனே, பெருந்துறை ஆள்பவனே, அன்று காதல் பெருக கருணைக்காட்டி தன்கழல்காட்டி மனம் நெகிழ குற்றம் அழித்து என்னை காத்து ஆண்டு அருளும் இருப்பை அறிபவர் எங்கள் தலைவர் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 8

 à®ªà¯‚வலர் கொன்றைய மாலை மார்பன்

போருகிர் வன்புலி கொன்ற வீரன்
மாதுநல் லாளுமை மங்கை பங்கன்
வண்பொழில் சூழ்தென் பெருந்து றைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள் ஈசன்
இருங்கடல் வாணற்குத் தீயில் தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும்
உருவறி வார்எம் பிரானா வாரே. 
 
மலர்ந்த பூக்களை வெற்றி மாலையாக அணிந்த மார்பன், கூரிய நாகம் கொண்ட கொடிய புலியை கொன்ற வீரன், பெண்களில் நல்ல ஆளுமை கொண்ட பெண்ணை பாகமாக கொண்டவன், வணம் நிறைந்து எழில் பெருந்தும் பெருந்துறை மன்னன், நிகரற்ற பெரும் புகழ் கொண்ட எங்கள் ஈசன், அடர்ந்த கடலில் அமர்ந்தவற்கு தீயில் தோன்றும் வரைந்த பெண்கள் தோள் சாரும் உருவம் பற்றிய விவரம் அறிபவர் எங்கள் தலைவர் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 7

 à®¨à®¾à®¤à®®à¯ உடையதோர் நற்கமலப்

போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவி யேத்த
ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும்
போதலர் சோலைப் பெருந்து றையெம்
புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல் லார்எம் பிரானா வாரே. 
 
நாதம் உடைய ஓர் நல்ல தாமாரைப் போன்ற அரும்பில் நாடி நன்மை அடைபவர் ஓதிப்பணிந்து விரிந்த மலர் தூவி பாராட்ட ஒளி வளரும் சோதியாம் எங்கள் ஈசன் நிலைக்கும் மொட்டும் மலரும் நிறைந்த சோலை பொருந்தும் பெருந்துறை எங்கள் புண்ணியன் மண்ணில் வந்து தோன்றி ஏற்றதாழ்வை கெடுத்து அருள் செய்யும் பெருமை அறியவல்லவர் எங்கள் தலைவர் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 6

 à®µà¯‡à®µà®¤à¯ திரிபுரம் செற்ற வில்லி

வேடுவ னாய்க்கடி நாய்கள் சூழ
ஏவற்செ யல்செய்யுந் தேவர் முன்னே
எம்பெரு மான்தான் இயங்கு காட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கி யீசன்
எந்தை பெருந்துறை ஆதி அன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொ டுத்த
கிடப்பறி வார்எம் பிரானா வாரே.
 
முப்புறமும் தீயில் அழித்த வில்லை உடையவன், வேட்டையடுபவனாய் வேறி பிடித்த நாய்கள் கூட்டி ஏவல் செய்யும் தேவர்கள் முன்னே எம்பெருமான் தன் காட்டுப்பாட்டில் உள்ள காட்டில் துன்பம் அடைந்த பன்றிக்கு இறக்கம் காட்டி ஈசன் என் தந்தை பெருந்துறை ஆதி அன்று அற்பத்திற்கு அற்பமாய் பால்கொடுத்ததை அறிபவர் என் தலைவன் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 5

 à®µà®¨à¯à®¤à®¿à®®à¯ˆ யோர்கள் வணங்கி யேத்த

மாக்கரு ணைக்கட லாய்அடியார்
பந்தனை விண்டற நல்கும் எங்கள்
பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன்
றோங்கு மதிலிலங் கைஅதனிற்
பந்தணை மெல்விர லாட்கருளும்
பரிசறி வார்எம் பிரானா வாரே. 
 
இமைக்காதவர் வந்து வணங்கி போற்றிடும் மாக்கருணைக் கடலாய் அடியவர்களின் பந்தப்பட்டவனை, எல்லையற்று அருளும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அன்று மறைக்கும் மாயத்திரையாகிய கடலை கடந்தான், அங்கு மதியாக நிற்கும் இலக்கை அடைந்து அதில் பந்தப்படும் மெல்விரலாளுக்கு அருளும் பரிசை அறிபவர் என் தலைவன் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 4

 à®µà¯‡à®Ÿà¯à®°à¯ வாகி மகேந்தி ரத்து

மிகுகுறை வானவர் வந்து தன்னைத்
தேட இருந்த சிவபெரு மாஅன்
சிந்தனை செய்தடி யோங்க ளுய்ய
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி
ஐயன் பெருந்துறை ஆதி அந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டு கொண்ட
இயல்பறி வார்எம் பிரானா வாரே. 
 
இன்பத்தை வேட்டையாட உருவம் கொண்டவன் மேலுலக தேவரும் தன் குறை தீர்க்க தன்னை தேடிட செய்த சிவபெருமான், அவனை சிந்திக்கும்படி செய்து அடியவர்கள் வெற்றி கொள்ள ஆடலுடன் எண்ணக் குதிரை ஏறி அமர்ந்த ஐயன், பெருந்துறை ஆதி அன்று யாவற்றையும் ஆண்டுக்கொண்ட இயல்பை அறிபவர் தலைவன் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 3

 à®…ணிமுடி ஆதி அமரர் கோமான்

ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவ தேறிப்
பாரொடு விண்ணும் பரவி யேத்தப்
பிணிகெட நல்கும் பெருந்து றையெம்
பேரரு ளாளன்பெண் பாலு கந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும்
வகையறி வார்எம் பிரானா வாரே.
 
முடிவை அணிந்த முதல், தேவர் தலைவன், ஆனந்த கூத்தன், பல சமயங்களும் பணிந்து வணங்க வகை செய்திட மண்ணும் விண்ணும் போற்றி வாழ்த்த, பிணி அழித்து நலம் அருளும் பெருந்துறை எம் பேரருளாளன் பெண் பாலுக்கு உகந்து மணி என்ற வலை கொண்டு அனைத்திற்கும் ஆதாரமான மீனை விசிறிப் பிடிக்கும் வகை அறிபவர் எம் தலைவன் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 2

 à®®à®¾à®²à®¯à®©à¯ வானவர் கோனும் வந்து

வணங்க அவர்க்கருள் செய்த ஈசன்
ஞாலமதனிடை வந்தி ழிந்து
நன்னெறி காட்டி நலம்திகழுங்
கோல மணியணி மாட நீடு
குலாவு மிடவை மடநல் லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந்
திறமறி வார்எம் பிரானா வாரே. 
 
திருமாலுடன் பிரம்மனும் வானவர் தலைவனும் வந்து வணங்கிட அவர்களுக்கு அருள் செய்த ஈசன் உலகத்தின் வாசலாக வந்து இறங்கி நல் ஒழுக்கத்தை காட்டி நலம் வளர்ந்த மணிமாடமுடன் நீண்டு உலவும் இடத்தில் குழந்தை குணம்கொண்ட பெண்களுக்கு மதிப்பு வளரும்படியான கருணை அளிக்கும் திறத்தை அறிபவர் எம் தலைவன் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 1

 à®®à®¾à®¤à®¿à®µà®°à¯ பாகன் மறைப யின்ற

வாசகன் மாமலர் மேய சோதி
கோதில் பரங்கரு ணையடி யார்
குலாவுநீ திகுண மாக நல்கும்
போதலர் சோலைப் பெருந்து றையெம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்ந்
தாதிப் பிரமம் வெளிப்படுத்த
அருளறி வார்எம் பிரானா வாரே.
 
பெண்களின் பகுதியானவன், வேதம் வகுத்த வாசகன், மாமலர் மேவும் சோதி, குற்றமற்ற பரத்தின் கருணையான தொண்டர் உலவும் நீதியை குணமாக அருளும் அரும்பு நிறைந்த சோலைப் பெருகி இருக்கும் துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்து எழுந்தருளி பிரம்மம் வெளிப்படுத்தும் அருளை அறிபவர் தலைவன் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 10

 à®®à¯à®¤à¯à®¤ னைமுதற் சோதியை முக்கண்

அப்ப னைமுதல் வித்தினைச்
சித்த னைச்சிவ லோக னைத்திரு
நாமம் பாடித் திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின் நீர்உங்கள்
பாசந் தீரப் பணிமினோ
சித்த மார்தருஞ் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே. 
 
முடிவானவனை முதலாக நின்ற சோதியை மூன்று கண் உடைய அப்பனை விதையானவனை சித்தனை சிவலோகத்தில் இருப்பவனை அவனது பெயர் சொல்லி பாடித்திரியும் பத்தர்களே இங்கே வாருங்கள் நீங்கள் உங்களை பாசத்தோடு பணி செய்ய ஆட்படுவீர்கள் என்றால் சித்தமுடன் அளித்த சேவடிக்கண் நம் சென்னி மன்னி என திகழுமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 9

 à®µà®®à¯à®ª னாய்த்திரி வேனை வாவென்று

வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்தப்
புறத்த னாய்நின்ற எம்பிரான்
அன்ப ரானவர்க் கருளி மெய்யடி
யார்கட் கின்பந் தழைத்திடுஞ்
செம்பொன் மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே. 
 
வீணாக திரிபவனை வா என அழைத்து வலிமையான செயல்களும் பகையும் மாய்த்த தேவன் உலகுடன் உள்ள உறவை அறுத்து புறத்தவனாய் நின்ற என் தலைவன் அன்புள்ளவர்களுக்கு அருளி மெய் அடியார்களுக்கு இன்பம் வளர்த்திடும் செம்பொன் மாமலர் சேவடிக்கண் சென்னி மன்னி என திகழுமாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 8

 à®ªà¯à®´à¯à®µà®¿ னாற்பொதிந் திடுகு ரம்பையிற்

பொய்த னையொழி வித்திடும்
எழில்கொள் சோதியெம் ஈசன் எம்பிரான்
என்னுடை யப்பன் என்றென்று
தொழுத கையின ராகித் தூய்மலர்க்
கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு
வழுவிலாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே. 
 
சிறு உயிர்களால் நிரப்பபட்ட இந்த உடலில் பொய்யானவற்றை ஒழித்திடும் எழில் நிறை சோதி எம் ஈசன் எம் தலைவன் என்னுடைய அப்பன் என்று தொழுபவனாகி தூய மலர் போன்ற கண்கள் நீர் வடியும் தொண்டர்களுக்கு ஏமாற்றம் தராத சேவடிக் கண் நம் சென்னி மன்னி என மலருமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 7

 à®ªà®¿à®±à®µà®¿ யென்னுமிக் கடலை நீந்தத்தன்

பேர ருள்தந் தருளினான்
அறவை யென்றடி யார்கள் தங்க
ளருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக் கொண்ட
பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.
 
பிறவி என்ற இந்தக் கடலை நீந்திக் கடக்கவே தனது பேரருளை தந்து அருளினான், அறிந்தவர்கள் என்று கூறும்படி அடியார்களின் கூட்டத்தில் கலக்க செய்து உறவு பாராட்டி உயர்த்திய தலைவன் தன் உண்மை பெருக்கமாம் திறமை காட்டியபடி சேவடிக் கண் நம் சென்னி மன்னி என திகழுமாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 6

 à®šà®¿à®¤à¯à®¤ மேபுகுந் தெம்மை யாட்கொண்டு

தீவி னைகெடுத் துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்க ழற்கணே
பன்ம லர்கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவு லகுக்கும்
அப்பு றத்தெமை வைத்திடு
மத்தன் மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே. 
 
எண்ணமாகவே என்னில் புகுந்தபடி ஆட்கொண்டு  தீவினை அழித்து முழுமைக்கான பக்தி தந்து தன் பொன் திருவடியில் பல மலர் கொய்து சேர்த்ததும் முக்தி தந்து மூவுலகிற்கும் அப்புறமாக வைத்திடும் மாமலர் சேவடிக் கண் நம் சென்னி மன்னி என மலருமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 5

 à®®à®¾à®¯ வாழ்க்கையை மெய்யென் றெண்ணி

மதித்தி டாவகை நல்கினான்
வேய தோளுமை பங்கன் எங்கள்
திருப் பெருந்துறை மேவினான்
காயத் துள்ளமு தூற ஊறநீ
கண்டு கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.
 
மாயமாகும் இந்த வாழ்க்கையை நிலை என்று எண்ணி மதிப்பதை நிறுத்தும் வகை அருளினான், மூங்கில் போன்ற தோளுடைய மங்கையை பாகமாக கொண்ட எங்கள் திருப்பெருந்துறை மேவியவன். உடலின் உள்ளே அமுது ஊறச் செய்து என்னை கண்டுகொள் என்று காட்டிய குழந்தை போன்ற மாமலர் சேவடிக் கண் நம் சென்னி மன்னி எனத் திகழுமாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 4

 à®ªà®¤à¯à®¤à®°à¯ சூழப் பராபரன்

பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான்
தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்த னாகிவந் தில்பு குந்தெமை
ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னி மலருமே.
 
பக்தியுள்ளவர்கள் சூழ்ந்து இருக்க பராபரன் இந்த உலகில் பார்பான் எனச் சித்தர்கள் சூழ்ந்திட சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான். ஏமாற்றுபவர் போல் என் இல்லம் வந்து புகுந்தான், எம்மை ஆளவும் பணிசெய்யவும் பணித்தான், கொடுத்த மாமலர் சேவடிக் கண் நம் சென்னி மன்னி மலர் எனலாகுமே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 3

 à®¨à®™à¯à®•à¯ˆ மீரெனை நோக்கு மின்நங்கள்

நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெ ருந்துறை
மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங் கொண்டெம்
உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னிப் பொலியுமே.
 
நாட்டமுள்ள பெண்களே எம்மை பாருங்கள் நம் தலைவன் நமது செயல்களை ஏற்பவன், தென்னை தோப்புகள் சூழ்ந்த பெருந்துறை வலம் வரும் காவலன் நாயகன், பெண்கள் தம் கையில் வளையள் அணிந்தோம், உயிர் எனக் கொண்ட எம்மை ஏவல் செய்வான், பொங்கும் மாமலர் சேவடி கண் நம் சென்னி மன்னி நிலைபெற்று இருக்குமாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 2

 à®…ட்ட மூர்த்தி அழகன் இன்னமு

தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவ லோக நாயகன்
தென்பெ ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர்
பாகம் வைத்த அழகன்றன்
வட்ட மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே.
 
எட்டு திசை தலைவன் இனிமையான அமுது போன்ற ஆனந்த வெள்ளமானவன், மேலானவன் உண்மையான உடலுக்கு நாயகன், தெரியும் பெரிய துறைக்கு காவலன், வாசனையான கூத்தல் உடைய மங்கையை ஒரு பாகமாக கொண்ட அழகன், வட்டமான மாமலர் சேவடிக் கண் நம் சென்னி  மன்னி மலர் எனப்படுமாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 1

 à®¤à¯‡à®µ தேவன்மெய்ச் சேவகன்

தென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலும் அரியொ ணாமுத
லாய ஆனந்த மூர்த்தியான்
யாவ ராயினும் அன்ப ரன்றி
அறியொ ணாமலர்ச் சோதியான்
தூய மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னிச் சுடருமே. 
 
தேவாதி தேவன் உண்மைக் காவலன் தெரியும் பெருந்துறைக்கு நாயகன் மும்மூர்த்திகளாலும் அறியமுடியாத முதலான ஆனந்த மூர்த்தியானவன், யாராக இருந்தாலும் அன்பு இல்லாதவர்கள் அறியமுடியாத மலர் போன்ற சோதியான், தூய மாமலர் சேவடிக் கண் சென்னி மன்னி சுடர் எனப்படுமாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 10

 à®šà¯†à®±à®¿à®¯à¯à®®à¯ இப்பிறப் பிறப்பிவை நினையாது

செறிகுழ லார்செய்யுங்
கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும்
உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன்
இணைமலர்க் கழல்காட்டி
அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே.
 
வளரும் இந்த பிறப்பு இறப்பு பற்றி நினைக்காமல் வளர்ந்த கூந்தல் உடையவர் செய்யும் செயல்களையும் மீன் போன்ற கண்களையும் கண்டு களித்து இருப்பவனை இறைவன் என் தலைவன் எல்லைகள் இல்லாதவன் இணை மலர் கழல்காட்டி அறிவு தந்து என்னை ஆண்டு அருளிய அற்புதத்தை அறியவில்லையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 9

 à®ªà¯Šà®šà¯à®šà¯ˆ யானஇப் பிறவியிற் கிடந்துநான்

புழுத்தலை நாய்போல
இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங்
கிணங்கியே திரிவேனை
இச்ச கத்தரி அயனுமெட் டாததன்
விரைமலர்க் கழல்காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே.
 
மறைந்த போகும் இந்தப்பிறவியில் இருந்து நான் புழு பிடித்த நாய்போல் ஆசை கொண்ட ஏழைகளுக்கே செய்ய இணங்கியபடி திரிபவனை இந்தருணமே அரிக்கும் அயனுக்கும் எட்டாத இணை மலர் கழல்காட்டி அப்பன் என்னையும் ஆண்டு ஆட்கொண்டு அருளிய அற்புதம் அறியவில்லையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 8

ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின

இருவினை அறுத்தென்னை

ஓசை யாலுணர் வார்க்குணர் வரியவன்

உணர்வுதந் தொளியாக்கிப்

பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன்

பரம்பெருங் கருணையால்

ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய

அற்புதம் அறியேனே. 

 

அங்கும் இங்கும் அலையும் ஊசல் போல் ஆடும் உடலும் உயிரும் இரு வினைகளும் அறுபடச் செய்து என்னை ஓசையினால் உணர்பவருக்கும் உணர கடினமானவன் உணர்வை தந்து ஒளியாக்கி பாசத்தால் வந்த பற்றை அறுத்து உயர்வு செய்த பரம் பொருள் பெருங்கருணையால் ஆசை தீர்ந்தபடி இருக்கும் அடியார்கள் கூட்டத்தில் கூட்டிய அற்புதம் அறியவில்லையே.

#திருவாசகம்

 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 7

 à®‡à®ªà¯à®ªà®¿ றப்பினில் இணைமலர் கொய்துநான்

இயல்பொடஞ் செழுத்தோதித்
தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான்
தடமுலை யார்தங்கள்
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை
மலரடி யிணைகாட்டி
அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 
 
இந்த பிறப்பில் நான் இணையான மலரை பற்றி இயல்புடன் ஐந்து எழுத்தை ஓதி குற்றம் ஒன்றுத் செய்யாதபடி திருவடியில் நில்லாமல் குறிப்பிடும்படி மார்பகம் கொண்ட மங்கையில் மையிட்ட கண்களுக்கு மயங்கி இருந்தவன் என்னை மலரடி இணை காட்டி அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதத்தை அறியவில்லையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 6

 à®µà®£à®™à¯à®•à¯à®®à¯ இப்பிறப் பிறப்பிவை நினையாது

மங்கையர் தம்மோடும்
பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான்
பித்தனாய்த் திரிவேனைக்
குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல்
கோமளத் தொடுங்கூடி
அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 
 
மதிப்பிற்குரிய இந்த பிறப்பு இறப்பை நினைக்காமல் இளம்பெண்ணின் இதழ் வெள்ளத்தில் மூழ்கியபடி பைத்தியமாய் திரிந்தவனை குணமும் குறியும் இல்லாத குணக்கடல் அழகுடன் இணைந்தபடி வந்து என்னை ஆட்கொண்டு அருளிய அற்புதத்தை அறியவில்லையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 5

 à®®à®¾à®Ÿà¯à®žà¯ சுற்றமும் மற்றுள போகமும்

மங்கையர் தம்மோடுங்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு
குலாவியே திரிவேனை
வீடுதந் தென்றன் வெந்தொழில் வீட்டிட
மென்மலர்க் கழல்காட்டி
ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர்
அற்புதம் அறியேனே.
 
செல்வமும் சொந்தமும் மற்றும் பல படைப்பும் இளம் பெண்கள் என்றும் கூடி அதன் பொருட்டு பெருமையுடன் உலவித் திரிபவனை சரியான இடத்தை காட்டி என் வீணான வேலைகள் விலகிட மென்மையான கழல்கள் காட்டி ஆட்டுவித்து என் அகம் புகுந்து ஆண்ட ஓர் அற்புதத்தை அறியவில்லையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 4

 à®ªà¯Šà®°à¯à®¨à¯à®¤à¯à®®à¯ இப்பிறப் பிறப்பிவை நினையாது

பொய்களே புகன்றுபோய்க்
கருங்கு ழல்லினார் கண்களால் ஏறுண்டு
கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத்
திருவொடும் அகலாதே
அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 
 
தனக்கு பொருத்தமானதாக அமையும் இந்த பிறப்பு இறப்பை நினைக்காமல் பொய்களையே பேசி கருமை நிற கூந்தல் கொண்ட பெண்களின் கண்களுக்கே அடிமைப்பட்டு கலக்கமுடன் இருப்பவனை திருந்தும் சேவடி சிலம்பினை ஒலியச் செய்து மதிப்புடன் தன்னைவிட்டு அகலாமல் ஆண்டு அருளும் அற்புதம் அறியவில்லையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 3

 à®¨à®Ÿà®¿à®¤à¯à®¤à¯ மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து

நானென தெனும்மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக்
கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய
அரும்பொருள் அடியேனை
அடித்த டித்துவக் காரமுன் தீற்றிய
அற்புதம் அறியேனே. 
 
நடித்தபடி இந்த உலகில் பொய் பல சொல்லி நான் என்றும் எனது என்றும் காயம்பட்ட இடத்திலேயே மீண்டும் முன் வினை என்ற காயம்பட புலம்பும் ஒருவனாக திரியும் என்னை பற்றி இழுத்து பெருமறையில் முன் நின்ற அரும்பொருள் அடித்து திருத்தி சரியாக மாற்றிய அற்புதத்தை பேசி முடியாதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 2

 à®à®¯à¯à®¨à¯à®¤ மாமல ரிட்டுமுட் டாததோர்

இயல்பொடும் வணங்காதே
சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந்
தலைதடு மாறாகிப்
போந்தி யான்துயர் புகாவணம் அருள்செய்து
பொற்கழ லிணைகாட்டி
வேந்த னாய்வெளி யேஎன்முன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே. 
 
அழகிய மாமலரை சூட்டி முட்டாத இயல்பும் வணங்காதபடியும் குளிர்ச்சியுடனும் இருக்கும் மார்புடைய நல்ல பெண்ணுடன் நிலை தடுமாறி துயரத்தில் அழுந்தாதபடி அருள் செய்து பொன் அடியைக் காட்டி அரசனாய் வெளிப்படுத்தி நின்ற ஓர் அற்புதமே உன்னை பேசி முடியாதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 1

 à®®à¯ˆà®¯ லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும்

ஆழியுள் அகப்பட்டுத்
தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான்
தலைதடு மாறாமே
பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன்
பொன்னடி யிணைகாட்டி
மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே. 
 
மயக்கத்துடன் இந்த பூ உலக வாழ்க்கை என்ற கடலில் அகப்பட்டு பெண்கள் என்ற ஆற்று ஓடையில் கலக்கப்பட்டு தலை மூழ்கி தடுமாறாமல் பொய் எல்லாம் விட்டு ஒழிய திருவருள் தந்து பொன் அடியைக்காட்டி மெய்யானவனாய் என்னை வெளிப்படுத்தி நின்ற ஓர் அற்புதமே உன்னை பேசி முடியாதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 10

 à®•à¯Šà®®à¯à®®à¯ˆ வரிமுலைக்

கொம்பனையாள் கூறனுக்குச்
செம்மை மனத்தால்
திருப்பணிகள் செய்வேனுக்
கிம்மை தரும்பயன்
இத்தனையும் ஈங்கொழிக்கும்
அம்மை குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
மெலிந்த உடலில் வரைந்த மார்பகத்தை கொண்ட கொம்பு போன்றவனை பாகமாக கொண்டவனுக்கு செழுமையாக மனதால் திருப்பணிகள் செய்வோர்க்கு துன்பம் தரும் செயல் அழித்து ஒழிக்கும் அம்மை குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 9

 à®ªà®¾à®´à¯à®šà¯à®šà¯†à®¯à¯ விளாவிப்

பயனிலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தாற்
கிழியீடு நேர்பட்டுத்
தாட்செய்ய தாமரைச்
சைவனுக்கென் புன்தலையால்
ஆட்செய் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.
 
வீணாக்கும் ஒன்றை விரும்பி பயன் இன்றி தவிப்பவர்க்கு இதற்கு முன் செய்த தவத்தால் மறைத்த பொருள் எதிர்பட்டது போல் தாமரை இதழ் சைவன் ஆனவனுக்கு தற்பெருமை அடையும் தலையில் ஆட்சி செய்யும் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 8

 à®‡à®Ÿà®•à¯à®•à¯à®™à¯ கருமுருட்

டேனப்பின் கானகத்தே
நடக்குந் திருவடி
என்தலைமேல் நட்டமையாற்
கடக்குந் திறல்ஐவர்
கண்டகர்தம் வல்லரட்டை
அடக்குங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
பள்ளம் பறிக்கும் கருத்த பன்றி காட்டில் நடக்க துணையாகும் திருவடி என் தலைமேல் நட்டதினால் எதையும் கடக்க உதவும் புலால் ஐந்தின் வல்லமையான அரட்டையை அடக்கும் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 7

 à®®à®¤à®¿à®•à¯à®•à¯à®¨à¯ திறலுடைய

வல்அரக்கன் தோள்நெரிய
மிதிக்குந் திருவடி
என்தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசுபாசம்
ஒன்றுமிலோம் எனக்களித்திங்
கதிர்க்குங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
பாராட்டும் திறன் பெற்ற வலிமையான அரக்கன் தோள் நொறுங்கிட மிதிக்கக் கூடிய திருவடி என் தலைமேல் வீற்றிருக்க சுவாசத்தை சீரழிக்கும் பசு பாசம் ஒன்றும் இல்லாதபடி செய்து மகிழ்ச்சியை அளிக்கும் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 6

 à®•à¯Šà®®à¯à®ªà®¿à®²à¯ அரும்பாய்க்

குவிமலராய்க் காயாகி
வம்பு பழுத்துடலம்
மாண்டிங்ஙன் போகாமே
நம்புமென் சிந்தை
நணுகும்வண்ணம் நானணுகும்
அம்பொன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.
 
கொம்பில் சிறு அரும்பாய் இருந்து மலர்ந்து பூத்து காயாகி வளர்ந்து பழுத்திடும் உடலாய் இங்கு மாண்டு போகாமல், சிந்தை விரும்பி ஏற்கும் வண்ணம் நான் அணுகும் அருமையான பொன் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 5

 à®ªà¯‡à®°à¯à®™à¯ குணமும்

பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு துரிசறுத்துத்
தொண்ட ரெல்லாஞ்
சேரும் வகையாற்
சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
சிறந்த குணமும் நோயாக மாறும் பிறவியையும் வினைகளால் கிடைக்கும் பரிசையும் அழித்து தொண்டர்கள் எல்லாரும் சேரும் வகையில் சிவன் கருணைத் தேன் அருந்தி தேறும் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 4

 à®•à¯à®±à®¿à®¯à¯à®®à¯ நெறியுங்

குணமுமிலார் குழாங்கள்தமைப்
பிறியும் மனத்தார்
பிறிவரிய பெற்றியனைச்
செறியுங் கருத்தில்
உருத்தமுதாஞ் சிவபதத்தை
அறியுங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
இலக்கும் நேர்மையும் குணமும் இல்லாதவர்கள் கூட்டங்களாக கூடி தன்னை பிரிவினைக்கு உட்படுத்தும் மனத்துடன் இருப்பார்கள். பிறிவு என்று ஒன்று இல்லாத அடையப்பட்டவனை செழுமையான கருத்துடன் உருக்கமாய் நிலைக்கும் சிவபதத்தை அறியும் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 3

 à®Žà®©à¯à®ªà¯à®³à¯ ளுருக்கி

இருவினையை ஈடழித்துத்
துன்பங் களைந்து
துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்புள்ள வற்றை
முழுதழிய உள்புகுந்த
அன்பன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
எலும்பும் உருகிட இருவினையும் அழித்து துன்பம் களைந்து விருப்பமுடன் விருப்பத்தை தூய்மை செய்து பழயனவற்றை முற்றிலும் அழித்து உள்ளம் புகுந்த அன்பன் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 2

 à®¤à¯à®Ÿà®¿à®¯à¯‡à®°à¯ இடுகிடைத்

தூய்மொழியார் தோள்நசையால்
செடியேறு தீமைகள்
எத்தனையுஞ் செய்திடினும்
முடியேன் பிறவேன்
எனைத்தனதாள் முயங்குவித்த
அடியேன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
உடுக்கை போல் இடையும், மயக்கும் மொழியும் கொண்டு அழகிய தோள் உடையவர் மேல் உள்ள பற்றால் வளரும் தீமைகள் எத்தனை செய்தாலும் இறக்கமாட்டேன் இனி பிறக்கவும் மாட்டேன். என்னை தனக்கானவனாய் கூட்டி அடிமை எந்தன் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 1

 à®“டுங் கவந்தியுமே

உறவென்றிட் டுள்கசிந்து
தேடும் பொருளுஞ்
சிவன்கழலே எனத்தெளிந்து
கூடும் உயிருங்
குமண்டையிடக் குனித்தடியேன்
ஆடுங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
பிச்சை ஓடும் ஒற்றை ஆடையும் உறவாகக் கொண்டு உள்ளம் கசிந்து தேடும் பொருள் சிவன் திருவடி எனத் தெளிந்து கூடி நின்ற உயிருடன் நிறைவாய் கூடி அடிமை நான் ஆடிக் களிக்கவில்லை ஆண்டவனை அறிந்து கண்டுக் கொண்டேன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்புலம்பல் | பாடல் எண் : 3

 à®‰à®±à¯à®±à®¾à®°à¯ˆ யான்வேண்டேன்

ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங்
கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
கசிந்துருக வேண்டுவனே. 
 
உறவாக அமைந்தவர்களை நான் விரும்பி வேண்டுவதில்லை, ஊரை விரும்பி வேண்டுவது இல்லை, பெயரையும் விரும்பி வேண்டுவது இல்லை, கற்றவரையும் நான் விரும்பி வேண்டுவது இல்லை, கற்க வேண்டயதும் இனிமையானதும் சிறிய ஆற்றில் உறையும் கூத்தானே உன் குரை கழற்கே கற்று அறிந்தவர் மனம் போலக் கசிந்து உருக மட்டும் வேண்டுவேன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்புலம்பல் | பாடல் எண் : 2

 à®šà®Ÿà¯ˆà®¯à®¾à®©à¯‡ தழலாடீ

தயங்குமூ விலைச்சூலப்
படையானே பரஞ்சோதி
பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில்சூழ்
பெருந்துறையாய் அடியேன்நான்
உடையானே உனையல்லா
துறுதுணைமற் றறியேனே.
 
முடி கொண்டவனே, ஓய்வு பெற்று தயக்கத்தை கடந்து கூர்மையான படையானவனே, பரஞ்சோதி, பசுபதி பாசம் அழிக்கும் வெளிப்படையான விடையாக இருப்பவனே, விரியும் பொழில் சூழ்ந்த பெருந்துறையில் இருப்பவனே, அடிமையான என்னை உரிமையாக கொண்டவனே, உன்னை இல்லாமல் வேறு துணை மாற்றிட அறியேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 10

 à®¨à®¾à®©à¯‡à®¯à¯‹ தவஞ்செய்தேன்

சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமுமாய்த்
தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம்
புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை
ஒறுத்தன்றே வெறுத்திடவே. 
 
நானாகவா தவம் செய்தேன், சிவாயநம எனப்பெற்றேன், தேனாக இனிமையான அமுதாக தித்திக்கும் சிவபெருமான் தானாகவே என் உள்ளம் புகுந்து அடிமை எனக்கு அருள் செய்தான், உடலில் ஊரும் உயிர் வாழ்க்கை உணர்ந்து உலக பற்றை வெறுத்திடவே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 9

 à®®à®°à¯à®µà®¿à®©à®¿à®¯ மலர்ப்பாதம்

மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொறும் மிகஅலறிச்
சிவபெருமா னென்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத்
தடங்கடலிற் படிவாமா
றருளெனக்கிங் கிடைமருதே
இடங்கொண்ட அம்மானே. 
 
இனிமையாக மாறும் மலர் போன்ற பாதத்தை மனதில் வளர்த்து உருகி தெளிந்து தேறி, மிகுந்த சப்தமுடன் சிவபெருமானே என்று வாழ்த்த உன் பெரிய கருணையை பருகினேன், தடங்கள் இன்றி உன் அன்புக் கடலில் படிந்து அருளால் இணங்கிட இடம் தந்த அம்மானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 8

 à®®à¯‚த்தானே மூவாத

முதலானே முடிவில்லா
ஓத்தானே பொருளானே
உண்மையுமாய் இன்மையுமாய்ப்
பூத்தானே புகுந்திங்குப்
புரள்வேனைக் கருணையினால்
பேர்த்தேநீ ஆண்டவா
றன்றேஎம் பெருமானே. 
 
முழுமையானவனே, முற்றுபெறாத முதலானவனே, முடிவற்ற தனித்துவமானவனே, ஆதாரமானவனே, உள்ளதாய் மறுப்பதாய் பூத்தவனே, கெட்டு அழியும் என் உள்ளம் புகுந்து கருணையினால் பாதுகாத்தாய் ஆண்டவா அன்றே எம்பெருமானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 7

 à®Žà®©à¯à®ªà®¾à®²à¯ˆà®ªà¯ பிறப்பறுத்திங்

கிமையவர்க்கும் அறியவொண்ணாத்
தென்பாலைத் திருப்பெருந்
துறையுறையுஞ் சிவபெருமான்
அன்பால்நீ அகம்நெகவே
புகுந்தருளி ஆட்கொண்ட
தென்பாலே நோக்கியவா
றன்றேஎம் பெருமானே. 
 
என் பொருட்டு எனது பிறப்பை அறுத்து கண்கள் இமைக்காதவரும் அறியமுடியா தென்னகத்தே திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே அன்பால் என் அகம் நெகிழ்திட புகுந்து அருளி ஆட்கொண்ட என்மீது பார்வை அன்றே சொலுத்தியவனே எம்பெருமானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 6

 à®ªà®žà¯à®šà®¾à®¯ அடிமடவார்

கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சாய துயர்கூர
நடுங்குவேன் நின்னருளால்
உய்ஞ்சேன்எம் பெருமானே
உடையானே அடியேனை
அஞ்சேலென் றாண்டவா
றன்றேஅம் பலத்தமுதே. 
 
மங்கையரின் கடைக்கண்ணால் பஞ்சு போல் அடிபட்டு இடர்பட்டு நஞ்சுண்ட துயர் கொண்டு நடுங்குகிறேன். உன் அருளால் பிழைத்தேன் பெருமானே, என்னை உடமையாக்கியவனே, அடிமையாகிய என்னை அஞ்சாதே என்று ஆள்பவனே அம்பலத்து அமுதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 5

 à®•à®±à¯à®±à®±à®¿à®¯à¯‡à®©à¯ கலைஞானம்

கசிந்துருகேன் ஆயிடினும்
மற்றறியேன் பிறதெய்வம்
வாக்கியலால் வார்கழல்வந்
துற்றிறுமாந் திருந்தேன்எம்
பெருமானே அடியேற்குப்
பொற்றவிசு நாய்க்கிடுமா
றன்றேநின் பொன்னருளே. 
 
கலையும் ஞானமும் கற்று அறியவில்லை, கசிந்து உருகவும் அறியவில்லை என்றாலும் மாறுபட்டு பிற தெய்வத்தை பேச்சிக்கு கூட ஏற்றதில்லை என பெருமையோடு இருந்தேன் பெருமானே. உன் அடிமையான எங்களுக்கு நாய்க்கு பொன்னால் ஆன ஆசனம் போன்றது நின் அருளே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 4

 à®ªà®šà¯à®šà¯ˆà®¤à¯à®¤à®¾à®²à¯ அரவாட்டீ

படர்சடையாய் பாதமலர்
உச்சத்தார் பெருமானே
அடியேனை உய்யக்கொண்
டெச்சத்தார் சிறுதெய்வம்
ஏத்தாதே அச்சோஎன்
சித்தத்தா றுய்ந்தவா
றன்றே உன் திறம்நினைந்தே. 
 
வளப்படவே பாம்பை வளர்த்து வணங்கமுடி கொண்டவனாய் உள்ளவனின் பாதமலரை உச்சத்தில் வைத்திருப்பவர் பெருமானே, அடிமை என்னை தன்வசம் செய்து அச்சத்தால் சிறு தெய்வத்தை போற்றதபடி காத்தவனே. உன் திறம் நினைத்தே உருகினேன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 3

 à®†à®¤à®®à®¿à®²à®¿ யான்பிறப்

பிறப்பென்னும் அருநரகில்
ஆர்தமரும் இன்றியே
அழுந்துவேற் காவாஎன்
றோதமலி நஞ்சுண்ட
உடையானே அடியேற்குன்
பாதமலர் காட்டியவா
றன்றேஎம் பரம்பரனே. 
 
ஆதரமாக எதையும் உடையாக்கிக் கொள்ளாதவன், பிறப்பு இறப்பு என்ற தனித்துவமான நரகத்திற்குள் அமர்வது இல்லாமல், அப்படி அதில் மூழ்குபவர்களுக்கு காவலாக நின்ற விடத்தை உண்டு நிற்பவனே, அடிமை எங்களுக்கு பாதமலரை காட்டியவா என்பேன் எம் பரம்பரனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 2

 à®ªà®£à¯à®£à®¾à®°à¯à®¨à¯à®¤ மொழிமங்கை

பங்காநின் ஆளானார்க்
குண்ணார்ந்த ஆரமுதே
உடையானே அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட்
டாள்வாய்நீ வாஎன்னக்
கண்ணார உய்ந்தவா
றன்றேஉன் கழல்கண்டே. 
 
பண்பட்ட வார்த்தை சொல்லும் பெண்ணை பாகமாக கொண்ட உனக்கு பணிந்தவருக்கு உள்ளார்ந்த ஆர அமுதே, எல்லாம் உடையவனே அடிமை என்னை புவியில் பிறக்கும் பிறப்பை அறுத்து அருள்வயாக. உன்னையே வா என கண்கள் தீர்க்கமாய் காண உயர்ந்தவர் உன் திருவடி கண்டே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 1

 à®‡à®°à¯à®®à¯à®ªà¯à®¤à®°à¯ மனத்தேனை

ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக்
காட்டினைஉன் கழலிணைகள்
ஒருங்குதிரை உலவுசடை
உடையானே நரிகளெல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவா
றன்றேஉன் பேரருளே.
 
இரும்பு போல் கடினமான மனம் உடைய என்னை உன்வசம் ஈர்த்து எலும்பும் உருகும்படி செய்து கரும்பு தரும் சுவைபோல் எனக்கு உன்னை காட்டினாய், விலகும் திரையுடன் உலவும் சடைகொண்டவனே நரிகளை நல்லகுதிரையாக மற்றியது போல் உள்ளது உன் பேரருளே.  
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 10

 à®ªà¯à®©à¯à®ªà¯à®²à®¾à®²à¯ யாக்கை புரைபுரை கனியப்

பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 
 
பழுதடையும் புலன்கள் கொண்ட உடல் எங்கெங்கும் இன்பம் சுரக்க தங்கத்தால் செய்த கோயில்போல் புகுந்தான். எலுப்பும் உருக எளிமையாக ஆண்ட ஈசனே அழுக்கு இல்லாத மாமணியே, துன்பம், பிறப்பு ,இறப்பு, மயக்கம் என்ற அனைத்தையும் அறுத்த நல்ல சோதியே, இன்பமே உன்னை உறுதியாய் பற்றினேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 9

 à®ªà®¾à®²à¯à®¨à®¿à®©à¯ˆà®¨à¯ தூட்டுந் தாயினும் சாலப்

பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
 
பாலை மறக்காமல் நினைவுடன் ஊட்டும் தாயைவிட பரிவுடன் நீ எனக்கு ஊனினை உருக்கி உள்ளே ஒளியை பெருக்கி குறையாத ஆனந்தம் என்ற தேனை பொழிந்திடும் வெளி எங்கும் நிறைந்த செல்வமே சிவபெருமானே, நான் உன்னை உறுதியாய் பற்றினேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 8

 à®…த்தனே அண்டர் அண்டமாய் நின்ற

ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 
 
பெற்றவனே பெரிய அண்டத்து அண்டமாய் நின்ற முதலே, எப்படியும் முடிவை அடையாத சித்தனே, பக்தர்கள் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே, பித்தனே எல்லா உயிர்களாய் உருவாகி வாழ்ந்து முடியும் நிலையாய் நிற்கும் ஏமாற்றுக்காரனே, உன்னை உறுதியாய் பற்றினேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 7

 à®ªà®¾à®šà®µà¯‡ ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்

பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 
 
பாசத்தின் வேர் அறுக்கும் பழைமையான பொருளை பற்ற இந்த அடிமைக்கு அருளி, என் பூசனை ஏற்று என் சிந்தையுள் புகுந்து, மலர் பாதம் காட்டிய பொருளே, வளமையான விளக்கே செழுமையான சுடரின் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே, ஈசனே உன்னை உறுதியாய் பற்றினேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 6

 à®…றவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்

டளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட
பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன்
செல்வமே சிவபெரு மானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
 
கொடிய கருவியான என் மனமே கோயிலாக் கொண்டான், அளவற்ற ஆனந்தம் அருளினான், பிறவி வேர் அறுத்தான், என் முழு குடியையும் ஆண்டான். முதலும் முடிவமான என் பொருளே, திறந்த இடத்தில் கண்ட காட்சியே அடிமை என் செல்வமே சிவபெருமானே, முடிவிலே உன்னை உறுதியாய் பற்றினேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 5

 à®’ப்புனக் கில்லா ஒருவனே அடியேன்

உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
 
ஒப்பிட்டுப் பார்க்க நிகர் இல்லாத ஒருவனே, அடிமை என் உள்ளத்தில் ஒளிரும் ஒளியே, உண்மைப் பொருள் அறியாத நடனமாதருக்கும் விரும்பியதை அருளும் தனித்துவமான அன்பே, சொல்லமுடியாத அரிய செழுமையான சுடரே, செயல்களின் செல்வமே சிவபெருமானே, எங்கு கிடைப்பாயோ அங்கே உன்னை இருக பற்றினேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 4

 à®…ருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே

பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 
 
அருளை உடைமையாக கொண்ட வெளிச்சமே, தனித்திறம் படைத்த கனியே, அதிகமாய் அருந்தவம் செய்யும் கூட்டத்தின் மன்னனே, பொருளை உடைமையாக கொண்ட கலையே, புகழுக்கு அப்பாற்பட்ட போகமே, யோகத்தின்  புதிய வெளிப்பாடே, தெளிந்த அடியார்களின் சிந்தையில் புகுந்த செல்வமே, சிவபொருமானே, இருள் நிறைந்த இடத்தில் இருந்தபடியே உன்னே இருக பிடித்தேன், எங்கே எழுந்து அருள்வாய் இனியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 3

 à®…ம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
 
தாயே தகப்பனே நிகர் இல்லா மணியே, அன்பில் விளைந்த ஆர அமுதே, பொய்களை வளர்த்து குப்பைகளை சுமந்து காலத்தை குறைத்துக்கொண்ட புழுவாய் நெளியும் கிழான எனக்கு செம்மையே நிறைய சிவபதம் கொடுத்த செல்வமே, சிவபெருமானே, இப்பொழுதே உம்மை சிக்கெனப் பிடித்தேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 2

 à®µà®¿à®Ÿà¯ˆà®µà®¿à®Ÿà®¾ துகந்த விண்ணவர் கோவே

வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 
 
பதிலை மறுக்காமல் வாழ்வளிக்கும் விண்ணகத்து மன்னவனே. செயல்பட காரணமான மெய்பொருளே. முடக்கம் அடையாமல் அடிமையாகிய என்னை முழுமை அடையச் செய்வாய். புழு இருக்கும் இந்த உடலில் அடைந்துவிடாதபடி காத்து என்னை ஆண்ட கடவுளே கருணைக் கடலே இடைவிடாமல் உன்னை சிக்கெனப் பிடிந்தேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 1

 à®‰à®®à¯à®ªà®°à¯à®•à®Ÿà¯ கரசே ஒழிவற நிறைந்த

யோகமே ஊற்றையேன் றனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெரு மானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 
 
தெய்வீகமானவர்களின் தலைவனே, நீக்கமற நிறைந்த யோகமே. அழுகும் உடல் கொண்ட எனக்கு திடமுடன் என் குடி முழுவதும் ஆண்டு வாழ்வின் உசசம் அளித்த மருந்தே. செம்பொருளான துணிவே, சீர் பொருந்திய திருவடியே, செல்வமே சிவபெருமானே என்னை வளப்படுத்திட உன்னை சிக்கெனப் பிடித்தேன். எங்கே எழுந்து அருள்வாய் இனியே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 10

 à®•à¯‚ற்றைவென் றாங்கைவர் கோக்களை யும்வென்

றிருந்தழகால்
வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும்ஓர்
மீனவன்பால்
ஏற்றுவந் தாருயிர் உண்ட திறல்ஒற்றைச்
சேவகனே
தேற்றமி லாதவர் சேவடி சிக்கெனச்
சேர்மின்களே.
 
இயமனை வென்று ஐந்து புலன்களையும் வென்று இருந்தார் திருவடி அழகால் விற்றிருந்தான். பெருந்தேவியும் தானும் ஓர் மீனவன் மேல் அன்பு கொண்டு வந்த ஆருயிரை திறத்தின் ஒன்றே என்றே சேவகனே. அடுத்தவர் அங்கிகரிக்க இயாலதவர் சேவடியை சிக்கெனச் சேர்ந்துக்கொள்ளுங்கள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 9

 à®µà®¿à®°à®µà®¿à®¯ தீவினை மேலைப் பிறப்புமுந்

நீர்கடக்கப்
பரவிய அன்பரை என்புருக் கும்பரம்
பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திகொ ளப்பட்ட
பூங்கொடியார்
மரவியன் மேல்கொண்டு தம்மையுந் தாம்அறி
யார்மறந்தே.
 
படிந்த தீய செயல்கள் மேலும் பிறவிக் கடல் தள்ள அதைக் கடக்க முயலும் அன்பரை எலும்பும் உருகும் அன்பு கொண்டு வெளிப்பட்ட பாண்டியனார் மனக் குதிரையின் மேல் வர புத்தி தடுமாறிய பூங்கொடியார் மரமாக மாறி நின்றார் தம்மையும் தான் யார் என அறியாமல் மறந்தே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 8

 à®…ழிவின்றி நின்றதொர் ஆனந்த வெள்ளத்

திடையழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக் கடிய
வினையகற்றிப்
பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப்
பெரும்பதமே
முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று
முந்துமினே.
 
அழிவற்று நிலைத்த ஆனந்த வெள்ளத்தில் திளைக்கச் செய்து, கழியாத கருணையைக் காட்டி கடினமான வினைகளை அகற்றி பழமையான அழுக்கை பற்றாதபடி அழித்து ஆண்டவன் பாண்டியன் பெரும்பதமே முழு உலகிற்கும் தருவான் கொடையை சென்று முதன்மையாக மாறுங்கள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 7

 à®®à®¾à®¯à®µ னப்பரி மேல்கொண்டு மற்றவர்

கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள்
புகுந்தவருக்
காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு
ளேஅருளுஞ்
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி
சேர்மின்களே.
 
மாயமான காட்டுக்குதிரை மேல் வந்து மற்றவர் நம்மை கைப்படுத்தினாலும், ஒழியா இந்த பிறப்பு என்ற பகைகள் புகுந்து வந்தாலும், உடலில் அருள்பெரும் சீரான திருவடி தன் அருளை அருளும். வளர்க்கும் அளவற்ற கொடை தரும் தென்னவன் சேவடி சேர்ந்து வெற்றியடையுங்கள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 6

 à®ˆà®£à¯à®Ÿà®¿à®¯ மாயா இருள்கெட எப்பொரு

ளும்விளங்கத்
தூண்டிய சோதியை மீனவ னுஞ்சொல்ல
வல்லன்அல்லன்
வேண்டிய போதே விலக்கிலை வாய்தல்
விரும்புமின்தாள்
பாண்டிய னார்அருள் செய்கின்ற முத்திப்
பரிசிதுவே. 
 
உருவான மாயா என்ற இருள் கெட்டு ஒழிய எல்லா உண்மைப் பொருளும் விளங்கத் தூண்டிய சோதியை மீன் கொடி கொண்டவன் சொல்ல வல்லமைக் கொண்டவன் இல்லை. வேண்டிய பொழுதே தள்ளி வைக்காமல் விருப்பமாக வாய்த்த திருவடி பாண்டியனார் அருள் செய்கின்ற முத்திக்கு பரிசு இதுவே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 5

 à®•à®¾à®²à®®à¯à®£à¯ டாகவே காதல்செய் துய்ம்மின்

கருதரிய
ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர்
நண்ணரிய
ஆலமுண் டான்எங்கள் பாண்டிப் பிரான்தன்
அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து
முந்துமினே. 
 
சாதகமான காலம் உண்டாக அறிவதற்கு அரியவனை காதல் செய்து வெற்றி பெறுங்கள். உலகை உரிமையாக்கிக் கொண்டவனுடன் நான்முகனும் வானவரும் நாடிட அரிய ஆலம் உண்டவன் எங்கள் பாண்டிப்பிரான். அவன் தன் அடியவர்களுக்கு அடிப்படையான ஆதாரப் பொருளை வழுங்குகிறான் வந்து முந்தி பெற்றுக்கொள்ளுங்கள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 4

 à®šà¯†à®±à®¿à®¯à¯à®®à¯ பிறவிக்கு நல்லவர் செல்லன்மின்

தென்னன்நன்னாட்
டிறைவன் கிளர்கின்ற காலம்இக் காலம்எக்
காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த
மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள
இருநிலத்தே. 
 
வளரும் பிறவிக்கு நல்லவர்களே செல்லாதீர்கள். தென்னவன் நல்லா நாட்டிற்கு இறைவன் வளம் தரும் காலம் இந்தக்காலம். எக்காலத்திலும் அறிவு என்ற கதிர்ஒளி போன்ற வாளால் பிறவி தரும் மரத்தை வெட்டி வீழ்த்தலாம். விசப்படும் பிறப்பை எதிர்த்து புரட்டலாம் இருநிலத்தே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 3

 à®¨à¯€à®°à®¿à®©à¯à®ª வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற

நெஞ்சங்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட
பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை
உள்ளங்கொண்டார்
பேரின்ப வெள்ளத்துட் பெய்கழ லேசென்று
பேணுமினே. 
 
நிலையற்று போகும் நீர் போன்ற இன்ப வெள்ளத்தில் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம் உடையவர்களே. நிலையான இன்பத்தை வெள்ளமாக கொண்ட மனம் என்ற குதிரை மேல் வரும் பாண்டியனார் ஒன்றும் வெள்ளத்தின் உருவாக கொண்டு தொண்டரை உள்ளம் கொண்டார். பேரின்ப வெள்ளத்தில் மூழ்கும் திருவடி அடைந்து வெற்றியடையுங்கள். 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 2

 à®šà®¤à¯à®°à¯ˆ மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர்

சாற்றிச்சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை
கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி
கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப் போட
மறித்திடுமே. 
 
அளவற்றவனை அறிய அளவு செய்துகொள்பவரை சார்ந்து இருப்பவரை கவனித்து சொல்கிறேன். கதிரவனையும் மறைக்கும் சோதியில் வெளிப்படும் கைப்பிடித்து தெளிந்த எண்ணத்துடன் கூடிட நடக்கும் செயல்களை கேளுங்கள், மதுரையின் மன்னர் மறுப்பிறப்பு இல்லாதபடி மாற்றிவிடும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 1

 à®ªà®°à¯à®µà®°à¯ˆ மங்கைதன் பங்கரைப் பாண்டியற்

காரமுதாம்
ஒருவரை ஒன்று மிலாதவ ரைக்கழற்
போதிறைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட
சேவகனார்
ஒருவரை யன்றி உருவறி யாதென்றன்
உள்ளமதே. 
 
பருவத்தை அடையும் மங்கையை பாகமாக கொண்டவரை, பழைமையானவர்களின் அமுதமான ஒருவரை, ஒன்றின் மீதும் பற்று இல்லாதவரை, திருவடித் தொழுது இறைஞ்சி தெளிந்து நின்று பரி மேல் ஏறும் சேவகனார் ஒருவரை அன்றி வேறு உருவத்தை என் உள்ளம் ஏற்காதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 10

 à®•à¯‹à®£à®¿à®²à®¾ வாளி அஞ்சேன்

கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை
நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர
வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 
 
தலைமை அற்ற அழிக்கும் ஒன்றுக்கும் அஞ்சமாட்டேன். அழிக்க தலைமை ஏற்ற எமனுக்கும் அஞ்சமாட்டேன். நீளும் நிலாவை அணிந்தவனை நினைத்து நெஞ்சம் உருகி வான் எல்லாம் விரிந்தவனை கண்கள் சோர வாழ்த்தி பாராட்டாதவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 9

கோணிலா வாளி அஞ்சேன்

கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்

நீணிலா அணியி னானை

நினைந்துநைந் துருகி நெக்கு

வாணிலாங் கண்கள் சோர

வாழ்த்திநின் றேத்த மாட்டா

ஆணலா தவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே. 

 

தலைமை அற்ற அழிக்கும் ஒன்றுக்கும் அஞ்சமாட்டேன். அழிக்க தலைமை ஏற்ற எமனுக்கும் அஞ்சமாட்டேன். நீளும் நிலாவை அணிந்தவனை நினைத்து நெஞ்சம் உருகி வான் எல்லாம் விரிந்தவனை கண்கள் சோர வாழ்த்தி பாராட்டாதவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.

#திருவாசகம்

 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 8

தறிசெறி களிறும் அஞ்சேன்

தழல்விழி உழுவை அஞ்சேன்

வெறிகமழ் சடையன் அப்பன்

விண்ணவர் நண்ண மாட்டாச்

செறிதரு கழல்க ளேத்திச்

சிறந்தினி திருக்க மாட்டா

அறிவிலா தவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே. 

 

கட்டவிழ்ந்த செழுமையான ஆண் யானைக்கும் அஞ்சமாட்டேன். நெருப்பு போன்ற பார்வை கொண்ட புலிக்கும் அஞ்சமாட்டேன். அடர்ந்த மணம் வீசும் சடையன் அப்பன் வானவர்களும் அடைய இயலாத செழுமையான கழல்கள் ஏந்தி சிறப்புடன் இருக்க இயலாதவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.

#திருவாசகம்

 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 7

 à®¤à®•à¯ˆà®µà®¿à®²à®¾à®ªà¯ பழியும் அஞ்சேன்

சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப்
பொலிந்தஅம் பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றை மாலை
முன்னவன் பாத மேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
 
தவிர்க்க இயலாத பழிக்கு அஞ்சமாட்டேன். மரணம் முன் நின்றாலும் அஞ்சமாட்டேன். புகை மூட்டம் போல் முன்னம் வீசி பொலிவுடன் அம்பலத்தே ஆடும் முகத்தில் மகிழ்வும் கொன்றை மாலையும் கொண்ட முதலானவன் பாதத்தை போற்றி உள்ளம் நெகிழாதவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 6

 à®µà®¾à®³à¯à®²à®¾à®®à¯ எரியும் அஞ்சேன்

வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன்
சொற்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைக ளேத்தித்
தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 
 
வீசப்படும் நெருப்புக்கு அஞ்சமாட்டேன். எல்லாவற்றையும் மாற்றிப் போட்டாலும் அஞ்சமாட்டேன். தோள்களில் நீறு பூசியவன் என்னால் சொல்லமுடியா கடந்த அப்பனை அசையும் தாமரைகள் ஏந்தி தடமான மலர் கூடி உறவாட தகுதியற்றவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 5

 à®ªà®¿à®£à®¿à®¯à¯†à®²à®¾à®®à¯ வரினும் அஞ்சேன்

பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்றன்
தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச்
சேவடி பரவி வெண்ணீ
றணிகிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 
 
எல்லா வகை நோய் வந்தாலும் அஞ்சமாட்டேன், பிறப்புடன் இறப்பு வந்தாலும் அஞ்சமாட்டேன் தேய்ந்து வளரும் நிலாவை அணிகலனாக உடையவனை தொழும் தேவர்களுடன் பொருந்திடலாமல் திடமாண நிலத்தை பிளந்தும் காணாமல் சிவந்த திருவடியை பாராட்டு வெண்ணீர் அணியாதவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 4

 à®•à®¿à®³à®¿à®¯à®©à®¾à®°à¯ கிளவி அஞ்சேன்

அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி
வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித்
தொழுதழு துள்ளம் நெக்கிங்
களியிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 
 
கிளி பேச்சி பேசும் பெண்ணின் பேச்சிக்கு அஞ்சமாட்டேன். அவர்களின் வஞ்சனையான முறுவலுக்கு அஞ்சமாட்டேன். வெப்பமான வெள்ளை நீறாடும் மேனி கொண்ட வேதியல் மாற்றம் தருபவன் பாதத்தை நாடி துளிர்த்து எழும் கண் உடையவராகி தொழுது அழுது உள்ளம் நெகிழ்ந்து களிப்படையாதவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 3

 à®µà®©à¯à®ªà¯à®²à®¾à®²à¯ வேலும் அஞ்சேன்

வளைக்கையார் கடைக்க ணஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி
இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
 
கடினமான புலன்கள் வேல் போல் பாய்ந்தாலும் அஞ்சமாட்டேன். வளையல் அணிந்த பெண்களின் கடைக்கண்ணுக்கும் அஞ்சமாட்டேன். எலும்பும் உருக நோக்கி வெளிப்பட்டு ஆடும் என் பொளிவான மணியை பாராட்டி இனிமையான அருளை பருக அறியா அன்பிலாதவரை கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 2

 à®µà¯†à®°à¯à®µà®°à¯‡à®©à¯ வேட்கை வந்தால்

வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா
எம்பிரான் தம்பி ரானாம்
திருவுரு அன்றி மற்றோர்
தேவர்எத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
 
தவிர்க இயலா தாகம் வந்தாலும், வினைக்கடல் வேகம் கொண்டாலும் அஞ்சமாட்டேன். இருவரால் முரண்பட முடியாத என் தலைவன் திருவுரு அன்றி மற்ற ஒரு தேவர் அல்லது எத்தகைய சிறப்பு பெற்ற தேவர் என்றாலும் அருவருப்பு அற்றவர் என்றாலும் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 1

 à®ªà¯à®±à¯à®±à®¿à®²à¯à®µà®¾ ளரவும் அஞ்சேன்

பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை
உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 
 
புற்றில் இருக்கும் பாம்பிற்கும் அஞ்சமாட்டேன், பொய்யானவர்களின் மெய்மை பற்றிய கருத்துக்கும் அஞ்சமாட்டேன். வணங்கா முடி கொண்ட எம் அண்ணல் கண்ணுதல் பாதம் நாடிய பின் மற்றும் ஒரு தெய்வம் உண்டு என நினைத்து எம் பெருமானை கற்று அறியாதவரை கண்டு அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும். 
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 10

 à®µà®¾à®©à¯à®ªà®¾à®µà®¿à®¯ உலகத்தவர்

தவமேசெய அவமே
ஊன்பாவிய உடலைச்சுமந்
தடவிமர மானேன்
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு
திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியன் ஆனால்உனை
நல்காய்என லாமே. 
 
வான் போன்று விரிந்த உள்ளம் கொண்டு உலகத்தில் வாழ்பவர்கள் தவம் செய்ய, அவமாய் சதை பொருந்திய உடலை சுமந்தபடி மரமாய் ஆனேன். தேன் பாயும் மலர் கொத்து இருக்கும் திருப்பெருந்துறை உறைவாய் நானே பாவி என இருக்க உன்னை அருளாதவன் எனலாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 9

 à®Žà®šà¯à®šà®®à¯à®…றி வேன்நான்எனக்

கிருக்கின்றதை அறியேன்
அச்சோஎங்கள் அரனேஅரு
மருந்தேஎன தமுதே
செச்சைமலர் புரைமேனியன்
திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம்என நெஞ்சில்மன்னி
யானாகி நின்றானே.
 
அடுத்தவரின் படைப்பை அறிவேன் எனக்குள் நீ படைத்ததை அறியேன். என்ன வியப்பு இது? எங்கள் பாதுகாப்பே அருமையான மருந்தே என் அமுதே செச்சை மலர் போன்ற மேனியனே. திருப்பெருந்துறை உறைபவனே. நித்தம் என் நெஞ்சில் நிலைத்தவனாகி நின்றானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 8

 à®•à¯‹à®±à¯à®±à¯‡à®©à¯à®Žà®©à®•à¯ கென்கோகுரை

கடல்வாய்அமு தென்கோ
ஆற்றேன்எங்கள் அரனேஅரு
மருந்தேஎன தரசே
சேற்றார்வயல் புடைசூழ்தரு
திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனிநின்
மலனேஉனை யானே.
 
கொம்புத்தேன் எனக்கே எனக்கு என உரைப்பேன், கடலில் கிடைத்த அமுது என்பேன், உன்னை கடக்க மாட்டேன் எங்கள் பாதுகாவலனே, அருமையான மருந்தே எங்கள் அரசே, ஈரம் நிறைந்த வயல் சூழ் திருப்பெருந்துறை உறையும் பற்று அற்றவர் திருமேனி மலம் அற்றவனே உன்னை முழுமையாக சொல்ல இயலாதவன் நானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 7

 à®µà¯‡à®£à¯à®Ÿà¯‡à®©à¯à®ªà¯à®•à®´à¯ வேண்டேன் செல்வம்

வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம்
வேண்டார் தமைநாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு
திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன்இனிப்
புறம்போகலொட் டேனே. 
 
தேவையில்லை புகழ், தேவையில்லை செல்வம், தேவையில்லை மண்ணும் விண்ணும், தேவையில்லை பிறப்பு இறப்பு. சிவத்தை நேசிக்காதவர்களை நெருங்கமாட்டேன். விரும்பி அடைந்தேன் திருப்பெருந்துறை இறையை போர்த்திக் கொண்டேன் இனி புறம் போகமாட்டேனே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 6

 à®•à®Ÿà®²à®¿à®©à¯à®¤à®¿à®°à¯ˆ யதுபோல்வரு

கலக்கம்மலம் அறுத்தென்
உடலும்என துயிரும்புகுந்
தொழியாவணம் நிறைந்தான்
சுடருஞ்சுடர் மதிசூடிய
திருப்பெருந்துறை உறையும்
படருஞ்சடை மகுடத்தெங்கள்
பரன்தான்செய்த படிறே.
 
கடல் அலைபோல் வரும் கலக்கத்தை அழித்து என் உடலும் உயிரும் புகுந்து எதிலும் நிறைந்தபடி நிறைந்தான். ஒளி பரப்பும் பரிதியும் பட்டு ஒளிரும் நிலவும் சூடிய திருப்பெருந்துறை உறையும் விரிந்த சடை மகுடமாக அணிந்த எங்கள் பரன் அவன் செய்தபடியே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 5

 à®ªà®±à¯à®±à®¾à®™à¯à®•à®µà¯ˆ அற்றீர்பற்றும்

பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அடைவோமெனிற்
கெடுவீரோடி வம்மின்
தெற்றார்சடை முடியான்மன்னு
திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கவன் கழல்பேணின ரொடுங்கூடுமின் கலந்தே. 
 
பற்ற வேண்டியதை தவறவிட்டீர், பற்ற வேண்டியதை பற்றி நல்ல கதி அடையவேண்டும் என்றால் வெகுவிரைந்து வாரீர். வணங்கா முடி இருக்கும் திருப்பெருந்துறை இறை சீர் கற்று அவன் கழல் பேனியவர்களுடன் கூடுங்கள் கலந்தே.
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 4

 à®µà®¿à®©à¯ˆà®•à¯à®•à¯‡à®Ÿà®°à¯à®®à¯ உளரோபிறர் 

சொல்லீர்விய னுலகில் 
எனைத்தான்புகுந் தாண்டான்என 
தென்பின்புரை யுருக்கிப் 
பினைத்தான்புகுந் தெல்லேபெருந் 
துறையில் உறை பெம்மான் 
மனத்தான் கண்ணின் 
அகத்தான்மறு மாற்றத்திடையானே.  
 
செயல்படாதவர் உண்டோ, இப்படி சொல்லும் வியப்பான உலகில் என்னை எனக்குள் புகுந்து ஆண்டான். என் அன்பினால் உருக்கி பினைந்து பெருந்துறை உறையும் பெம்மான் மனதில் நிலைத்தான் கண்ணின் உள்ளே நிலைத்தான் மறுபடாத மாற்றத்தை தந்தவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 3

 à®Žà®©à¯ˆà®¨à®¾à®©à¯†à®©à¯à®ª தறியேன்பகல் 

இரவாவதும் அறியேன் 
மனவாசகங் கடந்தான்எனை 
மத்தோன்மத்த னாக்கிச் 
சினமால்விடை உடையான் மன்னு  
திருப்பெருந்துறை உறையும் 
பனவன்எனைச் செய்தபடி 
றறியேன் பரஞ்சுடரே.
 
என்னை எனக்கே தெரியாது பகல் இரவு அறியாது இருந்தேன். மனதையும் வாசத்தையும் கடந்தவன் மடதனத்தையும் கருவியாக்கி அளவுகொண்டு விடை அளிப்பவன்பெருமை மிகு திருப்பெருந்துறை உறையும் பலவாக இருப்பவன் என்னை ஆட்கொண்டதை அறியேன் பரஞ்சுடரே.
#திருவாசகம்
 
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 2

 à®¨à®¾à®©à®¾à®°à®Ÿà®¿ அணைவான்ஒரு 

நாய்க்குத் தவிசிட்டிங் 
கூனாருடல் புகுந்தான்உயிர் 
கலந்தான்உளம் பிரியான் 
தேனார்சடைமுடியான்மன்னு 
திருப்பெருந்துறை உறைவான் 
வானோர்களும் அறியாததோர் 
வளம்ஈந்தனன் எனக்கே. 
 
நான் யார் என்பவர் அடி அணைவான்ஒரு நாய்க்கு இரங்குபவன் வளையா உடலுக்குள் புகுந்தான்.உயிர் கலந்தான் உள்ளத்தை விட்டு அகலாதவன். தேன் போன்றவர்களின் வணங்கமுடியுடன் திகழும் திருப்பெருந்துறை உறைபவன்வானோர்க்களும் அறியாத ஓரு வளத்தை ஈந்தனன் எனக்கே.
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 1

 à®ªà¯ˆà®¨à¯à®¨à®¾à®ªà¯à®ªà®Ÿ அரவேரல்குல்

உமைபாகம தாய்என்
மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக்
கேடாவிடைப் பாகா
செந்நாவலர் பரசும்புகழ்த்
திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாட்களித் தெந்நாள்இறு
மாக்கேன்இனி யானே.
 
வளமையான நாகப்பாம்பின் படத்தை போன்ற அல்குல் கொண்ட உமையம்மையை பாகமாக உடையவனே, உயிருள்ள நாட்கள் எல்லாம் விலகாத வினைகள் ஒழிய விடையாக இருப்பவனே, செழுமையான பேச்சளார்கள் புகழ்ந்து பரவும் திருப்பெருந்துறை உள்ளவனே, எந்த நாள் நான் மகிழ்ந்து இறுமாப்பு கொள்வேன் என் இனியவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 10

 à®…ழகே புரிந்திட் டடிநாயேன்

அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி
காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப்
புராண நீதந் தருளாதே
குழகா கோல மறையோனே
கோனே என்னைக் குழைத்தாயே. 
 
அழகே புரியச் செய்யும் அடியை புரிந்துக்கொண்ட நாய் போன்ற நான் அரற்றுகின்றேன், என்னை உடைமையாக உடையவனே. மறைக்காமல் நின்ற திருமேனி காட்டி என்னை பணிய செய்துக்கொண்டாய். புகழே பெரிய பெயர் எனக்கு புரணமான நீ தந்து அருளாதே. சிதையா நிலையே மறையோனே கோனே என்னை குழைத்தாயே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 9

 à®•à®£à¯à®£à®¾à®°à¯ நுதலோய் கழலிணைகள்

கண்டேன் கண்கள் களிகூர
எண்ணாதிரவும் பகலும்நா
னவையே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே. 
 
கண்ணுடையார் நுட்பமாய் இருப்பவனே உன் கழலிணைகள் கண்டேன் என் கண் மகிழ்ந்து இரவும் பகலும் வேறு ஒன்று எண்ணாமல் இதையே மண் மேல் உடலை விடும் வரை எண்ணி உன் கழற்கே வந்து அண்ணா என்று கடப்பேனோ உன் அடிமையாக இருப்பது மிக்க பெரியதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 8

 à®¨à®¾à®¯à®¿à®±à¯ கடையாம் நாயேனை

நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே
வைத்திட் டிருக்கும் அதுவன்றி
ஆயக் கடவேன் நானோதான்
என்ன தோஇங் கதிகாரம்
காயத் திடுவாய் உன்னுடைய
கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 
 
நாயை விட கிழான இனம் சேர்க்காதவனை விருப்பமுடன் நீயே ஆட்கொண்டாய். மர்மமான இந்தப் பிறவி உன்வசமே வைக்கப்பட்டிருக்கிறது. இதை ஆராய நானே முற்பட அதிகாரம் எனக்குரியது இல்லை. மீண்டும் உடலில் வைப்பதும் அல்லது திருவடியில் வைப்பதும் கண்ணுதலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 7

 à®…ன்றே என்றன் ஆவியும்

உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே.
 
என்னை ஆட்கொண்ட அன்றே எது ஆவி உடல் உடைமை எல்லாவற்றையும் குன்றை ஒத்தவனே ஆட்கொள்ளவில்லையோ, இன்று ஒரு இடையூறு எனக்கு உண்டோ, எட்டு சாண் உடலில் முக்கண் என இருக்கும் எம்மானே. நீ நன்றே செய்வாய் பிழை செய்வாய் என்றாலும் இதற்கு நானா நாயகமே?
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 6

 à®µà¯‡à®£à¯à®Ÿà®¤à¯ தக்க தறிவோய்நீ

வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே. 
 
தேவையை தகுந்தபடி அறிவாய் நீ, தேவைகள் முழுவதும் தருவாய் நீ, வேண்டிய அயனுக்கும் மாலுக்கும் அரிதானவன் நீ, தேவையால் என்னை செயல்படச் செய்தாய், தேவையால் நீயே அருள் செய்தாய் நானும் அதையே வேண்டினேன் மாறாக வேண்டும் பரிசு வேறு உண்டு என்றால் அதுவும் உன்தன் விருப்பமே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 5

 à®•à¯‚றும் நாவே முதலாகக்

கூறுங் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்பும்நீ
தீமை நன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை
மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா
திகைத்தால் தேற்ற வேண்டாவோ.
 
பேசும் நாக்கை முதலாக கொண்டு பேசப்படும் புலால் எல்லாம் நீ, தேர்ச்சி பெற உதவும் வாய்ப்பும் தீ, திகைக்கச் செய்வதும் நீ, கெட்டதும் நல்லதும் ஆன முழுமையும் நீ, உன்னிலும் வேறு ஒரு பரிசு இங்கு இல்லை. உண்மை உன்னை உணர விரித்துரைத்தால் தேறும் வகை அறியலாம் என் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 4

 à®®à®¾à®©à¯‡à®°à¯ நோக்கி மணவாளா

மன்னே நின்சீர் மறப்பித்திவ்
வூனே புகஎன் றனைநூக்கி
உழலப் பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை
அறிந்து நீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளும்நாள்
என்றென் றுன்னைக் கூறுவதே. 
 
மான் போன்ற பார்வை கொண்டவளின் மணவாளா உன் சீர் நினையாமல் மறுத்து உடல் புகுந்து என்னை விலக்கி உலகில் உலவச் செய்தாய். ஆயினும் அடிமையாகிய என் அறியாமை அறிந்து நீயே அருள் செய்து அரசனே என அழைத்து மகிழ்வேன் அந்நாள் என்று என கூறுவதே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 3

 à®’ன்றும் போதா நாயேனை

உய்யக் கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான்
ஏழை பங்கா எம்கோவே
குன்றே அனைய குற்றங்கள்
குணமாம் என்றே நீகொண்டால்
என்றான் கெட்ட திரங்கிடாய்
எண்தோள் முக்கண் எம்மானே. 
 
ஒன்றுக்கும் உதவாத நாய் போன்ற என்னை ஏற்றுக் கொண்ட உன் கருணை இன்று மட்டும் இல்லாமல் போய்யாக போனதோ, ஏழைகளின் உறவே என் அரசே மலை போல் பிழைகள் செய்தாலும் நின் குணத்தால் கெடுதல் இன்றி இருக்க இரக்கம் காட்டு எட்டு அடுக்கு உடலில் முக்கண்ணாய் இருப்பவனே எம்மானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 1

 à®•à¯à®´à¯ˆà®¤à¯à®¤à®¾à®±à¯ பண்டைக் கொடுவினைநோய்

காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி யுண்டோதான்
உமையாள் கணவா எனைஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோஎன்
றழைத்தால் அருளா தொழிவதே
அம்மா னேஉன் னடியேற்கே.
 
குழப்பம் அடைந்தார் முன்னம் செய்த கொடுமையான செயல்களால் வந்த நோயால். என்னை காக்காமல் உடைமையாக்கிக் கொண்டவனே கொடுமையான செயல் செய்த நான் உறுதியுடன் உழைத்தால் நல்முடிவு உண்டு. உமையாள் கணவா என்னை ஆள்பவனே பிழைகளை பொறுக்க வேண்டாமோ. பிறையை அணிந்த சடை உடையவனே முறையா என்று அழைத்தால் அருளாமல் ஒழிவாயோ அம்மானே உன் அடியாற்கே.
#திருவாசகம்

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 11

 à®•à¯‚டிக் கூடி உன்னடியார்

குனிப்பார் சிரிப்பார் களிப்பாரா
வாடி வாடி வழியற்றேன்
வற்றல் மரம்போல் நிற்பேனோ
ஊடி ஊடி உடையாயொடு
கலந்துள் ளுருகிப் பெருகிநெக்
காடி ஆடி ஆனந்தம்
அதுவே யாக அருள்கலந்தே. 
 
ஒன்றாக கூடி உன் அடியார்கள் குதித்து ஆடுவார், சிரிப்பார், களிப்பார். நானோ வாடி வாடி வழி இல்லாமல் வற்றல் மரமாய் நிற்பேனோ. சிறு பிணக்கம் செய்து ஊடி ஊடி என்னுள் உடையவனே உன்ளுள் கலந்து உருகிப் பெருகி நிறைந்து ஆடி ஆடி ஆனந்தம் அதுவே என அருள் கலந்தேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 10

 à®®à®¾à®©à¯‹à®°à¯ பங்கா வந்திப்பார்

மதுரக் கனியே மனநெகா
நானோர் தோளாச் சுரையொத்தால்
நம்பி இத்தால் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனையுணர்ந்தே
உருகிப் பெருகும் உள்ளத்தைக்
கோனே அருளுங் காலந்தான்
கொடியேற் கென்றோ கூடுவதே.
 
ஓர விழிப்பார்வை கொண்ட பெண்மையை பாகமாக கொண்டவனே. வணங்குபவர்களின் மதுரக் களியே. மனம் நெகழாத நான் துளையற்ற சுரைக்காயாய் இருந்தும் எனக்குள் இத்தனை நாளாக வாழ்ந்தாயே. உடலில் புகுந்தே உன்னை உணர்ந்தே உருகிப் பெருகும் உள்ளத்தை அரசனே அருளுடன் கலந்தான். கொடுமைகளை கொன்றே கூடுவதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 9

 à®¤à®¾à®°à®¾ அருளொன் றின்றியே

தந்தாய் என்றுன் தமரெல்லாம்
ஆரா நின்றார் அடியேனும்
அயலார் போல அயர்வேனோ
சீரார் அருளாற் சிந்தனையைத்
திருத்தி ஆண்ட சிவலோகா
பேரா னந்தம் பேராமை
வைக்க வேண்டும் பெருமானே.
 
கொடுக்கப்படாத அருள் ஒன்றும் இல்லை என தந்தாய் என்று உறவுடையவர் எல்லாம் மனம் நிறைந்து நின்றார்கள். அடியேனும் அண்ணியப்பட்டவனாய் சோர்வு கொள்வேனோ. சீரானவர்களுக்கு அருளுடன் சிந்தையை திருத்தி ஆண்ட சிவலோக பேரானந்தம் நீங்காமல் நிலைக்க வைக்க வேண்டும் பெருமானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 8

 à®¤à¯à®£à®¿à®¯à®¾ உருகா அருள்பெருகத்

தோன்றுந் தொண்ட ரிடைப்புகுந்து
திணியார் மூங்கிற் சிந்தையேன்
சிவனே நின்று தேய்கின்றேன்
அணியா ரடியார் உனக்குள்ள
அன்புந் தாராய் அருளளியத்
தணியா தொல்லை வந்தருளித்
தளிர்பொற் பாதந் தாராயே. 
 
துணியாமல் உருகிட அருளது பெருகிட தோன்றும் தொண்டர் கூட்டத்தில் கூடி முடிவற்று வேகமாய் வளரும் மூங்கில் போல் சிந்தனை வளர்க்கும் நான் சிவனே என்று மெலிகின்றேன். அடியார்கள் உனக்குள் அணியாக இருப்பதைப் போல் நானும் இருக்க அன்பு தாராய். அருள் அளித்து தணியாத எல்லை கொண்டு வந்து அருளி தளிர்ந்த பொற்பாதத்தை தாராயே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 7

 à®•à®Ÿà®²à¯‡ அனைய ஆனந்தம்

கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண
இடரே பெருக்கி ஏசற்றிங்
கிருத்த லழகோ அடிநாயேன்
உடையாய் நீயே அருளுதியென்
றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்
சுடரார் அருளால் இருள்நீங்கச்
சோதீ இனித்தான் துணியாயே. 
 
கடலுக்கு நிகரான ஆனந்தம் கண்டவர்கள் எல்லாம் உன்னை கவர்ந்தார்கள். இடர் வளர்ந்து கேட்பார் அற்று இருப்பது அழகோ, அடிமையாகிய நாய் போன்ற நான் உன் அடிமை அல்லவோ நீயே அருளவேண்டும் என்பதை உணராமல் காலம் கழித்தபடி இருந்தேன். சுடர் கொண்டு அருளால் இருள் நீங்கச் சோதீயாய் இனித்தான் என்று துணிந்துநில்.   
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 6

 à®…றவே பெற்றார் நின்னன்பர்

அந்த மின்றி அகநெகவும்
புறமே கிடந்து புலைநாயேன்
புலம்பு கின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய்யன்பு
பேரா ஒழியாப் பிரிவில்லா
மறவா நினையா அளவிலா
மாளா இன்ப மாகடலே.
 
முழுமையை பெற்றுக் கொண்டார்கள் நின் அன்பர்கள். முடிவு இல்லாமல் உள்ளம் நோகவே வெளியே கிடந்து நாய் போன்ற நான் புலம்புகிறேன். எல்லாம் உடையவனே பேரன்பை பெற வேண்டும் என்றும் ஒழியாத பிரிவற்ற மறக்கவியலாத அளவிட்டு மாளா இன்பப் பெருங்கடலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 5

 à®®à¯‡à®µà¯à®®à¯ உன்றன் அடியாருள்

விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணாள்
பங்கா உன்றன் கருணையினால்
பாவி யேற்கும் உண்டாமோ
பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்
தாவி யாக்கை யானெனதென்
றியாது மின்றி அறுதலே.
 
நின்னை போற்றி பரவும் அடியார்களுடன் நானும் விருப்பமுடன் இருக்கிறேன் மெய்மையே. காவி சேரும் மீன் விழியாளை பாகமாக கொண்டவனே உன் கருணையினால் பாவியாக எனக்கும் உண்டோ பரமானந்த பழைமைக் கடல் சேர்ந்து ஆவி ஆக்கை எனது என்று இல்லாமல் அறுத்தலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 4

 à®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯ வேண்டு மெய்யடியா

ருள்ளே விரும்பி எனைஅருளால்
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த
அமுதே அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய்
தொண்ட னேற்கும் உண்டாங்கொல்
வேண்டா தொன்றும் வேண்டாது
மிக்க அன்பே மேவுதலே.
 
நீயே வேண்டும் என விரும்பி வேண்டும் அடியார்களின் என்னையும் உன் அருளால் ஆண்டாய். இடர்களை களைந்தாய். அமுதே அருமையான மாமணி முத்தே தூண்டா விளக்கின் சுடரை அணைக்க ஏதுவானவனே. தொண்டன் எனக்கு உண்டாக வேண்டியதை வேண்டாமல் இருந்தும் தந்து மிகுந்த அன்பு பொழிபவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 3

 à®…ருளா ரமுதப் பெருங்கடல்வாய்

அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளார் ஆக்கை இதுபொறுத்தே
எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன்
வருமால் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை
உடையாய் பெறநான் வேண்டுமே. 
 
அருளுடைய ஆர அமுதப் பெருங்கடலில் அடியவர்கள் மூழ்கி மகிழ இருட்டு மனம் படைத்த உடலால் ஏமாற்றப்பட்டேன் என அறிந்தாய் எம்மானே. நேர்மையற்ற மனம் படைத்தவன் வருகிறான் என்று உன் மைத்தனாகிய என்னை கண்கிறார்கள். இப்படி வேறுபடாதபடி உன் மெய்யன்பை உரிமை பெற வேண்டுமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 2

 à®…டியார் சிலர்உன் அருள்பெற்றார்

ஆர்வங் கூர யான்அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி
முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியேனுடைய கடுவினையைக்
களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே
ஓவா துருக அருளாயே. 
 
உன் அடியவர்கள் சிலர் நின் அருள் பெற்றார் என ஆர்வமுடன் கூறுவேன். தவத்தின் எதிரான அவத்தை உடையவர் பிணத்தின் முடிவே அடைவார். அப்படி இல்லாமல் முடிக்கவே முயல்கின்றேன். கடின மனம் கொண்ட என் தீவினையை களைத்து உன் கருணை கடல் பொங்கச் செய்பவனே அடியேன் உள்ளத்தை ஓயாமல் உருக அருள் செய்வயாக.
திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 1

 à®•à®²à®¨à¯à®¤à¯ நின்னடியா ரோடன்று

வாளா களித்தி ருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
புகுந்து நின்ற திடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய்
ஆர்வங் கூர அடியேற்கே. 
 
நின் அடியார்களுடன் அன்று கலந்திருந்தும் வாழாமல் வீணாக களித்திருந்தேன். மலரந்து கழிந்த காலங்கள் துன்பங்கள் உள்ளே வர உலர்ந்து போனேன். என்னை தனக்கானாவனாக உரிமை கொண்டவனே இன்பச் சுடர் காட்டுபவனே சோர்ந்து போனேன் அருள் செய் ஆர்வம் வளர அடியவற்கே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 10

 à®ªà¯‚தங்கள் ஐந்தாகிப்

புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப்
பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட
கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும்
விளங்குதில்லை கண்டேனே. 
 
மூலப் பொருளாகும் பூதங்கள் ஐந்தாகி நமக்கு புலன்களாக ஆகி பேதங்கள் அனைத்துமாய் ஆனலும் பேதம் இல்லாத பெருமைக்கு உரியவனே. வேதனைகளே கெடுத்து ஆண்ட படரும் ஒளியை மரகதத்தை வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கும் தில்லை கண்டனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 9

 à®ªà®¾à®™à¯à®•à®¿à®©à¯Šà®Ÿà¯ பரிசொன்றும்

அறியாத நாயேனை
ஓங்கியுளத் தொளிவளர
உலப்பிலா அன்பருளி
வாங்கிவினை மலம்அறுத்து
வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை
அம்பலத்தே கண்டேனே.
 
தோழியுடனும் நல்ல பரிசுப் பொருள்களுடனும் வாழ அறியாத நாய் போன்றவனை உள்ளத்தே நல்ல ஒளி ஓங்கி வளர அளவற்ற அன்பு அருளி சேர்த்த வினைகளின் அழுக்கை அறுத்து வான் அளவு கருணை தந்தவனை நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே.  
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 8

 à®…ளவிலாப் பாவகத்தால்

அமுக்குண்டிங் கறிவின்றி
விளைவொன்றும் அறியாதே
வெறுவியனாய்க் கிடப்பேனுக்
களவிலா ஆனந்தம்
அளித்தென்னை ஆண்டானைக்
களவிலா வானவருந்
தொழுந்தில்லை கண்டேனே. 
 
எண்ணிக்கையற்ற பாவனையால் சிக்கி அறிவற்று செயல்பட முடியாமல் இருந்த எனக்கு திருட்டுத்தனம் இல்லாத ஆனந்தம் அளித்து ஆண்டவனை திருட்டுத்தனம் இல்லாத வனவர்கள் தொழுத் தில்லை கண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 7

 à®ªà®¤à¯à®¤à®¿à®®à¯ˆà®¯à¯à®®à¯ பரிசுமிலாப்

பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன்இவன் எனஎன்னை
ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால்
திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல்
விளங்குதில்லை கண்டேனே. 
 
பக்தியையும் பரிசு பெற முடியாத பசுபாசம் அறுப்பதையும் அருளி பித்தனாகிய என்னை ஒதுக்கிவிட்டு போகாமல் சித்தம் என்ற திடமான கயிற்றால் திருப்பதத்தில் கட்டிவித்த வித்தகனார் வினை ஆடல் விளங்கும் தில்லை கண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 6

 à®ªà®¿à®±à®µà®¿à®¤à®©à¯ˆ அறமாற்றிப்

பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென்
றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த்
திருச்சிற்றம் பலம்மன்னி
மறையவரும் வானவரும்
வணங்கிடநான் கண்டேனே.
 
பிறப்புதனை அறமுள்ளதாக மாற்றி பிணி முதுமை என்பதுடன் உறவுகளையும் ஒழியச் செய்து செல்லும் உலகை அடைய ஒரே முதல்வனை செறிவுடன் பெற்ற பொழில் சூழ்ந்த தில்லை நகர் திருச்சிற்றம்பலம் அடைந்து மறை உணர்ந்தவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 5

 à®šà®¾à®¤à®¿à®•à¯à®²à®®à¯ பிறப்பென்னுஞ்

சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை
அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம்
யானெனதென் னுரைமாய்த்துக்
கோதில்அமு தானானைக்
குலாவுதில்லை கண்டேனே.
 
சாதி குலம் பிறப்பு என்ற அர்தமற்ற ஆபத்தான சுழியில் அகப்பட்டு தடுமாறும் ஆதாரம் அறியாத நாய் போன்றவனை துன்பத்தை அறுத்து ஆட்கொண்டு பேதை குணமும் பிறர் போல் நான் என வடிவம் தங்க அதை அழித்த குற்றமற்ற அமுதானாவனைக் வெளிப்பட்டு உலவும் தில்லையில் கண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 4

 à®•à®²à¯à®²à®¾à®¤ புல்லறிவிற்

கடைப்பட்ட நாயேனை
வல்லாள னாய்வந்து
வனப்பெய்தி யிருக்கும்வண்ணம்
பல்லோருங் காணஎன்றன்
பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை
அம்பலத்தே கண்டேனே.
 
கற்று அறியாத மூடமான அறிவுடன் கடைசியான நாய் போன்றவனை வல்லவனாய் வந்து வசியமுடன் இருக்கும் படி பலரும் காண என்தன் பசு பாசம் அறுத்தவனை எல்லாரும் இறைஞ்சும் தில்லை அம்பலத்தில் கண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 3

 à®‰à®°à¯à®¤à¯à®¤à¯†à®°à®¿à®¯à®¾à®•à¯ காலத்தே

உள்புகுந்தென் உளம்மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக்
கருணையினால் ஆண்டு கொண்ட
திருத்துருத்தி மேயானைத்
தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன்
அணிகொள்தில்லை கண்டேனே.
 
வடிவம் பெறாத நேரத்திலேயே உள்ளே புகுந்து என் உள்ளம் நிறைந்து கருவை திருத்தி உடலை வளர்த்து கருணையினால் ஆண்டுக் கொண்ட திருத்தியும் உருத்தியும் செய்யும் இனிப்பான சிவபதத்தை விருப்பத்தினால் நாயினும் கிழான நான் அணியும் தில்லை கண்டனே.
திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 2

 à®µà®¿à®©à¯ˆà®ªà¯à®ªà®¿à®±à®µà®¿ என்கின்ற

வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே
தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென்
பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகுந் தொழுந்தில்லை
அம்பலத்தே கண்டேனே. 
 
செயல்களால் ஏற்படும் பிறப்பு என்ற வேதனையில் அகப்பட்டு தன்னை சிறிதும் எண்ணாமல் தளர்ந்து இருப்பவனை மிகைப்படுத்தி ஆட்கொண்ட என் பிறப்பை அறுத்த ஈடற்றவனே அனைத்து உவகமும் தொழும் தில்லை வெளிப்படையாய் கண்டேனே
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 1

 à®‡à®¨à¯à®¤à®¿à®°à®¿à®¯ வயமயங்கி

இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய்
அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச்
சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம்
அணிகொள்தில்லை கண்டேனே.
 
இயங்கும் பொறிகளுக்கே மயங்கி இறப்பதற்கு காரணமாய் வெளியே திரிந்து போய் அர்தமற்ற நரகத்தில் விழ்பவர்களுக்கு சிந்தையை தெளிவித்து சிவமாக்கி என்னை ஆண்ட முடிவில்லா ஆனந்தம் அணிய கொடுக்கப்பட்ட தில்லை கண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கழுக்குன்றப் பதிகம் | பாடல் எண் : 6

 à®ªà¯‡à®¤à®®à¯ இல்லதொர் கற்ப ளித்த

பெருந்து றைப்பெரு வெள்ளமே
ஏத மேபல பேச நீஎனை
ஏதி லார்முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமை யற்ற
தனிச்ச ரண்சர ணாமெனக்
காத லால்உனை ஓத நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
 
குழப்பம் ஒன்றும் இல்லாத ஓர் நெறியை அளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே. குற்றம் பற்றி பல பேச நீ என்னை ஏன் அறிவற்றவர் முன் நிற்கச் செய்தாய். சாதல் சாதல் என்ற பொல்லாமை இல்லாத தனித்தபடி சரண் சரணம் எனக் காதலால் உன்னை ஓத நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கழுக்குன்றப் பதிகம் | பாடல் எண் : 5

 à®•à¯‹à®² மேனிவ ராக மேகுண

மாம்பெ ருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்தி லாதஎன்
சிந்தை வைத்த சிகாமணி
ஞால மேகரி யாக நான்உனை
நச்சி நச்சிட வந்திடுங்
கால மேஉனை ஓதநீ வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 
 
அழகிய வளைவுள்ள கோல மேனியன் எதையும் கிளரி தேவையை தீர்த்துக்கொள்ளும் பன்றி குணம் கொண்ட மதிப்புடைய பெருந்துறை வள்ளல் இவன் சிறப்புகளை அறியாத என் சிந்தையில் வைத்த சிகாமணி உலகத்தை சாட்சியாக வைத்து நான் உன்னை நாடி நாடி வந்திட காலத்தை ஓத நீ வந்து காட்டினாய்க் கழுக் குன்றிலே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கழுக்குன்றப் பதிகம் | பாடல் எண் : 4

 à®ªà¯‚ணொ ணாததொ ரன்பு பூண்டு

பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி
நடுக்கட லுள் அழுந்தி நான்
பேணொ ணாதபெ ருந்துறைப்பெருந்
தோணி பற்றி யுகைத்தலுங்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்க்கழுக் குன்றிலே. 
 
பூவும் வலிக்கதபடி இருப்பவர் மேல் அன்பு கொண்டு அவர்களுடன் பொருந்தி நாளும் போற்றவும் வெட்கப்பட வேண்டிய நான் வெட்கம் இல்லாமல் நடுக்கடலில் அழுந்தினேன். அனுபவித்து உணர முடியா பெருந்துறை பெருந்தோணி பற்றி உகைத்திட காணா ஒண்ணாத திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கழுக்குன்றப் பதிகம் | பாடல் எண் : 3

 à®®à®²à®™à¯à®•à®¿ னேன்கண்ணின் நீரை மாற்றி

மலங்கெ டுத்த பெருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி
மேல்வி ளைவ தறிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவ டிகள்
இரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காமலே வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
 
துன்பப்பட்டேன் துன்பத்தின் கண்ணீரை மாற்றி அழுக்கை அழித்த பெருந்துறை விட்டு விலகினேன் எனவே வினை கேடவில்லை அதன் விளைவையும் அறிந்திலேன். இலக்கை உணர்த்தும் உன் சேவடிகள் இரண்டும் வைக்கும் இடம் இன்றியே கலங்கினேன் கலங்காமல் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கழுக்குன்றப் பதிகம் | பாடல் எண் : 2

 à®ªà®¿à®Ÿà¯à®Ÿà¯ நேர்பட மண்சு மந்த

பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத
சழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து
காட்டி னாய்க்கழுக் குன்றிலே. 
 
பிட்டுக்கு ஏற்ப மண் சுமந்த பெருமானே பெரும் துறைப் பெரும் பித்தனே. உன் சட்டத்திற்கு நேர்படாத சரக்கி விழும் நான் உன்னை போற்றவில்லை. சிறுமையானவனே சிவலோகத்தவனே சிறு நாயிற்கும் கடையான என்னையும் ஆட்கொள்ள வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
#திருவாசகம்

திருவாசகம் | திருக்கழுக்குன்றப் பதிகம் | பாடல் எண் : 1

 à®ªà®¿à®£à®•à¯à®•à®¿ லாதபெ ருந்து றைப்பெரு

மான்உன் நாமங்கள் பேசுவார்க்
கிணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 
 
முரண்பாடு இல்லாமல் பொருந்தும் துறைக்கு நாயகமான பெருமான் உன் பெயரை சொல்வார்க்கு மயக்கமற்ற இன்பமே வரும். துன்பத்தை துடைத்த எம்பிரான் முடிவற்று வளரும் வித்து மேலும் வினை இல்லாமல் என் வினை ஒத்து இருந்த பின்பு கணக்கில்லாத திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக் குன்றிலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அருட்பத்து | பாடல் எண் : 10

 à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à¯à®µà®¾à®°à¯ பொழில்சூழ் திருப்பெருந் துறையில்

செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்
டென்னுடை யெம்பிரான் என்றென்
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
போதராய் என்றரு ளாயே. 
 
தன்னை தானே திருத்தும் எழிலானவர்கள் நிறைந்த திருப்பெருந்துறையில் செழுமையான மலரை மலர செய்பவனே வியப்புக்கு உரிய சீர் பொருந்தி இருந்தவனே என எண்ணி எப்பொழுதும் நினைத்து என் பிரானே என்று இருந்தவனே என நினைத்தே ஆதரித்து அழைத்தால் அலைகடல் அதன் உள்ளேயே அடங்கி பொருந்தும் கயிலை புகு நெறி இதுதான் என காணச்செய்து போய் வா என அருள்வாயாக.
#திருவாசகம்
 

திருவாசகம் | அருட்பத்து | பாடல் எண் : 9

 à®®à®°à¯à®³à®©à¯‡à®©à¯ மனத்தை மயக்கற நோக்கி

மறுமையோ டிம்மையுங் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா ளரவங்
கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 
 
மாறுபட்டே செயல்படும் மனதின் மயக்கத்தை தீர்த்துவிட நோக்கி மறுமையையும் நிகழ்வதையும் கெடுத்த பொருளானவனே புனிதானே பொங்கும் வாள் அரவமாகிய கங்கை நீர் தங்கும் செழுமையான சடையோனே என்னை தெளிவு படுத்தி மறை சேர்க்க திருப்பெருந்துறையில் செழுமையான மலரை மலர செய்பவனே வியப்புக்கு உரிய சீர் பொருந்திய அருமையானவனே அடிமையாகிய நான் ஆதரித்து அழைத்தால் அதனால் என்ன என்று அருள வேண்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அருட்பத்து | பாடல் எண் : 7

 à®®à¯†à®¯à¯à®¯à®©à¯‡ விகிர்தா மேருவே வில்லா

மேவலர் புரங்கள்மூன் றெரித்த
கையனே காலாற் காலனைக் காய்ந்த
கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
 
உண்மையே உள்ளதாக விரிந்தவனே மேருவை வில்லாக கொண்டு எதிர்ப்பவர் அந்தபுரங்களை எரித்த கையனே. சுவாச கதியால் இயமனை விலக்கிய நல் வெப்ப பிழம்பு போன்ற மேனியாக செய்பவனே. செல்வத் திருப்பெருந்துறையில் செழுமையான மலரை மலர செய்பவனே வியப்புக்கு உரிய சீர் பொருந்திய அருமையானவனே அடிமையாகிய நான் ஆதரித்து அழைத்தால் அதனால் என்ன என்று அருள வேண்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அருட்பத்து | பாடல் எண் : 6

 à®¤à¯à®ªà¯à®ªà®©à¯‡ தூயாய் தூயவெண் ணீறு

துதைந்தெழு துளங்கொளி வயிரத்
தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
உறுசுவை அளிக்கும்ஆ ரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 
 
வெறுத்து ஒதுக்கி துப்ப முடியாதபடி இருப்பவனே தூய்மையானவா, தூய வெண்ணீறில் வெளிப்படும் ஒளி வளர்ந்து இருப்பவனே. உன்னை உள்ளத்தே நினைப்பவர் மனதின் உறுசுவை அளிக்கும் ஆரா அமுதே. சொல்லில் அடங்க மறைகளில் விளங்கும் திருப்பெருந்துறையில் செழுமையான மலரை மலர செய்பவனே வியப்புக்கு உரிய சீர் பொருந்திய அருமையானவனே அடிமையாகிய நான் ஆதரித்து அழைத்தால் அதனால் என்ன என்று அருள வேண்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அருட்பத்து | பாடல் எண் : 4

 à®•à®®à®²à®¨à®¾à®©à¯ முகனும் கார்முகில் நிறத்துக்

    கண்ணனும் நண்ணுதற் கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
    வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே  
 
தாமரையில் உள்ள நான்கு முகம் கொண்டவனும் மழைமேக முகில் வண்ணத்து கண்ணனும் நாடுவதற்கு அரிய விமலனே எனக்கு வெளிப்படாவிட்டால் என்ன இருந்தும் எனக்கு வெளிப்பட்ட என் தாயே தீது இல்லாமல் மறை சேர்க்கும் திருப்பெருந்துறையில் செழுமையான மலரை மலர செய்பவனே வியப்புக்கு உரிய சீர் பொருந்திய அருமையானவனேமுடிவற்றவனே அடிமையாகிய நான் ஆதரித்து அழைத்தால் அதனால் என்ன என்று அருள வேண்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அருட்பத்து | பாடல் எண் : 3

 à®Žà®™à¯à®•à®£à®¾ யகனே என்னுயிர்த் தலைவா

ஏலவார் குழலிமார் இருவர்
தங்கணா யகனே தக்கநற் காமன்
தனதுடல் தழலெழ விழித்த
செங்கணா யகனே திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே
 
எங்கும் நிறைந்த ஏகனே என் உயிர்த்தலைவா ஏவல் செய்ய குழலிமார் இருவர் இடத்தில் தங்கும் நாயகனே தகுந்த காமன் செழுமை தீ மூட்டிய ஒருவனே திருப்பெருந்துறையில் செழுமையான மலரை மலர செய்பவனே வியப்புக்கு உரிய சீர் பொருந்திய அருமையானவனே அகத்தில் அறியா அடிமையாகிய நான் ஆதரித்து அழைத்தால் அதனால் என்ன என்று அருள வேண்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | வாழாப்பத்து | பாடல் எண் : 7

 à®ªà®°à®¿à®¤à®¿à®µà®¾à®´à¯ ஒளியாய் பாதமே யல்லால்

பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர் கோலச் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக்
கலந்துநான் வாழுமா றறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே. 
 
சூரியன் போல் ஒளி தரும் பாதத்தை இல்லாமல் வேறு ஒரு பற்று இல்லாதவன் என கண்டாய். திரு வளர்ந்த சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறையும் சிவனே கருணையோடு நோக்கி கசிந்து உள்ளம் உருகி கலந்து வாழ அறியாமல் மயங்கினேன் இநுத உலகில் வாழ இயலவில்லை என கண்டாய் வருக என்று அருள் புரியவேண்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | வாழாப்பத்து | பாடல் எண் : 4

வல்லைவா ளரக்கர் புரமெரித் தானே

மற்றுநான் பற்றிலேன் கண்டாய்

தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே

திருப்பெருந் துறையுறை சிவனே

எல்லைமூ வுலகும் உருவியன் றிருவர்

காணும்நாள் ஆதியீ றின்மை

வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்

வருகஎன் றருள்புரி யாயே. 

 

வல்லவன் வாள் கொண்ட அரக்கர்களை வெளியே தள்ளியவன் இல்லாமல் வேறு ஒரு பற்று இல்லாதவன் என கண்டாய். தில்லை வழும் கூத்தனே சிவபுரத்து அரசே திருப்பெருந்நுறை உறையும் சிவனே எல்லை மூவுலகிற்கு உண்டு என்ற இருவர் காணும்படி ஆதி முடிவற்ற வல்லைமையானது என வளர்ந்தாய். நானோ வாழவில்லை என கண்டாய் வருக என்று அருள் புரியவேண்டும்.

#திருவாசகம்

 

திருவாசகம் | வாழாப்பத்து | பாடல் எண் : 1

 à®ªà®¾à®°à¯Šà®Ÿà¯ விண்ணாய்ப் பரந்த எம்பரனே

பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே.
 
பார்க்கும் இடத்துடன் பரந்த விண்ணுக்கும் தலைவனான என்பரனே. பற்று வேறு எங்கும் வைக்கவில்லை என அறிந்தாய், சீரொடு பொலிவாய் உள்ள சிவ புரத்து அரசே, திருப்பெருந்துறை உறையும் சிவனே, யாரை நான் நொந்துக்கொள்வேன், யாரிடம் எடுத்துச் சொல்வேன், ஆண்ட உன் அருள் இல்லை என்றால் கடல் சூழ்ந்த உலகில் வாழ மாட்டேன். வந்து எனக்கு அருள் புரியவே.   
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 10

 à®•à®¾à®ªà¯à®ªà®¾à®¯à¯ படைப்பாய் கரப்பாய் முழுதுங்

கண்ணார் விசும்பின் விண்ணோர்க் கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற
முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பா னேஎம் பரமாஎன்று
பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போ தணைவ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 
 
காத்திடுவாய், படைத்திடுவாய், துடைத்திடுவாய் என முழுமையும் செய்பவனே, கண் இமைக்கா வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் முடிவாய், முடிவற்ற முதலாய் நின்ற முதல்வனே, முன்னமே என்னை ஆண்ட பார்ப்பானே, என் பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப் பூவை அணைவது என்று இயலுமோ என் பொல்லா மணியை புணர்ந்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 9

 à®¤à®¾à®¤à®¾à®¯à¯ மூவே ழுலகுக்குந் 

தாயே நாயேன் தனையாண்ட 
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே 
பெருந்தேன் பில்க எப்போது 
மேதா மணியே என்றென் றேத்தி 
இரவும் பகலும் எழிலார் பாதப் 
போதாய்ந் தணைவ தென்றுகொல் லோஎன் 
பொல்லா மணியைப் புணர்ந்தே.  
 
மாறுபட்டு வளர்ந்த முன் எழுந்த உலகின் தாயே, இனம் சேர்க்கா என்னை ஆண்ட பித்தனே, பிறவி என்ற பிணிக்கு மருந்தே, எப்பொழுது பெருந்தேன் சிந்தாமல் ஞான மணியே என்று வாழ்த்தி இரவும் பகலும் எழிலான பாதம் போதாது என ஆய்ந்து இணைவது, இது என்று இயலுமோ என் பொல்லா மணியை புணர்ந்து. 
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 8

 à®¨à¯†à®•à¯à®•à¯ நெக்குள் உருகி உருகி 

நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும் 
நக்கும் அழுதுந் தொழுதும் வாழ்த்தி 
நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச் 
செக்கர் போலுந் திருமேனி 
திகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப் 
புக்கு நிற்ப தென்றுகொல் லோஎன் 
பொல்லா மணியைப் புணர்ந்தே.  
 
நெகிழ்ந்து நெகிழ்ச்சியால் உருகி, உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் நகைத்தபடி அழுதும் தொழுதும் வாழ்த்தியபடி பலவகை கூத்தும் பாடியும் சொக்கவைக்கும் திருமேனி திகழ்வதைப் பார்த்து மயிர் சிலிர்ப்ப கூடி நிற்பது என்று இயலுமோ என் பொல்லா மணியை புணர்ந்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 7

 à®¨à®¿à®©à¯ˆà®¯à®ªà¯ பிறருக் கரிய நெருப்பை 

நீரைக் காலை நிலனை விசும்பைத் 
தனையொப் பாரை யில்லாத் தனியை 
நோக்கித் தழைத்துத் தழுத்த கண்டங் 
கனையக் கண்ணீர் அருவி பாயக் 
கையுங் கூப்பிக் கடிமலராற் 
புனையப் பெறுவ தென்றுகொல் லோஎன் 
பொல்லா மணியைப் புணர்ந்தே. 
 
பிறருக்கு நினைக்க அரியாத நெருப்பை, நீரை, காற்றை, நிலத்தை, விரிந்த வெளியை, தனக்கு ஒப்புமை இல்லாத தனித்ததை நோக்கி தழைத்து தழைத்த கண்டம் கனைய கண்ணீர் அருவி பாயக் கரம் கூப்பி சிறந்த மலர்களால் பூட்டி இணைவது என்று இயலுமோ என் பொல்லா மணியை புணர்ந்து. 
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 6

 à®ªà®°à®¿à®¨à¯à®¤à¯ வந்து பரமானந்தம் 

பண்டே அடியேற் கருள்செய்யப் 
பிரிந்து போந்து பெருமா நிலத்தில் 
அருமா லுற்றேன் என்றென்று 
சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர் 
உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப் 
புரிந்து நிற்ப தென்றுகொல் லோஎன் 
பொல்லா மணியைப் புணர்ந்தே. 
 
பரிவுடன் வந்து பரமானந்தம் முன்னமே அடியற்களுக்கு அருள் செய்தாலும் பிரிந்து போய் பெரிய மாநிலத்தில் அளவு வைத்தபடி தேடி அல்லல் அடைந்தேன் என்றபடி வழியும் கண்ணீர் வழிந்தபடி உள்ளே அன்பே சுரந்து மையிர் சிலிர்ப்ப படைத்தவனை புரிந்தபடி நிற்பது என்று நடக்குமோ என் பொல்லா மணியை புணர்ந்து. 
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 5

 à®¤à®¿à®•à®´à®¤à¯ திகழும் அடியும் முடியுங்

காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா
அம்மான் இம்மா நிலமுழுதும்
நிகழப் பணிகொண் டென்னை ஆட்கொண்
டாவா என்ற நீர்மை யெல்லாம்
புகழப் பெறுவ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 
 
அளவிட அளவற்று வளரும் அடியும் முடியும் கீழ் மேல் என காண முற்பட்ட அயனும் மாலும் அகழ்ந்தும் பறந்தும் காண முடியாத அம்மான் இந்த அளவற்ற நிலம் முழுவதும் செயல்களை செய்ய தூண்டி என்னை ஆட்கொண்டவா என்று நீர் பெருக புகழப் பெறுவது என்று இயலுமோ என் பொல்லா மணியை புணர்ந்து. 
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 4

 à®…ல்லிக் கமலத் தயனும் மாலும்

அல்லா தவரும் அமரர் கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச்
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறைஇன் அமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
 
அல்லி இதழில் உள்ள அயனும் மாலும் அப்படி இல்லாத மற்றவர்களும் தேவர்கள் தலைவனும் பேசி வாழ்த்தும் பெயர் கொண்டவனை வார்த்தையும் பொருளும் கடந்த சுடரை நெல்லிக் கனியை தேனைப் பாலை நிறைந்த இனிமையான அமுதின் சுவையை வளர்ந்து கூடுவது என்று இயலுமோ என் பொல்லாத மணியைப் புணர்ந்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 3

 à®¨à¯€à®£à¯à®Ÿ மாலும் அயனும் வெருவ

நீண்ட நெருப்பை விருப்பி லேனை
ஆண்டு கொண்ட என்ஆ ரமுதை
அள்ளூ றுள்ளத் தடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட் டலறி
விரையார் மலர்தூவிப்
பூண்டு கிடப்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 
 
அளவில் வளர்ந்த மாலும் அயனும் போற்றிட அளவில் வளர்ந்த நெருப்பை விரும்பாதவனை என்னை ஆண்டுக் கொண்ட ஆரா அமுதை எப்பொழுதும் உள்ளத்தே வைத்த அடியார்கள் முன் வேண்டிய அனைத்தையும் வாய்விட்டு அலறி விரும்பிய மலர்கள் தூவி மகிழ்ந்திருப்பது என்று இயலுமோ என் பொல்லாத மணியை புணர்ந்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 2

 à®†à®±à¯à®± கில்லேன் அடியேன் அரசே

அவனி தலத்தைம் புலனாய
சேற்றி லழுந்தாச் சிந்தை செய்து
சிவனெம் பெருமான் என்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக்
குள்ளே உருகி ஓலமிட்டுப்
போற்றி நிற்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
 
அரசே அடிமை என்னால் வழி அறிய முடியவில்லை கொடுக்கப்பட்ட புலன்கள் ஐந்தும் சகதியில் அழுந்தாதபடி என் சிந்தை சிறக்கச் செய்து சிவனே என் தலைவன் என்று பாராட்டி மணலில் எற்படும் ஊற்று போல் நெஞ்சம் உருகி ஓலமிட்டு போற்றி நிற்பது என்று இயலுமோ என் பொல்லாத மணியைப் புணர்ந்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 1

 à®šà¯à®Ÿà®°à¯à®ªà¯Šà®±à¯ குன்றைத் தோளா முத்தை

வாளா தொழும்புகந்து
கடைபட் டேனை ஆண்டு கொண்ட
கருணா லயனைக் கருமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத்
தன்னைத் தந்த என்னா ரமுதைப்
புடைபட் டிருப்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
பொழிப்புரை :
 
ஒளிரும் தங்க குன்றை சிதைக்காத முத்தை பிரிக்க முடியாமல் வணங்கும் ஒன்றை அடைவதில் இறுதியான என்னை ஆண்டுகொண்ட கருணையானவனை கரிய மாலும் பிரமனும் எதிர்பட்டும் சார இடந்தாராது எனக்கு தன்னை தந்த என் ஆர அமுதை கூடி இணைந்திருப்பது என்று இயலுமோ என் பொல்லாத மணியை புணர்ந்தே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 10

 à®‡à®°à¯à®³à¯à®¤à®¿ ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச்

சிறுகுடி லிதுஇத்தைப்
பொருளெ னக்களித் தருநர கத்திடை
விழப்புகு கின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச்
சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய
அதிசயங் கண்டாமே.
 
அடர்ந்த இருளால் எழுந்ததோர் வன்செயல்களால் ஆன இந்த சின்னகுடிலை பொருளாக எனக்கு அளித்து நரகத்திற்கு புக விரும்பும் என்னை தெளிவு பெற முன்று மலத்தையும் நொடிவரை தடுத்து காத்து சின்ன வார்த்தையால் சிறிய நெருப்பால் வளரும் தீ போல் மெய் நெறி அருளி பொய் நெறி நீக்கிய அதிசயம் கண்டோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 9

 à®‰à®±à¯à®± ஆக்கையின் உறுபொருள் நறுமலர்

எழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்
அப்பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும்
பித்தர்சொல் தெளியாமே
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
 
பெற்ற உடலில் நன்மை அருளும் பொருளான நறுமலர் எழுப்பும் வாசனையாக பற்ற வேண்டியதை பற்றாமல் நிலையற்ற பரம்பொருள் அதை பாராதே. பெற்றவன் பெற்ற பயனாக நுகர்ந்திடும் பித்தர் சொல்லை தெளிவாக உணராமல் அத்தன் ஆண்டு அடியார் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 8

 à®¨à¯€à®•à¯à®•à®¿ முன்னெனைத் தன்னொடு நிலாவகை

குரம்பையிற் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து
நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத்
தெழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
 
முதலாகி இருந்ததை பிரித்து தேய்ந்து வளரும் பண்பில் வரும் குடத்தில் புகச்செய்து என்னை நோக்கி நுட்பமான சொல் உணர்த்தி பழுது இல்லாதபடி மேலே தூக்கி பொய் இல்லாதபடி அறுத்து தெழுவதற்கு தகுந்த சுடர்சோதி ஆக்கி ஆண்டு தனது அடியார்களின் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டோமே.  
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 7

 à®ªà¯Šà®¤à¯à®¤à¯ˆ ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும்

பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற்
சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த
பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதியங் கண்டாமே. 
 
ஓட்டை உள்ள சுவர் கொண்ட ஊன் உடல் புழுக்கள் உருவாகும் பொய்யான கூரை இதை மெய் என்று கருதி நின்று இடர்களுடன் காலம் கழிப்பவனை முத்து மாமணி மாணிக்க வைரத்தை ஒத்த பவளத்தின் முழுச்சோதி அத்தன் ஆண்டு அடியார்களின் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 6

 à®Žà®£à¯à®£à®¿ லேன்திரு நாமஅஞ் செழுத்தும்என்

ஏழைமை யதனாலே
நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடு
நல்வினை நயவாதே
மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற்
கொருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
 
எண்ணியதே இல்லை எழுத்து ஐந்தை என் ஏழ்மையாலே. நாடியதே இல்லை கலை ஞானிகளுடன் எனக்கு நல்ல செயல்கள் இல்லாமையால். மண்ணிலே பிறந்து மண்ணிலே இறக்க ஏதுவான என்னை அண்ணல் ஆண்டு அடியார்களில் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 5

 à®ªà®°à®µà¯ வாரவர் பாடுசென் றணைகிலேன்

பன்மலர் பறித்தேத்தேன்
குரவு வார்குழ லார்திறத் தேநின்று
குடிகெடு கின்றேனை
இரவு நின்றெரி யாடிய எம்மிறை
எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 
 
வாழ்த்து பாடுபவருடன் கூடி சென்று பாடவில்லை பலவித மலர் பறிந்து ஏத்தவில்லை, கூத்தலை அழகு செய்த பெண்களின் திறத்தால் குடி கெடுகின்ற என்னை இரவு ஒழிக்க வெளிச்சமான எம்மிறை வெளிச்சமான பாம்பை தலையில் அணிந்தவன் ஆண்டு தன் அடியார் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 4

 à®ªà®¿à®¤à¯à®¤ னென்றெனை உலகவர் பகர்வதோர்

காரணம் இதுகேளீர்
ஒத்துச் சென்றுதன் திருவருள் கூடிடும்
உபாயம தறியாமே
செத்துப் போய்அரு நரகிடை வீழ்வதற்
கொருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 
 
பித்தன் என்று என்னை உலகத்தார் அழைக்கும் காரணம் இதுதான். ஒத்திசைந்து சென்று திருவருள் கூடிடும் உபாயத்தை அறியாமல் செத்து போய் கொடிய நரகத்தில் விழ முற்படுகின்றவனை அத்தன் ஆண்டு தன் அடியார் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 3

 à®®à¯à®©à¯à®©à¯ˆ என்னுடைய வல்வினை போயிட

முக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன்
எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில்
இளமதி யதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
 
முன்பு என் கொடிய செயல்களை ஒழித்திட முக்கண் உடைய என் தந்தை, தன்னை யாவரும் அறிவதற் அரிதானவன், அடியவர்களுக்கு எளிமையானவன், பொன்னை அடைந்ததைப் போல் வளர்ந்த கூந்தலில் இளமையான நிலாவை வைத்து அன்னையை ஆண்டு தன்னை அடியார்களின் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டோமே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 1

 à®µà¯ˆà®ªà¯à®ªà¯ மாடென்று மாணிக்கத் தொளியென்று

மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள்
திறத்திடை நைவேனை
ஒப்பி லாதன உவமனி லிறந்தன
ஒண்மலர்த் திருப்பாதத்
தப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
 
சேமித்த செல்வமாய் மாணிக்க ஒளி ஒன்றை நினைத்து உருகாமல், செய்யப்பட்ட செப்பு போன்ற மார்பழகு உள்ளவர்களிடம் திறத்தை காட்டி நெந்து போகும் என்னை, ஈடற்ற உவமை காட்டமுடியா இணை மலர் திருபாதத்தை கொண்ட அப்பன் அடியர் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆசைப்பத்து | பாடல் எண் : 10

 à®µà¯†à®žà¯à®šà¯‡ லனைய கண்ணார்தம்

வெகுளி வலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே
நானோர் துணைகாணேன்
பஞ்சே ரடியாள் பாகத் தொருவா
பவளத் திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 
 
வஞ்சகம் மிகுந்த கண் உடையவர்களின் கோபத்திற்கு ஆட்பட்டு துன்பம் அடைந்தேன். ஞானச்சுடரே இனம் வெறுக்கும் நான் ஒரு துணையும் அறியவில்லை மென்மையான பெண்மையை பாகமாக கொண்டவனே உன் பவளத் திருவாயால் அஞ்சதே என சொல்வாய் என்று ஆசைப்பட்டேன் அறிந்துக்கொள் அம்மானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆசைப்பத்து | பாடல் எண் : 9

 à®šà¯†à®Ÿà®¿à®¯à®¾ ராக்கைத் திறமற வீசிச் 

சிவபுர நகர்புக்குக் 
கடியார் சோதி கண்டு கொண்டென் 
கண்ணிணை களிகூரப் 
படிதா னில்லாப் பரம்பர னேஉன் 
பழஅடி யார்கூட்டம் 
அடியேன் காண ஆசைப் பட்டேன் 
கண்டாய் அம்மானே. 
 
தொடர்ந்து வளரும் சொடி போன்ற உடலை திறத்துடன் மறந்து வீசி சிவபுர நகர் அடைந்து உன் அடியாரால் சோதி கண்டுக்கொண்டேன் கண்களால் மகிந்தேன் மேல் கிழ் என்ற படி இல்லாம பரத்தை ஆள்பவனே உன் பழய அடியார் கூட்டத்தை அடியேன் காண ஆசைப்பட்டேன் அறிந்துக்கொள் அம்மானே.  
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆசைப்பத்து | பாடல் எண் : 7

 à®ªà®¾à®°à¯‹à®°à¯ விண்ணோர் பரவி யேத்தும்

பரனே பரஞ்சோதீ
வாராய் வாரா உலகந் தந்து
வந்தாட் கொள்வானே
பேரா யிரமும் பரவித் திரிந்தெம்
பெருமான் எனஏத்த
ஆரா அமுதே ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
 
உலகத்தார்களும் விண்ணவர்களும் பரந்தபடி மதித்து ஒழுகும் பரனே பரஞ்சோதீ வந்து அருள். தொடர்ந்து வராத நிலைத்த உலகில் ஆட்கொண்டவனே ஆயிரம் பெயர் கொண்டு பரவி திரியும் என் பெருமான் என உயர்வு செய்ய ஆர அமுதே ஆசைப்பட்டேன் அறிந்துக்கொள் அத்தனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆசைப்பத்து | பாடல் எண் : 5

 à®…ளிபுண் ணகத்துப் புறந்தோல் மூடி

அடியே னுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்
விடையாய் பொடியாடீ
எளிவந் தென்னை ஆண்டு கொண்ட
என்னா ரமுதேயோ
அளியன் என்ன ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே. 
 
புண் உள்ள உடலை புறம்பாக தோல் கொண்டு மூடி செய்யப்பட்ட உடலை அடியனுக்கு அளித்தாலும் அதில் புளியம் பழம் போல் மனம் என்றும் உடல் என்றும் தனித்திருந்தேன் இருந்தும் எனக்கு விடையாக சிறுமையுடன் எளிமையாக வந்து என்னை ஆண்டு கொண்ட என் ஆர அமுதே என்னை அளிக்கவே ஆசைப் பட்டேன் அறிந்துக்கொள் அம்மானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆசைப்பத்து | பாடல் எண் : 3

 à®šà¯€à®µà®¾à®°à¯à®¨à¯ தீமொய்த் தழுக்கொடு திரியுஞ்

சிறுகுடி லிதுசிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்தாட்
கொள்ளுங் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே
சிறிதென் முகநோக்கி
ஆவா என்ன ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
 
சீழ் ஒழுகி ஈ மொய்த்து அழுக்கோடு திரியும் சிறுகுடில் இந்த உடம்பு சிதையும் எனஙே கூவி அழைத்துக்கொள் என் மன்னனே கூத்தனே காத்துக் கொள்ளும் குருமணியே தேவா தேவர்களுக்கும் அரிதான சிவனே சற்றே என் முகத்தை பார்த்து வா என ஆசைப்பட்டேன் அறிந்து கொள்
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆசைப்பத்து | பாடல் எண் : 2

 à®®à¯Šà®¯à¯à®ªà¯à®ªà®¾à®²à¯ நரம்பு கயிறாக

மூளை என்பு தோல்போர்த்த
குப்பா யம்புக் கிருக்ககில்லேன்
கூவிக் கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம்
என்னா ரமுதேயோ
அப்பா காண ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
 
அங்கு இங்கு என மொய்க்கும்படியாக நரம்பு என்ற கயிறால் பின்னி முளை எலும்பு மேல் தோல் போர்த்திய உடலில் இருக்க விருப்பம் இல்லை எனவே கூவி அழைத்துக்கொள் என் மன்னனே எந்த பால் சேர்ந்தவருக்கும் அப்பால் பட்டவனே என் ஆரமுதே அப்பா உனை காண ஆசைப்பட்டேன் அறிந்து கொள் அம்மானே
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 10

 à®µà®´à®™à¯à®•à¯à®•à®¿à®©à¯ றாய்க்குன் அருளா ரமுதத்தை

வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கி னேன்வினை யேன்என்
விதியின்மையால்
தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந்
துய்யக்கொள்ளாய்
அழுங்குகின் றேன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே.
 
அருள் அமுதத்தை ஙாரி வழங்குகின்றாய் அநை விழுங்குகின்றேன் இருப்பினும் விக்குகின்றேன் என் வல்வினையால் இது என் விதி இன்மையே எனவே தண்ணிர் பருகக் கொடுத்து உய்வடைச் செய் என வருத்துகிறேன் என்னை உடைமையாக்கிக் கொண்டவனே அடியேன் உன் அடைக்கலமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 9

 à®ªà®¿à®±à®¿à®µà®±à®¿ யாஅன்பர் நின்அருட் பெய்கழல்

தாளிணைக்கீழ்
மறிவறி யாச்செல்வம் வந்துபெற் றார்உன்னை
வந்திப்பதோர்
நெறியறி யேன்நின்னை யேஅறி யேன்நின்னை
யேஅறியும்
அறிவறி யேன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 
 
பிரிவைப் பற்றிய எண்ணம் இல்லாமல் இருக்கும் அன்பர்கள் அருள் மழை பெய்யும் திருவடியின் கிழ் மாற்றம் அற்ற செல்வத்தை அடைந்தார்கள். உன்னை வாழ்த்தும் நெறி அறியாத என்னை உடைமையாக உடையவனே அடியேன் உன் அடைக்கலமே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 8

 à®®à®¾à®µà®Ÿà¯ வகிரன்ன கண்ணிபங் காநின்

மலரடிக்கே
கூவிடுவாய் கும்பிக் கேயிடு வாய்நின்
குறிப்பறியேன்
பாவிடை யாடுகுழல் போற் கரந்து
பரந்ததுள்ளம்
ஆகெடு வேன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே.
 
மாவடுவில் இருக்கும் வடு போன்ற கண் இருப்பவளை பாகமாக கொண்டவன் மலரடிக்கே அழைத்திட வேண்டும் கும்பிட கோயில் அமைக்க வேண்டும் என்ற குறிப்பை அறியேன் பாவற்கு ஆடும் குழல் போல் அசைந்துக் கொடுத்து பரந்து உள்ளம் ஆட்டத்தை நிறுத்தும் என்னை உடைமையாக்கிக் கொண்டவனே அடியேன் உன் அடைக்கலமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 6

 à®®à®¾à®´à¯ˆà®®à¯ˆà®ªà¯ பாவிய கண்ணியர் வன்மத்

திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன்
தடமலர்த்தாள்
வாழியெப் போதுவந் தெந்நாள் வணங்குவன்
வல்வினையேன்
ஆழியப் பாஉடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே.
 
மென்மையான பார்க்கும் கண்ணை உடையவர்கள் வன்மத்தினால் திடமான தயிர் கட்டிகள் உடைந்து பானையின் ஒட்டுவது போல் தளர்ந்து போனேன். வாழ்த்தி எப்பொழுது வணங்குவேன் கடினமான வினைகள் செய்தவானான நான். தொடர் ஈரம் உடைய கடலை உடையவனே என்னை உடைமையாக்கிக் கொண்டவனே அடியேன் உன் அடைக்கலமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 5

 à®šà¯à®°à¯à®³à¯à®ªà¯à®°à®¿ கூழையர் சூழலிற் பட்டுன் 

திறம்மறந்திங் 
கிருள்புரி யாக்கையி லேகிடந் தெய்த்தனன் 
மைத்தடங்கண் 
வெருள்புரி மான்அன்ன நோக்கிதன் பங்கவிண் 
ணோர்பெருமான் 
அருள்புரி யாய்உடை யாய்அடி யேன்உன் 
அடைக்கலமே.  
 
சிக்கவைக்கும் இதழ் கொண்டவர் கூட்டத்தால் நின் திறத்தை மறந்து இருள் தரும் உடலில் இருந்து தவிக்கின்றேன் மை இட்ட மருட்சி உடைய மான் போல் பார்வை கொண்டவளை பாகமாக கொண்ட பெருமான் அருள் செய்யவேண்டும் என்னை உடைமையாக்கிக் கொண்டவனே அடியேன் உன் அடைக்கலமே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 4

 à®ªà¯Šà®´à®¿à®•à®¿à®©à¯à®± துன்பப் புயல்வெள்ளத் தில்நின்

கழற்புணைகொண்
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான்
இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச்
சுறவெறிய
அழிகின் றனன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 
 
அளவற்று பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில் நின் திருவடியில் புணர்ந்து அதை அழிக்கின்ற அன்பர்கள் ஏறி மேன்மை அடைந்தார்கள். யானோ கடலில் இடர்பட்ட சுழியில் சென்றது போல் மாதர் மேல் முடிவற்ற காமத்துடன் அழிகின்றேன் என்னை உடைமையாக்கிக் கொண்டவனே அடியேன் உன் அடைக்கலமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 3

 à®ªà¯†à®°à¯à®®à¯à®ªà¯†à®°à¯ மான்என் பிறவியை வேரறுத் 

துப்பெரும்பிச்சுத் 
தரும்பெரு மான்சது ரப்பெரு மான்என் 
மனத்தினுள்ளே 
வரும்பெரு மான்மல ரோன்நெடு மாலறி 
யாமல்நின்ற 
அரும்பெரு மான்உடை யாய்அடி யேன்உன் 
அடைக்கலமே.  
 
பெருமைக்கு உரிய பெரிய அளவுடையவன் பிறவியை வேர் அறுக்கும் பெரிய பிச்சை தரும் பெரிய அளவுடையவன் சகலத்தையும் அடக்கிய பெரிய அளவுடையவன் என் மனதில் வரும் பெரிய அளவுடையவன் மலரோன் நெடுமால் அறியாத நின்ற அருமையான பெரிய அளவுடையவன் என்னை உடைமையாக்கிக் கொண்டவனே அடியேன் உன் அடைக்கலமே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 2

 à®µà¯†à®±à¯à®ªà¯à®ªà®©à®µà¯‡ செய்யும்என் சிறுமையைநின்

பெருமையினாற்
பொறுப்பவ னேஅராப் பூண்பவ னேபொங்கு
கங்கைசடைச்
செறுப்பவ னேநின் திருவரு ளால்என்
பிறவியைவேர்
அறுப்பவ னேஉடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே.
 
வெறுப்பதையே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால் பொறுப்பவனே விடம் கொண்ட பாம்பையும் அணிபவனே பொங்கும் கங்கை உடையவனே நின் திருவருளால் என் பிறவியை வேர் அறுப்பவனே என்னை உடைமையாக்கிக் கொண்டவனே அடியேன் உன் அடைக்கலாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 1

 à®šà¯†à®´à¯à®•à¯à®•à®®à®²à®¤à¯ திரளனநின் சேவடிசேர்ந்

தமைந்த
பழுத்தமனத் தடியர்உடன் போயினர்யான்
பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி
ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன்
அடைக்கலமே.
 
செழுமையான கமல மலர் திரளான நின் சேவடி சேர்ந்து பழுத்து முழுமை பெற்ற அடியார் கடந்து போயினர். யானோ பாவியானேன் புழுக்கள் உடைய இழிவான உடலுடன் அர்த்தமற்ற கல்வியால் ஞானமில்லா அழுக்கு மனதை உடைய என்னை உடைமையாக கொண்டவனே நான் உன் அடைக்கலமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 10

 à®…ளித்து வந்தெனக் காவஎன் றருளி 

அச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில் 
திளைத்துந் தேக்கியும் பருகியும் உருகேன் 
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 
வளைக்கை யானொடு மலரவன் அறியா 
வான வாமலை மாதொரு பாகா 
களிப்பெ லாம்மிகக் கலங்கிடு கின்றேன் 
கயிலை மாமலை மேவிய கடலே.  
 
தேவைகள் எதுவோ அதை அளித்தும் அச்சமற்றவனாக்கிய அருட்கடலில் திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகாமல் இருந்தேன் திருப்பெருந்துறை மேவிய சிவேனே வலம்புரி சங்குடன் இருப்பவனுடன் மலரவன் அறியாத வானவர்களின் மாமலையே பெண் ஒரு பாகம் கொண்டவனே களிப்பு மிகுந்து கலக்கிடுகின்றேன் கயிலை மாமலை மேவிய கடலே.  
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 9

 à®žà®¾à®²à®®à¯ இந்திரன் நான்முகன் வானவர் 

நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய் 
காலன் ஆர்உயிர் கொண்டபூங் கழலாய் 
கங்கை யாய்அங்கி தங்கிய கையாய் 
மாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே 
மரக்க ணேனையும் வந்திடப் பணியாய் 
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ் 
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.  
 
உயர்ந்தோர் நிறைந்த ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர் உன்னை பணிந்து நிற்க மாறுபட்ட என்னை நயமுடன் இனிமையாக ஆண்டாய் காலனது உயிர் தன்வசம் செய்த பூ போன்ற கழல் உடையவனே கண்களின் கைகளாய் நீரையும் அங்கியை கைகளிலும் மாலும் சப்தமாய் அமரும் அந்த மலர்க்கே அரக்கனையும் வந்திட பணித்தாய் மீனும் நீல மலரும் நிலவிய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறை மேவிய சிவளே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 8

 à®ªà¯‹à®¤à¯ சேரயன் பொருகடற் கிடந்தோன்

புரந்த ராதிகள் நிற்கமற் றென்னைக்
கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக்
குறிக்கொள் கென்றுநின் தொண்டரிற் [கூட்டாய்
யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே
அடிய னேன்இடர்ப் படுவதும் இனிதோ
சீத வார்புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
 
விரிந்த மலரில் சேர்ந்த அயன், கடலில் கிடந்தவன், வெளிப்பட்ட தேவர்கள் என எல்லாரும் நிற்க, என்னை குறிப்பிட்டு சீராட்டி நின் குரைகழல் காட்டி குறிப்பாக கொள் என்று உணர்த்த நின் தொண்டர் கூட்டத்தில் யாது செய்வது என்பதை அறியாது இருந்தேன். மருந்தே உன் அடிமை இடர்படுவது இனிமையானதா? ஈரம் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறை மேவிய சிவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 7

 à®®à®¾à®¯ னேமறி கடல்விடம் உண்ட

வான வாமணி கண்டத்தெம் அமுதே
நாயி னேன்உனை நினையவும் மாட்டேன்
நமச்சி வாயஎன் றுன்னடி பணியாப்
பேய னாகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞக னேயோ
சேய னாகிநின் றலறுவ தழகோ
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
 
மாயம் செய்பவனே திரையாக நின்று மறிக்கும் கடல் விடத்தை உண்ட மறைமணியே கண்டத்தில் எழும் அமுதே இனம் சேர்க்காத நான் உன்னை நினைக்கவும் அறியவில்லை நமசிவய என்று உன் அடியை பணியவுமில்லை பேய் போன்றவனாகினும் பெருநெறி காட்டவேண்டும் பிறையை சடையில் பெருத்திய பிஞ்ஞகனே குழைந்தையாக நின்ற அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 6

 à®…றுக்கி லேன்உடல் துணிபடத் தீப்புக்

கார்கி லேன்திரு வருள்வகை யறியேன்
பொறுக்கி லேன்உடல் போக்கிடங் காணேன்
போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
இறக்கி லேன்உனைப் பிரிந்தினி திருக்க
என்செய் கேன்இது செய்கஎன் றருளாய்
சிறைக்க ணேபுனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
 
உடலை துண்டாக்கிக் கொள்ளமாட்டேன் துணிந்து தீயில் கருகவிடமாட்டேன் திருவே இறுதியை அடையும் வகையும் அறியேன் அமைதி காக்கவும் அறியேன் உடல் விட்டு போகும் இடமும் அறியேன் வாழ்த்துகிறேன் எனக்கு விடை தரும் பங்காளனே உன்னை பிரிந்து இருக்க இறக்கவும் இல்லை என்ன செய்வேன் எது செய்யவேண்டும் என்பதை அருள்செய் வரையறுக்கப்பட்ட நீர் நிறைந்த வயல்கள் சூழும் திருப்பெருந்துறை மேவிய சிவனே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 5

 à®†à®Ÿà¯à®Ÿà¯à®¤à¯ தேவர்தம் விதியொழித் தன்பால்

ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்
நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே
நாத னேஉனைப் பிரிவுறா அருளைக்
காட்டித் தேவநின் கழலிணை காட்டிக்
காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய்
சேட்டைத் தேவர்தந் தேவர் பிரானே
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 
 
மனிதர்களை ஆட்டிப் படைக்கும் தலைவர்களின் விதிகளை ஒழித்து தன் விருப்பத்தில் என் ஐயனே என்றும் உன் அருள் வழியில் இருப்பேன். நாட்டின் தலைவர்களும் நாட்டில் உள்ளவர்களும் நாடும் பொருளே நாதனே உன்னை பிரியா அருளைக் காட்டி தேவ உன் கழலிணைக் காட்டி உடல் என்ற நிலையற்றதை கழிக்கும் அருள் செய்வாய். மாயம் செய்பவர்களின் தலைவனின் தலைவனே திருப்பெருந்துறை மேவிய சிவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 4

 à®…ன்ப ராகிமற் றருந்தவம் முயல்வார்

அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்
என்ப ராய்நினை வார்எ னைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்
வன்ப ராய்முரு டொக்கும்என் சிந்தை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
 
அன்பானவர்களும் மற்றும் அருந்தவம் செய்து முயல்பவர்களும் அயனும் மாலும் மற்றும் மெழுகாய் உருகி நினைப்பவர்களும் என பலர் உன்னை நோக்கி நிற்க, என்னிடத்தில் என்ன கண்டாய், வன்புடன் மூர்க்கமான என் சிந்தை, மரக்கண் என்றபடி இருக்கும் செய்யப்பட்டது போன்ற கண், காதுகள் இரும்பை போல் கடினமாகவும் இருக்கிறது காண ஆராய இருக்கும் துறையாய் உள்ள சிவலோக, திருப்பெருந்துறை மேவிய சிவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 3

 à®ªà¯à®²à¯ˆà®¯ னேனையும் பொருளென நினைந்துன்

அருள்பு ரிந்தனை புரிதலுங் களித்துத்
தலையி னால்நடந் தேன்விடைப் பாகா
சங்க ராஎண்ணில் வானவர்க் கெல்லாம்
நிலைய னேஅலை நீர்விட முண்ட
நித்த னேஅடை யார்புர மெரித்த
சிலைய னேஎனைச் செத்திடப் பணியாய்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 
 
தகுதியற்ற என்னையும் ஒரு பொருட்டாக நினைத்து அருள் புரிந்தாய், அனைத்தும் புரிந்துக் கொண்டே மகிழ்ந்து முதன்மையாக நடந்தேன், விடை உரைக்காமல் உணர்த்துபவனே, சங்கரா எண்ணில் சிறந்த வானவர்களுக்கு எல்லாம் நிலையானவனே, அலை நீரில் இருந்து விடத்தை உண்டவனே, நித்தம் இருப்பவனே உன்னை அடையாதவர்களை அகற்றிடும் சிலையனவனே, என்னை செத்திடப் பணிக்காதவனே, திருப்பெருந்துறை மேவிய சிவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 2

 à®ªà¯à®±à¯à®±à¯ மாய்மர மாய்ப்புனல் காலே

உண்டி யாய்அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும்நின் மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன்
பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றி லேன்இன்னுந் திரிதரு கின்றேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
 
புற்றாக மாறும் அளவிற்கு முயல்பவரும் மரமாய் மாறும் அளவிற்கு முயல்பவரும் நீரும் காற்றை மட்டுமே உணவாக கொண்டு முயல்பவரும் எல்லா உலகத்தவரும் மற்றவரும் வாடி நின் மலர் அடியை காணாமல் இருக்க என்னை ஒர் வார்த்தையால் கவரப்பட்டு ஆட்கொண்டாய் பதைக்கவோ மனம் மிக உருகவோ அறிந்தவன் நான் இல்லை பரியான உடல் விட்டு இன்னும் செத்திடவில்லை திரிந்து அலைகின்றேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 1

 à®ªà¯Šà®¯à¯à®¯à®©à¯‡à®©à¯ அகம்நெகப் புகுந்தமு தூறும்

புதும லர்க்கழ லிணையடி பிரிந்துங்
கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ
விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்த னேஅயன் மாற்கறி யொண்ணாச்
செய்யமே னியனே செய்வகை அறியேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 
 
பொய்யான என் அகத்தின் உள்ளே நெகழ்ச்சியால் புகுந்து அமுது ஊறும் புதிய மலர் இணை அடிகளால் பிரித்து உன் வசமானேன் இன்னும் செத்திடவில்லை அய்யோ விழித்திருந்து உள்ளம் கருத்துடன் செயல்படுவதை இழந்தேன் ஐயனே அரசே அருள் தரும் பெருங்கடலே அத்தனே அயன் மால் அறிய முடியா விளக்க முடியா மேனியனே செயல்படும் விதத்தை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 9

 à®šà¯‹à®¤à®¿à®¯à®¾à®¯à¯à®¤à¯ தோன்றும் உருவமே அருவாம்

ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே. 
 
வெளிச்சம் போல் வியபித்த உருவமே உருவம் அற்ற ஒருவனே விளக்கமாக சொல்ல முடியாத ஆதியே நடுவானதே முடிவே பந்தம் அறுக்கும் ஆனந்த பெருங்கடலே தீது இல்லாத நன்மையான திரு அருள் தரும் குன்றே திருப்பெருந்துறை உறையும் சிவனே எவ்வகையில் என்னை விட்டு போகமுடியும் என்பதை அருள் செய் எனக்காக இணையடி தந்தவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 8

 à®ªà®¾à®°à¯à®ªà®¤à®®à¯ அண்டம் அனைத்துமாய் முளைத்துப்

பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்
ஆனந்த மாக்குமென் சோதீ.
 
பார்த்து அறியும் அண்டம் அனைத்துமாய் விரிந்து பரந்த படரும் ஒளிப்பரப்பே நீரில் நிறைந்த தீயே நினைப்பதற்கு அரிதான அழுக்கற்றவனே நின் அருள் வெள்ளத்தின் சிறப்பு பொருந்தியபடி எழுந்த ஓர் தேனே திருப்பெருந்துறை உறையும் சிவனே யார் யார் எனக்கு இங்கு அயலாக இருக்கு முடியும் ஆனந்தமாக ஆக்கும் என் சோதியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 7

 à®‡à®©à¯à®±à¯†à®©à®•à¯ கருளி இருள்கடிந் துள்ளத்

தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றும் நீ யல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே. 
 
இன்றே எனக்கு அருளி இருளை அகற்றி அகத்துள் எழும்பும் ஞாயிறாய் நின்று உனது தன்மையை நினைப்பு போதும் என்ற அளவிற்கு நினைத்தேன் நீ அன்றி வேறு ஒன்று இல்லை கடந்து கடந்து அணுவாய் தேய்ந்து ஒன்றும் திருப்பெருந்துறை உறையும் சிவனே எந்த ஒன்றும் நீயால்லாமல் இல்லை இருந்தும் யார் உன்னை அறிவாரோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 6

 à®‡à®°à®¨à¯à®¤à®¿à®°à®¨à¯ துருக என்மனத் துள்ளே

எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
திருப்பெருந் துறையுறை சிவனே
நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆய்அவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண் டின்றே. 
 
என் மனதுள்ளே யாசித்து யாசித்து உருக எழுக்இன்ற சோதியே இமைக்காதவர்களின் சிரத்தில் பொலிவுடன் விளங்கும் கமல வடிவானவனே திருப்பெருந்துறை உறையும் சிவனே எங்கும் இருக்கும் ஆகாயம் நீர் நிலம் தீ காற்று என்றும் அவை கடந்தும் இல்லை என்ற தன்மையுடன் காக்கும் உருவே மகிந்தேன் உன்னைக் கண்ணுறக் கண்டு கொண்டு இன்றே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 5

 à®•à¯à®±à¯ˆà®µà®¿à®²à®¾ நிறைவே கோதிலா அமுதே

ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை யென்னிரக் கேனே.
 
சிறிதும் குறை இல்லாத முழுமையான நிறைவே குறையற்ற அமுதே இறுதியாகாத கொழுந்து விட்டு ஒளிரும் சுடர்க் குன்றே மறையாய் மறையின் பொருளாய் வந்து என் மனதில் பொருந்திய மன்னே தடைப்பட்டு சிறைப்படாத நீர் போல் என் சிந்தையில் பாயும் திருப்பெருந்துறை உறையும் சிவனே இறைவனே நீ என் உடலில் இடத்தை உரிமையாகக் கொண்டாய் இனி உன்னை எப்படி இரக்கம் காட்டச் செய்வேன்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 4

 à®‰à®£à®°à¯à®¨à¯à®¤à®®à®¾ முனிவர் உம்பரோ டொழிந்தார்

உணர்வுக்குந் தெரிவரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
எனைப்பிறப் பறுக்கும்எம் மருந்தே
திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
திருப்பெருந் துறையுறை சிவனே
குணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக்
குறிகினேற் கினியென்ன குறையே.
 
உணர்ந்த மாமுனிவர்கள் தேவர்கள் மற்றும் ஏனையோர் உணர்வுக்கு தெரிய வரும் பொருளே ஒப்பிலாததே எல்லா உயிர்களுக்கும் உயிரே என் பிறப்பை அறுக்கும் எனக்கான மருந்தே உருவாகும் இருட்டிலும் தெளிந்த தூய வெளியே திருப்பெருந்துறை உறையும் சிவனே குணங்கள் அற்ற இன்பமே உன்னை குறியாகக் கொண்டேன் இனி எனக்கு என்ன குறையே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 3

 à®…ரைசனே அன்பர்க் கடியனே னுடைய

அப்பனே ஆவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்
பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே
திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே
உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 
 
மன்னவனே அன்பானவர்களின் துணையானவனே அடிமை என் தந்தையே மேலும் மேலும் கனியும்படி எனக்குள் புகுந்து நின்று உருக்கி பொய்யாகும் இருளை அழிந்த மெய்சுடரே அலை போதாதபடி இருக்கும் அமுதக் கடலே திருப்பெருந் துறை உடைய சிவனே உரை கேட்ட தருணமே விறைந்து உணரும் ஓர் உணர்வே நான் உன்னை உரைப்பது எப்படி என நீயே உணர்த்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 2

 à®…ன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை

ஆனந்த மாய்க்கசிந் துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யான்இதற் கிலன்ஓர் கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
சீருடைச் சிவபுரத் தரைசே.
 
அன்பில் மிகுதியால் மனமும் உடலும் மகிழ்ச்சியாய் கசிந்து உருக எல்லை அற்றவன் இனிமையான அருள் தந்தான் நானோ இதற்கு கைமாறு செய்ய இயலாதவன் முதலாகவும் அடுத்ததாகவும் முழுவதாகவும் பரந்த முடிவானவனே முடிவற்ற முதலே தென்பெருந்துறை உடையவனே சிவபெருமானே சிறப்பு பொருந்திய சிவபுரத்து அரசே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 1

 à®®à®¾à®±à®¿à®¨à®¿à®©à¯ றென்னை மயக்கிடும் வஞ்சப்

புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந் தருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடைய அன்பே. 
 
முரண்பட்டு மாறி நின்ற என்னை மயக்கிடும் வஞ்சனையான புலன்களின் வழியை அடைத்தே அமுது எனக்குள் ஊறி வளரும் பரஞ்சோதியாக உள்ளதை உள்ளபடி காண வந்தருள்வாய் தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந் துறையில் உறையும் சிவனே ஈடு இணை இல்லாத பதங்கள் யாவற்றையும் கடந்த இன்பமே என்னுடைய அன்பே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 10

 à®¨à®²à¯à®•à®¾ தொழியான் நமக்கென்றுன்

நாமம் பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா
வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்
பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி
யருளாய் என்னை உடையானே. 
 
நமக்கு அருள்புரியாமல் ஒழியமாட்டான் அவனது நாமத்தை பிதற்றி கண்களில் நீர் வடிய வாழ்த்தாத வாய் வணங்காத மனம் என்று இருந்து இப்பொழுதே நினைந்து உருகி பலகாலம் உன்னை பாவித்து புகழ் பரப்பி பொன் அம்பலம் என்றே விலகாது நிற்கும் உயிருக்கு இரங்கி அருள்வாய் என்னை உடைமயாக்கி மகிழ்பவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 9

 à®šà®¿à®°à®¿à®ªà¯à®ªà®¾à®°à¯ களிப்பார் தேனிப்பார்

திரண்டு திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
வெவ்வே றிருந்துன் திருநாமந்
தரிப்பார் பொன்னம் பலத்தாடுந்
தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
நம்பி இனித்தான் நல்காயே.
 
சிரிப்புடன் இருப்பார்கள் மகிழ்வோடு இருப்பார்கள் தேன் போல் இனிமையாக இருப்பார்கள் கூடிக் கூடி உன்னைப் பற்றிய உயர்வான சொல்களை விளக்கமாய் உரைப்பார்கள் அதை உருக்கமாய் கேட்பார்கள் மதிப்பார்கள் வேறுவேறாய் உன் திருநாமத்தை தங்களுக்கு சூட்டி மகிழ்வார்கள் பொன்னம்பலத்தே ஆடும் தலைவா என்பார்கள் அவர்கள் முன்னே தந்திரம் மிகுந்த இனத்தை மதிக்காத நாய் போல் இருப்பேனோ என்னை நம்பி இனிமையை அருள்வாயாக.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 8

 à®…ருளா தொழிந்தால் அடியேனை

அஞ்சேல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட
பொன்னே பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து
வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல்
செத்தே போனாற் சிரியாரோ.
 
இறை அருள் இல்லாமல் ஒழிந்தால் அஞ்சாதே என்று இந்த அடிமையை ஆறுதல் சொல்லி தேற்றுபவர் யார் உயர் பொருளாய் என்னை புகுந்து ஆட்கொண்ட பொன்னே பொன் அம்பலத்து கூத்தனே மாறுபட்ட அறிவு கொண்ட மனம் உள்ளவர்களுடன் உன்னை பிரிந்து வருந்தும் என்னை தெளிவு பெற்றவர் கூட்டத்தில் சேர்க்காமல் செத்தே போனேன் என்றால் நகைக்க மாட்டார்களோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 7

 à®‡à®°à®™à¯à®•à¯à®®à¯ நமக்கம் பலக்கூத்தன்

என்றென் றேமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய்
ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும்
நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள்
வாழ்வே வாவென் றருளாயே.
 
இரக்கம் உள்ள நமக்கு அம்பலத்தே ஆடும் கூத்தன் எனது நான் என்று இருமாந்து இருக்கும் அருமையற்ற அற்பனை கற்பித்து ஆண்டாய். ஆள்பவர் இல்லாமல் வீணாகும் பொருளாய் போவேனோ நெருக்கும் அடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும் கூட்டத்தில் வந்து சேர எங்கள் வாழ்வே என்னை வா என்று அழைத்து அருள் செய்யாயே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 6

 à®à®šà®¾ நிற்பர் என்னைஉனக்

கடியான் என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும்
பேணா நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குந்
திருவோ லக்கம் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும்
எந்தாய் இனித்தான் இரங்காயே. 
 
என்னை பிறர் ஏசாமல் நிறுத்துவார்கள் உனக்கு அடிமை என்பதால் பேசாமல் நிறுத்துவார்கள் அதே சமயத்தில் நானும் உன் அருளை அனுபவிக்காமல் நிற்பேன் தேகத்தை ஆள்பவனே நேசிப்பவர் சூழ்ந்து இருக்கும் திரு வோலக்கம் என்ற புண்ணிய இடத்தை சேவிக்க ஈசனே பொன் அம்பலத்து ஆடும் என் தந்தையே இனியும் இரக்கம் காட்டமாட்டாயோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 5

 à®…ரைசே பொன்னம் பலத்தாடும்

அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல்
ஏசற் றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் னடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப்
பேசா திருந்தால் ஏசாரோ.
 
அரசனே பொன் அம்பலத்தில் ஆடும் அமுதே என்றும் உனது அருள் நோக்கி இரைக்காக கொக்கு இரவு பகல் காத்திருப்பது போல் ஏக்கமுடன் இருந்தேன் கரை அடைந்த உன் அடியார் மகிழ்ச்சி அடைய காட்சி கொடுத்து உன் அடிமை என் பொருட்டு பிரைமோர் கலந்த பால் திரிந்து நெய் வெளிப்படும் அது பாலில் மறைந்தது போல் மௌனமானால் என்னை பிறர் ஏசாமாட்டார்களோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 4

 à®®à¯à®´à¯à®®à¯à®¤ லேஐம் புலனுக்கும்

மூவர்க்கும் என் றனக்கும்
வழிமுத லேநின் பழவடி யார்திரள்
வான்குழுமிக்
கெழுமுத லேயருள் தந்திருக்க
இரங்குங் கொல்லோஎன்
றழுமது வேயன்றி மற்றென்
செய்கேன் பொன்னம் பலத்தரைசே. 
 
முழுமைக்கும் முதலானதே ஐந்து புலன்களுக்கும் மூவருக்கும் எனக்கும் வழியாக அமையும் முதலே உனது பழைய அடியார்கள் திரன்ட கூட்டத்தில் முதலாக எழுந்தருளும் உன்னை எனக்கு இரங்கு என வேண்டி அழுது நிற்காமல் மற்றபடி என்ன செய்வேன் பொன்னம்பலத்து அரசே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 3

 à®‰à®•à®¨à¯à®¤à®¾ னேஅன் புடைஅடிமைக்

குருகா உள்ளத் துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால்
தக்க வாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார்
வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன்
பொன்னம் பலத்தெம் முழுமுதலே. 
 
விருப்பமானவனே அன்புடன் செயல்படும் அடிமைக்கு உள்ளத்தே உணர்வோடு அணுக கடினமான நான் உன்னை அறிய முறையிட்டால் தகுந்தபடி அவனே மகத்துமாய் வழி வகுத்தான் உன் அடியார்களுக்குள் வாழ வருபவனே உன் திருமுகத்தை எனக்கு காட்ட மறுத்தால் விடியல் அற்று என்னை முடித்துக்கொள்வேன் பொன் அம்பலமே என் முழு முதலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 2

 à®®à¯à®©à¯à®©à®¿à®©à¯ றாண்டாய் எனைமுன்னம்

யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன்
பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று
போந்தி டென்னா விடில்அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ
பொன்னம் பலக்கூத் துகந்தானே.
 
முன்னே நின்று என்னை ஆள்கின்றாய் என்றாலும் நான் என்னை என்னால் ஆகிறது என்று முயன்று பின் இருந்து ஏவல் செய்கிறேன் அதன் பிறகே அனுபவம் பட்டு ஒழிந்தேன் என் பெருமானே எனக்குள் நின்று அருளி என்னை வரவழைத்து பாதுகாக்க இல்லை என்றால் உன் அடியார்கள் என்னை யார் என்று வினவ மாட்டார்களோ பொன் அம்பலக் கூத்தை விரும்பி ஆடுபவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 1

 à®‰à®Ÿà¯ˆà®¯à®¾à®³à¯ உன்றன் நடுவிருக்கும்

உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவு ளிருக்கும்அரு
ளைப் புரியாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.
 
உன்னை உடைமையாக கொண்டவள் நடுவில் இருக்கும் உடைமையானவளை நடுவில் நீ இருத்திக்கொண்டு அடியேனை நடுவாக வைத்து இருவரும் இருப்பதால் அடையேன் உன் அடியார்களின் மத்தியில் இருக்கும் அருளை புரிந்திடு பொன்னம்பலத்தே முடியாத முதலே என் கருத்தாக இருப்பதுவே முடியும் படி செய்திடு முன்னின்றே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருப்பள்ளியெழுச்சி | பாடல் எண் : 10

 à®ªà¯à®µà®©à®¿à®¯à®¿à®±à¯ போய்ப்பிற வாமையில் நாள்நாம்

போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
 
பேரண்டத்தில் இனி பிறக்கக்கூடாது என்று நாட்களை கடத்துவது தவறானது இந்த பூமி சிவத்தை அடைய ஏதுவானது என்று திருபெருந்துறை உறையும் சிவனை நோக்கி திருமால் விருப்பம் கொள்ள மலரவனும் ஆசைப்பட நின் விரிந்த மெய்க்கருணையால் நியும் அவனியில் புகுந்து எம்மை ஆட்கொள்ள வல்லவனே ஆராத அமுதமே துயில் கலைந்து எழுந்து அருள் செய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருப்பள்ளியெழுச்சி | பாடல் எண் : 9

 à®µà®¿à®£à¯à®£à®•à®¤à¯ தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
 
விண்ணகத்து வாழ்வாங்கு வாழ்பவர்களும் எண்ணமுடியாத என் விருப்ப பொருளே என தொழும்படி எங்கள் மண்ணகத்தே வந்து வாழச் செய்தவனே திடமாக திருபெருந்துறையனே வழிமுறையாக உனத் அடியார்கள் ஆவோம் கண்ணகத்தே நின்று களிப்பு தருபவனே கடலளவு அமுதே கரும்பே விரும்பும் அடியார் எண்ணத்தில் இருப்பாய் உலகிற்கே உயிரானாய் எம்பெருமான் துயில் கலைந்து எழுந்து அருள் செய்.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பள்ளியெழுச்சி | பாடல் எண் : 8

 à®®à¯à®¨à¯à®¤à®¿à®¯ முதல்நடு இறுதியு மானாய்

மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
 
எல்லாவற்றிற்கும் முந்தியதும் முதல் நடு இறுதி என இருப்பதுமாய் இருக்கிறாய் மூவரும் அறியாத பொழுது வேறு யார் அறிவார்கள் பந்தத்தை வளர்க்கும் நடனமாடும் சக்தியும் நீயும் நின் அடியார் பழைமையான வசிப்பிடம் எங்கும் எழுந்து அருளிய உலகமானவனே சிவந்த நெருப்பு கடந்து திருமேனி காட்டி திருப்பெருந்துறை உறையும் கோயிலும் காட்டி முடிவை அறிந்தவனாக ஆவதைக் காட்டி வந்து அருளினாய் ஆர அமுதே துயில் கலைந்து எழுந்து அருள் செய்.
‪#‎திருவாசகம்‬

திருவாசகம் | திருப்பள்ளியெழுச்சி | பாடல் எண் : 7

 à®…துபழச் சுவையென அமுதென அறிதற்

கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
 
ஆதாரமான அது பழுத்தின் சுவைப் போலவும் அமுது போன்றும் அறிவதற்கு அரிதாகவும் எளிமையானதாகவும் இருக்கிறது என்று தேவர்களும் அறியமாட்டார்கள் இப்பொழுது உள்ள இதுவே அவன் திரு உருவம் இவனே அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு எழுந்து அருளும் மதுவை தரும் தோட்டத்து திரு உத்திர கோசமங்கை உள்ளே உள்ளவனே திருப்பெருந்துறை மன்னா எது எனக்கு உரிய பணியோ அதை மாறாது செய்யும்படி கேட்போம் எம் பெருமான் துயில் கலைந்து எழுந்து அருள் செய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பள்ளியெழுச்சி | பாடல் எண் : 6

 à®ªà®ªà¯à®ªà®± வீட்டிருந் துணரும்நின் அடியார்

பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 
 
பரப்பு அற்ற குறுகிய வீட்டில் (குண்டு சட்டியில் குதிரை) இருந்தபடி உணரும் நின் அடியார்களில் பந்தங்களை அறுத்தார்கள் பலர் மை தீட்டும் கண்ணியர் மனித இயல்புப் படி வணங்குகின்றார்கள் தேவதையின் மணவாளனே செழுமையான கமலங்கள் மலரும் வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறை உறையும் சிவபெருமானே இந்தப் பிறப்பை அறுத்து எம்மை ஆண்டு அருள் செய்யும் எம் பெருமான் துயில் கலைந்து எழுந்து அருள் செய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பள்ளியெழுச்சி | பாடல் எண் : 5

 à®ªà¯‚தங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்

போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 
 
பூதங்களில் எல்லாம் நின்றவன் என்று உரைப்பார் அதுமட்டுமின்றி போவதும் வருவதும் இல்லாத நிரந்தரன் என்று உன்னை புலவர்கள் கீதங்களால் பண் இசைத்து ஆடுவார்கள் அதுமட்டுமின்றி கேள்விப்பட்டதே இல்லை உன்னை கண்டு அறிந்தவர்கள் யாரேனும் உண்டா என்று ஈரம் நிறைந்த வயல்கள் உடைய திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கு எட்டாதவனே எங்கள் முன் வந்து பேதங்களை அழித்து ஆண்டு அருள் செய்ய எம்பெருமானே துயில் கலைந்து எழுந்து அருள் செய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பள்ளியெழுச்சி | பாடல் எண் : 4

 à®‡à®©à¯à®©à®¿à®šà¯ˆ வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
 
இனிமையான இசை எழுப்பும் விணை வாசிப்பவரும் யாழை மீட்டுபவரும் ஏன ஒரு பக்கம் இருக்க எழுதபட்ட தோத்திரப் பாடல்களை இயம்பினர் ஒருபக்கம் சீராக அமைந்த மலர்மாலைகளை கையில் வைத்திருப்பவர்கள் ஒருபக்கம் தொழுபவர்களும் இறை வணங்கி நெகிழ்ந்து அழுபவர்களும் தனக்குள் துவண்டு இறையை நாடுபவர்களும் என ஒருபக்கம் சென்னில் தன் தேவையை தெரிவிப்பவர்கள் ஒருபக்கம் எனக் கொண்டு திருபெருந்துறையில் உறையும் சிவபெருமானே என்னையும் ஆண்டுக்கொண்டு இனிமையான அருள் புரியும் எம்பெருமானே துயில் கலைந்து எழுந்து அருள் செய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பள்ளியெழுச்சி | பாடல் எண் : 3

 à®•à¯‚வின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
 
பூங்குயில்கள் கூவின கோழியும் கூவியது குரு தந்த வார்த்தைகளை இயம்பினர்கள் கூட்டத்தார்கள் ஒளி தந்த நட்சத்திரங்கள் மங்கின உதயம் வெளிப்படுகிறது விருப்பமுடன் நமக்கு தேவ நற்கழல் காட்டு திருபெருந்துறை உறையும் சிவபெருமானே யாவரும் அறிய அரிதனவனாய் எமக்கு ஒளியாய் விளங்கும் எம்பெருமானே துயில் கலைந்து எழுந்து அருள் செய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருப்பள்ளியெழுச்சி | பாடல் எண் : 2

 à®…ருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்

அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.
 
அருணன் இந்திரனது திசையாகிய கிழக்கை அடைய இருள் ஒழிந்து அகன்றது உதமானவன் மலர் திரு முகத்தின் கருணையினால் சூரியன் எழந்திட எழுந்திட அசையும் வாச மலர் மலர்ந்திட அண்ணல் அக்கண்ணால் திரன்டு திரை அகன்று வெளிப்பட இவையும் திருபெருந்துறை சிவபெருமானே அருள் செல்வம் தரவரும் ஆனந்த மலையே அலைகடலே துயில் கலைந்து எழுந்து அருள் செய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருப்பள்ளியெழுச்சி | பாடல் எண் : 1

 à®ªà¯‹à®±à¯à®±à®¿à®Žà®©à¯ வாழ்முத லாகிய பொருளே

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
 
வாழ்த்துவேன் என் வாழ்வின் முதலாகிய பொருளே விடிந்தது பூவென நெகிழும் இணையை துணையாக கொண்ட மலர்களை உனக்கு படைத்து உன் திருமுகத்தை எனக்கு அருளும் மலரச் செய்து அழகிய மகிழ்வைக் கொண்டு உன் திருவடியை தொழுவோம் சேற்றில் இதழ்கள் படும் தாமரை மலர்கள் நிறைந்த குளிர்ந்த வயல் சூழ்ந்த திருபெருந்துறை சிவபெருமானே சிறப்பு பொருந்திய கொடி உடையவனே என்னை உனக்காக உடைமையாக்கியவனே எம்பொருமான் துயில் கலைந்து எழுந்து அருள் செய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தசாங்கம் | பாடல் எண் : 10

 à®šà¯‹à®²à¯ˆà®ªà¯ பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்

கோலம் பொலியுங் கொடிகூறாய் சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டுங்
கோதிலா ஏறாம் கொடி. 
 
சோலையில் வாழும் பசுமையான கிளியே தூய்மையான நீர் நிறைந்த பெருந்துறை மன்னவன் ஒளிரும் கோலம் கொண்ட கொடியை பேசு பகைவர் மிகவும் அஞ்சும் படியாக மேல் நின்ற விளங்கி உயர்வை காட்டும் அழகுக்கு நிகர் இல்லை என்ற ஏற்றம் நிறைந்த கொடி.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தசாங்கம் | பாடல் எண் : 9

 à®†à®¯ மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்

மேய பெருந்துறையான் மெய்த்தார்என் தீயவினை
நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம்உவந்த தார்.
 
ஆராய தகுந்த வார்த்தை பேசும் கிளியே திடமாக பற்றிய இறை நேசர்களின் விருப்பமான பெருந்திறையான் வழிநடத்தும் என் தீய வினை எந்நாளும் அணுகாதபடி இனம் காக்க என்னை ஆள்பவன் தொடரும் வாரிசாக தொடர மகிழ்ந்து அளித்தான்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருத்தசாங்கம் | பாடல் எண் : 8

 à®‡à®©à¯à®ªà®¾à®²à¯ மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்

முன்பால் முழங்கும் முரசியம்பாய் அன்பாற்
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை.
 
இன்பத்துப்பால் போன்று பேசும் கிளியே எங்களது பெருந்துறை மன்னன் முன்பே வந்து முழங்கும் முரசினை இயம்புவாயாக இறை நேசர்களின் பிறவி பகை அழிக்க பேரின்பத்தை அளிக்க உயர்ந்த பருமிக்க நாதப் பறையை.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தசாங்கம் | பாடல் எண் : 7

 à®•à¯‹à®±à¯à®±à¯‡à®©à¯ மொழிக்கிள்ளாய் கோதில்பெருந்துறைக்கோன்

மாற்றாரை வெல்லும் படைபகராய் ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
கழுக்கடைகாண் கைக்கொள் படை. 
 
கொம்புத் தேன் போன்று பேசும் கிளியே குற்றம் இல்லாத பெருந்துறை மன்னன் எதிரிகளை வெல்லும் படை திறத்தை சொல் அவனை ஏற்றுக் கொண்டவரின் நெஞ்சம் உருக முன்று அழுக்குகளையும் அழக்க பாயும் கழுக்கடை கண்டாயா அதுவே அவன் கைக்கொண்ட படைத்திறன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தசாங்கம் | பாடல் எண் : 6

 à®‡à®ªà¯à®ªà®¾à®Ÿà¯‡ வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே

ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி ஊரும் மகிழ்ந்து.
 
இப்பொழுதே சொல் கூட்டுக்குள் போகதே என் கிளியே ஒப்பிட்டு அறிய முடியா சிறப்புகள் கொண்டவன் எதன் பொருட்டு செயல்படுகிறான் எப்பொழுதும் தேன் ததும்பும் சிந்தை உள்ள தெய்வப் பெண் என்று வாழ்த்து இசைக்க வானம் என்ற குதிரையில் செயல்படுகிறான் மகிழ்ந்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தசாங்கம் | பாடல் எண் : 5

 à®•à®¿à®žà¯à®šà¯à®•à®µà®¾à®¯à¯ அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்

மஞ்சன் மருவும் மலைபகராய் நெஞ்சத்
திருளகல வாள்வீசி இன்பமரு முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து.
 
கொஞ்சிப் பேசி அகத்திற்கு சுகம் தரும் கிளியே கேடு இல்லாத பெருந்துறைக்கு அரசன் எங்கும் நிறைந்தவன் மாற்றம் அடையும் மலை போல் என்று உரைக்காமல் நெஞ்சின் இருளை அகற்ற அருள் பொழிந்து இன்பம் என்று முத்தி அருளும் மலை என்பதை ஆராய்ந்து காண்டுக்கொள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தசாங்கம் | பாடல் எண் : 4

 à®šà¯†à®¯à¯à®¯à®µà®¾à®¯à¯à®ªà¯ பைஞ்சிறகிற் செல்வீநம் சிந்தைசேர்

ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காண்உடையான் ஆறு.
 
சிவந்த வாயுடன் பசுமையான சிறகு உடைய செல்வக் கிளியே நம் சிந்தை சேர்ந்த ஐயன் பெரிய துறை உடையவன் வழுகட்டியாகவம் பெண்மையாகவும் வானத்திலிருந்து வந்த சிந்தை அடைந்து அழுக்குகளை கழவ வந்து உதவும் ஆனந்தகாண் உடையான் வழியாவன் என பேசு.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தசாங்கம் | பாடல் எண் : 3

 à®¤à®¾à®¤à®¾à®Ÿà¯ பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்

மாதாடும் பாகத்தன் வாழ்பதிஎன் கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்தர கோசமங்கை ஊர்.
 
மகரந்தம் நிறைந்த மலர்கள் ஆடும் பூச்சோலைகள் தந்து நம்மை ஆளும் பெண்ணை பகுதியாக கொண்டு ஆடுபவன் வாழ்வதற்கு தலைமையான இடம் இது என்று குறித்துக் காட்டி பத்தர்கள் எல்லாரும் உலகில் சிவபுரம் இது என கொண்டாடும் உத்தர கோசமங்கை ஊர் என்று பேசு கிளியே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தசாங்கம் | பாடல் எண் : 2

 à®à®¤à®®à®¿à®²à®¾ இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்

நாதன்நமை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்
கன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
தென்பாண்டி நாடே தெளி.
 
ஆணவம் இல்லாத இனிமையான சொல் பேசும் மரகதம் போன்ற பச்சை நிறத்து கிளியே உண்டான எல்லா உலகத்திற்கும் நாதன் நம்மை ஆள்பவன் நாட உரைத்திடு – காதலர் அவர் காதலால் பிரிக்க முடியாத அருள் புரிவான் நாடு என்றும் தென்பாண்டி நாடு என்று தெளிந்துவிடு.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தசாங்கம் | பாடல் எண் : 1

 à®à®°à®¾à®°à¯ இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்

சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று. 
 
பாராட்டப்படும் இளமையான கிளியே எங்களது பெரிய துறைமுகத்தின் அரசன் மதிப்பளிக்கும் திருப்பெயரை தேர்ந்து அறிந்து சொல் – எங்கும் இருக்கும் சிறப்பால் ஆரூரன் என்ற ஏகனை சிவந்த பெருமான் வெள்ளை மலரான் பால் கடலான் என உரைப்பது போல் எம் பெருமான் தேவர் தலைவன் என்று அறிந்து சொல்.
#திருவாசகம்
 

திருவாசகம் | குயிற்பத்து | பாடல் எண் : 10

 à®•à¯Šà®¨à¯à®¤à®£ வும்பொழிற் சோலைக்

கூங்குயி லேயிது கேள்நீ
அந்தண னாகிவந் திங்கே
அழகிய சேவடி காட்டி
எந்தம ராம்இவன் என்றிங்
கென்னையும் ஆட்கொண் டருளும்
செந்தழல் போல்திரு மேனித்
தேவர் பிரான்வரக் கூவாய்.
 
கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் எழிலான சோலையில் கூவும் குயிலே நீ இதைக் கேள் முடிவு அறிந்தவனாக வந்து இங்கே அழகிய சேவடி (உபதேசப் பொருள்) காட்டி எனக்கு உரியவன் என என்னை ஆட்கொண்டு அருளும் செழுமையான தழல் போன்ற திருமேனி தேவர் தலைவன் வரவேண்டும் என்று கூவிடுவாயாக.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | குயிற்பத்து | பாடல் எண் : 9

 à®•à®¾à®°à¯à®Ÿà¯ˆà®ªà¯ பொன்திகழ் மேனிக்

கடிபொழில் வாழுங் குயிலே
சீருடைச் செங்கம லத்திற்
றிகழுரு வாகிய செல்வன்
பாரிடைப் பாதங்கள் காட்டிப்
பாசம் அறுத்தெனை யாண்ட
ஆருடை அம்பொனின் மேனி
அமுதினை நீவரக் கூவாய். 
 
பொன் போல் பளபளக்கும் கருமையான உடலும் மணம் வீசும் சோலையில் வாழும் குயிலே உயர்வு பொருந்து சிவந்த மலரில் மகிழ்வுடன் இருக்கும் செல்வன் உலகத்திற்கு தன் பாதத்தை காட்டி பாசம் அறுத்து என்னை ஆண்டு கொண்ட இணை உடைய அழகிய மேனி அமுதம் வர நீ வரவேற்று கூவிடுவாயாக.
#திருவாசகம்
 

திருவாசகம் | குயிற்பத்து | பாடல் எண் : 8

 à®µà®¾à®µà®¿à®™à¯à®•à¯‡ நீகுயிற் பிள்ளாய்

மாலொடு நான்முகன் தேடி
ஓவி யவர் உன்னி நிற்ப
ஒண்டழல் விண்பிளந் தோங்கி
மேவிஅன் றண்டங் கடந்து
விரிசுட ராய்நின்ற மெய்யன்
தாவி வரும்பரிப் பாகன்
தாழ்சடை யோன்வரக் கூவாய். 
 
இங்கே வா இளங்குயிலே மால் உடன் நான்முகன் தேடி ஓய்ந்து நிற்க ஒன்றுமை செய்யமுடியா அனல் பிழம்பு வானத்தை பிளந்து நிற்க அண்டத்தை எல்லாம் உள் வைத்து விரிந்த சுடராய் இருக்கும் மெய்யன் பலவாக மாறி வரும் பாகன் தாழ்சடையோனை வரவேற்று கூவிடுவாயாக.
#திருவாசகம்
 

திருவாசகம் | குயிற்பத்து | பாடல் எண் : 7

 à®‰à®©à¯à®©à¯ˆ உகப்பன் குயிலே

உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்தநன் மேனிப்
புகழில் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த
வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன்
சீர்ப்புயங் கன்வரக் கூவாய்.
 
உன்னை உள்ளத்தில் வைத்து மகிழ்வேன் குயிலே உனக்கு துணையான தோழியாகவும் ஆவேன் பொன்னை உரிக்கிய நல்ல மேனி புகழ்யின் உச்சில் இருக்கும் அழகன் மன்னன் குதிரை ஏறு வந்த வள்ளல் பெரிய துறை ஆள்பவன் தென்னவன் சேரன் சோழன் சீரான வடிவம் கொண்டவனை வரவேற்று கூவிடுவாயாக.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | குயிற்பத்து | பாடல் எண் : 6

 à®‡à®©à¯à®ªà®¨à¯ தருவன் குயிலே

ஏழுல கும்முழு தாளி
அன்பன் அமுதளித் தூறும்
ஆனந்தன் வான்வந்த தேவன்
நன்பொன் மணிச்சுவ டொத்த
நற்பரி மேல்வரு வானைக்
கொம்பின் மிழற்றுங் குயிலே
கோகழி நாதனைக் கூவாய். 
 
இன்பம் தரும் என் குயிலே உண்டாகும் உலகம் முழுவதையும் ஆளும் அன்பன் அமுது அளித்து காக்கும் ஆனந்தன் வான் வந்த தேவன் நல்ல பொன்னில் மாணிக்கம் பதித்ததை போன்று நல்ல எண்ணங்கள் ஆகும் குதிரையின் மேல் வருபவனை கொம்பின் மேல் இருந்து இசைக்கும் குயிலே கோகழி நாதனை வரவேற்று கூவிடுவாயாக.
#திருவாசகம்
 

திருவாசகம் | குயிற்பத்து | பாடல் எண் : 5

 à®šà¯à®¨à¯à®¤à®°à®¤à¯ தின்பக் குயிலே

சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங்
கடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவு
மாகிய மூவ ரறியாச்
சிந்துரச் சேவடி யானைச்
சேவக னைவரக் கூவாய்.
 
அழகு பொருந்திய இன்பக் குயிலே ஆட்கொள்ளும் வெளிச்சம் தரும் சூரியன் போலே அந்தரமாக நின்று தவறானவர்களின் ஆசையை அழித்திடும் இறைவனை முதலும் நடுவும் முடிவுமாக இருக்கும் மூவர் அறியாச் சிவந்த சேவடியானை உதவியாய் இருக்கும் சேவகனை வரவேற்று கூவிடுவாயாக.
#திருவாசகம்
 

திருவாசகம் | குயிற்பத்து | பாடல் எண் : 4

 à®¤à¯‡à®©à¯à®ªà®´à®šà¯ சோலை பயிலுஞ்

சிறுகுயி லேஇது கேள்நீ
வான்பழித் திம்மண் புகுந்து
மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித் துள்ளம் புகுந்தென்
உணர்வது வாய ஒருத்தன்
மான்பழித் தாண்டமென் னோக்கி
மணாளனை நீவரக் கூவாய்.
 
தேன் நிறைந்த பழுங்கள் உள்ள சோலையில் வசிக்கும் சிறிய குயிலே நீ இதை கேள் வானத்தை கடந்து இந்த மண்ணில் வந்து மனிதரை ஆண்டுக்கொண்ட வள்ளல் உடம்பை கடந்து என் உள்ளம் புகுந்தான் உணர்வு என ஆகும் ஒருவன் மிரளும் பார்வையை கடந்து என்னை நோக்கிடும் மணாளனை வரவேற்று கூவிடுவாயாக.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | குயிற்பத்து | பாடல் எண் : 3

 à®¨à¯€à®² உருவிற் குயிலே

நீள்மணி மாடம் நிலாவும்
கோல அழகிற் றிகழுங்
கொடிமங்கை உள்ளுறை கோயிற்
சீலம் பெரிதும் இனிய
திருவுத் தரகோச மங்கை
ஞாலம் விளங்க இருந்த
நாயக னைவரக் கூவாய். 
 
நீல நிற உருவத்தில் குயிலே நீளமாகும் மணி கொண்ட மாடத்தில் நிலாவின் தன்மையுடன் அழகாக இருக்கும் கொடி மங்கை உள்ளே பொருந்தும் கோயிலில் மதிப்பு மிக்க இனிய திரு உத்திர கோசமங்கை உலகத்தை விளங்க இருந்த நாயகனை அழைப்பு விடுத்து கூவிடுவாயாக.
#திருவாசகம்
 

திருவாசகம் | குயிற்பத்து | பாடல் எண் : 2

 à®à®°à¯à®¤à®°à¯à®®à¯ ஏழுல கேத்த

எவ்வுரு வுந்தன் னுருவாம்
ஆர்கலி சூழ்தென் னிலங்கை
அழகமர் வண்டோ தரிக்குப்
பேரரு ளின்ப மளித்த
பெருந்துறை மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே
தென்பாண்டி நாடனைக் கூவாய்.
 
சீர் தரும் ஏழு உலகம் சிற்புடன் வாழ்த்த எந்த வடிவமும் தன் வடிவம் என்று சப்தம் தரும் கடல் சூழ்ந்த தெரிவதற்கு இலக்காகும் அழுகு பொருந்திய வண்டுக்கு பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை சுற்றும் பிராணச் சிற்பு பெற்ற வாய் கொண்ட குயிலே தெரியும் பழைமை பொருந்திய நாடானை கூவிடுவாயாக.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | குயிற்பத்து | பாடல் எண் : 1

 à®•à¯€à®¤à®®à¯ இனிய குயிலே

கேட்டியேல் எங்கள் பெருமான்
பாத மிரண்டும் வினவில்
பாதாள மேழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற்
சொல்லிறந் துநின்ற தொன்மை
ஆதி குணமொன்று மில்லான
அந்தமி லான்வரக் கூவாய். 
 
கீதத்தை இனிமையாக தரும் குயிலே கேட்டு எங்களுக்கு சொல் எங்களது பெருமானின் பாதம் எங்கே என்று வினா எழுப்ப பாதாளம் ஏழுக்கு அப்பால் சோதி மணி முடி என சொல்லி சொற்களுக்கு அப்பாற் நின்றவன் பழைமையாகவும் ஆதியாகவும் குணம் என்ற ஒன்று இல்லாமல் முடிவு அற்றவன் என்றும் கூவிடுவாயாக.
#திருவாசகம்
 

திருவாசகம் | அன்னைப்பத்து | பாடல் எண் : 10

 à®•à¯Šà®©à¯à®±à¯ˆ மதியமுங் கூவிள மத்தமும்

துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக் கானவா றன்னே என்னும்.
 
கொன்றை மலரையும் நிலவையும் கூறி விளக்க முடியாத அமைநியையும் பெற்ற செம்மையானவர்களே என்றும் அமைதி பெற்ற செம்மையானவர்களின் அமைதி உன் அமைதி இதை இன்றே எனக்கு அருளினாய் என்றும் தாயானவள் உரைப்பாள்.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | அன்னைப்பத்து | பாடல் எண் : 9

 à®¤à¯ˆà®¯à®²à¯‹à®°à¯ பங்கினர் தாபத வேடத்தர்

ஐயம் புகுவரால் அன்னே என்னும்
ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம்
நையும்இது என்னே அன்னே என்னும். 
 
பெண்மையை ஒரு பகுதியாக வாழ்பவர்கள் தவம் செய்பவர்கள் போல் வேடம் பூண்டவர்கள் சந்தேக மனநிலை அடைவார்கள் என்றும் சந்தேக மனநிலை அடைந்தாலும் என் உள்ளம் வருந்தும் என்றும் தாயானவள் உரைப்பாள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அன்னைப்பத்து | பாடல் எண் : 8

 à®¤à®¾à®³à®¿ அறுகினர் சந்தனச் சாந்தினர்

ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்
ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில்
தாள மிருந்தவா றன்னே என்னும்.
 
பனை ஓலை பாய் வைத்திருப்பவர்கள் சந்தனம் பூசிக்கொள்ளபவர்கள் என்னை ஆண்டுக்கொள் என்று வாழ்வார்கள் என்றும் ஆண்டுக்கொள் என்னை என்று வாழும் அடியார்கள் தங்கையில் கொண்டாட்ட தாளம் மிகுந்திடும் என்றும் உரைப்பாள் தாயானவள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அன்னைப்பத்து | பாடல் எண் : 7

 à®µà¯†à®³à¯à®³à¯ˆà®•à¯ கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர்

பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும். 
 
வெள்ளையான ஆடைகளை தலையற்ற உடலுக்கு இரண்டாக பிரித்து அணிந்தவர்கள் படுக்கைக்கு தனியாக விரிப்பு வைத்துக்கொள்வார்கள் என்றும் படுக்கைக்கு தனியாக விரிப்பு வைத்திருப்பவர்கள் எண்ணக் குதிரைகளால் உள்ளத்தை கவர்வார்கள் என்றும் உரைப்பாள் தாயானவள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அன்னைப்பத்து | பாடல் எண் : 6

 à®‰à®©à¯à®©à®±à¯ கரியசீர் உத்தர மங்கையர்

மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும்.
 
எண்ணி அறிவதற்கு முடியாத சீர் பொருந்திய உத்திர மங்கையர்கள் தங்கள் நெஞ்சில் நில்பெறச் செய்திருப்பார்கள் என்றும் தங்கள் நெஞ்சில் நிலைபெற்று இருப்பதை மாலயன் காண்பதில்லை இது என்ன அதிசயம் என்றும் உரைப்பாள் தாயானவள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அன்னைப்பத்து | பாடல் எண் : 5

 à®¨à¯€à®£à¯à®Ÿ கரத்தர் நெறிதரு குஞ்சியர்

பாண்டிநன் னாடரால் அன்னே என்னும்
பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை
ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். 
 
கொடுக்க நீளும் கைகள் உடையவர்களும் ஒழுங்கு செய்த கூந்தல் உடையவர்களும் பண்பு நிறைந்ந நாடத் தகுந்தவர் என்றும் பண்பு நிறைந்து நாடத் தகுந்தவர்கள் பரந்த சிந்தையை ஆண்டு அன்பு செய்வர் என்றும் உரைப்பாள் தாயானவள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அன்னைப்பத்து | பாடல் எண் : 4

 à®†à®Ÿà®°à®ªà¯ பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்

வேடம் இருந்தவா றன்னே என்னும்
வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்
வாடும் இதுஎன்னே அன்னே என்னும்.
 
ஆடும் பாம்பை அணியாக்கி தோலில் பொடியை பூசும் ஒரு வேடம்தான் என்ன என்றும் வேடம் தரித்து இருப்பதை கண்டு என் உள்ளம் வாடும் இதன் காரணம் என்ன என்றும் உரைப்பாள் தாயானவள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அன்னைப்பத்து | பாடல் எண் : 3

 à®¨à®¿à®¤à¯à®¤ மணாளர் நிரம்ப அழகியர்

சித்தத் திருப்பரால் அன்னே என்னும்
சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும்.
 
என்றும் மாப்பிள்ளையாக இருப்பார்கள் நிறைந்த அழகுள்ளவர்களாக இருப்பார்கள் இறை சித்தத்தால் மகிழ்பவர் என்று உரைப்பாள் தாயானவள் எண்ணத்தில் நிறைந்தவர் தெரியச் செய்பவன் பெருந்துறை தலைவனால் மகிழ்வார் என்று உரைப்பாள் தாயானவள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அன்னைப்பத்து | பாடல் எண் : 1

 à®µà¯‡à®¤ மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்

நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர்இந் நாதனார் அன்னே என்னும்.
 
தீர்க்கமாக பேசுபவர் நிறமற்ற நீர் அணிந்தவர் செம்மையான உடல் கொண்டவர் நாதம் அறிந்து அதை அறியும் வழியை பறை சாற்றுபவர் எப்படிப்பட்டவர் என்று உரைப்பேன் என்றும் நாதம் பாறைசாற்றுபவருக்கும் நான்முகன் திருமாலுக்கும் நாதர் எனப்படும் தலைவன் இந்த நாதமானவர் என்று உரைப்பேன் என்றும் 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருப்பொன்னூசல் | பாடல் எண் : 9

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை

தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி

எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்

பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட

கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்

பொங்குலவு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ. 

 

தென்னை மரங்கள் நிறைந்த சோலை திருஉத்திர கோசமங்கை தன்னுடன் உலவும் சோதித் தனியுருவம் கொண்டு வந்து அருளி எங்களின் பிறப்பை முடிவுறச் செய்து முடிவு வரை ஆட்கொள்ளச் செய்வான் பாகமாக இருக்கும் கோதையும் தானும் பணி செய்து பணி கொடுக்கும் கொன்றை மலர் அணிந்தவன் குணத்தை விளக்கி குலுங்கும் அணிகலன் அணிந்த பொண்களே பொன் ஊஞ்சல் ஆடலாம்.

#திருவாசகம்

 

திருவாசகம் | திருப்பொன்னூசல் | பாடல் எண் : 8

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்

சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து

ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்

சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை

மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்

பூலித் தகங்குழைந்து பொன்னூச லாடாமோ.

 

அழகிய கோலம் கொண்ட வரையறுத்த குடும்பமாய் உள்ளவன் இந்த குவலயம் வந்து நிறைவாக அமுது உண்டு கீழான கடலின் மேல் எழுந்து உயர்வு பல கொண்ட எண்ணக் குதிரைக் கொண்டு நம்மை ஆண்டான் சீலம் விளங்கும் உத்திரகோசமங்கை மாலுக்கு அரிதானவனை வாயார நாம் பாடி பூரித்து அகம் குழைந்து பொன் ஊஞ்சல் ஆடலாம்.

‪#‎திருவாசகம்‬

 

திருவாசகம் | திருப்பொன்னூசல் | பாடல் எண் : 6

 à®®à®¾à®¤à®¾à®Ÿà¯ பாகத்தன் உத்தர கோசமங்கைத்

தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் [தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.
 
ஆட்டுவிக்கும் பெண்ணை பாகமாக கொண்டவன் உத்திர கோசமங்கை தன்னோடு கொன்றை மலர் அணிந்த சடையன் தொண்டர்களில் என்னை தனிமைப் படுத்தி இனம் சேர்க்க என்னை ஆட்கொண்டு முன் பிறவியின் துன்பங்கள் தொடராமல் செய்து பிறப்பை அறுத்தவன் காதில் ஆடும் குண்டலங்கள் பாடிக் கசிந்து அன்பால் போதுமான அணிகளன் அணிந்த மார்பகம் கொண்ட பெண்களே பொன் ஊஞ்சல் ஆடலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொன்னூசல் | பாடல் எண் : 5

 à®†à®£à¯‹ அலியோ அரிவையோ என்றிருவர்

காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூச லாடாமோ. 
 
ஆணா இல்லை அலியா இல்லை இளம் பெண்ணா என இருவர் காணாமுடியாத கடவுளின் கருணையினால் தேவர் கூட்டம் அச்சமின்றி வெற்றிகொள்ள ஆட்கொண்டு அருளி நஞ்சினை தன் ஊனாக உண்டு அருளும் உத்திர கோசமங்கை தலைவன் இளம்பிறை சென்னியாக கொண்ட கூத்தன் குணத்தை பரவி பூண் அணிந்த மார்பகம் கொண்ட பெண்களே பொன் ஊஞ்சல் ஆடலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொன்னூசல் | பாடல் எண் : 4

 à®¨à®žà¯à®šà®®à®°à¯ கண்டத்தன் அண்டத் தவர்நாதன்

மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூச லாடாமோ. 
 
விடம் தங்கும் கண்டத்தை உடையவன் பிரபஞ்ச உயர்குல உயிர்களின் நாயகன் மேகம் உரசும் மாடங்கள் உடையவன் உத்திர கோசமங்கை பஞ்ச பூத நாயகியுடன் கூடி தொண்டர்களின் நெஞ்சில் நின்று அமுதம் ஊறிட கருணைச் செய்து எளிதில் பிறப்பை அறுப்பவனை தூய புகழ்பாடி பளபளக்கும் வெள்ளை வளையணிந்த  பெண்களே பொன் ஊஞ்சல் ஆடலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொன்னூசல் | பாடல் எண் : 3

 à®®à¯à®©à¯à®©à¯€à®±à¯à®®à¯ ஆதியும் இல்லான் முனிவர்குழாம்

பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்னீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ. 
 
முதலும் முடிவும் துவக்கமும் இல்லாதவன் முனிவர்கள் கூட்டமும் பலநூறு கோடி இமைக்க மறந்தவர்களும் போற்றி நிற்க தன்னை எனக்கு குளிர்ச்சியாக அருளி தனது கருணை வெள்ளத்து முழ்கி திளைக்க கொடுத்தமணி உத்திர கோசமங்கை மின்னும்படி ஆட வியப்பான மாளிகையை பாடி பொன் ஆபாரம் அணிந்த மார்பகத்தை உடைய பெண்களே பொன் ஊஞ்சல் ஆடலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொன்னூசல் | பாடல் எண் : 2

 à®®à¯‚ன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத

வான்றங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்றங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்
கூன்றங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்றங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூச லாடாமோ.
 
மூன்றாக இருக்கும் இலக்கு உடைய நயனத்தால் காணாமுடியாத வான் என்றும் அங்கு உள்ள தேவர்களும் காணாத மலரடிகள் தேர்ச்சி பெற்று தித்திக்கும் அமுது ஊறி தானாக தெளிந்தால் கூறாக நின்று உருகச் செய்யும் உத்திர கோச மங்கை ஒன்றும் விடையாகியதை மருவிப் பாடி மயில் போன்று அன்ன நடை பயிலும் பெண்களே பொன் ஊஞ்சல் ஆடலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொன்னூசல் | பாடல் எண் : 1

 à®šà¯€à®°à®¾à®°à¯ பவளங்கால் முத்தங் கயிறாக

ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்
கூராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருட்டா ளிணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூச லாடாமோ. 
 
சீரானவர்களின் பவளம் போன்ற கால்கள் முத்து பொருந்திய கயிறாக சிறப்பான பொற்பலகை ஏறி அமர்ந்து மனிதனாக பயணிப்பவன் அறியாத நல்ல மலர்தாள் இனம் சேர்க்கா எனக்கு சரியாக வழிகாட்ட தந்தருளும் உத்திர கோச மங்கை வரையறுக்க முடிய அமுதின் அருள் தாளினை பாடி போர் புரிபவரின் வாள் பொன்ற கண் கொண்ட பெண்களே பொன் உஞ்சல் ஆடலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தோணோக்கம் | பாடல் எண் : 14

 à®‰à®°à¯ˆà®®à®¾à®£à¯à®Ÿ உள்ளொளி

உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப்
பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப்
பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித்
தோணோக்க மாடாமோ. 
 
எடுத்து இயம்ப முடியாத உள்ளோளி என உத்தமன் வந்து உள்ளம் புகுந்ததும் கரை அற்ற காமப் பெருங்கடலை கடந்ததும் பசி மறந்த இந்திரியப் பறவை இயக்கம் நிறுத்த வழிகளைக் கடந்து நின்றவனைப் பாடி தோணோக்கம் விளையாடலாம். 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தோணோக்கம் | பாடல் எண் : 12

 à®ªà®¿à®°à®®à®©à¯ அரியென்

றிருவருந்தம் பேதைமையால்
பரமம் யாம்பரம்
என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழலுருவாய்
அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா
தோணோக்க மாடாமோ.
 
பிரமன் அரி என்ற இருவரும் தனது அறியாமை என்ற பேதைமையால் பரபிரம்மம் நாம் என்று உரைக்க அவர்களின் ஆணவ பதைப்பை அரனார் நெருப்பாக அளவுகள் கடந்து அழித்து நின்றதை எண்ணி தோணோக்கம் விளையாடுவோம்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருத்தோணோக்கம் | பாடல் எண் : 11

 à®•à®¾à®®à®©à¯ உடலுயிர்

காலன்பல் காய்கதிரோன்
நாமகள் நாசிசிரம்
பிரமன் கரம்எரியைச்
சோமன் கலைதலை
தக்கனையும் எச்சனையும்
தூய்மைகள் செய்தவா
தோணோக்க மாடாமோ. 
 
காமம் உடலையும் உயிரையும் ஆட்கொள்ள காலம் பல்லையும் காயும் கதிரையும் ஆட்கொள்ள நாமகள் நாசியையும் சிரத்தையும் ஆட்கொள்ள படைத்தல் கரத்தையும் எரிதலையும் ஆட்கொள்ள சந்திரன் கலையையும் தலையையும் ஆட்கொள்ள தகுதியானவனையும் ஏவலாக அமைந்தவனையும் தூய்மையாக செய்த ஏகனை எண்ணியபடி தோணோக்கம் விளையாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தோணோக்கம் | பாடல் எண் : 10

 à®ªà®™à¯à®•à®¯à®®à¯ ஆயிரம்

பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன்
சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான்
சக்கரம்மாற் கருளியவா
றெங்கும் பரவிநாம்
தோணோக்க மாடாமோ. 
 
பக்குவப்படும் ஆயிரம் பூவில் ஒரு பூ குறைய அதற்கு தகுந்த இடத்தை கண் தந்து சேவைகள் செய்ய சாத்தலும் சங்கரன் எம் தலைவன் கூட நினைப்பவர்களுக்கு அருளியவன் தன்மையை எங்கும் விளம்பரம் செய்து தோணோக்கம் விளையாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தோணோக்கம் | பாடல் எண் : 9

 à®Žà®£à¯à®£à¯à®Ÿà¯ˆ மூவர்

இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்ணுதல் எந்தை
கடைத்தலைமுன் நின்றதற்பின்
எண்ணிலி இந்திரர்
எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால்பலர்
மாண்டனர்காண் தோணோக்கம். 
 
எண்ணத் தகுந்த மூவர் மற்றும் அரக்கர்கள் எரிதலுக்கு தப்பிப் பிழைத்து கண்ணுதல் செய்த எமது தந்தை கடைசி பார்வை பட நின்றதால் எண்ணிக்கை அற்ற இந்திரர் எத்தனையோ பிரமனர் மண்ணில் மேல் அளவற்று மாண்டார்கள் என தோணோக்கம் விளையாடுவோம் 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தோணோக்கம் | பாடல் எண் : 8

 à®®à®¾à®©à®®à¯ அழிந்தோம்

மதிமறந்தோம் மங்கைநல்லீர்
வானந் தொழுந்தென்னன்
வார்கழலே நினைந்தடியோம்
ஆனந்தக் கூத்தன்
அருள்பெறில்நாம் அவ்வணமே
ஆனந்த மாகிநின்
றாடாமோ தோணோக்கம்.
 
மானம் அழிந்தாலும் மதி மறந்தாலும் மங்கை நல்லவர்களே வானமே தொழும் தென்னவன் வார்கழலே நினைத்து பணிந்தால் ஆனந்த கூத்தன் அருள் பெற்று நாமும் அப்படியே ஆனந்தமாகி நின்று தோணோக்கம் விளையாடுவோம்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருத்தோணோக்கம் | பாடல் எண் : 7

 à®¤à¯€à®¤à®¿à®²à¯à®²à¯ˆ மாணி

சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன்
தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன்
திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு
பற்றினவா தோணோக்கம். 
 
தீதற்ற தில்லையில் அபிமாணம் கொண்டு சிவகருமம் சிதைத்தவனை சாதியின்படி வேதியன் கால்களை வேட்டி சோதித்தவனை ஈசன் திருவருளால் தேவர்கள் தொழச் செய்ததை பாதகமும் பயனுள்ளதாகும் என தோணோக்கம் விளையாடுவோம். 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தோணோக்கம் | பாடல் எண் : 6

 à®ªà¯à®¤à¯à®¤à®©à¯ முதலாய

புல்லறிவிற் பல்சமயம்
தத்தம் மதங்களில்
தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
சித்தஞ் சிவமாக்கிச்
செய்தனவே தவமாக்கும்
அத்தன் கருணையினால்
தோணோக்க மாடாமோ.
 
புதியவன் முதல் பழைய அறிவற்றவர்கள் வரை பல வழிகளில் தங்கள் மதங்களில் தட்டுப்பட்டு நிற்க சித்தமே சிவம் எனச் செய்வதே தவமாகும் என அத்தன் கருணையினால் அறிந்தோம் என்று தோணோக்கம் விளையாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தோணோக்கம் | பாடல் எண் : 5

 à®¨à®¿à®²à®®à¯à®¨à¯€à®°à¯ நெருப்புயிர்

நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ
டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகே ழெனத்திசை
பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா
தோணோக்க மாடாமோ. 
 
மண் நீர் நெருப்பு உயிர் நீளும்காற்று நிலா சூரியன் புலப்படும் உடல் என எட்டு வகையாக கூடி நின்றான் ஏழு உலகமும் பத்து திசை என அனைத்திற்கும் ஒருவனே பலவாகி நின்றான் என தோணோக்கம் விளையாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தோணோக்கம் | பாடல் எண் : 3

 à®ªà¯Šà®°à¯à®Ÿà¯à®ªà®±à¯à®±à®¿à®šà¯ செய்கின்ற

பூசனைகள் போல்விளங்கச்
செருப்புற்ற சீரடி
வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார்
சேடறிய மெய்குளிர்ந்தங்
கருட்பெற்று நின்றவா
தோணோக்க மாடாமோ. 
 
பொருள்களை கொண்டு சிறப்புடன் செய்யப்படும் பூசனைகள் போலவே பாதுகாப்பு அணிந்த சீரடியும் வாய்கலசத்தில் ஊனாகிய அமுதமும் விருப்பமுடன் செய்யும் வேட்கை உடையவர் தன் மனமும் உடலும் குளிர்ந்து அருள்பெற்று நின்றதை எண்ணியபடி தோணோக்கம் விளையாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தோணோக்கம் | பாடல் எண் : 2

 à®Žà®©à¯à®±à¯à®®à¯ பிறந்திறந்

தாழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவெறிந்
தான்பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை
அம்பலவன் குணம்பரவித்
துன்றார் குழலினீர்
தோணோக்க மாடாமோ. 
 
எப்பொழுதும் பிறப்பதையும் இறப்பதையும் தொடர்வதை தடுத்து ஆட்கொண்டான் கற்று விளக்கத்தை மட்டுமே அறிந்த படைப்பாளியும் காண அரிய குன்றாத சீர் மிகுந்த தில்லையில் வெளிப்பட்டவன் குணத்தை பரவி மகிழ்ந்தவர்களே அழகிய கூந்தல் உடையவர்களே தோணோக்கம் விளையடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தோணோக்கம் | பாடல் எண் : 1

 à®ªà¯‚த்தாரும் பொய்கைப்

புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும்
பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை
அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி
கூடும்வண்ணம் தோணோக்கம். 
 
அறிவுக் கண் மலர்ந்தவர்களும் குளிர்ந்த நீர் எனக் கருதி காணலை ஏற்கக்கூடும் எனவே பேதையாக மாறாமல் தீர்த்தம் நிறைந்த தில்லை அம்பலத்தே திரு நடனம் செய்யும் கூத்தனின் திருவடியை கூடும்வண்ணம் தோணோக்கம் விளையாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 20

 à®à®•à®¾à®š மிட்ட இருடிகள் போகாமல்

ஆகாசங் காவலென் றுந்தீபற
அதற் கப்பாலுங் காவலென் றுந்தீபற. 
 
ஒருமையால் தன்னை மூடிக்கொண்ட இருடிகளிடம் போகாமல் ஆகாசமே காவல் என்று முயன்று பற அதைக் கடந்தும் அதுவே காவல் என்று முயன்று பற 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 19

 à®¤à¯‡à®°à¯ˆ நிறுத்தி மலையெடுத் தான்சிரம்

ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இருபதும் இற்றதென் றுந்தீபற. 
 
தேர் என்ற உடலில் மலை என்ற சிரத்தில் காற்றுக்கள் பத்தை இயங்க செய்ததை எண்ணி முயன்று பற பத்து நாடிகளும் பத்து காற்றும் உண்டு என முயன்று பற 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 18

 à®¨à®²à¯à®² மலரின்மேல் நான்முக னார்தலை

ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற.
 
நன்மை தரும் மலரின் மேல் நான்கு முகம் கொண்டவரின் தலை விரைந்து அரியப்பட்டது என முயன்று பற நகம் போன்றதால் அரித்தான் என்று முயன்று பற 
#திருவாசகம் 
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 17

 à®ªà®¾à®²à®• னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட

கோலச் சடையற்கே யுந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 
 
பால் உணர்வு முற்றாத பாலகனுக்கு அன்று பால் கடல் ஈந்த வட்டத்தில் சடை வளந்தவற்கு என முயன்று பற குமரனுக்கு தந்தை ஆனவனுக்கே முயன்று பற  
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 16

 à®¤à®•à¯à®•à®©à®¾à®°à¯ அன்றே தலையிழந் தார்தக்கன்

மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 
 
தகுதியானவர்கள் அன்றே ஆணவம் என்ற தலையை இழந்தார்கள் தகுதியானவன் மக்கள் சூழ கூடி இருந்தாலும் என்று முயன்று பற முடிவுக்கு வந்தது வேள்வி என்று முயன்று பற 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 15

 à®šà¯‚ரிய னார்தொண்டை வாயினிற் பற்களை

வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 
 
நெருப்பு உண்டாகும் தொண்டை வாயில் பற்களால் நெறிப்படும் என்று முயன்று பற வேள்வியும் மயங்கியது என்று முயன்று பற 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 14

 à®¨à®¾à®©à¯à®®à®±à¯ˆ யோனு மகத்திய மான்படப்

போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியில் உந்தீபற. 
 
நான்கு மறைக்கு அதிபனும் அகத்தில் இருப்பவனும் அடையும் வழி தேடி முயன்று பற புரந்திரன் வேள்வி இது முயன்று பற 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 13

 à®¨à®¾à®®à®•à®³à¯à®¨à®¾à®šà®¿ சிரம்பிர மன்படச்

சோமன் முகன்னெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற. 
 
நாக்கு சரசுவதி நாசியை தடுக்கும் சிரம் பிரமன் அறிவால் அருபடும் மதி என்ற நிலவும் தேயும் என உணர்ந்து முயன்று பற தொல்லையான வினைகள் ஒழிய முயன்று பற  
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 12

 à®‰à®£à¯à®£à®ªà¯ புகுந்த பகனொளித் தோடாமே

கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெலாம் உந்தீபற. 
 
தேவை என எண்ணி விருப்பம் கொள்ள தூண்டும் பகனொளியை நாடாதபடி கண்ணை பறித்ததை கண்டு முயன்று பற நாம் எல்லாம் இன்னும் ஒரு கரு வராதபடி கொடுத்திட முயன்று பற 
திருவாசகம் - திருவுந்தியார்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 11

 à®†à®Ÿà¯à®Ÿà®¿à®©à¯ தலையை விதிக்குத் தலையாகக்

கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.
 
தலையில் ஆடுவதை விதிக்கு தலைமையாக கூட்டியவனை பாடியபடி முயன்று பற மார்பகங்கள் குலுங்க நின்று முயன்று பற 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 10

 à®µà¯†à®žà¯à®šà®¿à®© வேள்வி வியாத்திர னார்தலை

துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 
 
பெருஞ்சினம் கொண்டு வேள்வி செய்த வியாத்திரனார் தலையை மறைத்த விதத்தை பாடி முயன்று பற இதுவரை தொடர்ந்த பிறப்பை அறுக்க முயன்று பற 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 9

 à®ªà¯à®°à®¨à¯à®¤à®° னாரொரு பூங்குயி லாகி

மரந்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்றே உந்தீபற.
 
இந்திரன் ஒரு பூங்குயிலாக மாறி மரத்தில் ஏறினார் என்று முயன்று பற வானவர் தலைவன் ஏகனே என்று முயன்று பற
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 8

 à®ªà®¾à®°à¯à®ªà¯à®ªà®¤à®¿ யைப்பகை சாற்றிய தக்கனைப்

பார்ப்பதென் னேஏடி யுந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற.
 
பார்ப்பதில் தலைமையை பகையாக பேசிய தக்கனை பார்பதில் என்ன பயன் என்று முயன்று பற பெண்மையை பாகமாக கொண்டவனுக்கு முயன்று பற
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 7

 à®µà¯†à®¯à¯à®¯à®µà®©à¯ அங்கி விழுங்கத் திரட்டிய

கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.
 
வெப்பமானவன் சூடு எனப்படும் அங்கி விழங்கிட திரட்டிய கைகளை அறுத்தான் என்று முயன்று பற வேள்வியும் கலங்கியது என்று முயன்று பற 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 6

 à®†à®µà®¾ திருமால் அவிப்பாகங் கொண்டன்று

சாவா திருந்தானென் றுந்தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற.
 
இயலாமல் இருந்த திருமால் வேள்வியின் பாகம் பெற்று சாகாமல் இருந்தான் என்று முயன்று பற நான்கு முகன் தந்தை அவன் என்று முயன்று பற  
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 5

 à®šà®¾à®Ÿà®¿à®¯ வேள்வி சரிந்திடத் தேவர்கள்

ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக் குந்தீபற. 
 
 
வெறுக்கப்பட்ட வேள்வி தடைப்பட்டு தேவர்கள் ஓடியதை பாடியபடி முயன்ற பற வெற்றிச் செல்வமான நாதனுக்கு என முயன்று பற 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 4

 à®‰à®¯à¯à®¯à®µà®²à¯ லாரொரு மூவரைக் காவல்கொண்

டெய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற.
 
சிறக்க வல்லவருடன் மூவரைக் பாதுகாக்க வல்லவனுக்கே முயன்று பற வாழ ஆதரத்தை தரும் சக்தியின் பங்களான் என்று முயன்று பற 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 3

 à®¤à®šà¯à®šà¯ விடுத்தலும் தாமடி யிட்டலும்

அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற.
 
அமைக்கப்பட்ட தச்சு வேலைகள் அழிந்தன அச்சு முறிந்தது அவன் அடி பட்டதும் என முயன்று பற அழிந்தது முப்புரம் முயன்று பற   
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 2

 à®ˆà®°à®®à¯à®ªà¯ கண்டிலம் ஏகம்பர் தங்கையில்

ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற. 
 
இரண்டு அம்மை கண்டோம் இல்லை ஒருமையான ஏகம்பர் தனது கையில் அந்த ஓர் அம்பே முப்புரத்தை அழித்தது என முயன்று பற ஒன்றே அதிகப்படியானது என முயன்று பற 
#திருவாசகம் 
 

திருவாசகம் | திருவுந்தியார் | பாடல் எண் : 1

 à®µà®³à¯ˆà®¨à¯à®¤à®¤à¯ வில்லு விளைந்தது பூசல்

உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 
 
வளைந்த மனம் என வளைந்தது வில் அதனால் விளைந்தது பூசல் முப்பரமும் உளைச்சல் அடைந்தது என முயன்று பற ஒட்டு மொத்தமும் வெந்து தணிந்தது முயன்று பற 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 20

 à®®à®¾à®µà®¾à®° ஏறி

மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலந்
திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக்
குற்றேவல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப்
பூவல்லி கொய்யாமோ. 
 
பெருமையுடன் ஏறி மதுரை நகர் புகுந்து அருளி தேவர்கள் போன்ற சிறந்த கோலம் விளங்க பெருந்துறையின் தலைவனாக வந்து எம்மை சிறுச் செயல் செய்யத் தூண்டி அருளும் பூப் போன்ற கழல் பரவி படரும் பூவை பறிக்கலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 19

 à®…த்தி யுரித்தது
போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவுகொண்
டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
முத்தி முழுமுதலுத்
தரகோச மங்கைவள்ளல்
புத்தி புகுந்தவா
பூவல்லி கொய்யாமோ.

கடலை உரித்து போர்வையாக வைத்து அருளும் பெரிய துறைமுகத்தான் சித்தபிரம்மை பிடித்தவர் போல் வடிவம் கொண்டு இவ் உலகில் குழைந்தாக இருப்பவன் முத்தி முழுமையும் தர முதலாய் கோச மங்கை தந்த வள்ளல் என் புத்தியில் புகுந்தவனே என்று படரும் பூவை பறிக்கலாம்.
#திருவாசகம்

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 18

 à®šà¯€à®°à®¾à®°à¯ திருவடித்

திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய்
அடியேன் அகமகிழத்
தேரார்ந்த வீதிப்
பெருந்துறையான் திருநடஞ்செய்
பேரானந் தம்பாடிப்
பூவல்லி கொய்யாமோ. 
 
சிறப்பு பொருந்தியவர்களின் திடமாண சிலம்பின் ஒலிக்கே திராத ஆசை கொண்ட அடியேன் உள்ளம் மகிழ தேறியவர்களின் பாதையான பெருந்துறையில் திரு நடனம் செய்து பேரானந்தம் பாடியபடி படரும் பூவை பறிக்கலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 17

 à®®à¯à®©à¯à®©à®¾à®¯ மாலயனும்

வானவருந் தானவரும்
பொன்னார் திருவடி
தாமறியார் போற்றுவதே
என்னாகம் உள்புகுந்
தாண்டுகொண்டான் இலங்கணியாம்
பன்னாகம் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ. 
 
முன்னாக இருக்கும் மாலயனும் வானவரும் தானவரும் பொன்னார் திருவடியை அறிந்திருக்கவில்லை ஆயினும் போற்றுவதற்கே பல ஆகமம் படைத்துக் கொண்டார்கள் என் அகத்தில் புகுந்து ஆட்கொண்டான் இலக்காகும் கணியாக என்று பல ஆகமம் பாடியபடி படரும் பூவை பறிக்கலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 16

 à®¤à®¿à®£à¯à®ªà¯‹à®°à¯ விடையான்

சிவபுரத்தார் போரேறு
மண்பால் மதுரையிற்
பிட்டமுது செய்தருளித்
தண்டாலே பாண்டியன்
தன்னைப் பணிகொண்ட
புண்பாடல் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ. 
 
வலிமையான போராட்டத்திற்கு முடிவாக நிற்பவன் சிவபுரத்தாரின் ஒப்பற்ற தலைவன் மண்ணாக போகும் மதுரையில் குறைந்த அளவு அமுதை அருளி முதுகித் தண்டின் ஆற்றலால் பழைமையானவன் தன்னை பணிகொண்ட புதுமையான பாடலை பாடியபடி படரும் பூவை பறிக்கலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 15

 à®…ங்கி அருக்கன்

இராவணனந் தகன்கூற்றன்
செங்கண் அரிஅயன்
இந்திரனுஞ் சந்திரனும்
பங்கமில் தக்கனும்
எச்சனுந்தம் பரிசழியப்
பொங்கியசீர் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ. 
 
அக்னி அருக்கன் இராவணன் அனந்தகன் கூற்றன் சிவந்த கண் உடைய அரி அயன் இந்திரன் சந்திரன் குறைவற்ற தக்கன் எச்சன் என இவர்கள் தான் பெற்ற பரிசை அழியும் அளவு பொங்கிய அழகிய திருவடியை பாடியபடி படரும் பூவை பறிக்கலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 14

 à®ªà®Ÿà®®à®¾à®• என்னுள்ளே

தன்னிணைப்போ தவையளித்திங்
கிடமாகக் கொண்டிருந்
தேகம்பம் மேயபிரான்
தடமார் மதில்தில்லை
அம்பலமே தானிடமா
நடமாடு மாபாடிப்
பூவல்லி கொய்யாமோ. 
 
நெஞ்சில் நிலைத்த படமாக எனக்குள் தன்னை வைத்து இணையடியில் இடமாக கொண்ட தேகத்தில் அம்பலமாகும் தலைவன் தடமாகும் தில்லை அம்பலத்தே தன் இடமாக கொண்டு நாடமாடுபவனை பாடியபடி படரும் பூவை பறிக்கலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 13

 à®…ன்றால நீழற்கீழ்

அருமறைகள் தானருளி
நன்றாக வானவர்
மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும்
நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்றாது பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ. 
 
முன்னர் தொடர்ந்து வளரும் மரத்தின் நீழலின் கீழ் அரிய உண்மைகள் கொண்ட மறைகள் அருளி நலமுடன் வானர்களும் மாமுனிகளும் நிலைத்து வாழ்த்தும் நிறைவான அடி உடையவன் சூடியுள்ள கொன்றை பாடியபடி படரும் பூவை பறிக்கலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 12

 à®µà®¾à®©à®µà®©à¯ மாலயன்

மற்றுமுள்ள தேவர்கட்கும்
கோனவ னாய் நின்று
கூடலிலாக் குணக்குறியோன்
ஆன நெடுங்கடல்
ஆலாலம் அமுதுசெய்யப்
போனகம் ஆனவா
பூவல்லி கொய்யாமோ.
 
வானவன் மாலயன் மற்றும் ஏனைய எல்லா தேவர்களுக்கும் கோன் என நின்ற நெருங்க முடியா குணத்தை உடைய பெருங்கடல் ஆலால நஞ்சினை அமுதாக்கிட உண்டவனே என படரும் பூவை பறிக்கலாம்.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 11

 à®ªà®¾à®²à¯à®®à¯ அமுதமுந்

தேனுடனாம் பராபரமாய்க்
கோலங் குளிர்ந்துள்ளங்
கொண்டபிரான் குரைகழல்கள்
ஞாலம் பரவுவார்
நன்னெறியாம் அந்நெறியே
போலும் புகழ்பாடிப்
பூவல்லி கொய்யாமோ. 
 
பாலுடன் அமுதும் தேனுமாகவும் பராபரமாய்க் கோலம் கொண்டு உள்ளம் குளிர்ந்திட செய்த தலைவன் ஒலிக்கும் அடிகளின் ஞாலத்தை கைக்கொண்டு வாழ்வதே நன்னெறி அந்நெறி போலும் நாமும் புகழ் பாடி படரும் பூவை பறிக்கலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 10

 à®ªà¯‡à®°à®¾à®šà¯ˆ யாமிந்தப்

பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடிஎன்
தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல் நஞ்சை
உண்டுகந்த காபாலி
போரார் புரம்பாடிப்
பூவல்லி கொய்யாமோ. 
 
பேராசை தரும் இந்த உடல் அதை கடக்க பெருந்துறையாக இருப்பவன் சீரார் திருவடியை என் தலைமேல் வைத்த தலைவன் கடலை கடைந்திட வந்த நஞ்சை உண்டு காத்திட்ட கபாலி போர் புரிந்ததை பாடியபடி படரும் பூவை பறிக்கலாம். 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 9

 à®ªà®©à¯à®©à®¾à®Ÿà¯ பரவிப்

பணிசெய்யப் பாதமலர்
என்னாகம் துன்னவைத்த
பெரியோன் எழிற்சுடராய்க்
கன்னா ருரித்தென்னை
யாண்டுகொண்டான் கழலிணைகள்
பொன்னான வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ. 
 
பல நாளாக தொடர்ந்து பணி செய்திட பாதமலர் என் அகத்தே என்று எண்ணச் செய்த பெரியோன் அழகிய சுடராய் கல் போன்ற என்னில் நார் உரித்து ஆட்கொண்டான் திருவடிகளை பொன்னது என பாடி படரும் பூவை பறிக்கலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 8

 à®¨à¯†à®±à®¿à®šà¯†à®¯à¯ தருளித்தன்

சீரடியார் பொன்னடிக்கே
குறிசெய்து கொண்டென்னை
ஆண்டபிரான் குணம்பரவி
முறிசெய்து நம்மை
முழுதுடற்றும் பழவினையைக்
கிறிசெய்த வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ.
 
வழிமுறை செய்து அருளுடன் கொடுத்து சீரான அடியார் பொன்னடிக்கே கவனம் செய்ய வைத்து ஆட்கொண்டு என்னை ஆண்ட தலைவன் குணத்தை வெளிப்படுத்தி முறைமுறையாய் நம்மை முழுவதுமாய் மடக்கிடும் பழைய வினைகளை கிழித்து எறிந்து காத்தருள்வதை பாடியபடியே படரும் பூவை பறிக்கலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 7

 à®µà®£à®™à¯à®•à®¤à¯ தலைவைத்து

வார்கழல்வாய் வாழ்த்தவைத்
திணங்கத்தன் சீரடியார்
கூட்டமும்வைத் தெம்பெருமான்
அணங்கொ டணிதில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கூரப் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ.
 
வணங்க வேண்டும் என்றே தலை படைத்து வட்டவடிவில் வாழ்த்த வாய் படைத்து இணங்காத்தவன் சீரான அடியார் கூட்டத்தில் என்னை வைத்த எம் பெருமான் அணங்குடன் அழகிய தில்லை அம்பலத்தே ஆடுகின்ற குணத்தை கூறியபடியே நாம் படரும் பூவை பறிக்கலாம்.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 6

 à®Žà®°à®¿à®®à¯‚ன்று தேவர்க்

கிரங்கியருள் செய்தருளிச்
சிரமூன் றறத்தன்
திருப்புருவம் நெரித்தருளி
உருமூன்று மாகி
உணர்வரிதாம் ஒருவனுமே
புரமூன் றெரித்தவா
பூவல்லி கொய்யாமோ. 
 
மூன்றாக நின்று காக்கும் தேவர்களுக்கு இரங்கி அருள் செய்து சிரம் மூன்றை அறுத்தான் திருப்புருவத்தில் நெரித்து அருளினான் உருவம் மூன்றாக இருந்து உணர்வதற்கு அரிதானவன் புரம் மூன்றை எரித்தவான் என்றே படரும் பூவை பறிக்கலாம். 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 5

 à®¤à¯‡à®©à®¾à®Ÿà¯ கொன்றை

சடைக்கணிந்த சிவபெருமான்
ஊனாடி நாடிவந்
துள்புகுந்தான் உலகர் முன்னே
நானாடி ஆடிநின்
றோலமிட நடம்பயிலும்
வானாடர் கோவுக்கே
பூவல்லி கொய்யாமோ. 
 
தேன் ஊறும் கொன்றை மலரை சடைக்கு அணிந்த சிவபெருமான் உடலை நாடி நாடி வந்து உள்ளே புகுந்தான் உலகத்தவர்கள் முன்னே நான் ஆடி ஆடி நின்று ஓலமிட நடம் பயிலும் வானோர் தலைவனுக்கு படரும் பூவை பறிக்கலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 4

 à®ªà®£à¯à®ªà®Ÿà¯à®Ÿ தில்லைப்

பதிக்கரசைப் பரவாதே
எண்பட்ட தக்கன்
அருக்கனெச்சன் இந்துஅனல்
விண்பட்ட பூதப்
படைவீர பத்திரரால்
புண்பட்ட வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ. 
 
பண்பட்ட தில்லை என்ற தலைமை இடத்து பதியாக இருக்கும் அரசை புகழாத எண்ணத் தகுந்த தக்கன் அருக்கன் அச்சன் சூரியன் வெப்பம் மற்றும் விண்ணில் உள்ள பூதப் படைகள் வீர பத்திரரால் காயப்பட்டதை பாடியபடி படரும் பூவை பறிக்கலாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 3

 à®¨à®¾à®¯à®¿à®±à¯ கடைப்பட்ட

நம்மையுமோர் பொருட்படுத்துத்
தாயிற் பெரிதுந்
தயாவுடைய தம்பெருமான்
மாயப் பிறப்பறுத்
தாண்டானென் வல்வினையின்
வாயிற் பொடியட்டிப்
பூவல்லி கொய்யாமோ.
 
நாயைவிட கேவலமான நம்மையும் ஓரு பொருட்டாக ஏற்று தாயைவிட தயவாக இருக்கும் நம் பெருமான் மாய பிறப்பை அறுத்து ஆண்டான் என் வலிமையான வினையின் வாசலை பொடிப்பொடியாக்கினான் என்று படரும் பூவை பறிக்கலாம்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 2

 à®Žà®¨à¯à®¤à¯ˆà®Žà®¨à¯ தாய்சுற்றம்

மற்றுமெல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்தென்னை
ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில்
ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவிநாம்
பூவல்லி கொய்யாமோ.
 
எனது தந்தை எனது தாய் சுற்றம் மற்றும் பலவற்றை எல்லாம் அறுத்து என்னை ஆண்டு கொண்ட கடல் சூழ்ந்த நகரத்து அரசன் அந்த இடைப்பட்ட மாறக்கூடியதில் ஆனந்தத் தேன் இருந்த பொந்தை பாராட்டி நாம் படரும் பூவை பறிக்கலாம்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருப்பூவல்லி | பாடல் எண் : 1

 à®‡à®£à¯ˆà®¯à®¾à®°à¯ திருவடிஎன்

தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள்
அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப்
பூவல்லி கொய்யாமோ.
 
இணைந்தே இருக்கும் திருவடியை என் தலைமேல் வைத்ததால் துணையாக இருக்கும் சுற்றங்களையும் துறந்து ஒழித்தேன் அணைகளால் நீரை தோக்கி வைக்கும் தில்லையின் அம்பலத்தே ஆடுகின்ற கட்டுமரம் போன்றவன் சீரைப் பாடி படரும் பூவை பறிக்கலாம். 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 19

 à®…ம்பரமாம் புள்ளித்தோல்

ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர்
எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங்
கேதமுது செய்திடினும்
தம்பெருமை தானறியாத்
தன்மையன்காண் சாழலோ. 
 
மறைப்பதற்கோ புலித்தோல் ஆலால நஞ்சே அமுதம் என்னும் எம்பெருமான் உண்டா இதன் காரணத்தை எனக்கு இயம்பு என்றால் எம்பெருமான் எதை உடுத்தி உண்டாலும் அமுதாக செய்திடும் வல்லபத்தை பெருமையை நாம் அறியவே அத்தன்மையாக இருக்கிறான் என கண்டு விளையாடு. 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 18

 à®šà®²à®®à¯à®Ÿà¯ˆà®¯ சலந்தரன்றன்

உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன்
றருளியவா றென்னேடீ
நலமுடைய நாரணன்தன்
நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி
அருளினன்காண் சாழலோ.
 
நீர் நிறைந்த நீர்மையானவன் உடல் தடித்த நற்காலத்தில் நலமுடன் மனித பயணம் செய்பவனுக்கு நீர் அருளியது ஏன் என்றால் நலமுடன் மனிந பயணம் செய்பவனின் நயனத்தின் இடத்தில் ஈரமுடன் மலரை இருக்கவே என்று கண்டு விளையாடு.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 17

 à®…ம்பலத்தே கூத்தாடி

அமுது செயப் பலிதிரியும்
நம்பனையுந் தேவனென்று
நண்ணுமது என்னேடீ
நம்பனையும் ஆமாகேள்
நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாவென்
றேத்தினகாண் சாழலோ. 
 
வெளிப்பட்ட இடங்களில் கூத்து ஆடி அமுது உண்டாக்க உழைக்க தூண்டும் ஒருவனை தேவன் என்று நாடுவது எப்படி பொருந்தும் என்றால் தாம் ஏற்கும் விதம் எப்படி என்றால் நான் மறைகள் அறியா எம் பெருமான் ஈசா என்றே போற்றப்பட்டான் என கேட்டறிந்து விளையாடு.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 16

 à®¨à®©à¯à®±à®¾à®• நால்வர்க்கு

நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங்
கறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங்
கறமுரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண் புரமூன்றுங்
கூட்டோடே சாழலோ.
 
தெளிவுடன் நல்லவர்களுக்கு நான் மறையின் உட் பொருளை அன்று ஆலின் கீழ் இருந்து கற்க உரைத்தான் கண்டாயா அன்று ஆலின் கீழ் இருந்து கற்பித்தான் என்றாலும் கொன்றான் கண்டாயா மூப்புரத்தை கூட்டோடி என்றே விளையாடு.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 15

 à®•à®Ÿà®•à®°à®¿à®¯à¯à®®à¯ பரிமாவும்

தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா
றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந்
தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான்
திருமால்காண் சாழலோ.
 
திடமான யானையும் குதிரையும் தேரும் இருக்க விருப்பமுடன் ஏற முடியாத காளைமாடாகிய இடபத்தில் விரும்பி ஏறியதை நான் அறிய இயம்புக என்றால் தடையாக இருக்கும் மதில்கள் மூன்றையும் தகர்த்து எரித்த அந்த நாளில் இடபமாக திருமாலே தாங்கினான் என்ற அறிந்து விளையாடு.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 14

 à®¤à¯‡à®©à¯à®ªà¯à®•à¯à®• தண்பணைசூழ்

தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம்
பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம்
பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக்
கூட்டாங்காண் சாழலோ.
 
தேன் நிறைந்த குளிர்ந்த பணை சூழ்ந்த தில்லை சிற்றலம்பவன் தன் விருப்பில் தடனம் ஆடுவதை ஏன் என்றால் தன் விருப்பில் நடனம் ஆடவில்லை என்றால் தரணி எல்லாம் ஊன் புகுந்த காளி கூட்டமாகிவிடும் என்றே விளையாடு.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 13

 à®®à®²à¯ˆà®¯à®°à¯ˆà®¯à®©à¯ பொற்பாவை

வாள்நுதலாள் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான்
என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளா
தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாங்
கலங்கிடுங்காண் சாழலோ. 
 
மலைகளின் இருப்பிடத் தலைவனின் பொன் போன்ற பாவை வாள் போன்ற புருவம் கொண்ட பெண் திருவை உலகம் அறியும்படி தீ முன்னே மணந்தான் என்பது என்னடீ உலகம் அறியவும் தீ தன் தொழில்படுதல் செய்யாவிட்டால் உலகில் அனைத்து கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் என்று கண்டு விளையாடு.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 12

 à®•à®¾à®©à®¾à®°à¯ புலித்தோல்

உடைதலைஊண் காடுபதி
ஆனால் அவனுக்கிங்
காட்படுவார் ஆரேடீ
ஆனாலுங் கேளாய்
அயனுந் திருமாலும்
வானாடர் கோவும்
வழியடியார் சாழலோ. 
 
காட்டில் வாழும் புலியின் தோல் உடையாகவும் மண்டை ஓட்டை உண்ணும் பாத்திரமாகவும் சுடுகாட்டின் தலைவனாகவும் இருந்தால் அவனுக்கு ஆட்படுவோர் யாரோடீ இருப்பினும் கேள் அயனும் திருமாலும் வான் நாட்டு அரசனும் வழிபட்டு பணிவார் என்று விளையாடு.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 11

 à®¨à®™à¯à®•à®¾à®¯à¯ இதென்னதவம்

நரம்போ டெலும்பணிந்து
கங்காளம் தோள்மேலே
காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள்
காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத்
தரித்தனன்காண் சாழலோ.
 
நல்ல பெண்ணே இது என்ன தவம் நரம்புடன் எலும்பை அணிந்து தோளை பதப்படுத்திய கங்காளம் காதலுடன் வைத்திருப்பதை கண்டாயா ஆம் கங்காளம் வைத்திருக்கும் காரணத்தை கேள் காலத்தில் உண்டான இருவர் தன் காலத்தை செய்ய அதை தரித்தான் என்று விளையாடு.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 10

 à®¤à®¾à®©à®¨à¯à®¤à®®à¯ இல்லான்

தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்
தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத்
தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர்
வான்பொருள்காண் சாழலோ.
 
தனக்கு ஒரு முடிவு இல்லாதவன் தன்னை அடைந்த இனம் சேர்க்காதவனை ஆனந்த வெள்ளத்தில் முழ்கடிப்பதை கண்டாயோ? ஆனந்த வெள்ளத்தில் அழுத்தும் திருவடிகள் வான் வாழும் தேவர்களுக்கு வான் பொருள் என கண்டு விளையாடு.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 9

 à®¤à¯†à®©à¯à®ªà®¾ லுகந்தாடுந்

தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான்
பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற்
பேதாய் இருநிலத்தோர்
விண்பா லியோகெய்தி
வீடுவர்காண் சாழலோ. 
 
தெரியும் திசை நோக்கி விருப்பமுடன் ஆடும் தில்லை சிறிய அம்பலத்தில் வெளிப்பட்டவன் பெண் மேல் விருப்பம் கொண்டதை கண்டாயா? பெண்மேல் விருப்பம் இல்லை என்றால் பேதமையானவர்களே இரு நிலத்தவர்களும் விண்ணுக்கு ஏய்தி விடுவார்கள் என்று அறிந்து விளையாடு.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 8

 à®•à¯‹à®²à®¾à®² மாகிக்

குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான்
அவன்சதுர்தான் என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல்
அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம்
வீடுவர்காண் சாழலோ.
 
 
கொண்டாடி மகிழந்து கடலை கடைந்திட குறையாக இருந்த ஆலாலம் எழுந்திட அதை உண்டான் என்று உரைப்பது எதற்காக என்றால் ஆலாலம் உண்ணவில்லை என்றால் அன்றே அயனுடன் மாலும் மற்றும் அனைத்து தேவர்களும் இல்லாமல் போயிருப்பார் என்று விளையாடு.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 7

 à®®à®²à¯ˆà®®à®•à®³à¯ˆ யொருபாகம்

வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற்
பாயுமது என்னேடீ
சலமுகத்தால் அவன்சடையிற்
பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து
பெருங்கேடாஞ் சாழலோ.
 
மலைமகளை ஒரு பாகமாக வைத்தாலும் மற்றும் ஒருத்தியை நீராக தலையில் வைத்து பாய்வது ஏன்? நிராக மேலிருந்து பாயாவிட்டால் தரணி எல்லாம் காய்ந்து சருகாகி பெருங்கேடு உண்டாகிவிடும் என்று உணர்ந்து விளையாடு. 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 6

 à®…லரவனும் மாலவனும்

அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற
நின்றதுதான் என்னேடீ
நிலமுதற்கீழ் அண்டமுற
நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந்
தவிரார்காண் சாழலோ.
 
பிரம்மனும் திருமாலும் அறிய முடியாத படி அனல் உருவாய் நிலத்தை கடந்த அண்டம் எல்லாம் நின்றது ஏன் என்றால் நிலம் கடந்து அண்டமெல்லாம் நிற்காவிட்டால் நீரில் நின்ற இருவரும் ஆணவத்தை தவிர்க்க மாட்டார் என்று உணர்ந்து விளையாடு.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 5

 à®¤à®•à¯à®•à®©à¯ˆà®¯à¯à®®à¯ எச்சனையுந்

தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்தருளி அருள்கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலைமற்
றருளினன்காண் சாழலோ.
 
தகுதியானவரையும் மிச்சம் வைத்தவரையும் தலை அறுத்து தேவர்கணங்கள் மதிக்கம்படி வந்தவர் தம்மை மறந்தது ஏன் என்று உணர்ந்து மதிப்புடன் வந்தவர் தம்மை தொலைத்து அருள் செய்து எச்சனுக்கு தலை மாற்றி அருளினன் என்று கண்டு விளையாடு.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 4

 à®…யனை அநங்கனை

அந்தகனைச் சந்திரனை
வயனங்கண் மாயா
வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடைய
நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத்
தாழ்குழலாய் சாழலோ. 
 
அளவற்று திரியும் பிரம்மனை அழகிய மன்மதனான அநங்களை துன்பம் தரும் அந்தகனை சந்திரனை பயணத்தின் பொழுது வடு செய்தான் என்பதை அறிந்துக் கொள் நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தல் என்பது சமயத்தின் வழிமுறை என்றால் வனவர்களுக்கும் நாம் தாழ்ந்தவர்கள் இல்லை என்று விளையாடு.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 2

 à®Žà®©à¯à®©à®ªà¯à®ªà®©à¯ எம்பிரான்

எல்லார்க்குந் தான்ஈ சன்
துன்னம்பெய் கோவணமாக்
கொள்ளுமது என்னேடீ
மன்னுகலை துன்னுபொருள்
மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச்
சாத்தினன்காண் சாழலோ.
 
என் தந்நை என் தலைவன் எல்லார்க்கும் அவனே ஈசன் தைக்கப்பட்ட கோவணமாக கொள்ளவது என்ன? உண்டாகிய கலைகள் உணர்த்தும் பொருள் மறைகள் நான்கு என வான் என்ற வெறுமையை பற்றியபடி தன்னையே கோவணமாக நமக்கு சாத்தினன் என்று கண்டு உணர்ந்து விளையாடு.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருச்சாழல் | பாடல் எண் : 1

 à®ªà¯‚சுவதும் வெண்ணீறு

பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால்
மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும்
பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும்
இயல்பானான் சாழலோ. 
 
பூசிக்கொண்டது உனது வெறும் சாம்பலை, அணிந்துக் கொள்வது உன்னிடம் இருந்து பொங்கிய வெளிச்சமான பாம்பு போன்ற உடலை, பேசுவதும் உன் திரு வாயால் வேதத்தை அறியும் நுட்பமுடன் இதை காண்டு உணரலாம். பூசுவதும் பேசுவதும் பூண்பதும் கொண்டு என்னை ஆளும் ஈசனே எல்லா உயிர்களுக்கும் இயல்பானான் என்று விளையாடு. 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 20

 à®•à¯à®²à®®à¯à®ªà®¾à®Ÿà®¿à®•à¯ கொக்கிற

கும்பாடிக் கோல்வளையாள்
நலம்பாடி நஞ்சுண்ட
வாபாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ. 
 
மனித குலத்தின் இறை நாட்டம் உள்ளவர்களாக மாற்றியதை பாடி அதைக் காப்பதை பாடி எதற்கும் வளையாத நன்மை அருள்வதைப் பாடி நஞ்சு உண்டதை பாடி நாற்தோறும் தூய்மை செய்து ஈரம் பொங்கும் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற சிலம்பாடல் பாடி நாம் தெளிந்தோம் என்று கொண்டாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 19

 à®µà®¿à®£à¯à®£à¯‹à®°à¯ முழுமுதல்

பாதாளத் தார்வித்து
மண்ணோர் மருந்தயன்
மாலுடைய வைப்படியோம்
கண்ணார வந்துநின்றான்
கருணைக் கழல்பாடித்
தென்னாதென் னாஎன்று
தெள்ளேணங் கொட்டாமோ. 
 
மேலானவர்களும் முழமுதல் பதாளமான ஆதாரமானவர்களும் மண்ணுக்கு வித்தானவர்களும் அளவுகொண்டே பாடினோம் எனவே கண்ணார காட்சி தந்து நின்றான் கருணைக் கழல்பாடிக் தெளிந்தோம் என்று கொண்டாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 18

 à®µà®¾à®©à¯à®•à¯†à®Ÿà¯à®Ÿà¯ மாருதம்

மாய்ந்தழல் நீர் மண்கெடினுந்
தான்கெட்ட லின்றிச்
சலிப்பறியாத் தன்மையனுக்
கூன்கெட் டுயிர்கெட்
டுணர்வுகெட்டென் உள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 
 
வான் திரிந்து காற்றாகி மாய்ந்து நெருப்பாகி தழந்து நீராகி மண்ணாக கொட்டாலும் தான் கொடாது சலிப்பில்லா தன்மையுள்ளவனுக்கு கூனுவதை அழித்து உயிர் திரிந்து உணர்வும் திரிந்து உள்ளமும் போய் நான் திரிந்து பாடி தெளிந்தோம் என்று கொண்டாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 17

 à®‰à®µà®²à¯ˆà®šà¯ சமயங்கள்

ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல்உளனாய்க்
கிடந்து தடுமாறுங்
கவலைக் கெடுத்துக்
கழலிணைகள் தந்தருளுஞ்
செயலைப் பரவிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ. 
 
உதவாத சமயங்கள் ஒவ்வாத சாந்திரமாம் சகதி நிறைந்த அந்தக் கடலில் உள்ளவன் போல் விழ்ந்து தடுமாறுவதைக் கெடுத்து கழலிணைகள் தந்த அருள் செயலை பரவி நாம்  தெளிந்தோம் என்று கொண்டாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 16

 à®ªà¯à®¤à¯à®¤à®©à¯ புரந்தராதியர்

அயன்மால் போற்றிசெயும்
பித்தன் பெருந்துறை
மேயபிரான் பிறப்பறுத்த
அத்தன் அணிதில்லை
அம்பலவன் அருட்கழல்கள்
சித்தம் புகுந்தவா
தெள்ளேணங் கொட்டாமோ. 
 
புதிமையானவன் பழைமை மாறாதவர்கள் அயன் மால் போற்றி செய்யும் பித்தன் பெருந்துறை ஆளும் தலைவன் பிறப்பு அறுத்த உரிமையானவன் விளக்க முடியா அம்பலவன் அருட் கழல்கள் சித்தம் புகுந்திடச் செய்தவா தெளிந்தோம் என்று கொண்டாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 15

 à®‰à®°à¯à®•à®¿à®ªà¯ பெருகி

உளங்குளிர முகந்துகொண்டு
பருகற் கினிய
பரங்கருணைத் தடங்கடலை
மருவித் திகழ்தென்னன்
வார்கழலே நினைந்தடியோம்
திருவைப் பரவிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ. 
 
மனது உருகி பக்தி பெருகி உள்ளம் குளிர முகந்து கொண்டு பருகுவதற்கு இனிய பரங் கருணை தடையற்ற கடலை மாற்றமுடன் வேறுபட்டு இருந்த நாம் வார்கழலே நினைத்தபடி பணிந்து திருவை பரவி நாம் தெளிந்தோம் என்று கொண்டாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 13

 à®ªà®¾à®°à¯à®ªà®¾à®Ÿà¯à®®à¯ பாதாளர்

பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா
வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி
நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
உலகத்தவர் படும் பாடும் கீழ் உலகத்தார் படும் பாடும் விண்ணோர் படும் பாடும் தானாகவே தண்டித்து படும் பாடும் யார் படும் பாடும் நாம் படாதபடி நல்வகை அருளி ஆண்டுகொண்டு நேர்பாடல் பாடி நினைப்பில் இருந்து பிரியாத தனிப் பெரியவன் சீர் பாடி நாம் தெளிந்தோம் என்று கொண்டாடுவோம்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 11

 à®•à®¯à®²à¯à®®à®¾à®£à¯à®Ÿ கண்ணிதன்

பங்கன் எனைக்கலந் தாண்டலுமே
அயல்மாண் டருவினைச்
சுற்றமும்மாண் டவனியின்மேல்
மயல்மாண்டு மற்றுள்ள
வாசகம்மாண் டென்னுடைய
செயல்மாண்ட வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 
 
குளத்து மீன் போன்ற கண்ணானவளை பாகமாக கொண்டவன் என்னை கலந்து ஆண்டுகொண்டு அயல் மாண்டிடச் செய்து அரிய வினைகளை சுற்றத்தை அவனியில் மேல் மயல் அழித்து மற்றும் இங்கு உள்ள வாசகத்தை அழித்து செயல்களை அழித்து காத்தவனை வா பாடித் தெளிந்தோம் என்று கொண்டாடுவோம். 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 10

 à®•à®©à®µà¯‡à®¯à¯à®®à¯ தேவர்கள்

காண்பரிய கனைகழலோன்
புனவே யனவளைத்
தோளியொடும் புகுந்தருளி
நனவே எனைப்பிடித்தாட்
கொண்டவா நயந்துநெஞ்சம்
சினவேற்கண் நீர்மல்கத்
தெள்ளேணங் கொட்டாமோ. 
 
கனவிலும் தேவர்கள் காண்பதற்கு அரிதான கனைகழலோன் கூடுவேன் என்று என்னை தன் தோழியுடன் புகுந்து அருளி நனவில் என்னை பிடித்து ஆண்டு கொண்டவனை நயமுடன் நெஞ்சம் உருகி கண்கள் நீர் பெருக தெளிந்தோம் என்று கொண்டாடுவோம். 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 9

 à®•à®©à¯à®©à®¾ ருரித்தென்ன

என்னையுந்தன் கருணையினாற்
பொன்னார் கழல்பணித்
தாண்டபிரான் புகழ்பாடி
மின்னேர் நுடங்கிடைச்
செந்துவர்வாய் வெண்ணகையீர்
தென்னாதென் னாஎன்று
தெள்ளேணங் கொட்டாமோ. 
 
கல்லில் நார் உரிப்பது போல் என்னையும் உன் கருணையினால் பொன்னார் கழலை பணியச் செய்து ஆண்டுக் கொண்ட தலைவனே உன் புகழ்பாடி மின்னலைப் போன்று மறைந்து வெளிப்படும் சிவந்திடிவதை வெண்மையாக கொண்டவர்களே என்னா என்னா என்று கேட்டு தெளிந்தோம் என்று கொண்டாடுவோம். 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 8

 à®•à®±à®™à¯à®•à¯‹à®²à¯ˆ போல்வதோர்

காயப்பிறப்போ டிறப்பென்னும்
அறம்பாவம் என்றிரண்
டச்சந் தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான்
மறந்தேயுந் தன்கழல்நான்
மறவா வண்ணம் நல்கியஅத்
திறம்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
பற்றி இழுக்கும் கறங்கோல் போன்ற உடல் கொண்ட இந்த பிறப்பினை அறம் பாவம் என்ற இரண்டால் என்னை ஆட்கொண்டவன் மறந்தும் அவனது கழலை மறக்காதபடி அருள்தந்த திறத்தை பாடி நாம் தெளிந்தோம் என்று கொண்டாடுவோம். 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 7

 à®†à®µà®¾ அரிஅயன்இந்

திரன்வானோர்க் கரியசிவன்
வாவாஎன் றென்னையும்பூ
தலத்தேவலித் தாண்டுகொண்டான்
பூவார் அடிச்சுவடென்
தலைமேற்பொ றித்தலுமே
தேவான வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
ஆர்வம் கொண்ட அரி அயன் இந்திரன் மற்றும் வானோர்க்கு அரிய சிவன் வா வா என்றே பூ உலகில் வந்து என்னை வலிமையுடன் அழைத்து ஆண்டு கொண்டான். பூ வான அவன் பாதத்தை என் தலையில் பொறித்தவன் என்றே பாடி நாம் தெளிந்தோம் என்று கொண்டாடுவோம். 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 6

 à®…ரையாடு நாகம்

அசைத்தபிரான் அவனியின்மேல்
வரையாடு மங்கைதன்
பங்கொடும்வந் தாண்டதிறம்
உரையாடஉள் ளொளியாட
ஒண்மாமலர்க் கண்களில்நீர்த்
திரையாடு மாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
உடல் கொண்ட அரையில் ஆடும் வெளிச்சம் என்ற பாம்பை அசைத்த தலைவன் உலகில் பெண்ணை படைத்து அவனிடத்தில் படைக்கும் தொழிலை தந்து ஆளும் திறத்தை உரையாட உள்ளொளியும் ஆட ஒப்பில்லாத மா மலர் கண்களில் நீர்த்துளிகள் திரையாக ஆடுமாறு பாடி நாம் தெளிந்தோம் என்று கொண்டாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 4

 à®…வமாய தேவர்

அவகதியில் அழுந்தாமே
பவமாயங் காத்தென்னை
ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவமாய செஞ்சுடர்
நல்குதலும் நாம்ஒழிந்து
சிவமான வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 
 
தன்னை உயர்வாக எண்ணும் அவம் அடைந்த தேவர்கள் அவகதியில் அழிவார்கள் பாவங்களில் சூழ்ந்து அழியாதபடி காத்து என்னை ஆண்டுக் கொண்ட பரஞ்சோதி புதியதான சிவந்த சுடர் நல்கியதாலும் நாம் ஒழிந்து சிவமாக வளர பாடி நாம் தெளிந்தோம் என்று கொண்டாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 3

 à®…ரிக்கும் பிரமற்கும்

அல்லாத தேவர்கட்குந்
தெரிக்கும் படித்தன்றி
நின்றசிவம் வந்துநம்மை
உருக்கும் பணிகொள்ளும்
என்பதுகேட் டுலகமெல்லாஞ்
சிரிக்குந் திறம்பாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
அரி பிரம்மா மற்றும் பெயர் அற்ற தேவர்களுக்கும் தெரியப்படுத்தும் உத்தி தராது நின்ற சிவம் தானாக நம்மிடம் வந்து உருகும் பணி செய்யத் தூண்டும் என்பதை கேட்டு உலகம் எல்லாம் மகிழும் திறத்தை பாடி நாம் தெளிந்தோம் என்று கொண்டாடுவோம்.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 2

 à®¤à®¿à®°à¯à®µà®¾à®°à¯ பெருந்துறை

மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின்
யாவரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும்
ஆயபிரான் அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
உயந்தோர் வழிதடத்தை காத்து அருளும் தலைவன் என் பிறவியின் கருவேர் அறுத்தப் பின்பு யாவரையும் கவனித்து மகிழ்வதில்லை வடிவற்றும் வடிவாகவும் உள்ள தலைவன் அவன் மாறுபட்டு இருக்கும் உயர்ந்தோர் வாழும் ஊரை பாடி நாம் தெளிந்தோம் என்று கொண்டாடுவோம்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருத்தெள்ளேணம் | பாடல் எண் : 1

 à®¤à®¿à®°à¯à®®à®¾à®²à¯à®®à¯ பன்றியாய்ச்

சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியஓர்
அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம்
ஒன்றுமில்லாற் காயிரம்
திருநாமம் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
உயர் சிறப்புப் பெற்றவனும் தன்னை தாழ்த்திக் கொண்டு உணராத திருவடியை தனிவடிவமாக நாம் அறிய முடியாதபடி முடிவு அறிந்தவனாய் ஆண்டுகொண்டான். ஒரு பெயரோ ஓர் உருவமோ ஒன்றும் இல்லாதவனுக்கு ஆயிரம் திரு நாமம் பாடி நாம் தெளிந்தோம் என்று கொண்டாடுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 20

 à®ªà¯‚மேல் அயனோடு

மாலும் புகலரிதென்
றேமாறி நிற்க
அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிட்டு
நன்றாப் பொருட்படுத்த
தீமேனி யானுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
பூ மேல் அயன் உடன் மாலும் சொல்வதற்கு அரிது என்று மாறி நிற்க அடியேன் இறுமாக்க இனம் சேர்க்கதவனுக்கு தன்னை போர்த்தி நன்றாக பொருட் படுத்திய தீமேனியனுக்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 19

 à®•à®³à¯à®µà®©à¯ கடியன்

கலதிஇவன் என்னாதே
வள்ளல் வரவர
வந்தொழிந்தான் என்மனத்தே
உள்ளத் துறுதுயர்
ஒன்றொழியா வண்ணமெல்லாம்
தெள்ளுங் கழலுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 
 
திருடன் அடங்காதவன் அற்பன் இவன் என்று என்னாமல் வள்ளல் இறை என் மனதுள் அவற்றை அழித்து வந்தான் உள்ளத்தே ஒரு துயரமும் இல்லாமல் ஒழியும் படி செய்பவனின் தெளிந்த திருவடிக்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 18

 à®¤à¯‹à®²à¯à®®à¯ துகிலுங்

குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும்
பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க
வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக்
குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 
 
உடையும் உடையில் அலங்கரிக்கும் முடியும் பதக்கமும் சுருண்ட தோடும் பால் போன்ற வெள்ளை நீறும் பசுமையான சாந்தும் பழகிய கிளியும் சூலமும் நிறைய வளையல்களும் அணிந்த பழமையான கோலமே நோக்கி குளிர்ந்து ஊதிடுவாய் தலைமை நாதமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 17

 à®ªà¯Šà®¯à¯à®¯à®¾à®¯ செல்வத்தே

புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக்
கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாஎன் ஆருயிரே
அம்பலவா என்றவன்றன்
செய்யார் மலரடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 
 
நிலையில்லாமல் பொய்யாகும் செல்வத்தை அடையவே நாள்தோறும் ஈடுபட்டு மெய்யானது என்றே கருதிய என்னை ஆட்கொண்ட ஐயா என் ஆருயிரே அம்பலவா என்று உந்தன் செய்யமுடியா மலர் அடிக்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 16

 à®‰à®³à¯à®³à®ªà¯ படாத

திருவுருவை உள்ளுதலும்
கள்ளப் படாத
களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்எம்
பிரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
உள்ளத்தால் எண்ண முடியாத திருவுவத்தை உள்ளத்தில் உணர்வதும் திருட முடியாத களிப்பை வான் கருணை வெள்ளம் போல் அருளும் தலைவன் என் தலைவன் என்னை வேறே ஒருவரும் ஆட்கொள்ளமுடியாதபடி செய்த தலைவனுக்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 15

 à®¨à®¾à®©à¯à®®à¯à®Žà®©à¯ சிந்தையும்

நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலும்
தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானுந் திசைகளும்
மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 
 
நானும் எனது சிந்தனையும் நாயகனுக்கு எந்த இடம் கொடுத்தேனோ அவனும் தன் நாயகியும் இணைந்த தாழ்சடையோன் என்னை ஆண்டு அருள்புரியாவிடின் வானும் திசைகளும் மாகடலும் என உருவாகிய தலைவன் தேன் ஊறும் சேவடிக்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 14

 à®•à®°à¯à®µà®¾à®¯à¯ உலகினுக்

கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல்
மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில்
அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 
 
எல்லாம் உருவாக ஆதாரமான கருவாய் உலகத்திற்கு அப்பாலாய் இங்கே புறத்தில் மருவும் மலர்குழல் மாதா உடன் வந்து அருளி உருவம் அற்று மறை பயிலும் அந்தணனாய் ஆண்டு கொண்ட நிருவான தேவற்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 13

 à®¨à®¾à®©à¯à®¤à®©à®•à¯ கன்பின்மை

நானும்தா னும்அறிவோம்
தானென்னை ஆட்கொண்ட
தெல்லாருந் தாமறிவார்
ஆன கருணையும்
அங்குற்றே தானவனே
கோனென்னைக் கூடக்
குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.
 
நான் எனக்கே அன்பற்றவனாக இருப்பதை நானும் தான் என்ற அவனும் அறிவோம் தான் என்ற அவன் என்னை ஆட்கொண்டதை எல்லாரும் தானாகவே அறிவார்கள் இப்படியான கருணையும் அதற்கு காரணமான தான் என்று ஆனவனே அரசனே என்னை கூட குளிர்ந்து ஊதிடுவாய் தலைமை நாதமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 12

 à®¨à®¾à®¯à¯‡à®©à¯ˆà®¤à¯ தன்னடிகள்

பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப்
பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென்
செய்பணிகள் கொண்டருளுந்
தாயான ஈசற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 
 
இனம் சேர்க்கா நாய் போன்றவனையும் தன் அடிகளைப் பாடிடச் செய்த நாயகனை பேய் போல் துள்ளுபவனையும் அவனது குற்றத்தை பொறுத்துக் கொள்ளும் பெருமைக்கு உரியவனை சீர் எதுவும் இல்லா என் செயல்களால் என்னை ஆட்கொண்டு அருளும் தாயான ஈசற்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 11

 à®µà®©à¯à®©à¯†à®žà¯à®šà®•à¯ கள்வன்

மனவலியன் என்னாதே
கன்னெஞ் சுருக்கிக்
கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னந் திளைக்கும்
அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 
 
வன்மையான நெஞ்சமுள்ள கள்வன் மனவலியன் என்னை கன்னெஞ் சுருக்கி கருணையினால் ஆட்கொண்டு உணவிட்டு மகிழ்விக்கும் ஆடும் தில்லையில் வெளிபட்டவன் பொன்னங் கழலுக்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 10

 à®¨à¯‹à®¯à¯à®±à¯à®±à¯ மூத்துநான்

நுந்துகன்றாய் இங்கிருந்து
நாயுற்ற செல்வம்
நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை
ஆண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
நோய் பெற்று மூப்பு எய்தி விலக்கப்பட்ட கன்றாய் நாய் பெற்ற செல்வம் அதை நயந்து அறியாது போல் இருந்த என்னை தாய் போல் வந்து ஆண்டுகொண்ட தன்கருணை அப்படிப் பட்ட செல்வர்க்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 9

 à®•à®°à®£à®™à¯à®•à®³à¯ எல்லாங்

கடந்துநின்ற கறைமிடற்றன்
சரணங்க ளேசென்று
சார்தலுமே தான் எனக்கு
மரணம் பிறப்பென்
றிவையிரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
செயல்படும் அனைத்தையும் கடந்து நின்ற கறை அற்றவன் சரணம் என்றே சார்வதே என் தொழில் மரணம் பிறப்பு என்ற இந்த இரண்டிலும் மயக்கம் அடைவதை அறுக்கும் கருணைக் கடலுக்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 8

 à®¤à¯ˆ தாதைக்கும்

எம்மனைக்கும் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
ஒன்றாக முளைத்து எழுந்து எத்தனையோ என கிளைவிட்டு நன்றாக என்னை வைத்து இனம் சேர்க்காத இடத்தில் ஏற்றிவிட்டு என் பரம்பரைக்கும் என் மனைக்கும் தலைவன் ஆனாய் குன்றாத செல்வற்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 7

 à®šà®Ÿà¯à®Ÿà¯‹ நினைக்க

மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ
கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித்
தொழும்பரைநாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
சிறியதாய் நினைத்தாலும் மனதில் அமுது ஊறும் சங்கரனை கெட்டாலும் மறப்பேனோ கேடு படாத திருவடியை ஒட்டாது பாவத்தால் தொழும் பரையின் உருவம் அறியோம் அறிந்த அறிஞர்க்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 6

 à®µà¯ˆà®¤à¯à®¤ நிதிபெண்டீர்

மக்கள்குலம் கல்வியென்னும்
பித்த உலகிற்
பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக்
கலக்கந் தெளிவித்த
வித்தகத் தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
வைத்திருக்கும் பணம் பெண்டீர் குழைந்தைகள் கல்வி என்று பிதற்றும் உலகில் பிறப்புடன் இறப்பு என்ற சித்தத்தினால் ஆன விகாரத்தில் கலங்கி தெளிவித்த வித்தக தேவற்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 5

 à®…த்தேவர் தேவர்

அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப்
புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென்
பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
அந்த தேவரே தேவர் அவர்களது தேவர் என்று பேசிப் புலம்பும் பூதலத்தில் பத்தாக பிறக்காத பற்றற்ற நான் பற்றி நின்ற மெய்த் தேவர் தேவனுக்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 4

 à®•à®£à¯à®£à®ªà¯à®ªà®©à¯ ஒப்பதோர்

அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
கண்ணப்பர் என்ற ஒருவர் அன்பிற்கு ஒப்பான அன்பு என்னிடத்தில் இல்லை என்று கண்டபின்பும் என் அப்பன் எனது அன்பின் பொருட்டு ஆட்கொண்டு அருளி வண்ணமயமாக வா என்று வான் அளவு கருணையுடன் கண்ணப் பொற் நீற்றற்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 3

 à®¤à®¿à®©à¯ˆà®¤à¯à®¤à®©à¯ˆ உள்ளதோர்

பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறுங் காண்தொறும்
பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக
ஆனந்தத் தேன்சொரியுங்
குனிப்புடை யானுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 
 
தினை அளவே உள்ள ஒர் பூவினில் தேன் உண்ணாதே நினக்கும் பொழுதெல்லாம் காணும் பொழுதெல்லாம் பேசும் பொழுதெல்லாம் அனைத்து எலும்பும் நெகழ ஆனந்த தேன் சொரியும் கனிப்பு உடையவனுக்கே சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 2

 à®¨à®¾à®©à®¾à®°à¯à®Žà®©à¯ உள்ளமார் ஞானங்க

ளாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை
ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில்
உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே
சென்றூதாய் கோத்தும்பீ. 
 
நான் யார்? என் உள்ளத்தே அமர்ந்த ஞானங்கள் யாருடையது? என யார் அறிவார் ? வானோர் தலைவன் என்னை ஆளவில்லை என்றால் மதி மயங்கி ஊனம் உண்டாகும் தேர் என்ற உடலில் வெளிப்பட்ட தேன் போல் மலரில் இருப்பதை உணர்ந்து சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கோத்தும்பி | பாடல் எண் : 1

 à®ªà¯‚வேறு கோனும்

புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும்
நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும்
வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
மலரிடை மாறுபட்ட தலைவனும் ஆதரவு அளிப்பவனும் பொன் போல் சிறந்த நா நலம் அருளும் செல்வியும் நாரயணனும் நான்கு மறைகளும் தனித்தன்மை கொண்ட சோதியும் வானவரும் அறியாச் குழைந்தைப் பண்பை மாற்றி அருளும் சேவடிக்கு சென்று ஊதிடுவாய் தலைமை நாதமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 20

 à®µà¯‡à®¤à®®à¯à®®à¯ வேள்வியும் ஆயி னார்க்கு

மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயி னார்க்குச்
சோதியு மாய்இருள் ஆயி னார்க்குத்
துன்பமு மாய்இன்பம் ஆயி னார்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயி னார்க்குப்
பந்தமு மாய்வீடும் ஆயி னாருக்
காதியும் அந்தமும் ஆயி னாருக்
காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 
 
வேதமும் வேள்ளியும் என ஆனாவர்க்கும் மெய்யும் பொய்யும் என ஆனாவர்க்கும் சோதியும் இருளும் என ஆனாவர்க்கும் துன்பமும் இன்பமும் என ஆனாவர்க்கும் பாதியும் முழுவதும் என ஆனாவர்க்கும் பந்தமான உறவும் முடிவான வீடுபெறும் என ஆனாவர்க்கும் ஆதியும் அந்தமும் என ஆனாவர்க்கும் பொற்சுண்ணம் இடிப்போம் நாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 19

 à®µà®Ÿà¯à®Ÿ மலர்க்கொன்றை மாலை பாடி

மத்தமும் பாடி மதியும் பாடிச்
சிட்டர்கள் வாழுந்தென் தில்லை பாடிச்
சிற்றம் பலத்தெங்கள் செல்வம் பாடிக்
கட்டிய மாசுணக் கச்சை பாடிக்
கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல்
இட்டுநின் றாடும் அரவம் பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே. 
 
வட்டமான மலர்கொன்றை மாலை அணிந்து மதியமும் பாடி மதியையும் பாடி சிறந்தவர்கள் வாழும் தென்னகத் தில்லை பாடி சிற்றம்பலத்தே இருக்கும் எங்கள் செல்வத்தை பாடி கட்டிய மாசுணக் கச்சை பாடி கங்கணம் பாடி கைக்கொட்டி இட்டு நின்றாடும் அரவம் பாடி ஈசற்கு சுண்ணம் இடிப்போம் நாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 18

 à®…யன்தலை கொண்டுசெண் டாடல் பாடி

அருக்கன் எயிறு பறித்தல் பாடிக்
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
காலனைக் காலால் உதைத்தல் பாடி
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
ஏழை அடியோமை ஆண்டு கொண்ட
நயந்தனைப் பாடிநின் றாடி யாடி
நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே. 
 
படைத்தலைச் செய்ய தலை கொண்டு விளையாடுவதை பாடியும் அருக்கனது வெப்பத்தை தகர்ந்திடும் திறம் வளர்த்ததைப் பாடியும் காயம் தவிர்த்து தோலை பயன்படுத்தி உடுப்பு செய்யும் ஆற்றலைப் போற்றிப் பாடியும் காலத்தை காற்று என்ற சுவாசத்தால் அளந்து வசப்படுத்துவதைப் பாடியும் மூன்று பக்கமும் ஒத்திசையச் செய்வதையும் பாடி ஏழையாகிய அடியேனை ஆண்டுகொண்ட விதத்தை பாடி நின்று ஆடி நாதனுக்கு சுண்ணம் இடிப்போம் நாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 17

 à®¤à¯‡à®©à®• மாமலர்க் கொன்றைபாடிச்

சிவபுரம் பாடித் திருச்ச டைமேல்
வானக மாமதிப் பிள்ளை பாடி
மால்விடை பாடி வலக்கை யேந்தும்
ஊனக மாமழுச் சூலம் பாடி
உம்பரும் இம்பரும் உய்ய அன்று
போனக மாகநஞ் சுண்டல் பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே. 
 
தேனை உள்ளே வைத்துள்ள மிகச்சிறந்த கொன்றை மலரைப் பாடி சிவபுத்தை பாடி திருச் சடைமேல் வானில் இருக்கும் மாமதிப் பிள்ளை பாடி அளவிற்கு விடையானவனை பாடி வலக்கையில் ஏந்தும் ஊனக மாமழு சூலம் பாடி தேவரும் உலகோரும் உய்திட அன்று போனகமாக நஞ்சை உண்டதை பாடி பொற்றிச் சுண்ணம் இடிப்போம் நாம். 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 16

 à®†à®µà®•à¯ˆ நாமும்வந் தன்பர் தம்மோ

டாட்செயும் வண்ணங்கள் பாடி விண்மேல்
தேவர் கனாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச்
சேவகம் ஏந்திய வெல்கொடியான்
சிவபெரு மான்புரஞ் செற்ற கொற்றச்
சேவகன் நாமங்கள் பாடிப் பாடிச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே.
 
ஆனபடியே நாமும் வந்து அன்பர்களுடன் கூடிடும் வண்ணம் செய்து பாடி விண்மேல் உள்ள தேவர்களின் கனவிலும் கண்டறியாத செம்மலர் பாதங்கள் காட்டும் செல்வச் சேவையை ஏந்தி வெற்றிக்கொடி கொண்ட சிவபெருமான் வெளியே பரவி வெற்றி பெற்ற சேவகன் நாமங்கள் பாடிப்பாடி பொன் செய்யும் சுண்ணம் இடிப்போம் நாம்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 15

 à®žà®¾à®©à®•à¯ கரும்பின் தெளிவைப் பாகை

நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயி னானைச்
சித்தம் புகுந்துதித் திக்க வல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட
கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்திப்
பானற் றடங்கண் மடந்தை நல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
 
ஞானக் கரும்பின் தெளிவாக இருப்பவனை வட்டமிடுவதை நாடிட அரிதான நலத்தை நிகர் அற்ற தேனை பழத்தின் சுவையாக ஆனாவனை சித்தம் புகுந்து தித்திக்க வல்ல தலைவனை பிறப்பை அறுத்து ஆண்டுக் கொண்ட கூத்தனை நாக்கில் தழும்பு ஏற வாழ்த்தி புள்ளி இல்லா கண் உடைய மடந்தை நல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடிப்போம் நாம்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 14

 à®šà®™à¯à®•à®®à¯ அரற்றச் சிலம்பொ லிப்பத்

தாழ்குழல் சூழ்தரு மாலை யாடச்
செங்கனி வாயித ழுந்து டிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம் பாடிக்
கங்கை இரைப்ப அராஇ ரைக்குங்
கற்றைச் சடைமுடி யான்க ழற்கே
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே. 
 
கூட்டம் அரற்றச் சிலம்பின் ஒலி எழும்பிட வளர்ந்து தாழ்ந்த முடியுடன் அணிந்த மாலை ஆடிட சிவந்த வாய் துடிக்கும் குழைந்தைகளே சீர் பொருந்திய சிவலோகம் பாடிக் கங்கை இரைப்ப விடாத வீசும் காற்றை சடைமுடியான் பாதத்திற்கே என பொங்கிய காதலிற் கொங்கை குலுங்க பொற்றிச் சுண்ணம் இடிப்போம் நாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 13

 à®®à®¿à®©à¯à®©à®¿à®Ÿà¯ˆà®šà¯ செந்துவர் வாய்க்க ருங்கண்

வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
என்னுடை ஆரமு தெங்க ளப்பன்
எம்பெரு மான்இம வான்ம கட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்த கப்பன்
தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே. 
 
மின்னல் இடையும் செம்மையான வாயும் கருமை அடர்ந்த கண்களும் வெண்மையான பற்களும் மென்மையான மொழியும் உள்ளவர்களே என்னுடைய ஆராத அமுதனை எங்கள் அப்பனை எம்பெருமானை இமயாதவர் மகளுக்கு கணவனை நட்பானவனை மகனை தகப்பனை அண்ணனை எம் ஐயன் தாள்கள் பாடிப் பொன் அணிகள் அணிந்த மார்பகம் கொண்ட மங்கையரே நல்லவர்களே பொற்றிருச் சுண்ணம் இடிப்போம் நாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 12

 à®®à¯ˆà®¯à®®à®°à¯ கண்டனை வான நாடர்

மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை
ஐயனை ஐயர்பி ரானை நம்மை
அகப்படுத் தாட்கொண் டருமை காட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்றொ டித்தோள்
பையர வல்குல் மடந்தை நல்லீர்
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
 
மையமாக அமரும் கண்டனை வானத்து வாழ்பவர்களின் மருந்தாக இருப்பவனை மாணிக்க கூத்தனை தலைவனை தலைவர்தலைவனை நம்மை ஆட்படுத்தி ஆண்டு அருள் புரிந்து அருமை காட்டுபவனை பொய்யர்களின் பொய்யனை மெய்யர் மெய்யனை போதும் என ஆகாத கண்ணிணைப் பொன் போன்ற தோள் அரவம் அல்குல் மடந்தை நல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடிப்போம் நாம். 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 11

 à®®à®¾à®Ÿà¯ நகைவாள் நிலாஎ றிப்ப

வாய்திறந் தம்பவ ளந்து டிப்பப்
பாடுமின் நந்தம்மை ஆண்ட வாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித்
தேடுமின் எம்பெரு மானைத் தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி
ஆடுமின் அம்பலத் தாடி னானுக்
காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 
 
செல்வச் சிரிப்பு தரும் வாள் போன்ற பற்கள் நிலவை மிஞ்சிட வாய் திறக்க பவளம் போல் உதடு துடிக்க பாடுங்கள் நம்மை ஆண்ட சிறப்பும் பணிகொண்ட வண்ணமும் பாடாப் பாடித் தேடுங்கள் எம்பொருமானை தேடிச் சித்தம் களிப்பத் திகைத்து தேறி ஆடுங்கள் அம்பலத்தே ஆடினாலும் ஆடாத பொற்சுண்ணம் இடிப்போம் நாம். 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 10

 à®®à¯à®¤à¯à®¤à®£à®¿ கொங்கைகள் ஆட ஆட

மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணையொ டாட ஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 
 
முத்து அணிந்த மார்பகங்கள் ஆட ஆட கூந்தலில் மொய்க்கும் வண்டுகள் ஆட ஆட சித்தம் சிவனையே நினைத்தபடி ஆட ஆட செழுமையான மீன் பொன்ற கண் தரும் நீர் ஆட ஆட ஆட்டுவித்த தலைவனுடன் ஆட ஆட பிறவியில் அடுத்தவருடன் ஆட ஆட அத்தன் கருணையால் ஆட ஆட ஆடவே பொற்சுண்ணம் இடிப்போம் நாம்.
#திருமந்திரம்
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 9

 à®µà¯ˆà®¯à®•à®®à¯ எல்லாம் உரல தாக

மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப் பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கை பற்றி
ஐயன் அணிதில்லை வாண னுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 
 
இருக்கும் இடம் எல்லாம் உரல் என மாறி மாமேரு என்னும் உலக்கை நாட்டி மெய் என்ற மஞ்சளை நிறைவாக கொட்டி மேதகு தென்னவன் பெருந்துறை உடையவன் செயல்பட திருவடியை பாடப்பாடி செழுமையான பொன் உலக்கை வலக்கையில் பற்றி ஐயன் அணிய பொதுமானது இல்லை வான் உனக்கே என்று ஆட பொற்சுண்ணம் இடிப்போம் நாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 8

 à®µà®¾à®Ÿà¯à®Ÿà®Ÿà®™à¯ கண்மட மங்கை நல்லீர்

வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத்
தோட்டிரு முண்டந் துதைந்தி லங்கச்
சோத்தெம்பி ரானென்று சொல்லிச் சொல்லி
நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங் காட்டி
நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 
 
சுற்றிப் பார்க்கும் கண் கொண்ட இளம் பெண்களே நல்லவர்களே கோடுகள் கொண்ட வளையல்களின் ஓசையில் திளைப்பவனை மார்பகங்கள் பொங்கி தோள்கள் திரண்டு வளம் பெற எம் தலைவன் என்று சொல்லிச்சொல்லி அன்று பூத்த மலர்களாய் நம்மை ஆட்கொண்ட வண்ணம் பாடிப்பாடி ஆட பொற்சுண்ணம் இடிப்போம் நாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 7

 à®šà¯‚டகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்

தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்
காடக மாமலை அன்ன கோவுக்
காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
 
ஒழுக்கமே அணிகலங்கன் என்ற வகையில் அணிந்துள்ள சூடகமும் தோள்வளையும் அசைந்து ஆட ஆட தொண்டர்கள் கூட்டம் எழுந்து ஆட ஆட நாட்டை சேர்ந்தவர்கள் ஆட ஆட நாமும் அவர்களுடன் ஆட ஆட பாடகம் அணிந்த மென்மையான அடி கொண்டு ஆடும் மங்கையின் பாகத்தான் எங்கள் பராபரனும் பெரிய மாமலை அணிந்த தலைவன் ஆட பொற்சுண்ணம் இடிப்போம் நாம்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 6

 à®‰à®²à®•à¯à®•à¯ˆ பலஓச்சு வார்பெரியர்

உலகமெ லாம்உரல் போதா தென்றே
கலக்க அடியவர் வந்து நின்றார்
காண உலகங்கள் போதா தென்றே
நலக்க அடியோமை ஆண்டு கொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத் தந்த
மலைக்கு மருகனைப் பாடிப் பாடி
மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 
 
தன்னை திருத்த ஒழுக்க நெறிகள் என்ற உலக்கை பல கொண்டு திருத்துவார்கள் பெரியவர்கள். உலகம் என்ற பல உரல்கள் போதாது என கலக்கம் உடைய அடியார்கள் காணாத உலகத்தையும் போதாது என வந்து மீண்டும் பிறப்பார்கள். கூச்ச உணர்வு உள்ள மலர் பாதங்களை நமக்கு தந்த மலைக்கு மருகனை பாடிப்பாடி மகிழ்ந்து பொற்சுண்ணம் இடிப்போம் நாம். 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 5

 à®…றுகெடுப் பார்அய னும்மரியும்

அன்றிமற் றிந்திர னோடமரர்
நறுமுறு தேவர் கணங்க ளெல்லாம்
நம்மிற்பின் பல்ல தெடுக்க வொட்டோம்
செறிவுடை மும்மதில் எய்த வில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடி
முறுவற்செவ் வாயினீர் முக்க ணப்பற்
காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
 
நீராட்ட அறுகு எடுப்பார்கள் அயனும் அரியும் அவர்கள் மட்டும் இல்லாமல் இந்திரனும் அமரர்களும் முனுமுனுக்கும் தேவ கணங்களும் நமக்கும் பின்னே என்றபடி செய்வோம் செழுமையான மூன்று மதில்களை கடந்து அடைய தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் பற்றி வேகம் அருளும் செம்பொற் கோயில் பாடி மந்திரம் முறுவும் செவ்வாய் உடையவர்களே முக்கண்ணன் பயன்படுத்த பொற்சுண்ணம் இடிப்போம் நாமே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 4

 à®•à®¾à®šà®£à®¿ மின்கள் உலக்கை யெல்லாங்

காம்பணி மின்கள் கறையுரலை
நேச முடைய அடிய வர்கள்
நின்று நிலாவுக என்று வாழ்த்தித்
தேசமெல் லாம்புகழ்ந் தாடுங் கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடிப்
பாச வினையைப் பறித்து நின்று
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 
 
உலகில் உள்ளவர்களே உலக்கை என்ற மனதிற்கு ஒழுக்கம் என்ற காம்பை அணிவியுங்கள் இறை நேசமுள்ள அடியார்கள் என்றும் இருக்கட்டும் என வாழ்த்துங்கள் தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் பற்றி வேகம் அருளும் செம்பொற் கோயில் பாடி பாச வினையைப் பறித்து நின்று பாடிப் பொற்சுண்ணம் இடிப்போம் நாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 3

 à®šà¯à®¨à¯à®¤à®° நீறணிந் தும்மெழுகித்

தூயபொன் சிந்தி நிதிப ரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர் கோன்அயன் றன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன் தாதை
எந்தரம் ஆள்உமை யாள்கொழுநற்
கேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும் நாமே. 
 
அழகிய திருநீற்றை அணிந்து வீடு வாசல் மெழுகி தூய்மையான வண்ணப் பொடிகள் தூவி  நல்ல மரங்களை நட்டு எழிலான கொடிகளை பறக்கவிடுங்கள் முடிவு அறிந்தவர்களின் தந்தை அயனுக்கு பெருமான் ஆழியனுக்கும் நாதன் நல்ல வேலன் தந்தை அவர் தனது தாரம் உமையாள் உடன் வருகைதர பொற்சுண்ணம் இடிப்போம் நாம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 2

 à®ªà¯‚வியல் வார்சடை எம்பி ராற்குப்

பொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும்
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
வம்மின்கள் வந்துடன் பாடு மின்கள்
கூவுமின் தொண்டர் புறம்நி லாமே
குனிமின் தொழுமின்எம் கோனெங் கூத்தன்
தேவியுங் தானும்வந் தெம்மை யாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே.
 
பூவின் இயல்பை கொண்ட நிண்ட சடை உடைய எம் தலைவனுக்கு பொற் சுண்ணம் இடிக்க வேண்டும் மாவடு போன்ற கண்களை உடையவர்களே வாருங்கள் வந்து பாடுங்கள் கூவி வெளிப்படுத்துங்கள் தெண்டர்கள் வெளியே நிற்காதபடி பணிந்து வணங்குங்கள் நம் அரசன் கூத்தன் தன் தேவியுடன் வந்து எம்மை ஆள செம்மையான பொன் செய்யும் சுண்ணம் இடிப்போம் நாமே. 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருப்பொற்சுண்ணம் | பாடல் எண் : 1

 à®®à¯à®¤à¯à®¤à¯à®¨à®²à¯ தாமம்பூ மாலை தூக்கி

முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டி சைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
 
முத்தும் நல்ல தாழம்பூவும் மாலையாக சுமந்து முளைக்கும் கடத்துடன் தூபதீபம் வையுங்கள் சத்தியையும் சோமியையும் பார்மகளையும் நாமகளையும் பல்லாண்டு வாழ்க என இசைபாடுங்கள். சித்தியும் கௌரியும் பார்பதியும் கங்கையும் வந்து நம்மை கவரும்படி கொண்டாடுங்கள் அத்தன் ஐயன் அம்மானைப் பாடி ஆடி பொற்சுண்ணம் இடிப்போம் நாமே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 20

 à®ªà¯†à®±à¯à®±à®¿ பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்

கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே
பற்றிஇப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.
 
பெற்றவருக்கு அன்றி பிறருக்கு அரிய பெம்மான் பெருந்துறையான் வெற்றிக் குதிரையின் மேல் வந்து அருளி தனது அடியார் குற்றங்களை நீக்கி குணங்கொண்டு சிறப்பு தந்து பாராட்டி தன்னை சுற்றிய சுற்றங்களின் தொடர்பறுப்பான் பழுமையான புகழே பற்றி இருக்கும் இப்பாசத்தை பற்று அறுபட நம்மை பற்றுவான் பற்றியே பேரானந்தம் அடைந்து பாடி மகிழுங்கள் அம்மானாய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 19

 à®®à¯à®©à¯à®©à®¾à®©à¯ˆ மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்

பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட் கின்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
முதல் இருந்தவனை மூவருக்கும் முடிவானவனை முடிவானவற்றிலும் அடுத்தவனை குழைந்தையானவனை பேணு பெருந்துறையின் மன்னனை வானவனை மாது ஒருபாகம் ஆள்பவனை தென்னவனை காவலனை தென்பாண்டி நாட்டானை எனக்கு உரிமையானவனை என் அப்பனை என்பவர்களுக்கு இனிய அமுதை அன்னானை அம்மானை பாடி மகிழுங்கள் அம்மானாய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 18

 à®•à®¿à®³à®¿à®µà®¨à¯à®¤ மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை

வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்தகனைத்
தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில்
எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால்
ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளிதிகழ
அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் அம்மானாய். 
 
கிளி வந்தது போல் பேசும் மங்கையரின் உறவு பாராட்டி உடல் பாதி தந்தவனை வெளிப்பட்ட மாலனும் காண அரிய வித்தகனை தெளிவு தந்த தேறலை சீரார் பெருந்துறையில் எளிமையாக வந்து இரங்கி எண்ணுதற்கு அரிய இனிமையான அருளால் ஒளிவந்து என் உள்ளத்தில் உள்ளே ஒளி திகழ அளிக்க வந்த அந்தணனைப் பாடி மகிழுங்கள் அம்மானாய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 17

 à®šà¯‚டுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள்

கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்
றூடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்
தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்து மலர்வேன் அனலேந்தி
ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்.
 
சூடிக்கொள்ளவேன் வெற்றிக்கு அடையாளமாகும் கொன்றை மலர்களை சூடியபடி சிவன் திரள் தோள் கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று ஊடுவேன் செவ்வாய்க்கு உருகுவேன் உள்ளம் நெகிழ்ந்து தேடுவேன் தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன் வாடுவேன் மலரும் வேலும் அனலும் ஏந்தி ஆடுவேன் சேவடியே என பாடி மகிழுங்கள் அம்மானாய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 16

 à®Šà®©à®¾à®¯à¯ உயிராய் உணர்வாய்என் னுட்கலந்து

தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோ ரறியா வழிஎமக்குத் தந்தருளுந்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்.
 
எலும்பும் சதையுமான ஊனாய் அதை செயல்படச் செய்யும் உயிராய் அதில் உணர்வாய் என்னுடன் கலந்து தேனாய் அமுதமாய் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோரும் அறிய வழியை எமக்குத் தந்தருளும் தேன் சொறியும் மலர் சூடுபவர்களின் சேவகன் சீரான ஒளி சேர் ஆனா அறிவாய் அளவறிந்த பல் உயிர்களுக்கும் தலைவனாகி நின்றாவா என கொண்டாடி மகிழுங்கள் அம்மானாய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 15

 à®šà®¨à¯à®¤à®¿à®°à®©à¯ˆà®¤à¯ தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில்

இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்
தந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்.
 
சந்திரனை தேயவும் வளரவும் அருள் செய்து தக்கன் தனது வேள்வியில் இந்திரனை தோள் நெரித்து அச்சன் தலை அரிந்து அந்தரத்தில் செல்லும் அலர்கதிரவன் பல் தகர்ந்து செந்நிற பொழில் புடை சூழ் தென்னவன் பெருந்துறையான் மந்தார மாலையை பாடி மகிழுங்கள் அம்மானாய். 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 14

 à®†à®©à¯ˆà®¯à®¾à®¯à¯à®•à¯ கீடமாய் மானுடராய்த் தேவராய்

ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை
ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து
தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய
கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண் [டருளும்
வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.
 
ஆனையாய் அளவில் சிறுத்த புழுவாய் மனிதராய் தேவராய் என பலவாக பிறந்து இறந்து இளைத்தவனை ஊனையும் அதில் நின்று உருக்கி என் வினைகளை முழுவதும் அழித்து காத்து தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்த இனிய அரசன் போல் வந்து என்னை வணங்கச் செய்து அருளும் வானவன் பூங்கழல்களை பாடி மகிழுங்கள் அம்மானாய்.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 13

 à®•à¯ˆà®¯à®¾à®°à¯ வளைசிலம்பக் காதார் குழையாட

மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச்
செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை
ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
கைகளில் வளையல் சிலம்பிடவும் காதில் குழை ஆடிடவும் மையிடும் பெண்கள் கூந்தல் தரை புரள தேன் பாய வண்டு ஒலி எழுப்ப செய்பவனை வெண்ணீர் அணிந்தவனை அன்பர்க்கு மெய்யானவனை அப்படி இல்லாதவர்க்கு கல்லாத வேதியனை மதிப்பான இடம் அமர்ந்தவனை பாடி மகிழுங்கள் அம்மானாய்.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 12

 à®®à¯ˆà®ªà¯à®ªà¯Šà®²à®¿à®¯à¯à®™à¯ கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும்

எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால்
இப்பிறவி ஆட்கொண் டினிப்பிறவா மேகாத்து
மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய்
எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும்
அப்பொருளாம் நம்சிவனைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
அழகாய் மை இட்ட கண்ணை உடையவளே கேள் மால் உடன் இந்திரனும் எப் பிறப்பிலும் தேடாத என்னை உன் இனிமையான அருளால் இப்பிறவியில் ஆட்கொண்டு இனி பிறவாமல் காத்து மெய்ப்பொருள் இடத்தில் தோற்றமாய் மெய்யே நிலைப்பெற எல்லா பொருளுக்கும் தானே வழி தந்து யாவற்றிற்கும் வீடாகும் அப் பொருளாம் நம் சிவனை பாடி மகிழுங்கள் அம்மானாய்.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 11

 à®šà¯†à®ªà¯à®ªà®¾à®°à¯ முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்

தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்குந் தன்மையினான்
அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும்
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
சொல்ல முடியாதபடி உடல் அழகு தந்து பகுதியாக உள்ளவன் தென்னவன் பெருந்துறையான் தப்பாமல் அவன் தாள் அடைபவர்கள் நெஞ்சம் உருகும் தன்மை அருள்பவன் அந்த பாண்டி நாட்டை சிவலோகமாய் செய்த அப்பார் சடையப்பன் ஆனந்த வார் கழல் ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளத்தில் குடி இருக்கும் அப்பாலுக்கு அப்பால் உள்ளவனை பாடி மகிழுங்கள் அம்மானாய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 10

 à®µà®¿à®£à¯à®£à®¾à®³à¯à®¨à¯ தேவர்க்கு மேலாய வேதியனை

மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
விண்ணை ஆளும் தேவர்களுக்கும் மேலான வேதியனை மண்ணை ஆளும் மன்னர்களுக்கும் மாண்பு பொருந்தி நின்றவனை குளிர்ந்த தமிழை அளிக்கும் தண்பாண்டி நாட்டானை பெண்ணை ஆளும் பாகனை பேணு பெருந்துறையிற் கண்ணார் கழல்காட்டி இனம் சேர்க்க என்னை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடி மகிழுங்கள் அம்மானாய். 
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 9

 à®¤à¯à®£à¯à®Ÿà®ªà¯ பிறையான் மறையான் பெருந்துறையான்

கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும்
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய்.
 
துண்டு பிறையை அணிந்தவன் மறைநூல் விளக்குபவன் பெருந்துறையான் மூன்று நாடிகளை பிரதானமாகக் கொண்டு பலவகை கோலத்துடன் இருக்கும் ஊர்தியான உடலைக் உடையவன் இடைப்பட்டது கருத்தும் செம்மையான மேனியும் வெண்ணீரும் உடையவன் அண்டத்திற்கு ஆதாரமானவன் முடிவிலா ஆனந்தம் பழைமையான பரிசாக பழகும் அடியார்க்கு அருள்பவன் அண்டம் வியந்திடும்படி பாடி மகிழுங்கள் அம்மானாய்.
‪#‎திருவசகம்‬
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 8

 à®ªà®£à¯à®šà¯à®®à®¨à¯à®¤ பாடற் பரிசு படைத்தருளும்

பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். 
 
இசை அமைத்த பாடல் பரிசு தந்து வாழ்த்தும் பெண் சுமந்த ஒருபாதியானவன் பெம்மான் பெருந்துறையன் விரிந்த விண் சுமந்த கீர்த்தி பேரண்டத்தின் ஈசனுக்கே கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலிந்து மகிழும் மதுரை மண் சுமந்து கூலி கொண்டக் கோலமும் கோலால் அடிபட்டு புண் சுமந்த பொன்மேனி பாடி மகிழுங்கள் அம்மானாய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 7

 à®“யாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்

சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
ஓயாமல் உள்ளத்தே நினைத்து உருகுவார் உள்ளே இருக்கும் உள்ளவனை குழைந்தையானவனை வேலைக்காரன் போன்றவனை தென்னவன் பெருந்துறையின் மேல் நின்றவனை வேதியனை பெண்ணை பாதியாக கொண்டவனை இனம் வேறுக்கும் நம்மை ஆட்கொண்ட நாயகனை தாய் போல் இருக்கும் தத்துவனை தானாகவே உலகம் ஏழினை உருவாக்கி ஆள்பவனை பாடி மகிழுங்கள் அம்மானாய்.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 6

 à®•à¯‡à®Ÿà¯à®Ÿà®¾à®¯à¯‹ தோழி கிறிசெய்த வாறொருவன்

தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டி
தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்.
 
கேட்டாய என் தோழியே எதிரியின் போட்டி போல் நடக்கும் ஒருவன் தீண்டி இன்பம் அனுமதிக்காத கூட்டம் மதில் போல் சூழ தென்னவன் பெருந்துறையான் காட்டமுடியாதவற்றை எல்லாம் காட்டித் தன் கருணைத் தேன் காட்டி நாடாதவர்கள் கேலி செய்ய நாமோ வீடுபெறு அடைய தடுமாற்றம் இல்லாதவன் ஆட்கொண்டான் வா பாடிமகிழலாம் அம்மானாய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 5

 à®•à®²à¯à®²à®¾ மனத்துக் கடைப்பட்ட நாயேனை

வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
கற்று அறியா மனது உடைய கடையான இனம் சேர்க்கா என்னை வல்லாளன் தென்னவன் பெருந்துறையான் தானாக முனைந்து கடினமான மனம் என்ற கல்லை பிசைந்து கனி ஆக்கி தன் கருணை வெள்ளத்தில் ஆழ்த்தி வினை தீர்த்த வேதியனை தில்லை நகர் புகந்து சிற்றம்பலம் பெர்கச் செய்யும் ஒல்லை விடையானை பாடி மகிழுங்கள் அம்மானாய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 4

 à®µà®¾à®©à¯à®µà®¨à¯à®¤ தேவர்களும் மாலயனோ டிந்திரனுங்

கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்
டூன்வந் துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந் தமுதின் தெளிவி னொளிவந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.
 
வான் வழியே வந்த தேவர்களும் மாலயன் உடன் இந்திரனும் காட்டிற்கு சென்று வருந்தியவரும் புற்று உண்டாகும்படி முயன்றவரும் காண அரிதானவன் தானே வந்து இனம் சேர்க்காதவனை தாய் போல் தலைப்பட்டு ஊன் தந்து மயிர் துவாரங்கள் எல்லாம் உணர்வால் உயிர் பெற்று எய்திட தேன் வந்து அமுதின் தெளிவாய் ஒளிவந்த வான் வந்த கார் கழலே பாடி மகிழுங்கள் அம்மானாய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 3

 à®‡à®¨à¯à®¤à®¿à®°à®©à¯à®®à¯ மாலயனும் ஏனோரும் வானோரும்

அந்தரமே நிற்கச் சிவன்அவனி வந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச்
சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான்
பந்தம் பறியப் பரிமேற்கொண் டான்தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.
               
              தேவர்களின் தலைவானான இந்திரனும் மாலயனும் 
மற்றவர்களும் வானோரும் அந்தரம் என்ற இடைப்பட்ட இடத்தில் நிற்க சிவன் உலகில் வந்து அருளி எங்ஙுடத்தில் இருந்தாலும் அப்படியே ஆட்கொண்டு தோள் கொடுத்து நின்றவனை சிந்தனைக்குள் வைத்து உருகும் சீரார் பெருந்துறையான் பந்தம் விட்டு விலக பற்றுடன் நம்மை சுமந்து கொண்டான் முடிவிலா ஆனந்தம் பாடுவோம் அம்மானாய். 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 2

 à®ªà®¾à®°à®¾à®°à¯ விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்

ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். 
 
பார்க்க அரிதானவர்கள் நுனிபுள்ளாக இருப்பவர்கள் பாதாளத்தில் இருப்பவர்கள் வெளியே இருப்பவர்கள் என யாராலும் காண்பதற்கு அரிதானவன் எனக்கோ எளிமையானவன் அனைத்தையும் ஆள்பவன் தென்னன் பெரிய துறைமுகம் கொண்டவன் எனக்கு மயக்கம் தந்து திரும்ப முடியா வழியை அருள் செய்து அவனாகவே வந்து என் உள்ளம் புகுந்து ஆரா அமுதாய் அலை கடலாய் அளவற்ற ஆசையுடன் மீன் பிடிப்பவனை நம்மை எடுப்பவனை பாடி மகிழ்வோம் அம்மானாய்.  
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவம்மானை | பாடல் எண் : 1

 à®šà¯†à®™à¯à®•à®£à¯ நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய

பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.
 
செம்மையான திருமாலும் செல்லும் இடத்தை அடைந்து காணமுடியாத பொங்கு மலர் பாதம் இந்த பூ உலகில் எனக்கு அருளி எங்களின் பிறப்பை அறுத்து எந்நேரமும் ஆட்கொண்டு தெளிந்த சோலையின் தெறியும் பெருந்துறையான் உடலில் நின்றவன் முடிவுப் பெற்றவனாய் கூவி அழைத்து வீடுபெறு அருளும் அந்தக் கருணையை பாடுவோம் அம்மானாய்.
#திருவாசகம்
செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.
 
செம்மையான திருமாலும் செல்லும் இடத்தை அடைந்து காணமுடியாத பொங்கு மலர் பாதம் இந்த பூ உலகில் எனக்கு அருளி எங்களின் பிறப்பை அறுத்து எந்நேரமும் ஆட்கொண்டு தெளிந்த சோலையின் தெறியும் பெருந்துறையான் உடலில் நின்றவன் முடிவுப் பெற்றவனாய் கூவி அழைத்து வீடுபெறு அருளும் அந்தக் கருணையை பாடுவோம் அம்மானாய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 20

 à®ªà¯‹à®±à¯à®±à®¿ அருளுகநின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.
 
போற்றி அருளட்டும் உன் முதலான பாதமலர் போற்றி அருளட்டும் உன் முடிவான செந்தளிர்கள். போற்றி எல்லா உயிர்களுக்கும் தோற்றமான பொற்பாதம். போற்றி எல்லா உயிர்களுக்கும் தன் இனம் காக்கும் பூங்கழல்கள். போற்றி எல்லா உயிர்களுக்கும் இறுதியாகும் இணையடிகள். போற்றி மாலும் நானமுகனும் காணாத புண்டரிகம். போற்றி நாம் வீடுபெறு அடைய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள். போற்றி நாம் மாருக்கு கழியும் நீராடலாம் எம் பாவாய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 19

 à®‰à®™à¯à®•à¯ˆà®¯à®¿à®±à¯ பிள்ளை உனக்கே அடைக்கலம்என்

றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய். 
 
உன் கைப்பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற பழமொழி மாறுபடுமோ என்ற அச்சத்தால் எங்கள் தலைவனே உனக்கு ஒன்று உரைப்போம் கேள் என் மார்பாகங்கள் உன்னை பற்றியவர் இல்லாத ஒருவரின் தோள் சேராது. என் கைகள் உனக்கு உடன்படாதவருக்கு எந்த பணியும் செய்யாது. காணக்கூடிய பகல் பொழிதில் என் கண்கள் வேறு ஒன்றையும் காணாது. இங்கே இதுவே என் பரிசு என என் அரசே நீ வழங்கு என்ன அழுகு சூரியன் என்றாலும் எமக்கு என்ன என் பாவாய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 18

 à®…ண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 
 
       à®…ண்ணா மலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றால் போல் கண்ணார் ஆதவன் ஒளி வந்த மழை உண்டாக்கி தணிந்து ஒளி மழுங்கி நட்சத்திரங்கள் அகல பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறக்கும் ஒளி சேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடி பெண்ணே இந்த பூ நிறைந்த நீரில் பாய்ந்தாடலாம் எம் பாவாய். 
#திருமந்திரம்
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 17

 à®šà¯†à®™à¯à®•à®£ வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 
 
செழுமையான கணவன் இடத்திலோ திசைமுகன் இடத்திலோ தேவர்கள் இடத்திலோ எங்கும் இல்லாத ஓர் இன்பம் நம்முடையதாக உயர்த்திடும் கருங்குழலி நமது அம்மை கோதாட்டி இங்கு நமது இல்லங்கள் தோறும் எழந்தருள் செய்ய செம்மையான மலர் பொற்பாதந் தந்தருளும் சேவகனை அங்கத்து அரசை அடியார்களுக்கு ஆரா அமுதை நங்கள் பெருமானைப் பாடி நலம் வளர்க்க பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடலாம் எம் பாவாய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 16

 à®®à¯à®©à¯à®©à®¿à®•à¯ கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்

என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். 
 
முன்னர் விரிந்த கடலில் இருந்து தண்ணிரை சுருக்கி நம்மில் எழுந்தருளி இருப்பவள் அறியமுடிய திகைப்பில் ஆழ்த்தும் ஆளுமை உடையவள் இடபட்டு இருக்கும் மின்னிப் பொலியும் பிராட்டி திருவடி மேல் பொன்னால் ஆன சிலம்பு சிலம்ப திருப்புருவம் வியக்கும்படி சிலைகுலவி நம்மை ஆளும் தன்மையாள் தன்னை பிரிவிலா எங்கோமான் அன்பருக்கு முதலாய் அவ்விடத்தை நோக்கி முதன்மையாய் சுரக்கும் இனிமையான அருளே விளக்கமுடியா அளவு பொழியும் மழைபோன்றவனே என் பாவாய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 15

 à®“ரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
 
ஒரு கால் தூக்கி ஒரு கால் நிற்கும் எம்பெருமான் என்றே நம் பெருமான் இருக்க அதை சீர் செய்ய கால் தந்தாவள் சித்தங் களி கூர நீயும் ஒரே கால் சாரது நீண்ட தாரை கண் பனிப்ப பார் என்ற ஒருகால் வந்து அனையாள் விண்ணோரைத் தான் பணியாள் பேரரையற் இங்கே பித்துக் கொண்ட ஒருவர் நிலைத்து அமரச் செய்யும். யார் ஒருவர் இப்படி ஆட்கொள்ளும் வித்தை அறிந்தவர் வள் போன்ற உருவம் கொண்ட பூண்முலையீர் வாயார நாம் பாடி ஏகமான உருவை பூம்புனல் பாய்ந்தாடலாம் எம் பாவாய். 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 14

 à®•à®¾à®¤à®¾à®°à¯ குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.
 
காதில் குழை ஆட அணிந்த பூண்கலன் ஆட கோதையின் குழல் ஆட வண்டின் கூட்டம் ஆட ஈரம் நிறைந்த அடியின் சிற்றம் பலமாக பாடி வேதப் பொருள் பாடி அந்தப் பொருள் உயர்த்த பாடி சோதி திறத்தை பாடி சூழ்ந்த கொன்றை தாழ் பாடி ஆதி திறத்தை பாடி முடிவை உயர்த்தி பாடி மாற்றம்கொண்டு நம்மை வளர்த்து எடுத்த பெய் வளைதன் பாதத் திறத்தை பாடி ஆடிடலாம் எம் பாவாய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 13

 à®ªà¯ˆà®™à¯à®•à¯à®µà®³à¯ˆà®•à¯ கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
 
பழைமையான பக்குவப்பட்ட குவளை ஈரம் நிறைந்த கார்மலர் சிவந்திட பழய வினை போதல் அங்கம் குருகின பின்பும் அரவத்தால் தங்கள் மலத்தை கழுவுவார் வந்து இணைவதால் எங்கள் பிராட்டியும் எங்கள் பிரானும் போற்றி இசைந்த பொங்கு நீர் தங்கும் இடத்தில் புக பாய்ந்து பாய்ந்து நம் சங்கம் சிலம்ப சிலம்ப கலந்து கொண்டாட கொங்கைகள் பொங்க மடிப்புகளிலும் நீர் பொங்க நட்புக் கொள்ளும் பூம்புனல் பாய்ந்தாடலாம் எம் பாவாய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 12

 à®†à®°à¯à®¤à¯à®¤ பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்

தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.
 
வாய்த்த பிறவித் துயரம் அழிய நாம் விரும்பி ஆடும் தீர்த்தன் நல்ல தில்லை சிறிய அம்பலத்தே தீயோடும் இருக்கும் கூத்தன் இந்த வானமும் குவலயமும் எல்லாமும் காத்தும் படைத்தும் எடுத்தபடியும் விளையாடி வார்த்தையும் பேசி வளைந்த சிலம்பு அணிந்தவர் கலைகள் தோற்றமுற்றுப் பரவச் செய்ய அணிகள் உள்ளகுழல்கள் மேல் வண்டுகள் பறக்க பூத்து குலுங்கும் பொய்கை குடைந்து உடையவன் பொற்பதம் பாராட்டி இருண்டு சுனை நீராடலம் எம் பாவாய்.
‪#‎திருவாசகம்‬

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 11

 à®®à¯Šà®¯à¯à®¯à®¾à®°à¯ தடம்பொய்கை புக்கு முகேரென்னக்

கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். 
 
உண்மை அறிந்தவர் கூடிடும் கூட்டமாகிய குளத்தில் மூழ்கி அந்த வாசத்தை முகர்ந்து கைகளை தட்டி தட்டி திருவடியை பாடி ஐயம் தீர வழி வழியாய் அடிபணிவது அறியோம் வாழ்த்துவோம என்பதையும் காணோம் அழகிய மாலை போல் செய்ய முடியா வெண்ணீறா செல்வனே சிறுபடுக்கையில் மைபூசிய பெரிய கண் கொண்ட மடந்தை மணவாளானே தலைவனே நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் வெற்றி பெறுவார்கள் வெற்றி வகை எல்லாம் வென்று கடந்தோம் எமாற்றாமல் காப்பாய் எங்களையே எம் பாவாய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 10

 à®ªà®¾à®¤à®¾à®³à®®à¯ ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். 
 
பாவுடன் தாளம் ஏழின் கீழும் செற்களால் பாடி முடிவுக்கு வரமுடியாத பாதமலர். போதும் என்று முடிவுக்கு வராதவர் புனைந்து முடியும் எல்லாப் பொருளின் முடிவே. பேதை என்றோ பால் சார்ந்தோ மட்டும் இன்றி திருமேனி பல பெற்றவன். வேதம் முதல் விண்ணோரும் என்றும் துதித்தாலும் வெளிப்படுத்த முடியா ஒரு தோழன் தொண்டர் உடன் இருப்பவன்.  உயர்ந்த குலம் என்று இருப்பவன் இல்லை. கோயிலில் வராத பிள்ளைகளே எது அவன் ஊர் எது அவன் பெயர் யார் அறிந்தவர் யார் ஆராய்ந்தவர் எது அவனைப் பாடும் பரிசோ எம் பாவாய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 9

 à®®à¯à®©à¯à®©à¯ˆà®ªà¯ பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய். 
 
முன்னேமே உள்ள பழைமைக்கும் முன்னான பழம் பொருளே பின்னே வரும் புதுமையை போர்த்தம் புதுமை பெற்றியனே உன்னை தலைவனாக பெற்ற உனது சீர் அடிக்கு அடிமையானோம் என்ற உன் அடியார் தாள் பணிவோம் மேலும் அவர்களுக்கு உறவாக மாறுவோம் அப்படிப்பட்டவர்களையே கணவராக ஏற்போம் அவர்கள் விரும்பி செய்யச் சொன்னதையே பரிசாக ஏற்று பணிசெய்வோம். இப்படியே எங்களுக்கு அருள்வாய் அரசனே இந்த நல்வாய்ப்பால் எந்த குறையும் இல்லாமல் போகும் எம் பாவாய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 8

 à®•à¯‹à®´à®¿ சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.
 
கோழியின் கூவல் கேட்டு கூவும் மற்றவையும் எழில் எடுத்து இயம்ப இயம்பும் சங்கெங்கும் எழில் பரஞ்சோதி எழில் பரன் கருணை எழிலான விழுப்பொருள்கள் பாடினோம் கேட்கவில்லையோ வா தோழி இது என்ன உறக்கமோ வாய்திறந்நு சொல் பழமையானவன் அன்புடைமை திறன் இப்படித்தானோ உலகத்தின் துவக்கமாய் நின்ற ஒருவனை ஏழைப் பங்காளனையே பாடலாம் என் பாவாய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 6

 à®®à®¾à®©à¯‡à®¨à¯€ நென்னலை நாளைவந் துங்களை

நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 
 
மான் போன்றவளே உங்களை நாளை வந்து நானே எழுப்புவேன் என்று நாணமே போன திசை அறியாமல் இன்னும் விடியவில்லை. வானே நிலமே மற்றும் பிறவே அறிய அரிதானவன் தானே வந்து என்னை முன்னிலைச் செய்து ஆட்கொண்டு அருளும் வானவர் கழல் பாடி வந்தவருக்கு வாய் திறக்க மாட்டாயோ ஊனே உருகாத உனக்கே உணர்வு பெருகும் எமக்கும் ஏனோர்க்கும் தகுந்தவனை பாடலாம் என்பாவாய்.
#திருவாசகம்
 
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 5

 à®®à®¾à®²à®±à®¿à®¯à®¾ நான்முகனுங் காணா மலையினைநாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்
றோலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய். 
 
திருமால் அறியாத நான்முகன் பிரம்மாவும் காணா மலையை நாம்மைப் போல் அறிபவர் யார் என புனைந்து பேசும் பால் ஊறும் தேன் வாய் இதை தவிர்த்து முடிவுக்கு வா. ஞாலமே விண்ணே பிறர் அறிய அரியவனே நம்மை ஆட்கொண்டு அருளிய கோலமும் சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று ஓலம் எழுப்பிடினும் உணராமல் இருப்பதை உணரமாட்டாயோ வண்ணம் பூசிய கூந்தல் உடையவளே பரிசு என்பாயோ என்பாவாய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 4

 à®’ண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய். 
 
அழுத்தமற்றபடி மேம்போக்காய் இன்னம் உண்மையாய் இல்லாமல் நகைத்தபடி இருந்து இன்றோ வண்ணக் கிளி போல் குழைந்து பேசுபவர்கள் வந்தாரோ அவர்களையே எண்ணிக் கொண்டவர்களே உள்ளதை சொல்கிறோம் அவ்வளவும் காலத்தை ஏமாற்றும் கண்ணை மூடி துயில்வதைப் போன்றதே. அப்படி காலத்தை போக்காதே. விண்ணுக்கு ஒரு மருந்தாய் இருப்பவனை வேதங்கள் விளக்கும் முழுப் பொருளை கண்ணுக்கு இனிமையானவனை பாடி கசிந்து உள்ளம் உருக நின்று இருக்கிறோம் உனக்காக நீயே வந்து எண்ணிக்கொள் துயில்வாயோ எம்பாவாய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 3

 à®®à¯à®¤à¯à®¤à®©à¯à®© வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்

அத்தன்ஆ னந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய். 
 
முத்து போன்ற வெண்மையை நகையாக அணிந்தவன் முன் வந்து எதிர எழுந்தான் அத்தன் ஆனந்தன் அமுதன் என்றே உள்ளே ஊறி தித்திக்கப் பேசுபவனே வந்து உன் செயல்களை திறந்திடு ஈசன் மேல் பற்று உடையவர்களே பழ அடிகளின் மேல் உறவு கொண்டவர்களே புதுமையான அடியார்களே பழி தீர்த்து ஆட்கொண்டாய் பொல்லாததை உயர்த்த உன் அன்புடைமை அறியாமல் இருந்தோம் சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை இத்தனையும் வேண்டும் என்போம் என் பாவாய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெம்பாவை | பாடல் எண் : 2

 à®ªà®¾à®šà®®à¯ பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்

பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.
 
பாசம் பரஞ்சோதிக்கே என்கிறாய் இரவும் பகலும் நாம் பேசும் பொழுது எல்லாம் அமளி உண்டாகும் அளவு பேசுகிறாய். நேசமும் வைத்தாயோ நேர் கொண்ட இடையாளுக்கு நேராக இடைபடவே சீசி இப்படியும் சில விளையாடி ஏசும் இடம் இதோ விண்ணோர்கள் ஏத்தும் கூசும் மலர்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லை சிற்றம்பலத்துள் ஈசன் அவருக்கு நட்புக் கொள்ள யார் வரீரோ என் பாவாய்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 50

 à®à®šà®¿à®©à¯à®®à¯ யான்உன்னை ஏத்தினும் என்பிழைக்

கேகுழைந்து
வேசறு வேனை விடுதிகண் டாய்செம்
பவளவெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடை யாய்சிற்
றுயிர்க்கிரங்கிக்
காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக்
கடையவனே. 
 
ஏசினாலும் நான் உன்னை போற்றினாலும் என் குற்றத்தினால் குழைந்து மாறுபடும் என்னை விட்டுவிடுவாயோ செம்பவள வெற்பில் தேகம் உடையவனே என்னை ஆட்கொண்டவனே சிறிய உயிர்களுக்கு இரங்கி கடும் நஞ்சை உண்டாய் அமுது உண்ணக் கடையவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 49

 à®šà®¿à®°à®¿à®ªà¯à®ªà®¿à®ªà¯à®ªà®©à¯ சீறும் பிழைப்பைத் தொழும்பையும்

ஈசற்கென்று
விரிப்பிப்பன் என்னை விடுதிகண் டாய்விடின்
வெங்கரியின்
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ் சூண்பிச்சன்
ஊர்ச்சுடுகாட்
டெரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப்பிச் சன்என்
றேசுவனே.
 
ஏளனம் செய்யச் செய்வேன் சிறுமைபட்ட பிழைப்பும் தொழுதலையும் ஈசனுக்கே என்று விளப்பரம் செய்வேன் என்னை விட்டுவிடுவாயோ விட்டுவிட்டால் வெள்ளை யானையை உரித்த பித்தன் தோலை ஆடையாக கொண்ட பித்தன் நஞ்சை உண்ணும் பித்தன் ஊரின் சுடுகாட்டில் எரியச்செய்யும் பித்தன் என்னை ஆளும் பித்தன் என்றே ஏசுவனே. 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 48

 à®¤à®¾à®°à®•à¯ˆ போலுந் தலைத்தலை மாலைத்

தழலரப்பூண்
வீரஎன் றன்னை விடுதிகண் டாய்விடில்
என்னைமிக்கார்
ஆரடி யான்என்னின் உத்தர கோசமங்
கைக்கரசின்
சீரடி யாரடி யான்என்று நின்னைச்
சிரிப்பிப்பனே.
 
நட்சத்திரம் போன்ற உன் தலையில் தலைமாலையாக பாம்பு பூண்ட வீர என்னை விட்டுவிடுவாயோ விட்டுவிட்டால் என்னைவிட பெரியவர்கள் என்னை யார் அடியார் என்றால் வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே உன் சீராடியார் அடியோன் என்று உன்னை சிரிப்பிப்பேனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 47

 à®ªà®´à®¿à®ªà¯à®ªà®¿à®²à¯à®¨à®¿à®©à¯ பாதப் பழந்தொழும் பெய்தி

விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண் டாய்வெண்
மணிப்பணிலங்
கொழித்துமந் தாரம்மந் தாகினி நுந்தும்பந்
தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு
தாரவனே.
 
பழிக்க ஏதுமற்ற உன் பாதத்தை பழைமையானவர் போல் தொழுதிடாமல் பழித்து இருந்தவனை விட்டுவிடுவாயோ வெண்மணியில் பணிகரைந்து மந்தாரம் மந்தாகினி மிதக்கும் பெருமையான சிறபடாமல் தாழே இறங்கும் நீரில் பிறைகலந்து சேர்திடும் தரமானவனே. 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 45

 à®ªà®¾à®Ÿà®¿à®±à¯à®±à®¿ லேன்பணி யேன்மணி நீஒளித்

தாய்க்குப்பச்சூன்
வீடிற்றி லேனை விடுதிகண் டாய்வியந்
தாங்கலறித்
தேடிற்றி லேன்சிவன் எவ்விடத் தான்எவர்
கண்டனர்என்
றோடிற்றி லேன்கிடந் துள்ளுரு கேன்நின்
றுழைத்தனனே.
 
பாடுவது அறியேன் பணிவதும் இல்லை மணி நீ ஒளித்தாய் அதை அடைந்து வீடுபெறு பெறாதவனை விட்டுவிடுவாயோ வியந்து தன்னை அறிந்தவரை தேடி அடையவில்லை சிவன் எவ்விடத்தில் உள்ளான் எவர் கண்டவர் என்று அவரை ஓடி பிடிக்கவில்லை இருந்தபடியை உள்ளம் உருகவும் இல்லை நின்று உழைத்தனனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 44

 à®®à¯à®´à¯à®¤à®¯à®¿à®²à¯ வேற்கண் ணியரெனும் மூரித்

தழல்முழுகும்
விழுதனை யேனை விடுதிகண் டாய்நின்
வெறிமலர்த்தாள்
தொழுதுசெல் வான்நற் றொழும்பரிற் கூட்டிடு
சோத்தெம்பிரான்
பழுதுசெய் வேனைவி டேல்உடை யாய்உன்னைப்
பாடுவனே. 
 
மொத்தத்தில் வேல் கண்ணியர் என்னும் மூண்டு எரியும் நெருப்பில் வெண்ணை போன்ற என்னை விட்டுவிடுவாயோ உனது வெற்றி தரும் மலர்த்தாள் வணங்கிட வான் சொல்லும்படி அழைத்திடும் தலைவனே குற்றமே செய்யும் என்னை விடாமல் இருப்பவனே உன்னை பாடுவேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 43

 à®®à®©à¯à®©à®µ னேஒன்று மாறறி யாச்சிறி

யேன்மகிழ்ச்சி
மின்னவ னேவிட் டிடுதிகண் டாய்மிக்க
வேதமெய்ந்நூல்
சொன்னவ னேசொற் கழிந்தவ னேகழி
யாத்தொழும்பர்
முன்னவ னேபின்னும் ஆனவ னேஇம்
முழுதையுமே.
 
மன்னவனே ஒன்றும் அறியச் சிறியேன் மகிழ்ச்சியில் பளிச்சிட செய்தவனே விட்டுவிடிவாயோ உயர்ந்த வேத மெய் விளக்க நூல் சொன்னவனே சொற்கள் கடந்தவனே கடந்து செல்லாமல் உம்மை தொழுபவர் முன்னவனே அடுத்தும் ஆனவனே இம் முழவதுமே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 42

 à®•à®¤à®¿à®¯à®Ÿà®¿ யேற்குன் கழல்தந் தருளவும்

ஊன்கழியா
விதியடி யேனை விடுதிகண் டாய்வெண்
டலைமுழையிற்
பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச்
சுருங்கஅஞ்சி
மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை
மன்னவனே.
சுவாச கதியை கழல் அடிக்கு தந்தருள உடலை விடாத விதி வசப்பட்டவனை விட்டுவிடுவாயோ வெண்மையான தலையில் தலைவனை பார்த்தபடி வெட்டும் வாளை பார்த்தபடி விரைந்து சுருங்க அஞ்சி மதி நெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே.
 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 41

 à®®à¯à®¤à®²à¯ˆà®šà¯à®šà¯†à®µà¯ வாய்ச்சியர் வேட்கைவெந் நீரிற்

கடிப்பமூழ்கி
விதலைச்செய் வேனை விடுதிகண் டாய்விடக்
கூன்மிடைந்த
சிதலைச்செய் காயம் பொ றேன்சிவ னேமுறை
யோமுறையோ
திதலைச்செய் பூண்முலை மங்கைபங் காஎன்
சிவகதியே.
 
சிவந்த வாய் உள்ளவர்களின் மேல் கொண்ட வேட்கையால் முதலைப் போல் வெந்நீரில் முழ்கிட தலைப்படுபவனை விட்டுவிடுவாயோ கூனி குறுகும் நடுங்கும் உடலைப் பெறமாட்டேன் சிவனே முறைமுறையாய் ஓதி தலைப்படும் முலை பங்கா என் சிவகதியே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 40

 à®µà®²à¯ˆà®¤à¯à®¤à®²à¯ˆ மானன்ன நோக்கியர் நோக்கின்

வலையிற்பட்டு
மிலைத்தலைந் தேனை விடுதிகண் டாய்வெண்
மதியின்ஒற்றைக்
கலைத்தலை யாய்கரு ணாகர னேகயி
லாயமென்னும்
மலைத்தலை வாமலை யாள்மண வாளஎன்
வாழ்முதலே.
 
வலையில் சிக்கிய மான் போல் பார்வை கொண்டவர் பார்வைக்கு வலையில் சிக்குண்டு அழியும் என்னை விட்டுவிடுவாயோ வெண்நிலாவை அழகுடன் பொருத்திக் கொண்டவனே கருணாகரனே கயிலாயம் என்ற மலையின் தலைவா மலையாள் மணவாளனே என் வாழ்வின் முதலே.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 39

 à®¤à®©à®¿à®¤à¯à®¤à¯à®£à¯ˆ நீநிற்க யான்தருக் கித்தலை

யால்நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண் டாய்வினை
யேனுடைய
மனத்துணை யேஎன் றன் வாழ்முத லேஎனக்
கெய்ப்பில்வைப்பே
தினைத்துணை யேனும்பொ றேன்துய ராக்கையின்
திண்வலையே. 
 
எனக்கே ஆன தனித்துணையாக நீ நிற்க தலைக்கணம் கொண்டு என் வினைகளை துணையாக கொண்டவனை விட்டுவிடுவாயோ மனதிற்கு துணையாக என்றன் வாழ்வின் முதலாக எனது முதலீடாக இருப்பதுவே தினை அளவும் பொறுக்கமாட்டேன் தூய்மையானவரின் உடலின் திடமான வலையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 38

 à®…டர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல்நல்

லாரவர்தம்
விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந்
தேயெரியுஞ்
சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும்
பர்க்கமுதே
தொடர்வரி யாய்தமி யேன்தனி நீக்குந்
தனித்துணையே.
 
திடமான புலன்களால் நிற்கவும் அஞ்சி ஐந்து எழுத்து சொல்லை ஓதும் அவர்களை பற்றாமல் விலகிடும் என்னை விட்டு விடுவாயோ விரிந்து எரியும் சுடரானவனே சுடும் காட்டுக்கு அரசே வணக்குபவர்களுக்கு அமுதே தொடர்ந்து வரும் பெரியவற்றில் இருந்து தனிமைப் படுத்தி நீக்கும் தனித்துணையே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 37

 à®…ரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச
லென்னினல்லால்
விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண்
நகைக்கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற்
பதப்புயங்கா
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந்
தடர்வனவே.

மன்னவனே மதி இழந்த சிறியேன் தவறுகளுக்கு அஞ்சுவது இல்லை நிறைவானவர்களின் முடிவே விட்டு விடுவாயோ வெண்மையான சிரிப்பும் கருமையான கண்ணும் காட்சிக்கு மடந்தையானதையும் மணந்த திருப்பொற் பதம் கொண்ட கூட்டாளியே அளவிட்டு வந்து என்னை அடர்ந்த கொடும் வினைகள் வந்து அடர்வனவே.
#திருவாசகம்

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 36

 à®ªà¯Šà®¤à¯à®®à¯à®ªà¯à®±à¯ தீப்போற் புகைந்தெரி யப்புலன்

தீக்கதுவ
வெதும்புறு வேனை விடுதிகண் டாய்விரை
யார்நறவந்
ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந்
தம்முரல்வண்
டதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வார்யி
தடலரைசே.
 
பொந்தில் வைத்த தீ போல் பற்றி எரிகின்றன புலன் கொண்டு வெதும்பும் என்னை விட்டுவிடுவாயோ நிறைவடைந்தவர் நிறைந்து அமைதியில் அவனை அடைய பயின்று மந்த புத்தியில் இருந்து முரண்பட்டு வண்டுகள் சூழும் கொழுந்தேன் அவிர் சடை கொண்டவர் கூட்டத்து அரசே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 35

 à®ªà®°à®®à¯à®ªà®° னேநின் பழஅடி யாரொடும்

என்படிறு
விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென்
முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ
வாயரவம்
பொரும்பெ ருமான்வினை யேன்மனம் அஞ்சிப்
பொதும்புறவே.
வியாபித்த வியாபனனே உன் பழமையான அடியாருடன் என்னையும் பணிய விரும்பியவனே விட்டு விலகிடுவாயோ மென்மையான கறையில் அரும்புக்கு நேராக அணிந்தாய் பிறவியோ ஐந்தலை பாம்பின் பிடியில் பொருந்தும் வினையே நான் பெற்றேன் மனம் அஞ்சி பொதும்புறவே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 34

 à®•à¯à®¤à¯à®•à¯à®¤à¯à®ªà¯ பின்றிநின் றென்குறிப் பேசெய்து

நின்குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்விரை
யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின்
மனங்கனிவித்
தெதிர்வதெப் போது பயில்விக் கயிலைப்
பரம்பரனே.
 
குதுகுலத்தால் கொண்டாடுதல் இன்றி உனது குறிப்பு அறிந்து குறிப்பால் விதுவிதுப்ப இருக்கும் என்னை விட்டுவிடுவாயோ விரைந்து பழுக்கும் வாழைப்பழத்தை போல் மனங்கனிவித்து எப்பொழுதும் பயில்விக்கும் கயிலை பரம்பரனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 33

 à®•à®£à¯à®Ÿà®¤à¯ செய்து கருணைமட் டுப்பரு

கிக்களித்து
மிண்டுகின் றேனை விடுதிகண் டாய்நின்
விரைமலர்த்தாள்
பண்டுதந் தாற்போற் பணித்துப் பணிசெயக்
கூவித்தென்னைக்
கொண்டென்எந் தாய்களை யாய்களை யாய்
குதுகுதுப்பே. 
 
விரும்பியதை செய்து கருணையை மட்டுப்படுத்தும் செயல்களுக்கு மதிப்பளிக்கும் என்னை விட்டுவிடுவாயோ விரியும் மலர் அடியை முன்னம் அருளியது போல் கட்டாயப்படுத்தி பணியச் செய்து பணி செய்ய ஒருநிலைப்படுத்திக் கொள் என் தாயே களையாமல் காத்தருள் மகிழ்ச்சி என்ற குதுகுதுப்பே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 32

 à®…டற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி

அழிந்தஎன்னை
விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத்
தொண்டர்க்கல்லால்
தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு
தீச்சுழலக்
கடற்கரி தாய்எழு நஞ்சமு தாக்குங்
கறைக்கண்டனே.
 
அடங்கா யானை போன்ற ஐந்து புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை விட்டு விடுவாயோ பணிந்த தொண்டர்க்கு அல்லாதவர்களுக்கு தொடரும் யானபோல் இருந்தாய். சுடர் மாமணியே சுடு தீச்சுழலக் கடலில் அரிதாய் எழும் நஞ்சை அமுதாக்கும் கறைக் கண்டவனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 31

 à®šà®šà¯à®šà¯ˆà®¯ னேமிக்க தண்புனல் விண்கால்

நிலம்நெருப்பாம்
விச்சைய னேவிட் டிடுதிகண் டாய்வெளி
யாய்கரியாய்
பச்சைய னேசெய்ய மேனிய னேயொண்
படஅரவக்
கச்சைய னேகடந் தாய்தடந் தாள
அடற்கரியே.
 
இளமையானவனே மிகுந்த குளிர்ச்சியான நீர் விண் காற்று நிலம் நெருப்பாம் இவையுட் இச்சை கொண்டவனே விட்டுவிடுவாயோ வெளியாய் இருளாய் பச்சையானவனே செய்யப்பட்ட மேனியானவனே பாம்மை அணிந்தவனே கடந்தாய் தடத்தை தாளமட்டா அடற் கரியே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 30

 à®®à®¤à¯à®¤à¯à®±à¯ தண்தயி ரிற்புலன் தீக்கது

வக்கலங்கி
வித்துறு வேனை விடுதிகண் டாய்வெண்
டலைமிலைச்சிக்
கொத்துறு போது மிலைந்து குடர்நெடு
மாலைசுற்றித்
தத்துறு நீறுடன் ஆரச்செஞ் சாந்தணி
சச்சையனே.
 
மத்திட்ட தயிர் போல் புலன் தீமையால் கலங்கி தவிப்பவனை விட்டுவிடுவாயோ வெண்டலை மிலைச்சிக் கொத்துறு போது இலைந்து குடர்நெடுமாலை சுற்றித் தத்துறு நீறுடன் ஆரச் செஞ்சாந்தணி சச்சையனே. ( இயற்கையின் மலர்களும் வாசனையும் அணிபவனே)
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 29

 à®•à¯à®²à®™à¯à®•à®³à¯ˆà®¨à¯ தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற்

றச்சிலையாம்
விலங்கல்எந் தாய்விட் டிடுதிகண் டாய்பொன்னின்
மின்னுகொன்றை
அலங்கலந் தாமரை மேனிஅப் பாஒப்
பிலாதவனே
மலங்களைந் தாற்சுழல் வன்தயி ரிற்பொரு
மத்துறவே. 
 
குறுகிய வட்டமான குலத்தை களைந்தாய், களைந்தாய் குற்றம் நீவ்கிய சிலையாய், எனது தாய் ஆகிய உன்னை விலகல் கண்டால் விட்டு விடுவாயோ பொன்னைப் போல் மின்னும் அலங்கலந்தாமரை மேனி கொண்டவனே அப்பா ஒப்பில்லாதவனே மலம் களைந்தாய் சுழல்வேன் தயிரில் பொருந்தும் மத்துறவே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 28

 à®ªà¯à®²à®©à¯à®•à®³à¯ திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர்

பொய்ந்நெறிக்கே
விலங்குகின் றேனை விடுதிகண் டாய்விண்ணும்
மண்ணுமெல்லாங்
கலங்கமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்கரு
ணாகரனே
துலங்குகின் றேன்அடி யேன்உடை யாய்என்
தொழுகுலமே.
 
புலன்கள் தடுமாற நானும் தடுமாறி பொய்யான நெறிக்கே அடிமையாகிறேன் என்னை இப்படியே விட்டுவிடுவாயோ விண்ணும் மண்ணும் கலங்கமுற்று இருக்க நீரின் நஞ்சை எடுத்து அமுதாக்கினாய் கருணாகரனே தூய்மையாகின்றேன் அடியேன் என்னை உரிமையாக கொண்டவனே என் தொழுகுலமே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 27

 à®•à¯Šà®´à¯à®®à®£à®¿ யேர்நகை யார்கொங்கைக் குன்றிடைச்

சென்றுகுன்றி
விழுமடி யேனை விடுதிகண் டாய்மெய்ம்
முழுதுங்கம்பித்
தழுமடி யாரிடை ஆர்த்துவைத் தாட்கொண்
டருளிஎன்னைக்
கழுமணி யேஇன்னுங் காட்டுகண் டாய்நின்
புலன்கழலே. 
 
கொழுத்த மணியாகிய முத்துக்கள் போன்ற சிரிப்பு கொண்ட கொங்கை குன்றின் இடையே சென்று சிறுமைபட்டு விழும் என்னை விட்டு விடுவாயோ மெய் முழுவதும் உணர்வுடன் தழுவும் அடியாரின் கூட்டத்தில் வைத்து ஆட்கொண்டு அருளி என்னிடத்தில் கழிய வேண்டியதை மணியே இன்னும் காட்டிட கண்டாய் நின் புலன் கழலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 26

 à®ªà¯†à®°à¯à®¨à¯€ ரறச்சிறு மீன்துவண் டாங்கு

நினைப்பிரிந்து
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன்
கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி
வடிவின்வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக்
கொழுமணியே.
 
பெரிய நீர் நிலையில் இருந்து பிரிந்து சிறுமைப்பட்ட மீன் துவண்டது போல் உன்னை பிரிந்து வெறுமையான என்னை விட்டு விடுவாயோ மலை அருவி நீர் தங்கும் மடுவுள் சிறு தோணி வடிவில் வெள்ளைக் குருநீர் மதி பொதியும் சடை வானக் கொழுமணியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 25

 à®Žà®±à¯à®®à¯à®ªà®¿à®Ÿà¯ˆ நாங்கூ ழெனப்புல னால்அரிப்

புண்டலந்த
வெறுந்தமி யேனை விடுதிகண் டாய்வெய்ய
கூற்றொடுங்க
உறுங்கடிப் போதவை யேஉணர் வுற்றவர்
உம்பரும்பர்
பெறும்பத மேஅடி யார்பெய ராத
பெருமையனே.
 
எறும்புகள் இடையே சிக்கிய (நாக்குப் பூச்சி) நாங்கூழ் பூழு போல் புலன்களால் அரிக்கப்பட்ட வெறுமையான என்னை விட்டு விடுவாயோ கொடுமையான கூற்றனும் ஒடுங்க உறுப்பாகிய திருவடி மலரில் உணர்வுற்றவர் தேவாதி தேவர்கள் அவர்கள் அடையும் பதமே அடியார் விலகாத பெருமையனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 24

 à®‰à®³à¯à®³à®© வேநிற்க இல்லன செய்யும்மை

யற்றுழனி
வெள்ளன லேனை விடுதிகண் டாய்வியன்
மாத்தடக்கைப்
பொள்ளனல் வேழத் துரியாய் புலன்நின்கட்
போதலொட்டா
மெள்ளென வேமொய்க்கும் நெய்க்குடந் தன்னை
எறும்பெனவே.
 
இருக்கும் உண்மை நிலைத்து நிற்க தேவையற்றதை செய்யும் மெய்யற்று இருக்கும் என்னை விட்டு விடுவாயோ வியப்பான குளத்தில் யானை தன் துதிக்கையால் உறிஞ்சுவது போல் புலன் அலைகின்றன. ஆனால் உம்மிடத்திலோ மெள்ளமாய் மொய்க்கும் நெய்க்குடத்தை எறும்பெனவே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 23

 à®ªà¯†à®±à¯à®±à®¤à¯ கொண்டு பிழையே பெருக்கிச்

சுருக்குமன்பின்
வெற்றடி யேனை விடுதிகண் டாய்விடி
லோகெடுவேன்
மற்றடி யேன்றன்னைத் தாங்குநர் இல்லைஎன்
வாழ்முதலே
உற்றடி யேன்மிகத் தேறிநின் றேன்எனக்
குள்ளவனே.
 
கொடுக்கப்பட்டதை பெற்றும் பிழையே அதிகமாக செய்து சிதைந்துபின் வெறுமையான என்னை விட்டிடுவாயோ விட்டுவிட்டால் கெடுவேன் உன்னை இல்லாமல் மற்றபடி தாங்குவர் இல்லை என் வாழ்வின் முதலே உனது அடியைப் பற்றி தேறி நின்றேன் எனக்குள் உள்ளவனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 22

 à®’ண்மைய னேதிரு நீற்றைஉத் தூளித்

தொளிமிளிரும்
வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய்
யடியவர்கட்
கண்மைய னேஎன்றுஞ் சேயாய் பிறற்கறி
தற்கரிதாம் பெண்மைய னேதொன்மை ஆண்மைய னேஅலிப் பெற்றியனே.
 
ஒண்மையனே திருநீற்றை மேல் பூசி ஒளிமிளிரும் வெண்மையானவனே விட்டுவிலகல் செய்வாயோ மெய் அடியவர்களுக்கு நெருக்கமாகவும் என்றும் குழந்தையாய் இருக்கும் பிறர்க்கு அறிவதற்கு அரிதானவனே பெண்மையானவனே, ஆண்மையானவனே அலிப் பெற்றியனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 21

 à®†à®©à¯ˆà®µà¯†à®®à¯ போரிற் குறுந்தூ றெனப்புல

னால்அலைப்புண்
டேனையெந் தாய்விட் டிடுதிகண் டாய்வினை
யேன்மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலை யும்அமு
தத்தையும்ஓத்
தூனையும் என்பி னையும்உருக் காநின்ற
ஒண்மையனே. 
 
யானையின் கடினமான போரில் சிறுகுட்டைசிதைந்தது போல் அலைந்தவனை விட்டுவிலகல் செய்வாயோ வினையே என்மனத்துள் தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்த உடம்பையும் எலும்பினையும் உருக நின்ற ஒண்மையனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 20

 à®•à¯Šà®®à¯à®ªà®°à®¿à®²à¯ லாக்கொடி போல்அல மந்தனன்

கோமளமே
வெம்புகின் றேனை விடுதிகண் டாய்விண்ணர்
நண்ணுகில்லா
உம்பருள் ளாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
அம்பர மேநில னேஅனல் காலொடப்
பானவனே. 
 
பற்றக் கொம்பில்லா கொடி போல் அலைகின்றேன் கோமளமே வெம்பும் என்னை விலக கண்டால் விண்ணவரும் நாடி அறியமுடிய தேவருக்கும் உள்ளே இருப்பவனே வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே பரவெளியே நிலமே நெருப்பு காற்றே என இவைகளுடன் ஒப்பானவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 19

 à®®à®Ÿà®™à¯à®•à®Žà®©à¯ வல்வினைக் காட்டைநின் மன்னருள்

தீக்கொளுவும்
விடங்க என்றன்னை விடுதிகண் டாய்என்
பிறவியைவே
ரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர கோசமங்
கைக்கரசே
கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக்
கொம்பினையே. 
 
முடிவுக்கு வராத வலிமையான வினை என்ற காட்டை நித்திய அருள் என்ற தீயால் அழிக்க அதை தடுக்க நான் முற்பட்டால் விட்டுவிடாமல் பிறவியை வேரோடு களைத்து ஆண்டுகொள். வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே கொடுமையான குன்றில் ஐம்புலன்களை தந்தாய் வஞ்சிக்கும் கொம்பனையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 18

 à®‡à®°à¯à®¨à¯à®¤à¯†à®©à¯à®©à¯ˆ ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை

என்னினல்லால்
விருந்தின னேனை விடுதிகண் டாய்மிக்க
நஞ்சமுதா
அருந்தின னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு
மடங்கினர்க்கே.
எனக்குள் இருந்தபடி என்னை ஆட்கொண்டு டவனே என்னை ஆண்டுக்கொள் விற்றுக் கொள் அல்லது ஒதுக்கி வை எனக்குள் இல்லாமல் விருந்தினரைப் போல் விலகல் கண்டால் கொடிய நஞ்சை அமுதாக்கி அருந்தியவனே வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே மருந்தானவனே பிறவி பிணியின் வசப்பட்டு மடங்கினர்க்கே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 17

 à®ªà¯Šà®°à¯à®³à¯‡ தமியேன் புகலிட மேநின்

புகழ்இகழ்வார்
வெருளே எனைவிட் டிடுதிகண் டாய்மெய்ம்மை
யார்விழுங்கும்
அருளே அணிபொழில் உத்தர கோசமங்
கைக்கரசே
இருளே வெளியே இகபர மாகி
யிருந்தவனே.
அடையும் பொருளே தமியேன் அடைக்கலம் புகும் இடமே உனது புகழை இகழ்பவர் அச்சத்தை அடையச் செய்பவனே என்னை விட்டுவிடுவாயோ உண்மையானவர்கள் உள் உணரும் அருளே அணிபொழில் வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே இருளானவனே வெளியானவனே இகபரமாகி இருந்தவனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 16

 à®Žà®©à¯à®©à¯ˆà®…ப் பாஅஞ்சல் என்பவர் இன்றிநின்

றெய்த்தலைந்தேன்
மின்னையொப் பாய்விட் டிடுதிகண் டாய்உவ
மிக்கின்மெய்யே
உன்னையொப் பாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
அன்னையொப் பாய்எனக் கத்தன்ஒப் பாய்என்
அரும்பொருளே. 
 
என்னை அப்பா அஞ்சாதே என்பவர் இல்லாமல் நின்று தவித்தேன் மின்னலை போன்றவனே விட்டு விலகிடுவாயோ உதாரணத்திற்கொல்லாம் உண்மையே உன்னையே ஒப்பாக நிறுத்தும் வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே அன்னையாய் அப்பானாய் என்னை காப்பாய் என் அரும்பொருளே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 15

 à®•à®³à®¿à®µà®¨à¯à®¤ சிந்தையொ டுன்கழல் கண்டுங்

கலந்தருள
வெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச்
சுடருக்கெல்லாம்
ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங்
கைக்கரசே
எளிவந்த எந்தை பிரான்என்னை ஆளுடைய
என்னப்பனே. 
 
பேரின்பமான மனநிலையுடன் திருவடி கண்டு கலந்து அருள வெளியே வாராத என்னை விட்டிட கண்டாய் மெய்ச்சுடர்கள் யாவற்றுக்கும் ஒளி வழுங்கும் பூங்கழுல் வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே எளிமையாய் வந்த என் தந்தையே தலைவனே என்னை ஆளும் என் அப்பனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 14

 à®µà¯†à®³à¯à®³à®¤à¯à®¤à¯à®³à¯ நாவற் றியாங்குன் அருள்பெற்றுத்

துன்பத்தின்றும்
விள்ளக்கி லேனை விடுதிகண் டாய்விரும்
பும்அடியார்
உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
கள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத
களியெனக்கே. 
 
அளவற்ற நீரில் இருந்தும் நா வற்றி இருப்பது போல் உன் அருள் பெற்றும் துன்பத்தில் இருந்து இன்றும் விளங்கி கொள்ளாது விட்டுவிடுவோனை கண்டாய் உன்னை விரும்பும் அடியார் உள்ளத்துள் உறையும்  வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே கள்ள உள்ளம் உள்ளவர்க்கு அருள மாட்டாய் பேரின்பம் பேரின்பம் ஆனாய் எனக்கே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 13

 à®•à®Ÿà®²à®¿à®©à¯à®³à¯ நாய்நக்கி யாங்குன் கருணைக்

கடலின்உள்ளம்
விடலரி யேனை விடுதிகண் டாய்விட
லில்லடியார்
உடலில மேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
மடலின்மட் டேமணி யேஅமு தேயென்
மதுவெள்ளமே.
 
கடலினை நாய் நக்கியது போல் உன் கருணை என்ற கடலின் விரிந்த தன்மை உணராது விடுதல் கண்டாய் அப்படி விலகாத உன் அடியார் உடலில் தங்கும் வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே மலரின் உறையும் தேனே அமுதே மணியே என் மது வெள்ளமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 12

 à®¨à¯†à®Ÿà¯à®¨à¯à®¤à®•à¯ˆ நீஎன்னை ஆட்கொள்ள யான்ஐம்

புலன்கள்கொண்டு
விடுந்தகை யேனை விடுதிகண் டாய்விர
வார்வெருவ
அடுந்தகை வேல்வல்ல உத்தர கோசமங்
கைக்கரசே
கடுந்தகை யேன்உண்ணுந் தெண்ணீர் அமுதப்
பெருங்கடலே.
வலிமையின் உச்சமே நீ என்னை ஆட்கொள்ள நான் ஐம்புலன்கள் கொண்டு உன்னை விட்டுவிடக் கண்டால் பகைவர் அஞ்சும் அடுந்தகை வேல் வல்ல வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே கடுமையான என்னை உண்ணுந் தெண்ணீர் அமுதப் பெருங்கடலே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 11

 à®®à®¾à®±à¯à®ªà®Ÿà¯ டஞ்சென்னை வஞ்சிப்ப யான்உன்

மணிமலர்த்தாள்
வேறுபட் டேனை விடுதிகண் டாய்வினை
யேன்மனத்தே
ஊறுமட் டேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
நீறுபட் டேஒளி காட்டும்பொன் மேனி
நெடுந்தகையே.
மாறுபட்ட என்ன உன்னை வஞ்சிப்பதாக எண்ணி உனது திருவடி மலர்த்தாளை வேறுபட்டவனை விட்டுவிடுவாயோ வினையே என் மனம் ஊறுபட்டதே வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே நீறுபப்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 10

 à®ªà¯Šà®²à®¿à®•à®¿à®©à¯à®± நின்தாள் புகுதப்பெற் றாக்கையைப்

போக்கப்பெற்று
மெலிகின்ற என்னை விடுதிகண் டாய்அளி
தேர்விளரி
ஒலிநின்ற பூம்பொழில் உத்தர கோசமங்
கைக்கரசே
வலிநின்ற திண்சிலை யாலெரித் தாய்புரம்
மாறுபட்டே.
 
பொலிவு கொண்ட உன் திருவடியால் உன்னை அடையும் உடல் பெற்றும் அதை அலட்சியம் செய்து மெலியும் என்னை விடுவிக்க கண்டாய் தேன் கொடுக்கும் வண்டுகள் ஒலிக்கும் பூம்பொழில் வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே வலிமையாய் நின்ற திடமான சிலையால் எரித்தாய் புரமாக மாறுபட்டே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 9

 à®‡à®°à¯à®¤à®²à¯ˆà®•à¯ கொள்ளியி னுள்ளெறும் பொத்து

நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன்
மூவுலகுக்
கொருதலை வா மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப்
பொலிபவனே. 
 
இரண்டு பக்கமும் அழிக்கும் ஒன்றிடம் உள்ளத்தே சிக்கி உன்னை பிரிந்த விரிதலையேனை விடுவிக்க காண்பவனே வியப்பான மூவுலகத்திற்கும் ஒரே தலைவனே வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே பொருத்தமான தலைமையும் மூவிலை வேல்வலன் ஏந்திப் பொலிபவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 8

 à®µà¯‡à®°à¯à®•à¯à®•à®¿à®©à¯à®± என்னை விடுதிகண் டாய்விர

வார்வெருவ
ஆர்க்கின்ற தார்விடை உத்தர கோசமங்
கைக்கரசே
ஈர்க்கின்ற அஞ்சொடச் சம்வினை யேனை
இருதலையே.
 
தீர்த்துக் கொள்ளவது எப்படி என் பிழையை உனது சீர் அருள் எது என்று அறிந்துகொள்ளமுடியா என்னை கண்டு விட்டிடுவாயோ மறுப்பவர் அஞ்சிட திடமான விடையுடன் வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே ஈர்க்கும் ஐந்து புலன்களால் வினை உள்ளவன் நான் இருதலையே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 7

 à®ªà¯Šà®¯à¯à®¯à®µ னேனைப் பொருளென ஆண்டொன்று

பொத்திக்கொண்ட
மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட
முண்மிடற்று
மையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந்
தீர்ப்பவனே. 
 
பொய்யானவன் என்னை பொருட்டாக ஆண்டருளி பாதுகாத்துக் கொண்ட மெய்யானவனே உன்னை விட்டு விலக கண்டால் விடம் உண்டு கண்டம் கருத்து வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே செயல்களாக ஆனவனே சிறியவன் பாவம் தீர்ப்பவனே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 6

 à®®à®±à¯à®¤à¯à®¤à®©à®©à¯ யான்உன் அருள்அறி யாமையின்

என்மணியே
வெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை
யின்தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர கோசமங்
கைக்கரசே
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம்
பொய்யினையே.
 
மறுத்தேன் நான் உன் அருளை அறியாதபடியால். என் மணியே வெறுத்ததைக் கண்டு அதை விட்டிட கண்டாய். வினையில் கூட்டால் அழிபவனை ஆண்டுக்கொள். வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே பொறுப்பார்கள் அன்றோ பெரியவர்கள் சிறு நாய்கள் செய்யும் பொய்யினையே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 5

 à®šà¯†à®´à®¿à®•à®¿à®©à¯à®± தீப்புகு விட்டிலிற் சின்மொழி

யாரிற்பன்னாள்
விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி
வாய்அறுகால்
உழுகின்ற பூமுடி உத்தர கோசமங்
கைக்கரசே
வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட
மறுத்தனனே.
 
செழுமையான தீ புகும் விட்டில் மயக்கும் மொழியுடையவள் இடத்தில் விழுகின்ற என்னை விடுவித்தாய். வெறி அறுக்கும் வாசல் பதப்பட பூமுடி வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே வழி நின்று உனது அருள் அமுதை ஊட்ட மறுப்பவன் ஆனேனே.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 4

 à®µà®³à®°à¯à®•à®¿à®©à¯à®± நின்கரு ணைக்கையில் வாங்கவும்

நீங்கிஇப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதிகண் டாய்வெண்
மதிக்கொழுந்தொன்
றொளிர்கின்ற நீள்முடி உத்தர கோசமங்
கைக்கரசே
தெளிகின்ற பொன்னுமின் னும்மன்ன தோற்றச்
செழுஞ்சுடரே.
 
வளரும் உனது கருணை என்ற கரங்களால் என்னை வாங்க உலகில் என்னை நானே உயர்த்திக் காட்டியதை நீக்கி விடுவித்தாய். தூய அறிவின் கொழுந்தே ஒளிர்கின்ற நீள முடி வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே. தெளியும் பொன் மின்னும் போல் தோற்றத்தில் இருக்கும் செழுமையான சுடரே
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 3

 à®•à®¾à®°à¯à®±à¯ கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்

கரைமரமாய்
வேருறு வேனை விடுதிகண் டாய்விளங்
குந்திருவா
ரூருறை வாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை
வளர்ப்பவனே.
 
அடுத்து என்ன செய்வது என அறியாதபடி இருளில் அடைக்கும் கண்ணியரை ஐந்து புலன்களும் நாடிடும் கரைமரமாய் வேறுபக்கம் திரும்புபவனை விடுதலை செய்தாய் விளக்கம் தரும் திருவாரூர் உறைவிடமாய் வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே புதிய பொருள்களால் வாழச்செய்பவள் பங்காளியே என்னை வளர்ப்பவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 2

 à®•à¯Šà®³à¯à®³à¯‡à®°à¯ பிளவக லாத்தடங் கொங்கையர்

கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண் டாய்நின்
விழுத்தொழும்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங்
கைக்கரசே
கள்ளேன் ஒழியவுங் கண்டுகொண் டாண்டதெக்
காரணமே.
 
விலகாதபடி அடிமைக் கொள்ளும் அழகிய உடல் அமைப்பு கொண்ட மங்கையை கடக்காது இருந்தும் என்னை விடாமல் பார்த்துக் கொண்டாய். உனது விழிப்புக்கு உட்பட்டேன் வெளியே செல்லேன். வளரும் பொருளாய் உள்ள மங்கைக்கு அரசே. கள்ளனான என்னையும் கண்டுகொண்டு கள்ளத்தனம் ஒழிய ஆண்டு கொண்டாய் எக்காரணமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | நீத்தல் விண்ணப்பம் | பாடல் எண் : 1

 à®•à®Ÿà¯ˆà®¯à®µ னேனைக் கருணையி னாற்கலந்

தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல்
வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத்
தாங்கிக்கொள்ளே. 
 
தேர்ச்சியற்ற கடையானவன் ஆன என்னை கருணையால் கலந்து ஆண்டு கொண்டவனே. பதில்களாக ஆனவனே விட்டு விலகுதல் கண்டால் வேட்டை புலியாய் பிடித்து காப்பாய் வளரும் உடலாய் உள்ள மங்கைக்கு அரசே கூட்டாக இருப்பவனே தளர்ந்தேன் என் தலைவனே என்னை தாங்கிக் கொள்ளே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 100

 à®ªà®¾à®Ÿ வேண்டும்நான் போற்றி நின்னையே

பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்
காட வேண்டும்நான் போற்றி அம்பலத்
தாடு நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்
வீடவேண்டும்நான் போற்றி வீடுதந்
தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே.
 
நான் பாடவேண்டும் போற்றி என்று நின்னையே பாடி நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகி. நான் துள்ளி குதித்து ஆட வேண்டும் போற்றி என்றே. அம்பலத்தில் ஆடும் உன் திருவடி பற்றால் இனம் வெறுக்கும் நான் போற்றயபடியே கூட வேண்டும். நான் இந்த நுண்ணுயிரால் ஆன உடல் கடந்து நின்னை போற்றி பொய் எல்லாம் விலக்க வேண்டும். நான் போற்றினேன் வீடு தந்து அருளிய நின் மெய்யர்களுக்கு மெய்யனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 99

 à®®à®©à¯à®© எம்பிரான் வருக என்னெனை

மாலும் நான்முகத் தொருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என்னெனை
முழுதும் யாவையும் இறுதி யுற்றநாள்
பின்ன எம்பிரான் வருக என்னெனைப்
பெய்க ழற்கண்அன் பாயென் நாவினாற்
பன்ன எம்பிரான் வருக என்னெனைப்
பாவ நாசநின் சீர்கள் பாடவே. 
 
மன்னனே என் தலைவனே வருக என என்னை அழைத்தவனே திருமாலோ அல்லது நான்முகம் கொண்ட ஒருவனோ என யாரைவிடவும் முன்னவனே என் தலைவனே வருக என என்னை அழைத்தவனே. முழுவதையும் முடிவாக கொண்ட நான் முடிவுக்கு வந்த நாளில் என் தலைவனே வருக என என்னை அழைத்தவனே.மழை போல் பெய்யும் கண்களால் அன்பால் என் நாவினில் உன்னை புகழ  வருக என என்னை அழைத்தவனே பாவங்கள் நாசிந்து போகும் உன் சீர்களை பாடவே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 98

 à®…ப்ப னேயெனக் கமுத னேஆ

னந்த னேஅகம் நெகஅள் ளூறுதேன்
ஒப்ப னேஉனக் குரிய அன்பரில்
உரிய னாய்உனைப் பருக நின்றதோர்
துப்ப னேசுடர் முடிய னேதுணை
யாள னேதொழும் பாள ரெய்ப்பினில்
வைப்ப னேஎனை வைப்ப தோசொலாய்
நைய வையகத் தெங்கள் மன்னனே. 
 
அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே அகம் நெகிழ்ந்து மகிழ உள்ளே ஊறும் தேன் போன்றவனே. உனக்கே உரிய அன்பரில் நானும் ஒருவனாய் உன்னை பருக நின்றதோர் ஆதாரமே. தொழுது வணக்கும் வாய்ப்பை அளித்து வைத்தவனே. சொல்வதற்கு அரிய எங்கள் வையகத்து மன்னனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 97

 à®‰à®Ÿà¯ˆà®¯ நாதனே போற்றி நின்னலால்

பற்று மற்றெனக் காவ தொன்றினி
உடைய னோபணி போற்றி உம்பரார்
தம்ப ராபரா போற்றி யாரினுங்
கடைய னாயினேன் போற்றி என்பெருங்
கருணை யாளனே போற்றி என்னைநின்
அடிய னாக்கினாய் போற்றி ஆதியும்
அந்த மாயினாய் போற்றி அப்பனே. 
 
என்னை உரிமையாக்கிக் கொண்ட என் உடைமை நாதனே உன்னை போற்றி வாழ்த்துவதால் பிற ஒன்றின் மேல் பற்று இன்றி எனக்கு என காவல் காப்பதற்கு ஒன்றும் இல்லாமல் என்னுடையவனே தேவர்களின் தலைவனே போற்றி. எல்லாரையும் விட கடைசியாவன் ஆனேன். போற்றி என் கருணையாளனே போற்றி என்னை உனது அடிமையாக்கினாய் போற்றி. முதலும் முடிவுமானாய் போற்றி அப்பனே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 94

 à®‡à®²à¯à®²à¯ˆ நின்கழற் கன்ப தென்கணே

ஏலம் ஏலுநற் குழலி பங்கனே
கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்
டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய்
எல்லை யில்லைநின் கருணை யெம்பிரான்
ஏது கொண்டுநான் ஏது செய்யினும்
வல்லை யேயெனக் கின்னும் உன் கழல்
காட்டி மீட்கவும் மறுவில் வானனே.
 
வினைப் பயன் இல்லை என்றால் உன் திருவடி காண்பது எங்கணம். ஏலம் ஏற்கும் நற்குழலி பங்களானே கல்லை மென்மையான கனியாக்கும் இச்சையுடன் என்னை உனது திருவடிக்கு அன்பு செய்ய உரியவனாக்கினாய், எல்லை இல்லா உன் கருணை இது என் தலைவனே. எதைக் கொண்டும் என்ன செய்தாலும் உன் வல்லமையால் இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மாறுபாடு இல்லா வானம் போன்றவனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 93

 à®ªà¯Šà®°à¯à®¤à¯à®¤ மின்மையேன் பொய்ம்மை யுண்மையேன்

போத என்றெனைப் புரிந்து நோக்கவும்
வருத்த மின்மையேன் வஞ்ச முண்மையேன்
மாண்டி லேன்மலர்க் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்
நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை
இருத்தி னாய்முறை யோஎ னெம்பிரான்
வம்ப னேன்வினைக் கிறுதி யில்லையே.
பொருத்தமானவன் இல்லை, பொய்ம்மையால் உண்மை இல்லாதவன் போதனை புரிந்துக்கொண்டு நோக்கவும் வருந்தவம் இல்லதவன் வஞ்சகம் உள்ளவன் மணிந்து ஏற்றவன் இல்லை மலர்கமல பாதனே பொருள் தரும் மேனியாய் அருள் செய்யும் அன்பரும் நீயும் அங்கே எழுந்து அருளி இங்கே என்னை இருக்கச் செய்துதாய் இத் முறையோ என் தலைவனே வம்பில் மாட்டிக் கொண்டேன் என் வினைக்கு இறுதி இல்லையே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 92

 à®®à¯ˆà®¯à®¿ லங்குநற் கண்ணி பங்கனே

வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்
கையி லங்குபொற் கிண்ணம் என்றலால்
அரியை யென்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ
போவ தோசொலாய் பொருத்த மாவதே. 
 
மையிட்ட நல்ல கண்ணி பங்காளனே வந்து என்னை பணியவைத்தப் பின் கையில் கிடைத்த பொற்கிண்ணம் என்பதைப் போல் உன்னை அரிதானதாக கருதவில்லை. உண்மை விளக்க இருக்கும் வெண்மை நிறத்துடன் உடலாய் மெய்யான அடியார் உன் உன் மெய்ம்மையை அடைந்தார். பொய் கொண்ட என்னை இங்கே புகச் செய்து போவது எனக்கு உரைத்திடு உனக்கு இது பொருத்தமாவதே.
#திருமந்திரம்
 

திருவாசகம் | பாடல் எண் : 91

 à®®à®¾à®±à®¿ லாதமாக் கருணை வெள்ளமே

வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை
வேறி லாப்பதப் பரிசு பெற்றநின்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
ஈறி லாதநீ எளியை யாகிவந்
தொளிசெய் மானுட மாக நோக்கியுங்
கீறி லாதநெஞ் சுடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.
 
மாறுபாடு இல்லாத கருணை வெள்ளமே முந்தி வந்து உனது திருவடி தாளிணை வேறுபாடு இல்லாமல் பற்றி பரிசு பெற்ற நினது மெய்யன்பர் உன் மெய்மையை ஏற்று அப்படியே ஆகினர். முடிவு என்ற இறுதி இல்லாத நீ எளிமையாகி வந்து ஒளி செய்து மானிடத்தை நோக்கியும் கீர்த்தி இல்லாத நெஞ்சுடையவனாக இனம் சேர்க்காத கடையவன் ஆகினேன். இது முன் செய்த கீழ்மையே. 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 90

 à®¯à®¾à®©à¯‡à®ªà¯Šà®¯à¯ என்நெஞ்சும் பொய் என்அன்பும்

பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே
தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந்
துறுமாறே. 
 
நானே பொய்யானவன், என் நெஞ்சம் பொய்யானது, என் அன்பும் பொய்யே. ஆனால் கருமவினையால் சிக்கிய நான் அழுதால் உன்னை பெறலாமே. தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருள் செய் அடியேன் உன்னை வந்து உய்யுமாறே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 89

 à®ªà®£à®¿à®µà®¾à®°à¯ பிணிதீர்த் தருளிப் பழைய

அடியார்க்குன்
அணியார் பாதங் கொடுத்தி அதுவும்
அரிதென்றால்
திணியார் மூங்கி லனையேன் வினையைப்
பொடியாக்கித்
தணியார் பாதம்வந்தொல்லை தாராய் பொய்தீர்
மெய்யானே. 
 
பணிந்து ஏற்பவர் பிறவி நோய் தீர்த்து அருளி என்றும் உன் அடியார்க்கு அணியானவர்களுக்கு திருவடி கொடுத்து அதுவும் அரிது என்றால் திடமான மூங்கில் போன்ற வினையைப் பொடியாக்கித், தணித்துக் கொள்ளதவர் திருவடிக்கு தொல்லை தரவேண்டாம் பொய்யை தீர்க்கும் மெய்யனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 88

 à®…ழுகேன் நின்பால் அன்பாம் மனமாய்

அழல்சேர்ந்த
மெழுகே அன்னார் மின்னார் பொன்னார்
கழல்கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந்
தொடராதே
பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப்
பணிகேனே.
 
அழுவது இல்லை உன்மீது அன்பு கொண்டு. மனமது நெருப்பில் இட்ட மெழுகினைப் போல் கரைபவர் பொன் போன்ற உன் திருவடி தொழுதே உன்னை தொடர்ந்தார். நானோ தொடாராதபடி பழுதாக பிறந்தேன். எதைக் கொண்டு உன்னை பணிவேனோ. 
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 87

 à®¤à®¾à®°à®¾à®¯à¯ உடையாய் அடியேற் குன்தா

ளிணையன்பு
பேரா உலகம் புக்கா ரடியார்
புறமேபோந்தேன்யான்
ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்திங் குன்தா
ளிணையன்புக்
காரா அடியேன் அயலே மயல்கொண்
டழுகேனே.
 
தாரமாக பகுதியான பெண்மையை உடையவனே அடியவர்களுக்கு உன் திருவடி அருள் தந்து அளவற்ற இந்த உலகில் உன் அகம் புகந்தார். நானோ புறமாக போயினேன். ஊரார் மலைக்க குருட்டு பசுவும் கூட்டத்துடன் இருப்பிடம் வந்தடைவது போல் உன் திருவடி அன்பால் அடியேனும் அங்கணமே உன்னை அடைய மையல் கொண்டு ஒழுகுகின்றேன்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 86

 à®ªà¯à®±à®®à¯‡ போந்தோம் பொய்யும் யானும்

மெய்யன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம்
பெற்றேன்யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார்
மற்றொன்றறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே
நின்தாள்சேர்ந்தாரே. 
 
பொய்யாகிய எண்ணமும், எண்ணமற்ற உண்மையாகிய நானும் புறமே சென்றோம். மெய்யான அன்பு பெறும் வல்லவன் இல்லாமல் போனேன். அறத்தையே கைக்கொண்ட உன் அடியார் மற்றொன்றை அறியாமல் சிற்ப்பாக செயல்கள் செய்து நல்வழி வந்து சிவனே உன் திருவடி சேர்ந்தாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 85

 à®®à®¾à®©à¯‡à®°à¯ நோக்கி யுடையாள் பங்காமறையீ

றறியாமறையோனே
தேனே அமுதே சிந்தைக்கரியாய் சிறியேன்
பிழைபொறுக்குங்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன்
சிவமாநகர்குறுகப்
போனா ரடியார் யானும் பொய்யும்புறமே
போந்தோமே. 
 
மான் போன்ற மிரளும் பார்வை கொண்டவளை பகுதியாக கொண்ட பங்காளா, மறைநூலும் முடிவை அறியாதபடி மறைந்திருப்பவனே. தேனே அமுதே சிந்தைக்கு எட்டாதவனே, சிறியவனான எனது பிழை பொருப்பதில் அரசனே. சிறிய அளவே எனது கொடுமை எடுத்துரைத்தேன். சிவம் என்ற மாநகருக்கு எளிமையாக போனார்கள் உன் அடியார்கள். நானோ பொய்யும் புறமும் போவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 84

 à®•à®¾à®£à¯ மாறு காணேன் உன்னை அந்நாட்

கண்டேனும்
பாணே பேசி என்தன்னைப் படுத்த தென்ன
பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆரமுதே அத்தா செத்தே
போயினேன்
ஏணா ணில்லா நாயினேன் என்கொண் டெழுகேன்
எம்மானே. 
 
கண்டு அறியும் தன்மை அறியாமல் இருந்தேன் உன்னை அப்படி ஒருநாள் கண்டாலும் இசையோடு பேசி என்தன்னை அமைதி படுத்தியது என்னவென்பேன் பரஞ்சோதி. ஆணே பெண்ணே தீரா அமுதே தாய் போன்றவனே செத்தே போயினேன் ஏற்றம் இல்லாத இனம் சேர்க்காதவன் என ஆனேன் என்று சொல்லி அழுவேன் என் தாயானவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 83

 à®…டியேன் அல்லேன்கொல்லோ தானெனை ஆட்கொண்

டிலைகொல்லோ
அடியா ரானா ரெல்லாரும் வந்துன்
தாள்சேர்ந்தார்
செடிசேர் உடலம்இதுநீக்க மாட்டேன் எங்கள்
சிவலோகா
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு
காணேனே. 
 
அடியவன் நான் இல்லையா ஏற்புடேயதா, நீ என்னை ஆட்கொள்ளவில்லையா இது ஏற்புடையதா, அடியார் ஆன எல்லாரும் உன் திருவடி வந்து சேர்ந்தார். எல்லை காணும் உடல் இது இதை நீக்க மாட்டேன். எங்கள் சிவலோகனே அடியேன் உன்னைக் கண்ணாரக் காணாமல் காட்சி அற்று போக மட்டேன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 82

 à®ªà¯‡à®šà®ªà¯ பட்டேன் நின்னடி யாரில்

திருநீறே
பூசப் பட்டேன் பூதல ரால்உன்
அடியானென்
றேசப் பட்டேன் இனிப்படு கின்ற
தமையாதால்
ஆசைப் பட்டேன் ஆட்பட் டேன்உன்
அடியேனே. 
 
நானும் பேசப்பட்டேன் உனது அடியார்களின் ஒருவனாக. பூசப்பட்டேன் உலக மக்களால் உன் அடியார் என்று. ஏசப்பட்டேன் இனி நடப்பதுடன் ஒத்திசையாமையால். ஆசைப் பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 81

 à®µà®¿à®šà¯à®šà¯à®•à¯ கேடுபொய்க் காகா தென்றிங்

கெனைவைத்தாய்
இச்சைக் கானா ரெல்லாரும் வந்துன்
தாள் சேர்ந்தார்
அச்சத் தாலே ஆழ்ந்திடு கின்றேன்
ஆரூர்எம்
பிச்சைத் தேவா என்னான் செய்கேன்
பேசாயே.
 
இச்சைக்கு கேடு தரும் பொய்யால் ஒன்றும் ஆகாது என்றே இங்கு என்னை வைத்தாய். உன்மீது இச்சை கொண்டவர் எல்லாரும் வந்து உனது திருவடி சேர்ந்தார். நானோ அச்சத்தால் மூழ்குகின்றேன். அளவற்ற பக்தியை பிச்சையாக பெரும் தேவனே நான் என்ன செய்வேன் பேசாயே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 80

 à®‡à®°à¯à®ªà¯à®ªà¯ நெஞ்ச வஞ்ச னேனை ஆண்டு

கொண்ட நின்னதாட்
கருப்பு மட்டு வாய்ம டுத்தெ னைக்க
லந்து போகவும்
நெருப்பு முண்டி யானு முண்டி ருந்த
துண்ட தாயினும்
விருப்பு முண்டு நின்கண் என்கண் என்ப
தென்ன விச்சையே.
 
இரும்பு போன்ற நெஞ்சமுடன் வஞ்சனை செய்த என்னை ஆட்கொண்டாய் எதிர்க்கும் என் வாய் பேச்சை கருப்பு விலகும் போல் விலக செய்தாய் நெருப்பு மூட்டி எதிர்ப்பு செய்திடினும் விருப்பமுடன் உனது கண் என் கண் என்கின்றபடி
செய்தாயே இது என்ன இச்சையோ. 
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 79

 à®šà®¿à®¨à¯à®¤à¯ˆ செய்கை கேள்வி வாக்குச் சீரில்

ஐம்பு லன்களான்
முந்தை யான காலம் நின்னை எய்தி
டாத மூர்க்கனேன்
வெந்தை யாவி ழுந்தி லேனென் உள்ளம்
வெள்கி விண்டிலேன்
எந்தை யாய நின்னை இன்னம் எய்த
 

திருவாசகம் | பாடல் எண் : 78

 à®ˆà®š னேநீ அல்ல தில்லை இங்கும்

அங்கும் என்பதும்
பேசி னேனொர் பேத மின்மை பேதை
யேனென் எம்பிரான்
நீச னேனை ஆண்டு கொண்ட நின்ம
லாஓர் நின்னலால்
தேச னேஓர் தேவ ருண்மை சிந்தி
யாதுசிந்தையே.
 
ஈசனே நீ இல்லாமல் எதுவும் இல்லை அங்குள்ளதும் இங்குள்ளதும். பேசினேன் ஒரு பேதமில்லாமல் பேதையாக. என் தலைவனே நீசன் என ஆன என்னை ஆண்டுகொண்ட அழுக்கற்றவனே ஒருமித்து நின்ற தேசனே இணைந்தது தேவர் அறியும் உண்மை சிந்தித்தது என் சிந்தையே.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 77

 à®Žà®¯à¯à®¤ லாவ தென்று நின்னை எம்பி

ரான்இவ் வஞ்சனேற்
குய்த லாவ துன்க ணன்றி மற்றொ
ருண்மை யின்மையின்
பைத லாவ தென்று பாது காத்தி
ரங்கு பாவியேற்
கீத லாது நின்க ணொன்றும் வண்ண
மில்லை யீசனே. 
 
அடைய முடியாத ஒன்று என ஆன என் தலைவனே இந்த வஞ்சனை மிகுந்த குவலயத்தில் உன்னை அன்றி மற்றோரு உண்மை இல்லை என்பதால் வேகமே வந்து பாதுகாத்தீர். தனிமைப்பட்ட பாவி எனக்கு உன் திருவடி அன்றி நின்னை காணும் வண்ணம் இல்லை ஈசனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 76

 à®¨à®¿à®©à¯ˆà®ªà¯à®ª தாக சிந்தை செல்லு மெல்லை

யேய வாக்கினால்
தினைத்த னையு மாவ தில்லை சொல்ல
லாவ கேட்பவே
அனைத்து லகு மாய நின்னை ஐம்பு
லன்கள் காண்கிலா
எனைத்தெ னைத்த தெப்பு றத்த தெந்தை
பாத மெய்தவே.
 
நினைப்பதற்கு சிந்தை செல்வதில்லை. வாக்கினால் தினையளவும் ஆகின்றதும் இல்லை சொல்லப்படுவதை கேட்பதால். அனைத்து உலகமாக ஆன உன்னை ஐந்து புலன்கள் காண்பது இல்லை. என்னை அனைத்த தெப்புறத்த எந் தந்தை பாதம் எய்தவே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 75

 à®µà®£à®™à¯à®•à¯à®®à¯ நின்னை மண்ணும் விண்ணும் வேதம்

நான்கும் ஓலமிட்
டுணங்கு நின்னை எய்த லுற்று மற்றொ
ருண்மை இன்மையின்
வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து
நின்ற ருளுதற்
கிணங்கு கொங்கை மங்கை பங்க
என்கொ லோ நினைப்பதே.
 
பணியும் உன்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் சப்தத்துடனே. பணியும் உன்னை காரணமான வேறொரு உண்மை இல்லாமையால். பணிந்து உன்னை எங்கள் வீடு எது என கேட்க நின்ற இடத்தை அருளும். இணங்கி இருக்கும் கொங்கை மங்கை பங்கர் என கோலம் தரிப்பதால் தனியாக நினைப்பதுவோ.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 74

 à®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯ நின்க ழற்க ணன்பு பொய்ம்மை

தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயி னேனை ஆவ
என்ற ருளுநீ
பூண்டு கொண்ட டிய னேனும் போற்றி
போற்றி யென்றுமென்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து
மன்னநின்வ ணங்கவே. 
 
வேண்டும் உனது திருவடி அருளும் அன்பு. பொய்மை தீர்த்து மெய்மையே என்னை ஆண்டு இனம் சேர்க்காதவனை தகுதியானவனாக மாற்றிட அருள உன்னை கூடி கொண்டாடி நானும் போற்றி போற்றி போற்றி என்று என்றும் மீண்டும் மீண்டும் வந்து வந்து மன்னவனே உன்னை வணங்கவே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 73

 à®à®¯ நின்ன தல்ல தில்லை மற்றொர்

பற்று வஞ்சனேன்
பொய்கலந்த தல்ல தில்லை பொய்ம்மை
யேன்என் எம்பிரான்
மைக லந்த கண்ணி பங்க வந்து
நின்க ழற்கணே
மெய்க லந்த அன்ப ரன்பெ னக்கு
மாக வேண்டுமே. 
 
ஐயா உம்மை இன்றி வேறு ஒன்று இல்லை தில்லை நடராசனே ஆர்வமுடன் பற்று கொள்ள. பொய் கலந்தது இல்லை தில்லை நடராசனே பொய்யானவன் நான் என் தலைவனே. மை கலந்த கண் கொண்டவரை பாகமாக கொண்டு உன் திருவடியை காணும் மெய் கலந்த அன்பர்கள் போல் எனக்கும் ஆக வேண்டுமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 72

 à®ªà¯‹à®•à®®à¯ வேண்டி வேண்டி லேன்பு ரந்த

ராதி இன்பமும்
ஏக நின்க ழல்லி ணைய லாதி
லேனென் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி
அஞ்ச லிக்கணே
ஆக என்கை கண்கள் தாரை ஆற
தாக ஐயனே. 
 
போகம் வேண்டும் என்று வேண்டவில்லை உடல் சார்ந்த இன்பமும் ஏக உனது கழல் இணையே இதுவன்றி வேறு விரும்பிலேன் என் தலைவனே உள்ளிருப்பில் இருந்து கம்பம் வந்து தலைமயிர் வெளிப்பட்டவனே இதனால் என் கைகள் தொழ கண்களில் நீர் தாரையாகி நின்கிறேன் ஐயனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 70

 à®ªà¯‹à®±à¯à®±à®¿à®‡à®ªà¯ புவனம் நீர்தீக்

காலொடு வான மானாய்
போற்றிஎவ் வுயிர்க்குந் தோற்றம்
ஆகிநீ தோற்ற மில்லாய்
போற்றிஎல் லாஉ யிர்க்கும்
ஈறாய்ஈ றின்மை யானாய்
போற்றிஐம் புலன்கள்நின்னைப்
புணர்கிலாப் புணர்க்கை யானே.
 
போற்றி இந்த புவியாய் நீராய் தீயாய் காற்றாய் வானமாய் ஆனாய் போற்றி எல்லா உயிர்களுக்கும் தோற்றமாய் ஆகிய நீ தோற்றமில்லாது இருக்கின்றாய் போற்றி எல்லா உயிர்களுக்கும் முடிவாய் தனக்கு ஒரு முடிவு அற்றவனாய் இருக்கின்றாய் போற்றி ஐந்து புலன்களும் உன்னை கூடிடவில்லை கூடி இருப்பவனே.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 69

 à®¤à¯€à®°à¯à®¨à¯à®¤à®…ன் பாய அன்பர்க்

கவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும்என் பொய்ம்மை யாட்கொண்
டருளிடும் பெருமை போற்றி
வார்ந்தநஞ் சயின்று வானோர்க்
கமுதம்ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்தநின் பாதம் நாயேற்
கருளிட வேண்டும் போற்றி
 
எல்லையில் முற்று பெற்ற அன்பாகிய அன்பர்க்கும் அவரினும் அன்பானவனே போற்றி பொய்மையால் மூடிக் கொண்டாலும் என்னை ஆட்கொண்டு அருளிடும் பெருமை போற்றி வார்த்த நஞ்சை எடுத்துக் கொண்டு வானவர்களுக்கு அமுதம் கொடுத்த வள்ளல் போற்றி. நிறைவுதரும் உனது பாதத்தை இனம் சேர்க்கா எனக்கு அருளிட வேண்டும் போற்றி.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 68

 à®’ருவனே போற்றி ஒப்பில்

அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள்
கோமளக் கொழுந்து போற்றி
வருகஎன் றென்னை நின்பால்
வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி
தமியனேன் தனிமை தீர்த்தே.
 
ஒருவனே போற்றி நிகர் வைக்க முடியா அப்பனே போற்றி வானவர்களுக்கு குருவாக இருப்பவனே போற்றி எங்கள் எல்லையற்ற வளர்ச்சியின் கொழுந்தே போற்றி வருக என்று என்னை உன்பால் வாங்கிட வேண்டும் போற்றி உமது பாதத்தை தருக போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 67

 à®Žà®®à¯à®ªà®¿à®°à®¾à®©à¯ போற்றி வானத்

தவரவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை
கூறவெண் ணீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத்
திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை
ஆளுடை ஒருவ போற்றி.
 
என் தலைவனே போற்றி மேலானவர்கள் தனித்தனியே உயர்ந்தும் ஒன்றே போற்றி கடினமற்ற உறுப்புடைய மங்கை வெளிப்படுத்தா வெண்ணீற போற்றி. செழுமையான தலைவனே போற்றி, துள்ளி ஆடும் உயர்வுடைய சிற்றமே இருப்பவனே போற்றி. தேவனே போற்றி என்னை ஆளும் ஒருவனே போற்றி.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 66

 à®‡à®´à®¿à®¤à¯à®¤à®©à®©à¯ என்னை யானே

எம்பிரான் போற்றி போற்றி
பழித்திலேன் உன்னை என்னை
ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம்
பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடிவ் வாழ்வு போற்றி
உம்பர்நாட் டெம்பி ரானே. 
 
இழுவு செய்தேன் என்னே நானே என் தலைவனே போற்றி போற்றி பழித்து பேசியது இல்லை உன்னை என்னை ஆளும் பாதம் போற்றி பிழையானதை பொறுப்பது எல்லாம் பெரியவர் கடமை போற்றி ஒழித்திடு இந்த வாழ்வை போற்றி. தேவர்கள் நாடும் என் தலைவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 65

 à®šà®™à¯à®•à®°à®¾ போற்றி மற்றோர்

சரணிலேன் போற்றி கோலப்
பொங்கரா அல்குற் செவ்வாய்
வெண்ணகைக் கரிய வாட்கண்
மங்கையோர் பங்க போற்றி
மால்விடை யூர்தி போற்றி
இங்கிவாழ் வாற்ற கில்லேன்
எம்பிரான் இழித்திட் டேனே. 
 
துடைப்பவனே போற்றி வேறொரு துணை நாடாதவனே போற்றி பொங்கும் பாம்பின் விரிந்த படத்தில் சிவந்த வாய் கொண்ட உறுப்பும் வெண்மை படர்ந்த அரிய வாள் போன்ற கண்ணும் கொண்ட பெண்மைக்கு பாகம் தந்தவனே போற்றி அளவுகளை அளக்கும் ஊர்தி போற்றி இங்கே வாழ ஆற்ற இயலேன் என் தலைவனே இழிவாக்கப்பட்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 64

 à®•à®Ÿà®µà¯à®³à¯‡ போற்றி என்னைக்

கண்டுகொண் டருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை
ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்திட் டொல்லை
உம்பர்ததந் தருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த
சங்கரா போற்றி போற்றி
 
உள்ளே வைத்த கடவுளே போற்றி என்னை கண்டு கொண்டு அருள்பவனே போற்றி. விடாத எனக்குள்ளே நின்று உருக்கி ஆண்டிட வேண்டும் போற்றி உடலை களைத்திட்டு எல்லை காண தேவர் தந்து அருள்பவனே போற்றி சடை உள்ளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 63

 à®ªà¯‹à®±à¯à®±à®¿à®Žà®©à¯ போலும் பொய்யர்

தம்மைஆட் கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி
நாதனே போற்றிபோற்றி
போற்றிநின் கருணை வெள்ளப்
புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்றிய மானன் வானம்
இருசுடர்க் கடவு ளானே 
 
போற்றி என்று என்னைப் போல் பொய்யாக சொல்பவர் தம்மையும் ஆட்கொள்ளும் வள்ளல். போற்றி நின்பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி. போற்றி நின் கருணை வெள்ளப் புது மது நிறையும் மண், நீர் தீ காற்று கடந்த வானம் இரு சுடர் உள்ளடக்கிய கடவுளானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 61

 à®¤à®°à®¿à®•à¯à®•à®¿à®²à¯‡à®©à¯ காய வாழ்க்கை

சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள்
விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர்
தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள்
நின்மலா போற்றி போற்றி.
 
தாங்க முடியவில்லை உடல் கொண்ட வாழ்வை சங்கரா போற்றி வான விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஈடு அற்ற ஒருவனே போற்றி தேவர்களின் தனித் தலைவனே போற்றி தில்லையில் நின்றவனே போற்றி அழுக்கற்றவனே போற்றி போற்றி.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 60

 à®ªà¯à®•à¯à®µà¯‡à®©à¯ எனதே நின்பாதம்

போற்றும் அடியா ருள்நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி
நாண மில்லா நாயினேன்
நெகும்அன் பில்லை நினைக்காண
நீஆண் டருள அடியேனுந்
தகுவ னேஎன் தன்மையே
எந்தாய் அந்தோ தரியேனே.
 
உனக்குள் புகுவேன் எனக்கானவனே உன் பாதம் போற்றும் அடியார்களுடன் நின்று. வெட்கப்படுவேன் முன்னர் தோள் நோக்கி நாணமில்லா நாய் போல் இருந்ததால் நெருங்கும் அன்பில்லை உன்னை காண நீ ஆண்டு அருள அடியேனும் தகுதியுடையவன் ஆவேன் என் தாய் போன்றவனே அரிதானவனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 59

 à®¤à®©à¯à®®à¯ˆ பிறரால் அறியாத

தலைவா பொல்லா நாயான
புன்மை யேனை ஆண்டையா
புறமே போக விடுவாயோ
என்னை நோக்கு வார்யாரே
என்நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழுந் திருமேனி
எந்தாய் எங்குப் புகுவேனே.
உன் தன்மை பிறரால் அறியமுடியாதபடி இருக்கும் தலைவா. பொல்லாத இனம் சேர்க்கா நாய் போன்ற என்னை ஆள்பவனே, உன்னை கடந்து புறமே போக அனுமதிப்பாயோ, என்னை கவனிப்பவர் யாரோ, என்ன நான் செய்வேன் எம் பெருமானே. பொன்னே போன்ற விளங்கும் திருமேனி கொண்ட என் தந்தையே எங்கு அடைக்கலம் புகுவேன்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 58

 à®¤à¯‡à®©à¯ˆà®ªà¯ பாலைக் கன்னலின்

தெளிவை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை
உம்ப ரானை வம்பனேன்
நானின் னடியேன் நீஎன்னை
ஆண்டாய் என்றால் அடியேற்குத்
தானுஞ் சிரித்தே யருளலாந்
தன்மை யாம்என் தன்மையே.
 
சிறுக சிறுக சேமித்த தேனை, உடனுக்கு உடன் கறக்கப்படும் பாலை, காலத்தின் தெளிவை ஒளியைத் தெளிந்தவர்கள் தம் உடலை உருக வைக்கும் உடலில் இருப்பவனை அமரர் தலைவனை வீண் வம்பு பேசினேன். நான் உன் அடிமை நீ என் ஆண்டான் என்றால் அடியவர்க்கு தானும் சிரித்தே அருள்வாய் இத்தன்மை தான் என்ன தன்மையோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 57

 à®®à¯à®Ÿà®¿à®¤à¯à®¤ வாறும் என்றனக்கே

தக்க தேமுன் னடியாரைப்
பிடித்த வாறும் சோராமற்
சோர னேன்இங் கொருத்திவாய்
துடித்த வாறும் துகிலிறையே
சோர்ந்த வாறும் முகங்குறுவேர்
பொடித்த வாறும் இவையுணர்ந்து
கேடென் றனக்கே சூழ்ந்தேனே.
 
முடிவுகளை முன்னமே முடித்து எனக்கு என்றே தந்து தகுந்த முன் மாதிரியான அடியாரை பிடித்தும் பற்றி இருக்காமல் பற்றினேன் இங்கே ஒருத்தியின் வாய் சொன்னபடியே செய்தும், துடிப்புக்கு இணங்கி துகில் களைந்தும் இணைவதற்கு இணங்கி முகம் மலர்ந்தும் சொன்னபடியே தூளாகினேன் என்பதை உணர்தும் கேடு எனக்கு என்று சூழ்ந்தேனே.
 

திருவாசகம் | பாடல் எண் : 56

 à®‰à®Ÿà¯ˆà®¯à®¾ னேநின் றனைஉள்கி

உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதஞ்
சேரக் கண்டிங் கூர்நாயிற்
கடையா னேன்நெஞ் சுருகாதேன்
கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங்
கிருப்ப தாக முடித்தாயே.
 
எல்லாவற்றையும் உடைமையாக உடையவனே நின்னை உள்ளத்தால் நினைத்து உருகும் தீராத காதல் உள்ளவர்கள் உன்ன ஐஉடைமையாக்க உன் திரப்பாதத்தை சேரக் கண்டும் கேடு கெட்டு இனத்தை வெறுக்கும் இனமானேன். இறுதியானவனானேன், நெஞ்சம் உர்காமல் என் கல்லாத மனத்தால் கசியாது என் உறவுகளுடன் புழுக்களைப் போல் கூடி இருப்பதற்கே முடித்தாயே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 55

 à®®à®¾à®©à¯‹à®°à¯ நோக்கி உமையாள்

பங்கா வந்திங் காட்கொண்ட
தேனே அமுதே கரும்பின்
தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே உன்தன் திருக்குறிப்புக்
கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூ டிதுகாத்திங்
கிருப்ப தானேன் உடையானே. 
 
மான் போல் பார்க்கும் உயிரை அடக்கியவள் பாகம் கொண்டவனே, தேனே அமுதே கரும்பின் சார் போல் பிரித்து எடுக்க முடிந்த தெளிவே, சிவனே தெரியச் செய்யும் ஆடல் புரியும் தலைவனே உனது திருக் குறிப்பை உணர்ந்து கூடுவார் உன் திருபாதத்தை. உடல் கொண்டவர்கள் புழுவைப் போல் இருக்க அவர்களுடன் காத்திருப்பவனானேன். எல்லாம் உடையவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 54

 à®‰à®²à®µà®¾à®•à¯ காலந் தவமெய்தி

உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்
பலமா முனிவர் நனிவாடப்...
பாவி யேனைப் பணிகொண்டாய்
மலமாக் குரம்பை இதுமாய்க்க
மாட்டேன் மணியே உனைக்காண்பான்
அலவா நிற்கும் அன்பிலேன்
என்கொண் டெழுகேன் எம்மானே.
அங்கு இங்கு என்று அலையாமல் நிண்ட காலமாய் ஒர் இடத்தில் இருக்கும் காலத் தவம் செய்து உடல் சுகம் தரும் உறுப்பையும் வெறுத்து உன்னை காண்பார்கள் பல முனிவர்கள் அதை நாடி வாடாப் பாவி என்னை பணி கொண்டாய் மலமான குரம்பை இது மாய்க்க இடம் தரமாட்டேன் மணியே உன்னை காண்பேன்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 53

 à®ªà¯‹à®°à¯‡ றேநின் பொன்னகர்வாய்

நீபோந் தருளி யிருள்நீக்கி
வாரே றிளமென் முலையாளோ
டுடன்வந் தருள அருள்பெற்ற
சீரே றடியார் நின்பாதஞ்
சேரக் கண்டுங் கண்கெட்ட
ஊரே றாய்இங் குழல்வேனோ
கொடியேன் உயிர்தான் உலவாதே.
 
பேர் பெற்றவனே உன் பொன் நிகர் வாய் போந்தருளி இருளை அகற்றி இளமென் முலையாளுடன் வந்தருள அருள் பெற்ற சீர் பெற்ற அடியர் நினது பாதத்தை சேரக் கண்டும் கண் கெட்டு ஊர் ஊராய் உழல்வேனோ கொடியவனான என் உயிர் தான் பிரியாதோ.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 52

 à®šà¯†à®¯à¯à®µ தறியாச் சிறுநாயேன்

செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும்பே றத்தனையும்
பெறுதற் குரியேன் பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம்
மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங்
கிருப்ப தானேன் போரேறே.
 
செய்வதை அறியாத சிறுமைபட்டவனாய் ஆனேன். செழுமையான பொற்பாத மலரை காணாத பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுவதற்கு உரிமையுள்ளவன். பொய் இல்லாத மெய்யர் ஆர்வம் குறையாது மலர் பாதம் மேவக் கண்டும் கேட்டும் பொய்யாக இருந்தேன். நான் உண்டும் உடுத்தியும் இருப்பவனானேன் பேர் பெற்றவனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 51

 à®ˆà®šà®©à¯‡ என் எம்மானே

எந்தை பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதுமொன்
றல்லாப் பொல்லா நாயான
நீச னேனை ஆண்டாய்க்கு
நினைக்க மாட்டேன் கண்டாயே
தேச னேஅம் பலவனே
செய்வ தொன்றும் அறியேனே.
ஈசனே என் தாய்மாமனே என் தந்தையான அளக்க அருமையானவனே எனது பிறவியை அழிப்பவனே. நான் எந்த ஒன்றும் இல்லா பொல்லாத இனத்தை வெறுக்கும் நாய் போன்ற நீசனே. என்னையும் ஆட்கொண்டாய் எனிலும் உன்னை நினைக்கமட்டேன் என்று கண்ட உலகமானவனே எங்கும் வெளிப்படுபவனே செய்யக்கூடிய ஒன்றும் அறியனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 50

 à®…றிவ னே அமு தே அடி நாயினேன்

 à®…றிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது
 à®…றிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்
 à®…றிவ னோஅல்ல னோஅரு ளீசனே. 
 
அறிவானவனாக்கும் அமுதே தன் இனத்தை வெறுக்கும் நாய் போன்றவனானேன் என்னை அறிவுள்ளவனாக்கவே என்னை ஆட்கொண்டாய். அறிவற்று அன்றே நான் கண்ட நாள் அறிவேனோ இல்லையோ அருள் ஈசனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 49

 à®•à®Ÿà¯à®Ÿ றுத்தெனை யாண்டுகண் ணாரநீ

 à®±à®¿à®Ÿà¯à®Ÿ அன்பரொ டியாவருங் காணவே
 à®ªà®Ÿà¯à®Ÿà®¿ மண்டபம் ஏற்றினை ஏற்றினை
 à®Žà®Ÿà¯à®Ÿà®¿ னோடிரண் டும்அறி யேனையே. 
 
பாசக் கட்டுகளை அறுத்து என்னை ஆட்கொண்ட நீ கண்ணார நிறு புசிய அன்பர்களுடன் யாவருங் காணவே பட்டி மண்டபம் ஏற்றினாய். ஏற்றி எட்டு இரண்டு என்ற அ உ அறியச் செய்தாயே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 48

 à®šà¯†à®²à¯à®µà®®à¯ நல்குர வின்றிவிண் ணோர்புழுப்

 à®ªà¯à®²à¯à®µ ரம்பின்றி யார்க்கும் அரும்பொருள்
 à®Žà®²à¯à®²à¯ˆ யில்கழல் கண்டும் பிரிந்தனன்
 à®•à®²à¯à®µ கைமனத் தேன்பட்ட கட்டமே. 
 
செல்வம் வறுமை என்று இல்லாமல் விண்ணோர் புழ புல் என்ற வரம்பில்லாமல் யார்க்கும் அரும் பொருளாய் எல்லையின்று இருப்பதின் பாதம் கண்டும் பிரித்தனன் என்றால் கல் போன்ற மனம் அடைந்த காரணமே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 47

 à®Žà®¨à¯à®¤à¯ˆ யாய் எம்பி ரான் மற்றும் யாவர்க்கும்

 à®¤à®¨à¯à®¤à¯ˆ தாய் தம்பி ரான் தனக் கஃதிலான்
 à®®à¯à®¨à¯à®¤à®¿ என்னுள் புகுந்தனன் யாவருஞ்
 à®šà®¿à®¨à¯à®¤à¯ˆ யாலும் அறிவருஞ் செல்வனே.
 
எனது தந்தையாய் எமது தலைவன்மேலும் யாவரக்கும் அப்படியே தந்தை தாய் தலைவன் என இருக்க எனக்கு அப்படி மட்டும் இல்லாமல் முன்னமே எனக்குள் புகுந்து எவரும் சிந்தையாலும் அறியமுடியாதபடி செல்வனாய் இருக்கிறான்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 45

 à®•à¯Šà®³à¯à®³à¯à®™à¯ கொல்லெனை அன்பரிற் கூய்ப்பணி

கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே. 
 
ஆட்கொண்டு அழிப்பவனை அன்பர்களை அழைத்து பணிப்பவனை மயக்கும் கள்ளையும் மயக்கும் வண்டையும் நித்தம் மலரச் செய்யும் வெற்றியாளன் நாடும் கீழானதும் மேலாக உள்ளதும் ஏனைய பலவும் எள்ளும் எண்ணெயும் போல் நின்ற என் தந்தையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 44

 à®•à®¾à®£ லாம்பர மேகட்கி றந்ததோர்

 à®µà®¾à®£à®¿ லாம்பொரு ளேஇங்கொர் பார்ப்பெனப்
 à®ªà®¾à®£ னேன்படிற் றாக்கையை விட்டுனைப்
 à®ªà¯‚ணு மாறறி யேன்புலன் போற்றியே. 
 
காணலாம் பரமே கண்டு மகிழ்ந்தவர் விளிக்கி சொல்லமுடியா பொருளே இங்கும் ஓர் பார்பானாய் தொடர்கிறேன். வளர்ந்து ஆக்கையை விட்டு உன்னை பூண அறியேன் புலன் போற்றியே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 43

 à®®à¯‡à®²à¯ˆ வானவ ரும்மறி யாததோர்

 à®•à¯‹à®² மேயெனை ஆட்கொண்ட கூத்தனே
 à®žà®¾à®² மேவிசும் பேஇவை வந்துபோம்
 à®•à®¾à®² மேஉனை யென்றுகொல் காண்பதே. 
 
மேலான வானவர்களும் அறியாத ஓர் கோலமே
 à®Žà®©à¯à®©à¯ˆ ஆட்கொண்ட கூத்தனே, விரிந்த உலகே துளிர்விடும் விசும்பே, இவைகள் வந்து போகும் காலமே, உன்னை என்று முழுமையாக ஏற்க காண்பதே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 41

 à®‡à®°à¯à®•à¯ˆ யானையை ஒத்திருந் தென்னுளக்

கருவை யான்கண்டி லேன் கண்ட தெவ்வமே
வருக வென்றுப ணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன் கிற்பன் உண்ணவே. 
 
இரண்டு கைகள் கொண்ட யானையைக்கு ஒத்திருந்தேன் உள்ளத்தின் கருவாக இருப்பதை நான் கண்டு அறியவில்லை அதை கண்ட அப்பொழுதே வருக என்று ஆணையிட்டு அழைத்தீர். மேலானவர்களுடன் ஒருவனாய் இல்லாமல் இருந்தேன் . இனி பிரியமாட்டேன் அநுபவிக்கவே.
#திருவாசகம்.
 

திருவாசகம் | பாடல் எண் : 39

 à®“ய்வி லாதன உவமனில் இறந்தன

ஓண்மலர்த் தாள்தந்து
நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும்
என்னைநன் னெறிகாட்டித்
தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன்
தலைவனை நனிகாணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன்
செழுங்கடல் புகுவேனே.
 
ஓய்வின்று செயல்பட்டவை தனித்தனியாக இறந்தன. தனக்காக மலர் தாள்தந்து இனத்திற்கே கேடு செய்யும் குலத்தை விட  கிழான என்னை நல்ல பாதை காட்டி தாயைப் போல் இனிமையான நல்லருள் புரிந்தான். அந்த தலைவனை விரும்பி காண முயலவில்லை. நெருப்பும் மிதிக்கவில்லை, தரையில் உருளவில்லை, இருப்பினும் செழுமையான கடலில் புகுவேன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 31

 à®†à®Ÿà¯ கின்றிலை கூத்துடை யான்கழற்

கன்பிலை என்புருகிப்
பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை
பணிகிலை பாதமலர்
சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை
துணையிலி பிணநெஞ்சே
தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை
செய்வதொன் றறியேனே.
 
ஆடுவது இல்லை கூத்துடையவனின் பாதம் கண்டு என்புருகி பாடுவதும் இல்லை பதைப்பதும் செய்வதில்லை பணிவதும் இல்லை பாதமலர் சூடுவதும் இல்லை சூட்டுவதும் இல்லை துணையற்ற பிண நேஞ்சே தேடுகின்றவர் இல்லை தெரிந்து தேறுபவரும் இல்லை இதனால் செய்வது ஒன்றும் அறியேனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 30

 à®¤à¯‡à®µà®°à¯à®•à¯‹ அறியாத தேவ தேவன்

செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றை
மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாதாளும் பாகத் தெந்தை
யாவர்கோன் என்னையும்வந் தாண்டு கொண்டான்
யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவனடியார் அடியா ரோடும்
மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே. 
 
தேவர்களின் தலைவனும் அறியாத தேவதேவன் செழுமையும் எழிலானதையும் படைத்து காத்து அழிக்கும் ஒருமையாகி  மூவர் தலைவனாய் நின்ற முதல்வன் மூர்த்தியாகவும் மூதாதையாகவும் பெண்ணை சமபாகமாக கொண்ட என் தந்தை யாருக்கும் தலைவன் என்னை ஆண்டு கொண்டான் நான் எக்குடியிலும் அடிமையாக இருக்க மாட்டோம் எதற்கும் அஞ்சமாட்டேன் உணர்ந்து கூடினோன் அவனது அடியார்களின் அடியாரோடு மேலும் மேலும் கொண்டாட்டமுடன் குதித்து ஆடுவோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 29

 à®µà®¿à®šà¯à®šà¯ˆà®¤à®¾à®©à¯ இதுவொப்ப துண்டோ கேட்கின்

மிகுகாதல் அடியார்தம் அடிய னாக்கி
அச்சந்தீர்த் தாட்கொண்டான் அமுதம் ஊறி
அகம்நெகவே புகுந்தாண்டான் அன்பு கூர
அச்சன்ஆண் பெண்ணலிஆ காச மாகி
ஆரழலாய் அந்தமாய் அப்பால் நின்ற
செச்சைமா மலர்புரையும் மேனி எங்கள்
சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே.
 
இச்சைதான் இதற்கு சமமானது உண்டோ என கேட்டால் அதிகமான காதலால் அடியவர்க்கு அடியவனாகி அச்சத்தை தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊற்றெடுத்து அகம் மகிழ புகுந்து ஆண்டான் அன்பு பெருக. தந்தையானவன் ஆண் பெண் அலி ஆகாசம் என ஆகி தேர்ந்த அழகாய் முடிவாய் அப்பால் நின்ற எல்லாம் கடந்ததை மலராக அணிந்த மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர் அரசே.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 28

 à®¤à®©à®¿à®¯à®©à¯‡à®©à¯ பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்

தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்
டினியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே.
 
அமைதி அருள்பவனே நான் பெரும்பிறவிப் பெற்றதால் பற்றிய தடந்திரையால் ஏற்றுக் கொண்டு பற்றில் ஒன்றிக் கனியை ஒத்த நேரான வக்கு உடையவரால் எனது காலத்தை கணக்கில் கொண்டு ஆசை என்ற சுறாவின் வாய்பட்ட அடிமை என்னை உய்யுமாறு செய்ய வேண்டுமாய் சதா எண்ணி அஞ்செழுதினை பற்றி இருக்கிறேன் . முனைவனே முதல் அந்தம் இல்லாமற் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்கனான எனக்கே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 27

  தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்

தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்
டினியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே.
 
அமைதி அருள்பவனே நான் பெரும்பிறவிப் பெற்றதால் பற்றிய தடந்திரையால் ஏற்றுக் கொண்டு பற்றில் ஒன்றிக் கனியை ஒத்த நேரான வக்கு உடையவரால் எனது காலத்தை கணக்கில் கொண்டு ஆசை என்ற சுறாவின் வாய்பட்ட அடிமை என்னை உய்யுமாறு செய்ய வேண்டுமாய் சதா எண்ணி அஞ்செழுதினை பற்றி இருக்கிறேன் . முனைவனே முதல் அந்தம் இல்லாமற் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்கனான எனக்கே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 26

 à®šà®¿à®¨à¯à®¤à®©à¯ˆà®¨à®¿à®©à¯ றனக்காக்கி நாயி னேன்றன்

கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர
வந்தனை ஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனை செந் தாமரைக்கா டனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே.
 
எனது சிந்தனையை உனக்கே என மாற்றி நன்றியுள்ள விலங்கான எனது கண்ணிணை திருப்பாதப் போது என ஆக்கி வந்தனம் அனைத்தையும் அம்மலருக்கே ஆக்கி வாக்கும் மணிவார்த்தை என ஆக்கி ஐந்து புலன்கள் ஆர வந்து என்னை ஆட்கொண்டு உள்ளே புகுந்து இச்சை முதல் பெருங்கடலே மலையே உன்னைத் தந்தனை செந்தாமரைக் காடு அனைய மேனித் தனிச்சுடரே இரண்டு என ஏதும் இல்லை தனியே எனக்கு.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 25

 à®µà®£à¯à®£à®¨à¯à®¤à®¾à®©à¯ சேயதன்று வெளிதே யன்ற

நேகன்ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்றங்
கெண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமா றறியாத எந்தாய் உன்றன்
வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்
திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்
எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக் கேனே.
 
வண்ணங்கள் தான் அருகே இருப்பதில்லை வெளியே மட்டுமே என்ற அநேகன் ஏகன் அணுவுக்கும் அணிவில் மறைந்தாய் என்ற எண்ணமுடன் தடுமாறி இமைக்க மறந்தோர் (தவம் செய்பவர்) கூட்டம் அடைய வழி அறியாமல் இருக்க என் தாயே உனது வண்ணம் காட்டி வடிவு காட்டி மலர் கழல்களையும் காட்டி வழிபடுத்தி என்னை திடமாக பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் எம்பெருமான் என்ன சொல்லி சிந்திப்பேன்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 24

 à®ªà¯‡à®šà®¿à®±à¯à®±à®¾à®®à¯ ஈசனே எந்தாய் எந்தை

பெருமானே என்றென்றே பேசிப் பேசிப்
பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசிப்
போற்றியெம் பெருமானே என்று பின்றா
நேசத்தாற் பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே அவாவெள்ளக் கள்வ னேனை
மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னைநீ ஆட்கொண்ட வண்ணந் தானே.
 
பேசியே உணர்வு பெற்றோம் ஈசனே எனது தாயே என் தந்தையே பெருமானே என்றேன்றே பேசிப் பேசிப் பூசிக் கொண்டோம் திருநீறே நிறையப் பூசிப் போற்றினோம் எம் பெருமானே என்று பிரிவற்ற நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தவர் தம்மை ஆண்டவனே ஆசையை வெள்ளமாக கொண்ட கள்வனே என்னுடைய மாசில்லா மணிக்குன்றே என் தாயே அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணந்தானே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 23

 à®†à®¯à®¨à®¾à®©à¯ மறையவனும் நீயே யாதல்

அறிந்தியான் யாவரினுங் கடைய னாய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு
நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்
அடியார்தாம் இல்லையே அன்றி மற்றோர்
பேயனேன் இதுதான்நின் பெருமை யன்றே
எம்பெருமான் என்சொல்லிப் பேசு கேனே.
 
ஆய்ந்து அறிய நல்ல மறை நூல்களாக ஆனவனும் நீயே என்பதை அறிந்திலேன். யாவரிலும் கடையனாக நான் ஆயினும் அப்பொழுதும் உம்மை நோக்கி நாதனே நான் உனக்கோர் அம்பன் என்பேன். ஆதலால் என்னை ஆண்டு கொண்டாய். அடியாராக இல்லையே அன்றி மற்றபடி திவிரமாக இருந்தேன். இதுவே நினது பெருமை என்றே எம் பெருமான் எனசொல்லி பேசுவேனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 22

 à®µà®¿à®©à¯ˆà®¯à®¿à®²à¯‡ கிடந்தேனைப் புகுந்து நின்று

போதுநான் வினைக்கேடன் என்பாய் போல
இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை
ஆட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை
அனையநான் பாடேன் நின் றாடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான் ஆன வாறு
முடிவறியேன் முதல்அந்தம் ஆயி னானே.
 
செயல்களிலேயே கிடந்த எனது உள்ளே புகுந்து நின்ற பொழுதும் என் செயல்களை நிறுத்தாமல் இருக்கின்றாயே என்பது போல் என்னை நிகராக உனக்குள் இருக்கிறேன் என்று அறிவித்து ஆட்படுத்திக் கொண்ட எம் தலைவனை திடமான பொம்மையாய் பாடவில்லை ஆடவும் இல்லை அய்யோ அலறிடவோ உலறிடவோ செய்யவில்லை. ஆவி சோர்ந்திடவும் இல்லை. முனைவனே முறையோ நான் அவ்வாறு இருப்பது முடிவறியேன். முதலும் அந்தமுமாய் ஆனவனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 21

 à®µà¯†à®³à¯à®³à®¨à¯à®¤à®¾à®´à¯ விரிசடையாய் விடையாய் விண்ணோர்

பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண்ணிணையு மரமாம் தீ வினையி னேற்கே.
 
கீழ் நோக்கி பாயும் வெள்ளத்தை தாழ்ந்த விரி சடையில் கொண்ட விடையாக இருக்கும் விண்ணோர்களின் உயர்தலைவனே எனக் கேள்விப்பட்டும் ஒட்டாமல் நெஞ்சம் பள்ளத்தில் இருக்கும் உறுப்பு கொண்ட புனலிற் கீழ் மேலாக பதைத்து உருகும் அவர்கள் பணிந்து நிற்க என்னை ஆண்டாய். எனக்குள்ளே அடி முதல் உச்சி அளவும் நெஞ்சமாய் உருக்கத்தால் உடம்பொல்லாம் கண்ணாய் அண்ணா வெள்ளத்தால் பாயாததால் நெஞ்சம் கல்லாம் கண்களும் மரமாம் தீமையே செய்பவர்க்கே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 20

 à®µà®¾à®´à¯à®•à®¿à®©à¯à®±à®¾à®¯à¯ வாழாத நெஞ்சமே

வல்வினைப்பட்
டாழ்கின்றாய் ஆழாமற் காப்பானை
ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன்
பல்காலும்
வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய
வெள்ளத்தே.
 
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் சீராக வாழாத என் நெஞ்சமே. கடின செயல்களுக்கு ஆட்பட்டு மறைகிறாய். அப்படி ஆட்படாமல் காப்பவனை புகழ்ந்து பரவாமல் கேடுகளால் சூழ்ந்து கொள்ளும் எனக்கே சொல்கின்றேன். பலகாலமாய் வீழ்ந்தே கிடக்கின்றாய் நீ அவலம் நிறைந்த கடலாகிய வெள்ளத்தே.
‪#‎திருவாசகம்‬.
 

திருவாசகம் | பாடல் எண் : 19

 à®µà¯‡à®©à®¿à®²à¯à®µà¯‡à®³à¯ மலர்க்கணைக்கும்வெண்ணகைச்செவ்

வாய்க்கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும்
பாழ்நெஞ்சே
ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான்
இன்றுபோய்
வானுளான் காணாய்நீ மாளாவாழ்
கின்றாயே.
 
பருவ காலத்து மலர்களின் கணைக்கும் மிருதுவான சிவந்த வாய்க்கும் அரிய பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் நெஞ்சே உடல் முழுவதும் நின்று உருக புகுந்து ஆள்பவனை இன்றே போய் வானாய் இருப்பவனை காணாமல் நீ மதிகெட்டு வாழ்கின்றாயே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 18

 à®…ரியானே யாவர்க்கும் அம்பரவா

அம்பலத்தெம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட
பெய்கழற்கீழ்
விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறேன்
நயந்துருகேன்
தரியேன் நான் ஆமாறென் சாவேன்நான்
சாவேனே. 
 
அறுவடைப் பொருளே யாவருக்கும் அளப்பவனே. அளவற்ற எம் பெரியவனே சிறியவனாகிய என்னை ஆட்கொண்டவனே பெய்யான திருவடி கீழ் வீரியம் மிகுந்த மலர்களை தூவமாட்டேன். வியப்புடன் இருக்க மாட்டேன் நயமுடன் உருகமாட்டேன் வேடங்கள் தரிக்க மாட்டேன் ஏமாறமாட்டேன் சாவன் நான் என்பதை சாகடிப்பேனே.
#திருவாசகம்.
 

திருவாசகம் | பாடல் எண் : 17

 à®°à®µà¯à®µà®¾à®°à¯ இமையோர்கள் பாடுவன

நால்வேதம்
குரவுவார் குழல்மடவாள் கூறுடையாள்
ஒருபாகம்
விரவுவார் மெய்யன்பின் அடியார்கள்
மேன்மேல்உன்
அரவுவார் கழலிணைகள் காண்பாரோ
அரியானே.
 
பரவுவார் இமைக்காதவர்கள் அவர்கள் பாடுவதோ நான்கு வேதம். நறுமணம் கொண்ட கூந்தள் உடைய பகுதியானவள் உன்னை ஒருபாகம் கொண்டாள். கலந்துவிடுவார்கள் மெய்யின் அன்பு கொண்ட அடியார்கள் மேலும் மேலும் உன் பாம்பு போன்ற நெகழும் இணை அடியை காண்பரோ அறுவடைப் பொருளே.
 

திருவாசகம் | பாடல் எண் : 16

 à®µà®¾à®´à¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯à®®à¯ வானவர்கள் தாம்வாழ்வான்

மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாந்
தொழவேண்டிச்
சூழ்த்துமது கரமுரலுந் தாரோயை
நாயடியேன்
பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானும்உன்னைப்
பரவுவனே.
 
வாழ்த்தும் வானவர்கள் தான் வாழ வேண்டும் என மனதின் பால் எண்ணியே.தன்னை தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாரும் தொழ வேண்டும் என்றே. மதுவால் சூழப்பட்ட மலர் போன்றவனே நான் உன் அடிமை பிறந்த பிறப்பை அறுக்கவே உன்னை பரவுகிறேன்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 15

 à®µà®¾à®©à®¾à®•à®¿ மண்ணாகி வளியாகி

ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்
இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக்
கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி
வாழ்த்துவனே. 
 
வானம் என ஆகி மண் என ஆகி காற்று என ஆகி ஒளி என ஆகி உடலாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் ஆகி தலைமை உடையதாகி எனது என்பவரை கூத்தாடச் செய்து வானாகி நின்றாய் உன்னை என்ன சொல்லி வாழ்த்துவேன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 14

 à®†à®®à®¾à®±à¯à®©à¯ திருவடிக்கே அகங்குழையேன்

அன்புருகேன்
பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன்
புத்தேளிர்
கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன்
கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே
சார்வானே.
 
அமைந்த திருவடிக்கே உள்ளம் செலுத்தவில்லை, அன்புடன் உருகவில்லை, பூமாலை தொடுத்து போற்றவில்லை, புகழ்ந்து உரைக்கவில்லை, புதுமை பொங்கும் அரசே உனது திருக்கோயில் துடைத்தோ மெழுகியே பணி செய்யவில்லை, ஆடி மகிழவும் இல்லை. சார்ந்திட விரைகின்றேன் நான்கில் சார்ந்தவனே.
‪#‎திருவாசகம்‬.
 

திருவாசகம் | பாடல் எண் : 13

 à®µà®°à¯à®¨à¯à®¤à¯à®µà®©à¯à®¨à®¿à®©à¯ மலர்ப்பாத மவைகாண்பான்

நாயடியேன்
இருந்துநல மலர்புனையேன் ஏத்தேன்நாத்
தழும்பேறப்
பொருந்தியபொற் சிலைகுனித்தாய் அருளமுதம்
புரியாயேல்
வருந்துவனத் தமியேன்மற் றென்னேநான்
ஆமாறே. 
 
வருந்தம் அடைவேன் உனது மலர் பாதம் காண்பதற்கே நன்றியுடன் அடிமையாய் இருந்து நல்ல மலர்களை அணிவித்து ஏத்தேன். நாக்கு தழம்பு ஏறப் பெருந்தியுள்ள இந்த பொற்சிலையில் அருள் அமுதம் புரியவில்லை என்றால் வருந்துவேன் மற்றபடி கேட்கவில்லை செய்தருளே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 12

 à®¯à®¾à®©à¯‡à®¤à¯à®®à¯ பிறப்பஞ்சேன் இறப்பதனுக்

 à®•à¯†à®©à¯à®•à®Ÿà®µà¯‡à®©à¯
 à®µà®¾à®©à¯‡à®¯à¯à®®à¯ பெறில்வேண்டேன் மண்ணாள்வான்
 à®®à®¤à®¿à®¤à¯à®¤à¯à®®à®¿à®°à¯‡à®©à¯
 à®¤à¯‡à®©à¯‡à®¯à¯à®®à¯ மலர்க்கொன்றைச் சிவனேஎம்
 à®ªà¯†à®°à¯à®®à®¾à®©à¯à®Žà®®à¯
 à®®à®¾à®©à¯‡à®‰à®©à¯ அருள்பெறுநாள் என்றென்றே
 à®µà®°à¯à®¨à¯à®¤à¯à®µà®©à¯‡.
நான் எந்தவித பிறப்புக்கும் அஞ்சமாட்டேன் இறப்பதற்கும் காலம் கடத்த மாட்டேன். உயர்நிலை பெறவும் வேண்டுவது இல்லை. மண்ணை ஆள்பவரின் மதிப்பு பெற மாட்டேன். தேன் கொண்ட மலர் ஒன்றை போன்ற சிவனே எமது பெருமான், எம்மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 11

 à®¨à®¾à®Ÿà®•à®¤à¯à®¤à®¾à®²à¯ உன்னடியார் போல்நடித்து

நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்
விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா
அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம்
உடையானே.
நடிக்கும் திறனால் உனது அடியார் போல் நடித்து அடியார் நடுவே வீடகத்தே புகுத்திடுவேன் என மிகப்பெரிதாய் விரைகின்றேன். ஆட்டத்தை சீராக செய்யும் மணிக் குன்றே தடையற்ற அன்பை என் ஊள்ளத்தே நிறைத்து உருகத்தை தந்தருள் எனக்குள் உள்ளவனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 10

 à®ªà¯à®•à®µà¯‡ தகேன்உனக் கன்பருள் யான்என்பொல்

லாமணியே
தகவே எனைஉனக் காட்கொண்ட தன்மைஎப்
புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண்
ணாஅமுதே
நகவே தகும்எம் பிரான்என்னை நீசெய்த
நாடகமே.
 
இணைய தகுதியற்றவன் உனக்கு அன்பானவர்களின் இடத்தில் என் பொல்ல மணியே இருப்பினும் உனக்காக என்னை ஆட்கொண்ட தன்மை என்ன நகைப்புக்கு உரியதோ அதிகமாகவே உயர்த்தி விண்ணோர்களை பணியவைத்து அண்ணா அமுதே. மகிழ்வே தரும் எம்பிரான் என்னை நீ செய்த நாடகமே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 9

 à®ªà®µà®©à¯à®Žà®®à¯ பிரான்பனி மாமதிக் கண்ணிவிண்

ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண் டான்என்
சிறுமைகண்டும்
அவன்எம் பிரான்என்ன நான்அடி யேன்என்ன
இப்பரிசே
புவன்எம் பிரான்தெரி யும்பரி சாவ
தியம்புகவே.
 
எப்படியும் இருப்பவன் என் தலைவன் குளிர்ந்த நிறை நிலவு கண்ணானவன் விண்ணோர் பெருமான். சிவன் எம் தலைவன் என்னை ஆண்டுகொண்டவன்எனது சிறுமைக் கண்டும் அவன் என் தலைவனே நான் அவனது அடிமையே இப்பரிசே உலகநாதன் எம் தலைவன் தெரியும் பரிசாக இருப்பதை எடுத்துரைக்கவே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 8

 à®‰à®´à®¿à®¤à®°à¯ காலும் கனலும் புனலொடு

மண்ணும்விண்ணும்
இழிதரு காலம்எக் காலம் வருவது
வந்ததற்பின்
உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த
வல்வினையைக்
கழிதரு காலமு மாய்அவை காத்தெம்மைக்
காப்பவனே.
 
துடைக்கின்ற காலம் நெருப்பும் நீருடன் மண்ணும் வானமும் இழிவைத் தரும் காலம் எக்காலம் வருமோ. வந்துவிட்டால் துடைக்கும் காலத்தில் உனது அடிமை செய்த வல்வினையைக் கழிக்கும் காலமுமாய் அவை எம்மைக் காக்கச் செய்பவனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 7

 à®®à¯à®´à¯à®µà®¤à¯à®™à¯ கண்டவ னைப்படைத் தான்முடி

    சாய்த்துமுன்னாள்
செழுமலர் கொண்டெங்குந் தேடஅப் பாலன்இப்
    பால்எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடக மாடிக்
    கதியிலியாய்
உழுவையின் தோலுடுத் துன்மத்தம் மேல்கொண்
    டுழிதருமே.
 
முழுவதையும் கண்டு அடைபவனைப் படைத்தான் தன் முன்னாள் ஆணவம் என்ற முடி சாய்த்ததால், செழுமையான மலரை கொண்டு அவனை அப்பாலன் தேட இப்பால் எம்பிரான் சூலமுடன் சுடுகாட்டில் நாடகமாடிக் கதி அற்றவனாய் உடுக்கையுடன் புலித்தோலும் துன்மத்தமும் கொண்டு உழி தரவே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 6

 à®ªà®°à®¨à¯à®¤à¯à®ªà®²à¯ ஆய்மலர் இட்டுமுட் டாதடி

    யேஇறைஞ்சி
இரந்தஎல் லாம்எமக் கேபெற லாம்என்னும்
    அன்பருள்ளம்
கரந்துநில் லாக்கள்வ னேநின்றன் வார்கழற்
    கன்பெனக்கும்
நிரந்தர மாய்அரு ளாய்நின்னை ஏத்த
    முழுவதுமே. 
 
எங்கும் தேடி பலவகை மலர்களை படையலாக்கி முழுமை அடையாமல் முட்டாத உன் உபதேச திருவடியை இறைஞ்சி கெடுத்தவற்றை எனக்காக பெறலாம் என புரிந்துக் கொண்ட அன்பர் உள்ளத்தில் வெளிப்பட்டு வெளியே நில்லா கள்வனே உனது வார்கழற் அன்பை எனக்கும் நிரந்தரமாய் அருள வேண்டும் நின்னை உயர்த்த முழுவதுமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பாடல் எண் : 5

 à®¤à®µà®®à¯‡ புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்

டாதிறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினை யேன் உனக்
கன்பருள்ளாஞ்
சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேன் நின்
திருவடிக்காம்
பவமே யருளுகண் டாய்அடி யேற்கெம்
பரம்பனே.
 
தவத்தை செய்வதை புரிந்துகொள்ளாமல் இருந்தேன். குளிர்ந்த மலர் இட்டு தேவையை தவிக்காமல் வேண்ட மறுத்தேன். அவத்தால் பிறத்த அருவினையேன். உனக்கு அன்பானவர் உள்ளம் சிவமே பெறுந்தி இருப்பதை அறிந்திலேன். நின் திருவடிக்கும் பவமே அருளக்கண்டாய் அடியர்களின் முதல்வனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | பாடல் எண் : 4

 à®šà®¾à®µà®®à¯à®©à¯ னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று

நஞ்சம்அஞ்சி
ஆவஎந் தாய்என் றவிதா விடும்நம்
மவரவரே
மூவரென் றேஎம்பி ரானொடும் எண்ணிவிண்
ணாண்டுமண்மேல்
தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந்
திரிதவரே.
 
இறக்கும் முன்னே தக்கன் வேள்ளி அறிந்து இன்றே நஞ்சிற்கு அஞ்சி நடக்க 
எனத் தாயே என்று பக்தியுடன் பற்றிடும் நம்மவரே அவர்
மூவர் என்று எமது தலைவனுடன் எண்ணி விண்ணை ஆண்டு மண்மேல் தேவர் என்றே இறுமாந்து என்ன பயன் பாவத்தை ஒழிக்காதவர்களே.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம்

 à®‰à®¤à¯à®¤à®®à®©à¯ அத்தன் உடையான் அடியே

நினைந்துருகி
மத்த மனத்தொடு மால்இவன் என்ன
மனநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர்
திரிந்தெவருந்
தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல்
சாவதுவே.
 
உத்தமா 
ஆதாரமானவா 
உனது உடைமையான அடியை நினைந்துருகி 
மற்ற மனதுடன் அளவிட்டு இவன் மனநினைவில் 
ஒத்த மனது ஒத்ததை சொல்லிட ஊர் ஊராக திரிந்து 
எவரும் தனக்கு உண்டான மனதின் நிலையை பேச 
என்ன என்று சொல்லுவேன் இறக்கப் பிறந்ததுவே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®®à¯†à®¯à¯à®¤à®¾à®©à¯ அரும்பி விதிர்விதிர்த் துன்விரை

யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே. 
 
உண்மையுடன் மலர்ந்து நடுங்க நடுங்க உன்னை அடைந்தவர் பற்றும் காலைப் பற்றி கையை தலையே வைத்து கண்ணிர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்த்து உன்னை போற்றி சார்ந்தேன் சார்ந்தேன் போற்றி என்னும் கைதான் நெகழ விடமாட்டேன் என்னை உடமையாக்கி கொண்டவனே கண்டுகொள்.
#திருவாசகம்.
 

திருவாசகம்

 à®•à¯Šà®³à¯à®³à¯‡à®©à¯ புரந்தரன் மாலயன் வாழ்வு

குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல் லால் நர
கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே இருக்கப்
பெறின் இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள்
உத்தமனே.
 
பெருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டேன் புரந்தரன் மாலயன் வாழ்வை. குடி அழிந்தாலும் நாட மாட்டேன் உனது அடியார் அல்லாதவரை. நரகமே போவதென்றாலும் விலக்க மாட்டேன் திருவருளாலே இருக்கப் பெற்றால். இறைவா என உள்ளேன் பிற தெய்வம் உன்னை அன்றி வேறு இல்லை உத்தமனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®¤à¯†à®°à®¿à®µà®°à®¿ தாகிய தெளிவே போற்றி

தோளா முத்தச் சுடரே போற்றி
ஆளா னவர்கட் கன்பா போற்றி
ஆரா அமுதே அருளே போற்றி 
பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 200
தாளி அறுகின் தாராய் போற்றி
நீளொளி யாகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக் கரிய சிவமே போற்றி 
மந்தர மாமலை மேயாய் போற்றி 205
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
கருங்குரு விக்கன் றருளினை போற்றி 
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி 210
 
தெரிந்துக் கொள்ள அரிதாகிய தெளிவே போற்றி. பழுதற்ற முத்தின் சுடரே போற்றி, தெளிந்தவர்களின் அன்பனே போற்றி. தெவிட்டாத அமுதே பொற்றி. ஆயிரம் பெயர் கொண்ட அழகா போற்றி. தாள் என்ற உபதேசப் பொருளின் திருக்கை அறுக்க தரமாக விளங்குவாய் போற்றி. எங்கும் நீண்ட ஒளியாகிய தடையற்றவனே போற்றி. சந்தனத்தின் குழம்பிலும் சிறந்த அழகனே போற்றி. சிந்தனைக்கு எட்டாத சிவமே போற்றி. மந்திர மாமலையில் விற்றிருப்பவனே போற்றி. என்னை வீடுபெறு அடையச் செய்வாய் போற்றி. புலியின் பாலையும் புல் உண்ணும் விலங்குகளுக்கு அருளினாய் போற்றி. அலைகடல் மீதும் நடந்தாய் போற்றி. கருங்குருவிக்கும் அருளினாய் போற்றி. இரண்டு புலன்கள் மலர்ந்திட இசைந்தவனே போற்றி.
#திருவாசகம்
 

திருவாசகம்

 à®ªà®Ÿà®¿à®¯à¯à®±à®ªà¯ பயின்ற பாவக போற்றி

அடியொடு நடுவீ றானாய் போற்றி
நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற்
பரகதி பாண்டியற் கருளினை போற்றி 
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 214
செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன் 
குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி 220
புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றிபோற்றி புராண காரண 
போற்ற போற்றி சயசய போற்றி 225
 
படிப்படியாய் வளர்ந்திடச் செய்த பாவக போற்றி. முதல் நடு முடிவாய் ஆனாய் போற்றி. நரகம சொர்கம் நானிலம் புகாமல் பரகதியை பாண்டியற்கு அருளினாய் போற்றி. எங்கும் நிறைந்த ஒருவனே போற்றி. செழுமையான சிவபுரத்து அரசே போற்றி. கழுநீர் மாலைக் கடவுளே போற்றி. தொழுபவர் மையலை துணிப்பாய் போற்றி. பிழைக்க வாய்ப்பை அறியா எனக்கு குழைந்த சொல் மாலை கொண்டு அருள் செய்தாய் போற்றி. தேவையற்றதை அழித்த புராண போற்றி. பரம் பரஞ்சோதி பரனே போற்றி. போற்றி போற்றி பெருமை உடை தலைவனே. போற்றி போற்றி பழைமையானவனே காரணமானவனே. போற்றி போற்றி சார்ந்தேன் சார்ந்தேன் போற்றி. 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®à®•à®®à¯ பத்துறை யெந்தாய் போற்றி

பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி 
மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 155
குற்றா லத்தெங் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
பாங்கார் பழனத் தழகா போற்றி 
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160
அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழிரு மூவர்க்
கத்திக் கருளிய அரசே போற்றி
தென்னா டுடைய சிவனே போற்றி 
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி 165
 
ஒருவழி துறையாய் நின்ற தாயே போற்றி, பகுதி பெண் என உருவம் கொண்டாய் போற்றி, அறியமுடியா துறையில் நின்ற பரனே போற்றி, சிரார் பள்ளிக்கொள்ள செய்பவனே போற்றி, மற்றவரை பற்றி அறியேன் போற்றி, குற்றலத்து கூத்தா போற்றி, அனைத்தும் அருளிய அரசே போற்றி, அருளும் மலையே எந்தாய் போற்றி, உறவினர் விரும்பும் அழகா போற்றி, அடைந்தவருக்கு அருளும் அப்பா போற்றி, இப்பொழுது கிழ் உள்ள இருமூவருக்கு கூர்மைக்கு அருளிய அரசே போற்றி, தெரியும் நாடு உடைய சிவனே போற்றி, எல்லா நாட்டவருக்கும் இறைவா போற்றி.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®‰à®±à®µà¯‡ போற்றி உயிரே போற்றி

சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றிமணாளா போற்றி
பஞ்சே ரடியாள் பங்கா போற்றி 
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185
இலங்கு சுடரெம் ஈசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலைநா டுடைய மன்னே போற்றி 
கலையா ரரிகே சரியாய் போற்றி 190
திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி 
துரியமும் இறந்த சுடரே போற்றி 195
 
உற்ற துணையாகும் உறவே போற்றி, உடன்பட்டு இருக்கும் உயிரே போற்றி, நற்பயன் அளிக்கும் சிறவே போற்றி, நலமே அருளும் சிவமே போற்றி, ஐந்துக்கும் அடிபணிபவர் தலைவா போற்றி, நாய் போல் நன்றியுடன் அலைந்தேன் நான் போற்றி. இலக்காக நின்ற ஈசா போற்றி. குறி வைக்கும் குணம் கொண்ட கவத்தலையில் கூடி நிற்கும் கண்ணே போற்றி, குவிந்தவர் நிறைந்த அரசே போற்றி, மலை நாடு உடைய மன்னனே போற்றி, கலைகளில் சரியாய் இருப்பவனே போற்றி, திருகழுக் குன்றில் செல்வந்தனாய் இருப்பவனே போற்றி, மலையின் மலர்கள் நிறை சோலைக்கு அரசே போற்றி, உருவம் அற்றும் உருவத்துடனும் ஆனாய் போற்றி, மாற்றம் கொள்ளும் கருணை மலையே போற்றி, துரியமும் கடந்த சுடரே போற்றி.
#திருவாசகம்
 

திருவாசகம்

 à®…ருமையில் எளிய அழகே போற்றி

கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் 
சென்னியில் வைத்த சேவக போற்றி 130
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி 
மானோர் நோக்கி மணாளா போற்றி 135
 
அருமையானவற்றில் எளிமையான அழகே போற்றி, கருத்த மேகம் போன்ற கண்ணே போற்றி, கொடுத்த மலையளவு திருவருளே போற்றி, என்னையும் ஒருவனாகச் செய்து உமது திருவடியில் சென்னியில் வைத்த சேவகனே போற்றி, வேண்டி நிற்க துன்பத்தை துடைப்பாய் போற்றி, அழிவில்லாத ஆனந்தம் வழுங்குபவனே போற்றி, முழவதையும் கடந்த முதல்வனே போற்றி, காதலர் நோக்கும் காதலா போற்றி.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®…ருமையில் எளிய அழகே போற்றி

கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் 
சென்னியில் வைத்த சேவக போற்றி 130
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி 
மானோர் நோக்கி மணாளா போற்றி 135
 
அருமையானவற்றில் எளிமையான அழகே போற்றி, கருத்த மேகம் போன்ற கண்ணே போற்றி, கொடுத்த மலையளவு திருவருளே போற்றி, என்னையும் ஒருவனாகச் செய்து உமது திருவடியில் சென்னியில் வைத்த சேவகனே போற்றி, வேண்டி நிற்க துன்பத்தை துடைப்பாய் போற்றி, அழிவில்லாத ஆனந்தம் வழுங்குபவனே போற்றி, முழவதையும் கடந்த முதல்வனே போற்றி, காதலர் நோக்கும் காதலா போற்றி.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®‡à®Ÿà®°à¯ˆà®•à¯ களையும் எந்தாய் போற்றி

ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி 
விரைசேர் சரண விகிர்தா போற்றி 105
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி 
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110
 
இடர்பாட்டை களைக்கும் எனது தாயே போற்றி, ஈச போற்றி, இறைவனே போற்றி, உலகத்தின் பளபளப்பின் மொத்தமே போற்றி, அரசனே போற்றி, அமுதே போற்றி, விரைந்து அடைய சரணாகதி அடையச் செய்பவனே போற்றி, வேதிக்கும் வினை செய்யும் வேதியே போற்றி, தேவர்களின் தலைவா போற்றி, துவக்கமே போற்றி, அறிவே போற்றி, கதியே போற்றி, கனியே போற்றி, வழியும் நீர் அடையும் செழுமையான சடை கொண்டவனே போற்றி, எல்லாம் உடையவனே போற்றி, உணர்வே போற்றி. 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®•à®Ÿà¯ˆà®¯à¯‡à®©à¯ அடிமை கண்டாய் போற்றி

ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி 
நெறியே போற்றி நினைவே போற்றி 115
வானோர்க் கரிய மருந்தே போற்றி
ஏனோர்க் கெளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ஆழா மேயருள் அரசே போற்றி 
தோழா போற்றி துணைவா போற்றி 120
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரையுணர் விறந்த ஒருவ போற்றி 
விரிகடல் உலகின் விளைவே போற்றி 125
 
எல்லாவற்றிலும் கடைசியில் இருந்த என்னை அடிமையாகக் கண்டவனே போற்றி. ஐயா போற்றி, அணுவே போற்றி, நான் வேறு நீ வேறு என இரண்டாகாமல் ஒன்றான சைவா போற்றி, தலைவா போற்றி, குறிப்புகள் தரும் குறியே போற்றி, வழியே போற்றி, வழிநடத்த எண்ணம் தரும் நினைவே போற்றி, வானோர்க்கு அரிய மருந்தே போற்றி, மற்றவர்க்கு எளிய இறையே போற்றி, சுற்றி உள்ள முன்று ஏழ் உலகமும் முரண் என அறியும் நரகத்தில் ஆழ்ந்திடாமல் அருள் செய்த அரசே போற்றி, நிகராக நிற்கும் தோழா போற்றி, துணையாக நிற்கும் துணைவா போற்றி, வாழ்வே போற்றி, என் வைப்பே போற்றி, முடிவானவனே போற்றி, முதலானவனே போற்றி, படைத்தவனே போற்றி, பாதுகாப்பவனே போற்றி, உரையை உணர்ந்தால் ஒருவனே என உணர்பவனே போற்றி, விரிந்த கடல் உடைய உலகில் விளைவுகளாக இருப்பவனே போற்றி.
#திருவாசகம்
 

திருவாசகம்

 à®šà®¤à¯à®°à®¿à®´à®¨à¯ தறிமால் கொண்டு சாருங்

கதியது பரமா அதிசய மாகக்
கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா 
தருபரத் தொருவன் அவனியில் வந்து 75
குருபர னாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியா தத்திசை 
என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி 80
அன்பெனும் ஆறு கரையது புரள
நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி
உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித் திருதயம் மலரக் 
கண்களி கூர நுண்துளி அரும்பச் 85
 
புலன்கள் நான்கையும் அளவாகக் கொண்டு சாரும் கதியாகும் பரம அதிசயமாகக் கற்றா மனம் என கதறியும் பதறியும் மற்றோர் தெய்வத்தை கனவிலும் நினையாது தகுந்த ஒருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமையைச் சிறுமை என்று இகழாமல் திருவடி இணையை பிற வினை அறியாது நிழல் போல் முன்னும் பின்னுமாக்கி முடிவற்று தனக்குள் உருகி நெக்கநெக்கேங்கி அன்பென்ற ஆறு கரை கடந்து புரள நல்ல புலன்கள் எல்லாம் ஒன்றாக நாத என அரற்றி உரை தடுமாறி உரோமம் சிலிர்த்து கரமலர்கள் கொட்டி இருதயம் மலரக் கண்கள் களிப்பு அடைய நுண்துளி அரும்ப
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®šà®¾à®¯à®¾ அன்பினை நாடொறுந் தழைப்பவர்

தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி 
ஆடக மதுரை அரசே போற்றி 90
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி 
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 95
மின்னா ருருவ விகிர்தா போற்றி
கல்நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா என்றனக் கருளாய் போற்றி 
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100
 
விலகாத அன்பினை தினமும் வளர்ப்பவர் தாய்போல் ஆகி வளர்த்தனை போற்றி. மெய் தரும் வேதியனாகி வினைகள் அழித்து கைதர வல்ல கடவுள் போற்றி. ஆடும் போக்குவரவு கொண்ட மதுரை அரசே போற்றி. கூடுவதை இலக்காக கொண்ட குருமணி போற்றி. தெரியும் தில்லையின் கூட்டத்தே ஆடுபவனே போற்றி. இன்றே எனக்கு ஆரா அமுதானாய் போற்றி. மூவருக்கும் நான்கு மறைக்கும் முதல்வனே போற்றி. சேர்பவரின் வெற்றிக் கொடியாகும் சிவனே போற்றி. மின்னல் போன்ற அருவ உருவாகி விகிர்த்தவனே போற்றி. கல்லில் நார் உரித்த கனியே போற்றி. காவலாய் நின்ற கனகக் குன்றே போற்றி. ஆகவேண்டியதை எனக்கு அருள்வாய் போற்றி. படைத்து காத்து துடைப்பாய் போற்றி.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®†à®¤à¯à®¤ மானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்
சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள்
பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும் 
விரத மேபர மாகவே தியருஞ் 50
சரத மாகவே சாத்திரங் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாத மென்னுஞ் 
சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த் 55
துலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
கலாபே தத்த கடுவிட மெய்தி
அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவும்
தப்பா மேதாம் பிடித்தது சலியாத் 
தழலது கண்ட மெழுகது போலத் 60
 
மறைந்தவர் விலகியவர் நாத்திகம் பேசி நாக்கு தடுமாறுபவர், உறவென்ற தொன்மையான பசுக்குழுக்கள் என பற்றி அழைத்து பதறினர். பெருகவும் விரதம் மட்டும் பரமாகும் என வேதியரும் சரசமாக சாத்திரங்களைக் காட்டினார்கள், சமயவாதிகள் தமது மதமே சரியாக அமையும் என்று அரற்றி மலைத்தனர். மிதமுள்ள மாயா வாதம் என்னும் சண்டமாருதர் சுழித்து தடித்த உலோகத்தால் ஆன பாம்பினையும் உலோக தகட்டினையும் வைத்து கடுவிடம் ஏய்தி அதில் பெரும் மாயை என பல வகை சூழலவும் தாப்பாதே பிடித்தது சலியாமல் நெருப்பு கண்ட மெழுகது போலே
#திருவாசகம்
 

திருவாசகம்

 à®¤à¯Šà®´à¯à®¤à¯à®³à®®à¯ உருகி அழுதுடல் கம்பித்

தாடியும் அலறியும் பாடியும் பரவியுங்
கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும்
படியே யாகிநல் லிடையறா அன்பிற் 
பசுமரத் தாணி அறைந்தாற் போலக் 65
கசிவது பெருகிக் கடலென மறுகி
அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்
சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை 
பூணது வாகக் கோணுத லின்றிச் 70
 
தொழுது உள்ளம் உருகி அழுது உடல் ததும்பிட ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் கொடி போல் பேதமையுடன் பற்றியதை விடாததைப் போல் இருந்து நல்லவர் இடத்தில் உள்ள அன்பில் பசுமரத்து ஆணி அறைந்தால் போன்று கசிவது பெரிக கடலென மறுகி அகத்தில் எண்ணி அனுகுலமாய் விதிர்த்து உலகத்து பேய் என எம்மை பார்த்து சிரித்தாலும் அதற்கு நாணாமல் ஒழிந்து நாடாதவர் பழிக்கும் வழியை தனக்கு என ஏற்று மனம் கோணமல்
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®¤à¯Šà®´à¯à®¤à¯à®³à®®à¯ உருகி அழுதுடல் கம்பித்

தாடியும் அலறியும் பாடியும் பரவியுங்
கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும்
படியே யாகிநல் லிடையறா அன்பிற் 
பசுமரத் தாணி அறைந்தாற் போலக் 65
கசிவது பெருகிக் கடலென மறுகி
அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்
சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை 
பூணது வாகக் கோணுத லின்றிச் 70
 
தொழுது உள்ளம் உருகி அழுது உடல் ததும்பிட ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் கொடி போல் பேதமையுடன் பற்றியதை விடாததைப் போல் இருந்து நல்லவர் இடத்தில் உள்ள அன்பில் பசுமரத்து ஆணி அறைந்தால் போன்று கசிவது பெரிக கடலென மறுகி அகத்தில் எண்ணி அனுகுலமாய் விதிர்த்து உலகத்து பேய் என எம்மை பார்த்து சிரித்தாலும் அதற்கு நாணாமல் ஒழிந்து நாடாதவர் பழிக்கும் வழியை தனக்கு என ஏற்று மனம் கோணமல்
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®ªà®¿à®¤à¯à®¤ வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்

மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்
செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும் 
நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் 40
புல்வரம் பாய பலதுறைப் பிழைத்துந்
தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
முனிவி லாததோர் பொருளது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள் 
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின 45
 
பித்து பிடித்தவர் நிறைந்த இந்த ஊர் பரப்பில் மந்த புத்தியுடன் இருக்கும் யானை போன்ற ஆசையில் இருந்து பிழைத்தும். கல்வி என்ற பால் கடலில் பிழைத்தும். செல்வம் என்ற துன்பத்தில் இருந்து பிழைத்தும். வறுமை என்ற பழைமையிடம் பிழைத்தும். சிறிய எல்லைகள் கொண்டதிலிருந்து பிழைத்தும். தெய்வம் என்பது உண்டு என்ற எண்ணம் உண்டாகி முன்னே ஏதோ பொருள் உண்டு என கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள் வேறுவேறு வகை மாயைகள் தொடங்கின
‪#‎திருமந்திரம்‬
 

திருவாசகம்

 à®¨à®¾à®©à¯à®®à¯à®•à®©à¯ முதலா வானவர் தொழுதெழ

ஈரடி யாலே மூவுல களந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்
றடிமுடி யறியும் ஆதர வதனிற் 5
கடுமுரண் ஏன மாகி முன்கலந்
தேழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்
தூழி முதல்வ சயசய என்று
வழுத்தியுங் காணா மலரடி யிணைகள் 
வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில் 10
 
நல்ல மனம் கொண்டவர் முதல் மேலானவர்கள் பணிந்து பணிய இரண்டு அடியாலே மூன்று உலகை அளந்த நான்கு திசையில் உள்ள முனிவரும் ஐந்து புலன்களும் மலரப் வாழ்த்திடச் செய்யும் கதிரை முடியாக கொண்ட நெடுமாலன் அடி முடி அறிய முற்பட்டு கடுமையான முரண் என்று உணர்ந்து தன் முன்னே கலத்து ஏழ் தலம் உருவத்தை ஆய்ந்து வெற்றி வெற்றி என்று வாழ்த்தியும் காணா மலரடி இணைகள் வாழ்த்துவதற்கு எளிதாய் கடல் சூழ் உலகினில்
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®¯à®¾à®©à¯ˆ முதலா எறும்பீ றாய

ஊனமி லியோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்
தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் 
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் 15
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் 
ஆறு திங்களின் நூறலர் பிழைத்தும் 20
 
யானை முதல் எறும்பு வரை ஊனமில்லாத கரு வாசலில் வினைகளால் பிழைத்தும், மானிடப் பிறப்பில் மாதா இரத்தத்தின் கிருமியின் செருவினில் இருந்து பிழைத்தும், ஒரு நிலாக்கால மாதத்தில் இருமைப் பாடாமல் பிழைத்தும், இரண்டாம் நிலா மாதத்தில் ஒன்றாக நிலைத்து பிழைத்தும்,முன்றாம் நிலா மாதத்தில் நிலைப் பெற்று பிழைத்தும், நான்காம் நிலா மாதமாக இருளில் இருந்து பிழைத்தும், ஐந்தாவது நிலா மாதத்தில் முன்னேறி பிழைத்தும், ஆறாம் நிலா மாதத்தில் பல காரணங்களில் இருந்து பிழைத்தும்.
#திருவாசகம்
 

திருவாசகம்

 à®à®±à¯à®±à®¾à®°à¯ மூதூர் எழில்நகை எரியின்

வீழ்வித் தாங்கன்
றருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் 160
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்
சொல்லுவ தறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது
தெரியேன் ஆவா செத்தேன் அடியேற் 165
கருளிய தறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்
துவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப
வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறுந் 170
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
 
ஏற்றவர்கள் இருக்கும் பெரிய ஊரில் அழகிய இன்பம் பொங்க எரியும் வெளிச்சத்தில் விழ்ந்திட தாங்குபவன் அருள் பெரும் தீயின் பணியும் அடிக்குடில். பகைத்திட ஒருத்தவர் இல்லாதபடி ஒடுக்கினன். குடிநிர் குளத்தில் நெல்லிக்கனி என எனக்கு ஆயினன். சொல்பதற்கு அறியாதவன் வாழ்த்தும் முறைக்கு அரிதானவன். முடிவடையாது செத்தேன். அடியவற்கு அருளியதை அறியேன். குடித்தும் தாகம் தீரவில்லை, விழுங்கியும் திருப்தி ஆகவில்லை. செழுமையான சிவந்த பாற்கடல் நுரை அலை இல்லா கடல் உள்ளத்தின் உணர்வால் நள்ளுநீர். வாக்கினால் சுரக்கும் அமுதம். மயிர்கால் தோறுந் தேங்கிடச் செய்தனன்.
#திருவாசகம்
 

திருவாசகம்

 à®•à¯à®°à®®à¯à®ªà¯ˆ தோறும் நாயுட லகத்தே

குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவ 175
துள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக்
கள்ளூ றாக்கை யமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற்
கருணை வான்தேன் கலக்க 180
அருளொடு பராவமு தாக்கினன்
பிரமன்மா லறியாப் பெற்றி யோனே.
 
கொடிய என் ஊன் சதை கொண்ட குரம்பை தோறும் நாயின் உடலிடத்தும் முட்டையாக கொண்டிருந்தேன். பாய்த்தி நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள் எற்ப துளை தோறும் ஏற்றினன். உருகும் உள்ளங் கொண்டவர் உருச்செய் இன்பம் ஊறும் ஆக்கை அமைத்தனன். தெளிந்த கன்னத் கனிதேர் களித்திட கடைமுறை என்னையும் இருப்ப தாக்கினன். என்னில் கருணை வான்தேன் கலக்க அருளொடு பராவமுதாக்கினன். பிரமன் மால் அறியாததை பெற்றேனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®à®®à¯à®ªà¯à®²à®©à¯ செலவிடுத் தருவரை தொறும்போய்த்

துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140
ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலின்
தாள்தளை யிடுமின்
சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்தும் 145
 
ஐம்புலன் செல்லாமல் தடுத்து மலை தொறும் போய்த் பெற்றதை துறந்த வெறும் உயிராக உடலை கொண்டு அருந்தவம் செய்பவர் காட்சியுள் திருந்த மறைத்தும், முன்பே பயில்பவர் இன்றே பயில்பவர் மறைப்பவரைக் கண்டார்கள், ஆட்படுங்கள் ஆட்படுங்கள் குழியில் இருக்கும் மலருடன் பிணைவதற்கு தாள்தனை இடுங்கள். வலையுங்கள் வலைத்து சூழுங்கள் தொடருங்கள் விடாதீர்கள் பற்றுங்கள் என்றவர் பற்றை முழுமையாக மறைத்தும்
‪#‎திருமந்திரம்‬
 

திருவாசகம்

 à®¤à®©à¯à®©à¯‡ ரில்லோன் தானேயான தன்மை

என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி
அறைகூவி ஆட்கொண் டருளி
மறையோர் கோலங் காட்டி யருளலும்
உளையா அன்பென் புருக வோலமிட் 150
டலைகடல் திரையின் ஆர்த்தார்த் தோங்கித்
தலைதடு மாறா வீழ்ந்துபுரண் டலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவும்
கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின் 155
ஆற்றே னாக அவயவஞ் சுவைதரு
கோற்றேன் கொண்டு செய்தனன்
 
தனக்கு நிகர் இல்லாதவன் தானே என தன்மை கொண்டவனை என்னப் போன்றவர்கள் அவனது தன்மை என்ன என கேட்க சாவலுடன் அழைத்து ஆட்கொண்டு அருளி வேதம் செய்ய வல்லவர்கள் போல் கோலம் காட்டிஅருள்வதும், உளை போல் அன்பில் உருக ஓலமிட்டு அலைகடல் போல் ஆர்பறித்து ஓங்கி தலை தடுமாறாமல் விழ்ந்து புரண்டு அலறி பித்தரைவிட மயங்கி மந்த புத்தியாளரையும் மதித்து நாடியவர் மருளவும் கேள்விபட்டவர்கள் மயங்கவும் அடங்கா ஆண் யானை என்ற பெரு மதத்தினை பின்பற்றதவனாக அவயங்களில் சுவைகளை உற்றேன் என என்னை செய்தனன்.
#திருவாசகம்
 

திருவாசகம்

 à®¤à®¿à®šà¯ˆà®®à¯à®•à®©à¯ சென்று தேடினர்க் கொளித்தும்

முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்
துற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும் 130
இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்
கத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்
முனிவற நோக்கி நனிவரக் கௌவி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாணுதற் பெண்ணென ஒளித்தும் சேண்வயின் 135
 
திசை எங்கும் தேடிய நான்முகனுக்கு மறைத்தும், முறை வைத்து தேடியவர்களுக்கு மறைத்தும், ஒற்றுமை உணர்வோடு உள்ளத்தை வைத்து இருப்பவர்கள் தூற்றும்படி உரைப்பவருக்கு மறைத்தும், மறையின் திறத்தை உணராமல் மறுப்பவருக்கு மறைத்தும், இப்படியாக காட்டு என்று இருப்பவர்களுக்கு அப்படியே காட்டி தன்னை மறைத்தும், முன்னிலைப் படுத்தி இனிமையாக பற்றி ஆண் என தோன்றி அலி என பெயர்ந்து தேவ மங்கை என மறைத்தும், செழுமையால்
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®¨à®šà¯à®šà®° வாட்டிய நம்பன் போற்றி

பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி - நாற்றிசை
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்
நிற்பன நிறீஇச் 110
சொற்பதங் கடந்த தொல்லோன்
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன்
விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115
 
விடம் உள்ள பாம்பை வாட்டிய நல்லவன் போற்றி, பிரித்து எம்மை உயர்வு செய்த பெரியவன் போற்றி, சாம்பலுடன் காட்சி அருள்பவன் போற்றி, நாலப் பக்கமும் நடக்கவும் நாடாமல் இருக்கவும், இடம் மாறாமல் நின்று சொல் பதங்களை கடந்த காலம் கடந்தவன். உள்ளத்து உணர்ச்சியில் ஆட்பாடதவன், கண் முதல் புலன்களுக்கு காட்சியும் இல்லாதவன், விண் முதல் பூதங்கள் வெளிப்பட வகுத்தவன். பூவின் வாசம் போல் சிறந்து எங்கும்
#திருவாசகம்.
 

திருவாசகம்

 à®•à®°à¯à®®à¯à®ªà®£à®•à¯ கச்சைக் கடவுள் வாழ்க

அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க
அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
சூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க 100
எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க
கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேரமைத் தோளி காதலன் வாழ்க
ஏதிலர்க் கேதிலெம் இறைவன் வாழ்க
காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க 105
 
நிறைந்த செல்வத்தை கச்சையாக அணிந்த கடவுள் வாழ்க. அரிய தவம் செய்பவர்க்கு அருளும் ஆதி வாழ்க. அச்சத்தை தவிர்க்க செய்ய துணையானவன் வாழ்க. சதாசர்வ காலமும் தன்வசப்படுத்தி ஆட்கொள்பவன் வாழ்க. சூழும் துன்பத்தை எளிதாக துடைப்பவன் வாழ்க. கேட்பவர்க்க உதவிக் கரம் கொடுப்பவன் வாழ்க. வலிமையான இருட்டிலும் கூத்தாடி களிப்பவன் வாழ்க. அழகிய தோள் கொண்டவர்களின் காதலன் வாழ்க. ஏதும் இல்லாதவர்கு இல்லாத இயல்பினன் வாழ்க. காதலர்களுக்கு ஏய்ப்பு இல்லாத வைப்பு வாழ்க.
‪#‎திருவாசகம்‬.
 

திருவாசகம்

 à®•à®°à¯à®®à¯à®ªà®£à®•à¯ கச்சைக் கடவுள் வாழ்க

அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க
அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
சூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க 100
எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க
கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேரமைத் தோளி காதலன் வாழ்க
ஏதிலர்க் கேதிலெம் இறைவன் வாழ்க
காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க 105
 
நிறைந்த செல்வத்தை கச்சையாக அணிந்த கடவுள் வாழ்க. அரிய தவம் செய்பவர்க்கு அருளும் ஆதி வாழ்க. அச்சத்தை தவிர்க்க செய்ய துணையானவன் வாழ்க. சதாசர்வ காலமும் தன்வசப்படுத்தி ஆட்கொள்பவன் வாழ்க. சூழும் துன்பத்தை எளிதாக துடைப்பவன் வாழ்க. கேட்பவர்க்க உதவிக் கரம் கொடுப்பவன் வாழ்க. வலிமையான இருட்டிலும் கூத்தாடி களிப்பவன் வாழ்க. அழகிய தோள் கொண்டவர்களின் காதலன் வாழ்க. ஏதும் இல்லாதவர்கு இல்லாத இயல்பினன் வாழ்க. காதலர்களுக்கு ஏய்ப்பு இல்லாத வைப்பு வாழ்க.
‪#‎திருவாசகம்‬.
 

திருவாசகம்

 à®µà¯†à®¨à¯à®¤à¯à®¯à®°à¯à®•à¯ கோடை மாத்தலை கரப்ப

நீடெழில் தோன்றி வாலொளி மிளிர
எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து
முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட - வரையுறக்
கேதக் குட்டங் கையற வோங்கி
இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80
 
வரும் துயரத்தை அழிக்க நற்சிந்தை கரந்திட நீளும் எழில் தோன்றி மின்ன தோன்றிய ஒளி மிளிர எனது பிறவியில் கோபம் மிகுந்து தன்னோடு போராட முரசு எழுப்பிட்ட மாபெரும் கருணையில் முழ்கிட பூப்புரை போல் அஞ்சலி செய்ய காந்தள் போல் குவிந்திட அளவற்ற இனிமையான அருள் நுண்துளி கொள்ளச் செழுமையான வெள்ளம் திசை எங்கும் தெவிட்ட அளவுக்குள் இருந்த குற்றமும் கையறவே ஆகி ஆறு சமயத்தவரும் பேய்த் தேர் போன்றும் நீர் விரும்பி வரும் மான் 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®µà®©à®¿à®¯à®¿à®±à¯ சேவடி தீண்டினன் காண்க

சிவனென யானுந் தேறினன் காண்க
அவனெனை ஆட்கொண் டருளினன் காண்க
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க 65
பரமா னந்தப் பழங்கட லதுவே
கருமா முகிலின் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையி லேறித்
திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய
ஐம்புலப் பந்தனை வாளர விரிய 70
புமியில் சேவை செய்ய தன் அடிகளை தீண்டினன் காண், சிவன் அது எனத் தேறினேன் காண், அவனே என்னை ஆட்கொண்டு அருளினான் கான், குவியும் கண்ணி என்றாலும் வெளிப்படுத்த மாட்டான் காண், பரமானந்தம் அருளும் பழைமையான கடலும் அதுவே காண், கரிய மா முகிலில் தோன்றி திருவுடையவர் பெரும் துறை வரை ஏறி திருத்தமான மின் ஒளி திசைகள் தோறும் விரிய ஐந்து புலன்கள் கொண்ட பந்தம் வளர்ந்து விரிய 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®…ந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க

பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
கற்பமும் இறுதியுங் கண்டோன் காண்க
யாவரும் பெறவுறும் ஈசன் காண்க 55
தேவரும் அறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானுங் கண்டேன் காண்க
அருணனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க 60
 
முடிவும் முதலும் இழந்தவனை காண், உறவும் உறைவுடமும் படைப்பவனைக் காண், நிற்பதும் கடப்பதும் செய்ய ஆதாரமானவனைக் காண், காலங்களும் கடைக் கோடியும் கண்டவனைக் காண், யாவரும் பெற முடிந்த ஈசனைக் காண், தேவரும் அறியாத சிவனைக் காண், பெண் ஆண் அலி என பெற்றவனைக் காண், கண்ணால் நானும் கண்டேன் காண், நில்லாத சுரக்கும் அமுதே காண், கருணையின் பெருமைக் கண்டேன் காண்,
#திருவாசகம்
 

திருவாசகம்

 à®šà®¿à®¤à¯à®¤à®®à¯à®žà¯ செல்லாச் சேட்சியன் காண்க

 à®ªà®¤à¯à®¤à®¿ வலையிற் படுவோன் காண்க
 à®’ருவன் என்னும் ஒருவன் காண்க
 à®µà®¿à®°à®¿à®ªà¯Šà®´à®¿à®²à¯ முழுதாய் விரிந்தோன் காண்க
 à®…ணுத்தருந் தன்மைஇல் ஐயோன் காண்க 45
இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க
 à®…ரியதில் அரிய அரியோன் காண்க
 à®®à®°à¯à®µà®¿à®Žà®ªà¯ பொருளும் வளர்ப்போன் காண்க
 à®¨à¯‚லுணர் வுணரா நுண்ணியோன் காண்க
 à®®à¯‡à®²à¯Šà®Ÿà¯ கீழாய் விரிந்தோன் காண்க 50
 
 
எண்ணங்களால் எட்டமுடியாத தூரமானவனைக் காண். பக்து என்ற வலையில் சிக்குபவனைக் காண், விரிந்த அனைத்துமாய் விரிந்தவனைக் காண், நுண்ணிய தன்மையில் சிறந்தோன் காண், துணையாக இருப்பதில் பெருமையான ஈசனைக் காண், அரியதில் அரியதான அரியவனைக் காண், மாற்றம் கண்டு எப்பொருளையும் வளர்பவனைக் காண், புத்தகங்கள் உணரா நுட்பமானவனைக் காண், மேலும் கிழுமாய் விரிந்தவனைக் காண்,
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®à®©à®¤à¯ தொல்லெயி றணிந்தோன் காண்க

 à®•à®¾à®©à®ªà¯ புலியுரி அரையோன் காண்க
 à®¨à¯€à®±à¯à®±à¯‹à®©à¯ காண்க நினைதொறும் நினைதொறும்
 à®†à®±à¯à®±à¯‡à®©à¯ காண்க அந்தோ கெடுவேன்
 à®‡à®©à¯à®©à®¿à®šà¯ˆ வீணையில் இசைந்தோன் காண்க 35
அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் காண்க
 à®ªà®°à®®à®©à¯ காண்க பழையோன் காண்க
 à®ªà®¿à®°à®®à®©à¯à®®à®¾à®²à¯ காணாப் பெரியோன் காண்க
 à®…ற்புதன் காண்க அநேகன் காண்க
 à®šà¯Šà®±à¯à®ªà®¤à®™à¯ கடந்த தொல்லோன் காண்க 40
 
 
பார் என பழைமையான தொடரும் எழிலை அணிந்தவனை காண், காட்டில் வாழும் புலியின் தோலை உடுத்தியவனைக் காண், நீளமானவனைக் காண், நினைக்க நினைக்க வழியாக அமைபவனைக் காண், அய்யோ அழிந்திடுவேனோ என்பவனின் இனிமையான வீணையில் இசைந்தவனைக் காண், அப்படி நடக்காது என்று அறிந்தவனைக் காண், பரமனைக் காண், பழைமையானவனைக் காண், பிரமனும் மாலும் காணாத பெரியவனைக் காண், அற்புதங்கள் செய்பவனைக் காண், அநேகமானவனைக் காண், சொற்களின் பதங்களை கடந்த தொன்மையானவனைக் காண்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®®à®¤à®¿à®¯à®¿à®©à¯ தண்மை வைத்தோன் திண்திறல்

 à®¤à¯€à®¯à®¿à®©à¯ வெம்மை செய்தோன் பொய்தீர்
 à®µà®¾à®©à®¿à®±à¯ கலப்பு வைத்தோன் மேதகு
 à®•à®¾à®²à®¿à®©à¯ ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
 à®¨à¯€à®°à®¿à®©à¯ இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25
மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்
 à®±à¯†à®©à¯ˆà®ªà¯à®ªà®² கோடி யெனைப் பல பிறவும்
 à®…னைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் அஃதான்று
 à®®à¯à®©à¯à®©à¯‹à®©à¯ காண்க முழுதோன் காண்க
 à®¤à®©à¯à®©à¯‡ ரில்லோன் தானே காண்க 30
 
 
குளிர்ந்த மதியின் தன்மை வைத்தோன் அடர்ந்த தீயின் வென்மை செய்தோன் பொய் இல்லாது ஒழிய வானிற் கலப்பு வைத்தவன். காற்றில் யாவர்க்கும் ஊக்கம் தர வழி கண்டவன், ஓய்வு தரும் நீரில் இனிமையான சுவை நிகழச் செய்பவன், தன்னை வெளிப்படுத்த மண்ணில் திடத்தை வைத்தவன், என்னையும் பல கோடியாய் பல பிறவியாய் இருக்கும் அனைத்திலும் அடைத்தவன். அதையும் கடந்து முன்னே இருக்கிறேன் காண் என்றான், முழுமையாவன் என்னை காண் என்றான், தன்னிகரில்லாத தன்னையே காண் என்றான்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®®à®¤à®¿à®¯à®¿à®©à¯ தண்மை வைத்தோன் திண்திறல்

 à®¤à¯€à®¯à®¿à®©à¯ வெம்மை செய்தோன் பொய்தீர்
 à®µà®¾à®©à®¿à®±à¯ கலப்பு வைத்தோன் மேதகு
 à®•à®¾à®²à®¿à®©à¯ ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
 à®¨à¯€à®°à®¿à®©à¯ இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25
மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்
 à®±à¯†à®©à¯ˆà®ªà¯à®ªà®² கோடி யெனைப் பல பிறவும்
 à®…னைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் அஃதான்று
 à®®à¯à®©à¯à®©à¯‹à®©à¯ காண்க முழுதோன் காண்க
 à®¤à®©à¯à®©à¯‡ ரில்லோன் தானே காண்க 30
 
 
குளிர்ந்த மதியின் தன்மை வைத்தோன் அடர்ந்த தீயின் வென்மை செய்தோன் பொய் இல்லாது ஒழிய வானிற் கலப்பு வைத்தவன். காற்றில் யாவர்க்கும் ஊக்கம் தர வழி கண்டவன், ஓய்வு தரும் நீரில் இனிமையான சுவை நிகழச் செய்பவன், தன்னை வெளிப்படுத்த மண்ணில் திடத்தை வைத்தவன், என்னையும் பல கோடியாய் பல பிறவியாய் இருக்கும் அனைத்திலும் அடைத்தவன். அதையும் கடந்து முன்னே இருக்கிறேன் காண் என்றான், முழுமையாவன் என்னை காண் என்றான், தன்னிகரில்லாத தன்னையே காண் என்றான்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®…ண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் 5
சிறிய வாகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் 10
 
அண்டமாகிய பெருவெளியில் இருந்து உருண்ட திரண்ட இந்த பூமி போன்ற பகுதிகளின் பிறப்பு அளக்க முடிய தன்மையுடன் வளம்பல பெருந்திய காட்சியக்கப் பட்டுள்ளது. ஒன்றுடன் ஒன்று இருக்கும் எழிலை சொல்வதென்றால் நூறு என கோடி என அதிகப்படியாய் விரிந்தன. இல்லாதது போன்ற கதிரில் துன்னிய அணு உருவாகியதால் சிறிதாக பெரியதன் முன் தெரிந்தாலும் வேதிக்கச் செய்தவன் கூட்டாக அளவுள்ளவன் மிகுதியுடன் தோற்றமும் சிறப்பும் முடிவானவற்றுடன் கூடிட மிகப்பெரிய ஊழியும் நீக்கமும் நிலையும் நுட்பமான சூட்சமத்துடன் வடிவான துலத்துச்.
#திருவாசகம்
 

திருவாசகம்

 à®…ண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் 5
சிறிய வாகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் 10
 
அண்டமாகிய பெருவெளியில் இருந்து உருண்ட திரண்ட இந்த பூமி போன்ற பகுதிகளின் பிறப்பு அளக்க முடிய தன்மையுடன் வளம்பல பெருந்திய காட்சியக்கப் பட்டுள்ளது. ஒன்றுடன் ஒன்று இருக்கும் எழிலை சொல்வதென்றால் நூறு என கோடி என அதிகப்படியாய் விரிந்தன. இல்லாதது போன்ற கதிரில் துன்னிய அணு உருவாகியதால் சிறிதாக பெரியதன் முன் தெரிந்தாலும் வேதிக்கச் செய்தவன் கூட்டாக அளவுள்ளவன் மிகுதியுடன் தோற்றமும் சிறப்பும் முடிவானவற்றுடன் கூடிட மிகப்பெரிய ஊழியும் நீக்கமும் நிலையும் நுட்பமான சூட்சமத்துடன் வடிவான துலத்துச்.
#திருவாசகம்
 

திருவாசகம்

 à®…ண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் 5
சிறிய வாகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் 10
 
அண்டமாகிய பெருவெளியில் இருந்து உருண்ட திரண்ட இந்த பூமி போன்ற பகுதிகளின் பிறப்பு அளக்க முடிய தன்மையுடன் வளம்பல பெருந்திய காட்சியக்கப் பட்டுள்ளது. ஒன்றுடன் ஒன்று இருக்கும் எழிலை சொல்வதென்றால் நூறு என கோடி என அதிகப்படியாய் விரிந்தன. இல்லாதது போன்ற கதிரில் துன்னிய அணு உருவாகியதால் சிறிதாக பெரியதன் முன் தெரிந்தாலும் வேதிக்கச் செய்தவன் கூட்டாக அளவுள்ளவன் மிகுதியுடன் தோற்றமும் சிறப்பும் முடிவானவற்றுடன் கூடிட மிகப்பெரிய ஊழியும் நீக்கமும் நிலையும் நுட்பமான சூட்சமத்துடன் வடிவான துலத்துச்.
#திருவாசகம்
 

திருவாசகம்

 à®…ண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் 5
சிறிய வாகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் 10
 
அண்டமாகிய பெருவெளியில் இருந்து உருண்ட திரண்ட இந்த பூமி போன்ற பகுதிகளின் பிறப்பு அளக்க முடிய தன்மையுடன் வளம்பல பெருந்திய காட்சியக்கப் பட்டுள்ளது. ஒன்றுடன் ஒன்று இருக்கும் எழிலை சொல்வதென்றால் நூறு என கோடி என அதிகப்படியாய் விரிந்தன. இல்லாதது போன்ற கதிரில் துன்னிய அணு உருவாகியதால் சிறிதாக பெரியதன் முன் தெரிந்தாலும் வேதிக்கச் செய்தவன் கூட்டாக அளவுள்ளவன் மிகுதியுடன் தோற்றமும் சிறப்பும் முடிவானவற்றுடன் கூடிட மிகப்பெரிய ஊழியும் நீக்கமும் நிலையும் நுட்பமான சூட்சமத்துடன் வடிவான துலத்துச்.
#திருவாசகம்
 

திருவாசகம்

 à®•à®Ÿà®®à¯à®ªà¯‚ர் தன்னில் இடம்பெற இருந்தும்

ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயா றதனிற் சைவ னாகியும் 
துருத்தி தன்னில் அருத்தியோ டிருந்தும்
திருப்பனை யூரில் விருப்ப னாகியும்
கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்
கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும்
புறம்பய மதனில் அறம்பல அருளியும் 
குற்றா லத்துக் குறியா யிருந்தும்
அந்தமில் பெருமை அழலுருக் கரந்து
சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண்
டிந்திர ஞாலம் போலவந் தருளி
எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத்
தானே யாகிய தயாபரன் எம்மிறை
(உடம்பாகிய ஊரில் இடம்பெற இருந்தும் கொடுக்கும் மலையில் எழிலை காட்டியும், ஐயம் அற்ற போதினில் சைவனாகியும், துருத்தி நன்னில் அருத்தியோடிருந்தும், திருப்பனை ஊரில் விருப்பமானவன் என வும், கழிந்து போகும் அழுக்குகள் திரை விலக்க காட்சி கொடுத்தும், வழுக்கும் குன்றத்தில் வழுக்காதிருந்தும், வெளி வாழ்வில் அறம் பல அருளியும், சிறு நிரில் குறிப்பாய் இருந்தும், முடிவற்ற சிறப்பை விருப்பியவர்க்கு சுரந்து அழகிய வேடம் கொண்டு ஞாலம் போல் வந்தருளி அவரவருக்கு ஏற்ப தன்வயப்பட்டும், நான் என்ற ஆகிய தயாபரன் எம்மிறை) 
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®ªà®¾à®£à¯à®Ÿà¯‚ர் தன்னில் ஈண்ட இருந்துந் 

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற்
கோவார் கோலங் கொண்ட கொள்கையும்
தேனமர் சோலைத் திருவா ரூரில்
ஞானந் தன்னை நல்கிய நன்மையும்
இடைமரு ததனில் ஈண்ட இருந்து 
படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்
ஏகம் பத்தின் இயல்பா யிருந்து
பாகம் பெண்ணோ டாயின பரிசும்
திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 
சேவக னாகித் திண்சிலை யேந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
(பழைமையான ஊரில் கொடுக்க இருந்தும் தேறிய ஊரில் தெரியும் திறமையான தீவில் மன்னனைப் போல் கோலங் கொண்ட கொள்கையும், தேன் நிறைந்த சோலை திருவாரூரில் ஞானம் அருளிய நன்மையும், மாறுபாடுகள் அடைந்து இடையில் இருக்கும் இடைமருதம் தன்னில் கொடுக்க இருந்த நிலைத்த பாதம் வைத்த பரிசும், ஆர்வம் உண்டாக்கும் திருவாஞ்சியில் சீர் பெற இருந்து மருவார் குழலியுடன் மகிழ்ந்த வண்ணமும், ஏவலாளி போல் சேவகனாகி திண்சிலை ஏந்திய பாவம் பலப்பல காட்டிய பரிசும்)
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®¤à®£à¯à®£à¯€à®°à¯à®ªà¯ பந்தர் சயம்பெற வைத்து

நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்
விருந்தின னாகி வெண்கா டதனில் 
குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்
கட்டமா சித்தி அருளிய அதுவும்
வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு
காடது தன்னிற் கரந்த கள்ளமும் 
மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கா னொருவ னாகிய தன்மையும்
ஓரி யூரின் உகந்தினி தருளிப்
பாரிரும் பாலக னாகிய பரிசும்
(தண்ணிர் பந்தலில் வெற்றி பெற வைத்து மீனாக இருந்து செய்யும் சேவகமும, விருந்தினராக வெண்காடதனில் குருந்தின் கீழ் நின்ற கொள்கையும், எதிர்பட்ட பெண்ணுக்கு பக்குவமாய் அட்டாம சித்தி அருளிய அதுவும், வேடவர் போல் வேறு வடிவம் கொண்டு காட்டில் வாழ்ந்த மறைப்பும், மெய்காட்ட வேண்டிய உருவத்துடன் தகுதியுடைய ஒருவனாக இருக்கும் தன்மையும், ஓரி ஊரில் விருப்பமுடன் அருளி உலகிற்கும் பாலகனாகிய பரிசும்)
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®‰à®¤à¯à®¤à®° கோச மங்கையு ளிருந்து

வித்தக வேடங் காட்டிய இயல்பும்
பூவண மதனிற் பொலிந்திருந் தருளித் 
தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்தினி தருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்
கருவார் சோதியிற் கரந்த கள்ளமும் 
பூவல மதனிற் பொலிந்தினி தருளிப்
பாவ நாச மாக்கிய பரிசும்
(ஒட்டும் முடி கொண்ட மங்கையுடன் இருந்து வித்தக வேடம் காட்டிய இயல்பும் பூ போல் வெளிப்படையாக பொலிவாய் இருந்து தூவண மேனி காட்டிய மகிமையும் காற்று நிறைந்த வாத ஊராகிய உடலில் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் திருவார் பெருந்துறைச் செல்வனாகி கருவாகும் சோதியில் கரந்த கள்ளமும் பூ போன்ற இடத்தில் பொலிவாய் இருந்து பாவத்தை நாசமாக்கிய பரிசும்)
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®ªà®¾à®£à¯à®Ÿà®¿ யன்தனக் குப்பரி மாவிற்

றீண்டு கனகம் இசையப் பெறாஅ
தாண்டான் எங்கோன் அருள்வழி யிருப்பத் 
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தண னாகி ஆண்டுகொண் டருளி
இந்திர ஞாலங் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும் 
ஆங்கது தன்னில் அடியவட் காகப்
பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்
(சருக்கி விழ்ந்தவன் விருப்பத்தில் வாழ்ந்து சிறப்புகளை ஏற்காமல் ஆண்டான் எனது அரசனோ ஏற்றப்படும் சோதியில் தோன்றி மகிமையை அருளி எல்லைகளுக்கு உரியவன் என ஆண்டுகொண்டான். இந்திர ஞாலங் காட்டிய இயல்பும் போக்கு வரவில் சிறந்த மதுரை பெருநன் மாநகரில் குதிரையை காக்கும் சேவகனாகிய கொள்கையும் அதுமட்டும் இன்றி அங்கே உள்ளே அடியவர்களுக்காக பக்குவமாய் மண் சுமந்து அருளிய பரிசும்)
‪#‎திருவாசகம்‬.
 

திருவாசகம்

 à®à®±à¯à®Ÿà¯ˆ ஈசன்இப் புவனியை உய்யக்

கூறுடை மங்கையும் தானும்வந் தருளிக்
குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்
வேலம் புத்தூர் விட்டே றருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்
தற்பண மதனிற் சாந்தம் புத்தூர்
விற்பொரு வேடற் கீந்த விளைவும்
மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற் களவறி யொண்ணான் 
நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்
ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி
( சீர் பொருந்திய ஈசன் இவ்வுலகைக் காக்க சரியானதை அருளும் மங்கை தானாக வந்து அருளி உயர்வைக் கொண்டு தாழ்வை விரும்பதாவன் இடத்தில் நாலா பக்கமும் தானே என்று எழுந்தருளி வேல் போன்ற புதுமையான ஊரை அருளி வட்டமாய் பொலிவு காட்டிய கொள்கையும் தானாக சுரக்கும் நீரால் சாந்தம் நிலவும் புத்தூர் விற்பதற்கு வேடற்கு ஈந்த சிறந்த கணி அருளிய முழுத்தழல் மேனி மயக்கம் வர செய்து காட்டிய தொன்மையும் அரியுடன் பிரம்மன் களவு அறிய முடியாது போக நரியைக் குதிரையாக்கிய நன்மையும் ஆண்டுக் கொண்டு இருக்க அருளப்பட்ட அழகான திருவடி)
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®Žà®žà¯à®šà®¾ தீண்டும் இன்னருள் விளைத்தும்

கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நற்றடம் படிந்தும்
கேவேட ராகிக் கெளிறது படுத்து
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்
துற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்
நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும்
வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்
நூறுநூ றாயிரம் இயல்பின தாகி
(கொடுக்க மீதம் இல்லை என்ற அளவில் கொடுத்தும் இன்பம் அருளியும் தீராத ஆசையுடன் மழலைப் போல் பேச்சும் அழகிய மார்பும் வேட்கையுட்ன் கூடிட வேடம் கொண்டு உறவாடியும் சிறப்புடன் விளக்கிடும் ஆகமம் பெற்றும் மற்றவைகளை புதுமை கொண்ட முகத்தில் செயல்பட ஆனையிட்டும் அடையாளப்படுத்த நான்கு மறைகளாய் முடிவற்ற தேறியவனாய் அருளியும் வேறு வேறு உருவமும் வேறுவேறு இயற்கை சூழலும் நூறு கோடி என பலவகை இயல்பினான் ஆகி)
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®…டியா ருள்ளத் தன்புமீ தூரக்

குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியுங
கல்லா டத்துக் கலந்தினி தருளி
நல்லா ளோடு நயப்புற வெய்தியும்
பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும்
(இறையடியார் உள்ளத்தில் அன்பு பொங்கிட தனக்கே உரித்தனவாக கொண்ட கொள்கைகளும் சிறப்பும் மாமலையில் இருக்கும் மகேந்திரன் உடன் இணைந்து சொன்ன ஆகமத்தை தோற்றுவித்து அருளி கல்லாதவரிடத்திலும் கலந்து அருளி நல்லவர்களுடன் இணக்கமாக இருந்து ஐம்பூதங்களுடன் ஓய்ந்து பழகிய மொழியுடன்)
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®•à¯€à®°à¯à®¤à¯à®¤à®¿ அகவல்

 
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோ ருலகுந்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 
என்னுடை யிருளை ஏறத் துரந்தும்
 
(மாறும் பழமையான ஊரில் ஆடிய திருவடி பலதரப்பட்ட உயிர்களாக மாறி பயின்று எண்ணிக்கை அற்ற பலகுணங்கள் எழில்பெற விளங்கி பூமியும் வானமும் வேற்று கிரகமும் உணரும் கல்வி உணர்த்தியும் அழித்தும் எனது அறியாமை இருளை இணையாது துறத்தும்)
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®…ல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. - 95
 
அலைகழிக்கப்படும் அல்லல் பிறவி அறுப்பவனே அழைக்க ஒரு பெயர் அற்று ஓ என்று சொல்வதற்கும் அரிதானவனே. விருப்பமாய் ஓ என்று சொல்லி அவனது திருவடிக் கீழ் நின்று உரைக்கப்பட்ட பாட்டின் பொருளை உணர்ந்து சொல்லுபவர் செல்வந்தர் அவர் சிவபுரத்தில் உள்ளவர். சிவனடிக் கீழ் பலரும் பணிந்து வாழ்த்தட்டும்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®ªà¯‹à®±à¯à®±à®¿à®ªà¯ புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே -90
 
வாழ்த்தி புகழ்தபடி இருந்து பொய் அழிந்து மெய் ஆனார் மீண்டும் இங்கே பிறந்து வினைப்பிறவித் தொடரைச் சாராமல் கள்ளத்தனம் செய்யும் உடல் சார்ந்த கருவிகளை கட்டி அழிக்க வல்லவனே. நள்ளிரவில் சிதைவு செய்யும் சத்தமானவனே அற்புதம் சுரக்கும் தில்லையில் கூத்தாடுபவனே பார்க்கப்படும் பழைய இடத்தவனே
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®®à®¾à®±à¯à®±à®®à®¾à®®à¯ வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
 
மாறிக் கொண்டே இருக்கும் இந்த வையகத்தில் பல வகை அறிவுடன் வந்த தேற்றனே. தேற்றமும் தெளிவு பெற செய்வதுவே, என் சிந்தையுள் ஊற்றாக இருந்து உண்ணாதவர்க்கு அமுதே உடையவனே, அடுத்தும் வேறு உடம்புடன் இருக்க மாட்டேன் என் ஐயனே அரனே ஓ என்று
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®¨à¯‹à®•à¯à®•à®°à®¿à®¯ நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்-80
 
பார்க்க அரிதான பார்க்க முடிந்ததே, நுட்பம் உடைய நுண்ணுணர்வே, போவதும் வருவதும் கூடுவதும் இல்லாத புண்ணியனே, காக்கும் என் காவலனே, காண அரிதான பேரொளியே, என்றும் ஊற்று எடுத்து ஓடும் ஆற்றின்ப வெள்ளமே, தனிமையில் நின்ற தோற்றச் சுடர் ஒளியாக சொல்வதற்கு இயலா நுண்ணுணர்வாய்
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®…ன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் 

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே 
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே 
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
 
அன்பு செய்பவர்களுக்கு அன்பானவனே, எல்லாமாய், இல்லாத தன்மையுமாய், சோதி போன்றவனே, அடர்ந்த இருளாகவும் உள்ளவனே, தோன்றாப் பெருமைக்கு உரித்தவனே, ஆரம்பமாக இருந்தவனே, முடிவும் நடுவாகவும் இருந்து இல்லாதவனே, தன்வசம் ஈர்த்து என்னை ஆட்கொண்ட என் அப்பனே, பெருமானே, நுண்ணிய மெய் ஞானத்தால் நுட்பமாய் உணர்வார் தம் கருத்தில்
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®ªà¯‡à®°à®¾à®¤à¯ நின்ற பெருங்கருணைப் பேராறே 

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே 
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே 
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
 
என்னை விலகாது நின்ற பெருங்கருணை நதியே. குறையா அமுதமே, அளவு ஒன்றில்லாத பெருமாளே, உன்னை நினையாதவர் உள்ளத்தும் ஒளியாய் இருந்து மறைந்துள்ளவனே. நீராய் கரைந்து என் ஆருயிராய் நின்றவனே, இன்பமும் துன்பமும் இல்லாதவனே. இருப்பவனே
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®¤à®¾à®¯à®¿à®±à¯ சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே 
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே 
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
 
தாயை கடந்து தயவு காட்டுவதில் சிறந்த தத்துவமானவனே. மாசு இல்லாத சோதி மலர்ந்த மலர்ச்சுடரே உலகாள்பவனே தேன் போன்ற அமுதே சிவபுரனே பாசம் என்ற பற்றை விடுபடச் செய்து நலம் காக்கும் தேர்ந்தவனே நேசமுடன் அருள்புரிந்து நெஞ்சத்து வஞ்சம் ஒழிய
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®µà®¿à®²à®™à¯à®•à¯ மனத்தால், விமலா உனக்கு 

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் 
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி 
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, 
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
 
புலன்களுக்குச் சிறைபட்ட மனதால் குற்றமற்றவனே உனக்கு கலந்த அன்பாகி கசிந்து உருகும் நல்லவை அறியாத சிறியவற்கும் நலம் பகிர்ந்து நிலத்தில் வந்து அருளி விசாலமாய் வழிகளைக் காட்டி இனத்தை சேர்க்காத நாயிற் கிழாக இருந்த அடியேற்கு
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®®à®±à¯ˆà®¨à¯à®¤à®¿à®Ÿ மூடிய மாய இருளை 

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி 
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, 
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை 
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
 
மறைக்க முடியாத அதேசமயத்தில் மாயமாகும் இருளைஅறம் பாவம் என்ற அருமையான கயிற்றால் கட்டி வெளியே தோல் போட்டு நுண்ணுயிர்களுடன் அழுக்குகளை கொண்டு மூடி கழிவுகள் சேரும் ஒன்பது வாசல் கொண்ட குடிலை விழ்த்த புலன்கள் ஐந்தும் வஞ்சனை செய்ய
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®•à®±à®¨à¯à®¤ பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 

சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று 
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் 
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த 
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
கறந்த பாலில் சுவையுடன் நெய்யும் கலந்து உள்ளதைப் போல் பக்தியில் சிறந்த அடியார் சிந்தனையில் தேன் உறி நின்ற பிறந்த பிறப்பை அறுக்கும் எங்கள் அளவற்றவன் நிறங்கள் ஐந்து உடையவன். உன்னை விண்டவர்கள் புகழ மறைந்தே இருக்கிறாய் எங்கள் அளவற்றவனே. தீர செயல்கள் தன்னை
‪#‎திருவாசகம்
 

திருவாசகம்

 à®†à®•à¯à®•à®®à¯ அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் 

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் 
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் 
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே 
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
 
புதியன ஆக்கம் பெறுவதில் அளவு முடிவு இல்லாதவனே. எல்லா உலகத்தையும் படைத்து காத்து அழிப்பவனே அருள் தருபவனே. போக்குபவனே என்னை பக்குவம் செய்தவனே உன்னை வணங்கினேன். வாசனைப் போல் உள்ளவனே, குழைந்தையாய் நாடுபவனே. மாற்றத்தை மனம் அடையாதபடி நின்ற மறைகள் விளக்கும் பொருளே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®µà¯†à®¯à¯à®¯à®¾à®¯à¯, தணியாய், இயமானனாம் விமலா 

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி 
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே 
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே - 40
 
வெப்பமாய் குளிர்ச்சியாய் இயல்பாகவும் ஆனவனே. மலமற்றவனே எல்லாம் பொய்யாக போய் விலக வந்து அருள்பவனே. மெய் ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே. எந்தவித ஞானமும் இல்லா எனக்கும் இன்பம் தருபவனே. அஞ்ஞானத்தை அகற்றிடச் செய்யும் நல் அறிவே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®Žà®²à¯à®²à®¾à®ªà¯ பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
 
எல்லாப் பிறவிகளும் பிறந்து இளைந்தேன் எம்பெருமானே உண்மையாய் உன்பொன்னடிகள் இன்று கண்டு வீடுபெறு அடைந்தேன், தேற்ற என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யானவனே தேவர்களின் தலைவனே விடைபகரா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
#திருவாசகம்
 

திருவாசகம்

 à®ªà¯à®²à¯à®²à®¾à®•à®¿à®ªà¯ பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் - 30
 
எங்கும் முளைக்கும் தன்மையுள்ள புல்லாகி மாற்றம் கண்டு பூக்கும் தன்மையுள்ள பூடாய், நெளியும் புழுவாய், வளர்ந்த மரமாய், பலவித மிருகமாகி, பறவையாய் பாம்பாகிக் அறிவற்று மனிதராய் பேயாய் கணங்களாய் வல்லமையுள்ள அசுரர் என மாறி முனிவராய் தேவராய் தடையற்று தொடரும் இந்த மாறிக்கொண்டே இருக்கும் தொடர் கூட்டத்தில்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®•à®£à¯ நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி 

எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி 
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், 
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் 
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
 
கண் நுட்பம் அறிய தனது கருணையால் கண்ணே காட்டிட எண்ணுவதற்கு எட்டாத எழிலுடன் நெகிழ்ந்து இறைஞ்சியவர்களுக்கு விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிகுதியாய் விளங்கிட ஒளியாய் இருக்கிறாய். எண்ணிக்கை அற்ற எல்லைகள் இல்லாமல் இருப்பவனே நினது பெரும் சீரை பொல்ல வினை செய்யும் நான் புகழும் விதம் ஒன்றையும் அறியேனே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®šà®¿à®µà®©à¯ அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் 
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை 
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
 
சிவனாகிய அவன் என் சிந்தையில் நின்ற காரணத்தால் அவன் அருள் உண்டாகி அவன் தாளை பணிந்தேன். பணிந்ததால் சிந்தை மகிழ்ந்து சிவபுராணம் என்ற இதனை முன் வினைகள் முழுவதும் ஒழிய உரைப்பேன் நான்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®ˆà®šà®©à¯ அடிபோற்றி எந்தை அடிபோற்றி 

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி.
 
ஈசன் அடி வாழட்டும். என் தந்தை அடி வாழட்டும். உலகமானவன் அடி வாழட்டும். சிவன் சேவடி வாழட்டும். விருப்பத்துடன் நின்ற அழுக்கற்றவன் அடி வாழட்டும். புரிந்துக் கொள்ள முடியா பிறப்பை அறுக்கும் மன்னன் அடி வாழட்டும். சீர் பெற்றவர் இருக்கும் பெருந்துறையில் இருக்கும் நம் தேவன் அடி வாழட்டும். முடிவற்ற இன்பம் அருளும் மலை வாழட்டும்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®µà¯‡à®•à®®à¯ கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க 

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க 
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க 
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
 
செயல்பட தூண்டி துனையாக நின்ற அரசன் அடி வெல்லட்டும். பிறவியை அறுக்கும் என்றும் முதிராத ஈரமான அடிகள் வெல்லட்டும். விலகி நிற்பவர்க்கும் குழைந்தையானவன் மலர் போன்ற அடிகள் வெல்லட்டும். கைகள் இணைத்து உள்ளத்தே மகிழும் தலைவன் அடிகள் வெல்லட்டும். தலை தாழ்த்தி ஓங்கச் செய்யும் சீர் பல பெற்றவர் அடிகள் வெல்லட்டும்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம்

 à®¨à®®à®šà¯à®šà®¿à®µà®¾à®¯ வாஅழ்க நாதன் தாள் வாழ்க 

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க 
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
 
பூதங்கள் ஐந்தாக விரிந்த நமசிவய நிலைகட்டும். நாதம் அருளும் தாள் நிலைகட்டும். இமைக்கும் நேரம் கூட என் நெஞ்சை விட்டு அகலாதவன் தாள் நிலைகட்டும். சிறப்புகள் கடந்து தன்னை தானே ஆளும் குரு மனிதன் தாள் நிலைகட்டும். புகழ் பாடும் நூல்களாக நின்று அதை நிலைநாட்டுபவன் தாள் நிலைகட்டும். ஒன்றாக பலவாக இருக்கும் இறைவன் அடி நிலைகட்டும்.
‪#‎திருவாசகம்‬.