நாம் இருக்கிறோம் என்பதே கடவுள் இருக்கிறது என்று அர்த்தம். நமக்குள் நம்மை கடந்த ஒன்று இல்லையென்றால் நம்மால் இயங்கமுடியாது. ஆனால் நமக்கு கடவுள் என்ற ஒன்றை தனி சக்தியாக எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் பொருளாக போதித்து இருக்கிறார்கள்.
போதித்ததை கடந்து புரிந்து கொள்ள முயலுங்கள். கடவுள் இருக்கிறது என்பதற்கு ஆதாரம் நீங்கள் தான். நீங்கள் இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்-திருக்குறள்.
சிறந்த மனிதர்களை கொண்டாடுவது மனிதர்களின் பண்பாக இருப்பதால் உலகில் சிறந்த மனிதர்கள் தெய்வமாக மதித்து வணங்குவது நடைமுறையாகியுள்ளது. அவ்வகையில் நம்மால் சரியாக அறிய முடியாத காலத்து சிறந்த மனிதர்களுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் கோயில்கள் அல்லது ஆலயங்கள்.
ஆலயத்தில் இருப்பது தெய்வங்கள். கடவுள் என்றும் மாறாமல் எப்பொழுதும் புதிதாகவே இருப்பது. கடவுள், தெய்வம் இரண்டும் ஒன்றல்ல.
எல்லாவற்றிற்கும் ஆதாரம் எது! என்று ஆராய்வதால் மனிதன் தனிச்சிறப்பு மிக்க மிருகமாக இருக்கிறான். அவனது அந்த சிறந்த பண்பே அவனை உலக உயிர்களிலெல்லாம் உயர்ந்த உயிரினமாக மாற்றியது.
நான் என்ற ஒன்றே நமக்கு ஆதாரம். அது எப்படி இருக்கிறது? என்று அறிவதே ஞானம். காரணம் நமக்குள் இருக்கும் ஆதாரப்பொருளே உலகத்திற்கும் அதாவது அண்டத்திற்கும் ஆதாரம்
தூங்கும் பொழுது இருக்கும் நமது இருப்பு நிலையே துறவு. அங்குதான் நான் என்ற அகந்தை ஒழிந்து அமைதியாக இருக்கிறது. ஆடை உடலில் இருக்கிறதா? பிறர் நமம்மை மதிப்புடன் நடத்துகிறார்களா? நமது உறக்கம் அடுத்தவரை தொல்லை தருகிறதா? என்ற கேவல சிந்தனை குறைந்திருக்கிறது.
அத்தகைய எண்ணங்களற்ற மனநிலையை விழிப்பு நிலையில் அடையும் ஒருவரே சரியான துறவி.
மாற்றம் மட்டுமே மாறாது நிகழ்கிறது. இதில் மனிதன் வாழும் விதம் மட்டும் விதிவிலக்கல்ல. இன்றைய உலகில் மனிதன் மன நிறைவுடன் வாழ புதுமைகளை அறிவதும், அத்துடன் ஒத்திசைவு கொள்ளவதும் அவசியமாகும்.
திருடன், பதுக்கி வைத்துக்கொண்ட பொருட்களை எடுத்துக்கொண்டேன் இதில் என்ன குற்றம் இருக்கிறது? என்று நியாயப்படுத்தும்போதும். ஒரு ஏமாளி தன் உழைப்பால் விளைந்த அனைத்து பொருட்களையும் தனது எஜமானனுக்கு கொடுத்துவிட்டு தன் குடும்ப உறவுகளை பட்டினியில் வாடவிட்டு இறைவன் எனக்கு இட்ட கட்டளை என்று இருமாத்துக் கொள்ளும்போதும். அவர்களுக்கு அவர்கள் உண்மையுடனும், ஒழுக்கத்துடனும் இருக்கிறார்கள் ஆயினும் இது சரி என்று நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
தன்னை தான் யார்? என்று அறியாமல் ஒழுக்கத்துடனும், உண்மையுடனும் வாழமுடியாது. தனக்குள் இருப்பது *கடவுள்*, தன்னையறிய உதவும் ஒருவர் *தெய்வம்*, அவர் தரும் போதனைகள் *ஆன்மீக பயிற்சிகள்* என்று உணர்ந்துவிட்டால் அல்லது இப்படியான ஒருவராக நீங்கள் இருந்தால் கடவுள், தெய்வம், வழிபாடு, ஆன்மீக பயிற்சிகள் இவைகள் எதுவும் தேவையில்லை.
இல்லறம் என்பது நல்லறம் ஆகும். துறவியை பூமியில் தவழச் செய்தது இல்லறம்.
அனுபவமில்லாமல் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது அனுபவிப்பவரின் தன்மையைப் பொறுத்தும் அது மாறுகிறது. எப்பொழுது நம்மை நமக்கு அடையாளப்படுத்துகிறாரோ அப்பொழுது ஒருவர் நமக்கு குருவாக மாறுகிறார்.
இயற்கையின் ஒழுக்கமே விதி, சூரியன் உதிக்கும் திசை கிழக்கு அல்லது கிழக்கு திசையில் சூரியன் உதிக்கின்றது.
உண்டு. காரணம் ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தவே இயற்கையின் விதி அப்படி இருக்கிறது. ஒரு உயிர் தோன்றி அது பல நிலைகளை கடந்து தனக்குள் ஒரு நிறைவை அடைத்து தோன்றிய இடத்திற்கு மீண்டும் செல்கின்றது.
ஆம். மற்ற உயிரினங்கள் போல் தேவைக்காக மட்டுமில்லாமல் அன்புடன் ஆழ்ந்த பகிர்தலோடு இருக்கும் பண்பினை மனிதன் அடைந்துள்ளான்.
ஆன்மீகம் அற்ற ஒன்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை. புலி, சிங்கம் போன்ற விலங்குகளை படைத்ததுதான் நம்மையும் படைத்தது.
பசி என்பது மனிதனுக்கு ஏற்படும் நோய். எனவேதான் உணவே மருந்து. பசி என்பது இல்லாமலேயே உணவு உட்கொள்வதால் நோய் ஏற்படுகிறது. இதற்கு மருந்தே உணவு பசித்த பிறகு உண்ணுவதே சாலச்சிறந்தது.
அளவு என்பது ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. அதிகம் உழைப்பவர் அதிகம் உண்ண வேண்டும் அல்லது சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். உடல் ரீதியிலான உழைப்பு குறைவாக இருப்பின் உணவு குறைவாக இருப்பது ஆரோக்கியம்.
கடவுளின் ஆசி இல்லாத ஒன்று இந்த உலகில் இருக்க முடியாது. உலகில் உள்ள அனைத்தும் கடவுளின் விருப்பத்தால் ஆனது. செல்வவளம் என்பது புறச்சூழல். தனது கடின உழைப்பால் அல்லது மூதாதையர்களின் சேமிக்கும் பண்பால் ஏற்படுவது மட்டுமே இருப்பினும் தனிமனித முயற்சி இங்கே முக்கிய பங்கு வகிக்கின்றது.
பகுத்தறிவுள்ள மனிதனுக்கு பாவபுண்ணியம் உண்டு. எதை எப்படி ஏன் செய்ய வேண்டும் என்ற பலவிதமான கேள்விகளுக்கு பின் ஒன்றை புரிந்து கொண்டு நடைமுறைப் படுத்தும் மனிதன் தன் முழு அறிவால் அறிந்து கொண்டதுதான் பாவபுண்ணியம் என்கின்ற நன்மை தீமை.
ஒன்றை சரியாக விளங்கிக்கொள்ள போதிய அறிவு நமக்கு வேண்டும். பெரும்பகுதி விளக்கம் தரமுற்படும் மனிதர்கள் தாங்கள் கேள்வி அறிவைக் கொண்டே விளக்கம் தருகிறார்கள். அனுபவ அறிவு என்பது அரிதாகவே உள்ளது.
ஒரு மனிதன் பக்குவம் அடைவதற்கும் பலவிதமான அனுபவங்ள் அவசியமாகின்றன. அப்பொழுது அவன் துன்பத்தின் அசல் தன்மையை அறிந்து அதனை வெற்றிபெறும் வழிகளை கண்டுபிடிக்கிறான்
கடவுள் என்து அனுபவம். அதை அனுபவிக்கும் தகுதி எல்லா மனிதர்களுக்கும் இல்லை. மேலும் கடவுள் பற்றிய புரிதல்கூட நமக்கு சரியாக இல்லை. கடவுள் பற்றிய விளக்கம் தரும் மனிதர்கள் கடவுள் அனுபவம் அடைந்தவர்களாக இருப்பதில்லை.
சித்தம் என்பது மனித மனம் வெளிப்படுத்தும் ஆற்றல். அதாவது சிந்தையின் தெளிவு. ஒருவர் தன் சுய் சிந்தனையின் மூலம் ஒரு கருத்தை நடைபெற செய்வது. ஆண்டவன் சித்தம் என்பது முன்னோர்களின் அறிவு வெளிப்பாடு. அத்தகைய ஆற்றல் மிகுந்த யாராலும் மாற்றி திரித்து கூற முடியாத கருத்தை கூறியவர் சித்தர் எனப்படுவர்.
கிரிவலம் இன்று அநேக மனிதர்கள் கடைபிடிக்கும் ஒரு செயலாக இருக்கிறது. நடைபயிற்சி செய்வதால் எந்த மாதிரி நன்மைகள் உண்டோ அந்தமாதிரி நன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி.
தவம் என்பது வாழ்வது, தியானம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட விதத்தில் செய்வது.*
பணம் பத்தும் செய்யும் என்பதை கேள்வியுற்றவராக நீங்கள் இருந்தால்
கோபம் என்பதற்கு சரியான அர்த்தம் யாருக்கும் கூற முடியாது. பொதுவாக உணர்வுகளை வரையறுக்கும் வார்த்தைகள் போதுமானவைகள் அல்ல.
தனக்கு தானே உண்மையோடு இருப்பின் நிம்மதியாக இருக்க முடியும். தனது தேவைகளுக்காக பிறரின் தேவையை பூர்த்தி செய்பவன் ஆனந்தமமைகிறான். எனவே உண்மையோடு உழைப்பவன் நிம்மதியோடும் ஆனந்தமாகவும் வாழ்கிறான்.
மனிதனின் ஆறாம் அறிவால் ஏற்படும் இன்னல்கள் இவை. கடவுளை கற்பித்துக் கொண்டு சடங்குகளை ஏற்படுத்திக்கொண்டு நாம்தான். இதற்கு உண்மை அல்லது கடவுள் எவ்வகையிலும் பொறுப்பாகாது. தான் செய்த கரும வினையின் பொருட்டு தனக்குத் தானே தண்டித்துக் கொள்ளவே இத்தகைய ஏற்பாடுகள் இருக்கின்றன.
கரும வினை, முன் செய்த பாவமே அல்லாமல் வேறொரு காரணம் இல்லை. இருப்பினும் அவைகளிலிருந்து விடுதலை பெற முடியும்.
மனிதன் பிறவற்றை அறிந்து அதற்குத்தக்க மதிப்பளிப்பதில் சிறந்தவன். எந் எந்த பொருளுக்கு எவ்வளவு மிதப்பு அளிக்க வேண்டும் என்ற கணக்கை என்றோ அறிந்திருக்கிறான்.
உண்டு. உடலற்ற மனம் பேய், அதாவது மெய் என்ற உடம்பு இல்லாமல் பொய்யான உடம்பை பேய் என்று அழைப்பர். மனம் பேதலுற்ற நிலையே பிசாசு. பிசாசு பிடித்தவன் என்ற வாக்கியத்தை கேள்வியுற்று இருப்பீர்கள். பேய் அடுத்தவரை தாக்கும் தன்மையுடன் இருந்தால் அது பிசாசு.
சிலரை சில வார்த்தைகளால் அடையாளப்படுத்துகிறோம். அந்த சிலர் செய்யும் அசிங்கத்தினால் அந்த சில வார்த்தையும் அசிங்கப்படுகிறது.
ஞானம் என்றால் அறிவு. யோகம் என்றால் கூடுதல். ஞானி என்பவர் அறிவால் உணர்கிறார். அவர் தனக்கு மூலமாவது இப்படி இருக்கும் என்று அறிகிறார்.
நான் காதலிக்கிறேன் என்று ஒருவர் பொய் சொன்னால் நம்மால் கண்டுபிடிப்பது அரிது. நாம் காதலித்திருந்தால் அதன் தன்மை பொறுத்து அறியலாம். இருப்பினும் முழுமையாக புரிந்து கொள்வது அரிது.
சீடன் ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருப்பவன். குரு மனதை கடந்து அமைதியை அடைந்தவர். அமைதியை அனுபவிக்கும் மனிதனிடம் சென்று அவனது அசல் அனுபவத்தை அறிந்து தானும் அடைவது எளிது.